-
சென்னை மகாலட்சுமி தியேட்டரில் 2-வது வாரமாக ஓடும் எம்.ஜி.ஆரின் ஒளிவிளக்கு
எம்.ஜி.ஆர். படங்கள் சென்னை தியேட்டர்களில் மீண்டும் திரையிடப்பட்டு வசூல் குவித்து வருகிறது. ஏற்கனவே அடிமைப் பெண், நினைத்ததை முடிப்பவன், உலகம் சுற்றும் வாலிபன், நாடோடி மன்னன் உள்ளிட்ட பல படங்கள் தொடர்ந்து திரையிடப்பட்டன. அப்படங்கள் அதிக வசூல் ஈட்டியது.
தற்போது ரிலீசாகும் புதுப்படங்களை மிஞ்சி லாபம் பார்த்தது. தற்போது ஒளிவிளக்கு படம் மகாலட்சுமி தியேட்டரில் திரையிடப்பட்டு 2-வது வாரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இது எம்.ஜி.ஆரின் 100-வது படமாகும்.
இந்த படத்தில் ஆண்டவனே உன் பாதங்களை, தைரியமாக சொல் நீ மனிதன்தானா, நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங், ருக்குமணியே பப்பரப்பா போன்ற இனிமையான பாடல்கள் இடம்பெற்றுள்ளன. எம்.ஜி.ஆர். உடல் நலமின்றி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது தமிழகம் முழுவதும் ஆண்டவனே உன் பாதங்களை என்ற பாடல் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது.
ஒளிவிளக்கு படம் தினமும் 3 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளது. இப்படம் தொடர்ந்து ஓடுவதையொட்டி தியேட்டர் முன்னால் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் பட்டாசு வெடித்தனர். இனிப்பும் வழங்கினார்கள். எம்.ஜி.ஆர். பேனருக்கு பால் அபிஷேகமும் செய்தனர். ஒரு வாரத்தில் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்து 400 வசூல் ஈட்டியுள்ளது.
Courtesy malaimalar 14-10.2012
-
30.06.1977
மனோகரி இப்பொழுதாவது என்னை நம்புகிறாயா
அண்ணா நான் என்ன இந்த நாடே உங்களை நம்பி தான் இருக்கிறது
இது 1958-இல் நாடோடிமன்னன் படத்தில் இடம் பெற்ற வசனம் 19 வருடங்கள் கழித்து புரட்சி தலைவரின் அரசியல் வாழ்வில் உண்மையானது .
-
பாடல் காட்சிகள் மற்றும் வசனங்கள் உண்மையானது இந்த உலகிலே நமது மக்கள் திலகத்திற்கு மட்டும் தான்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நீர் ஓடைகள் கோடையில் காய்ந்திருக்கும்
மழை காலத்தில் வெள்ளங்கள் பாய்ந்திருக்கும்
நம் தோள் வலியால் அந்த நாள் வரலாம்
அன்று ஏழை எளியவர்கள் நலம் பெறலாம்
முன்னேற்றம் என்பதெல்லாம்
உழைப்பவர் உழைப்பதனாலே
கடமைகளை புரிவதெல்லாம்
விடுதலை வேண்டுவதாலே
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
ஏர் பூட்டி தோளில் வைத்து
இல்லாமை வீட்டில் வைத்து
போராடும் காலமெலாம் போனதம்மா
எல்லோர்க்கும் யாவும் உண்டு
என்றாகும் காலம் இன்று
நேராக கண்ணில் வந்து தோன்றுதம்மா
விடியும் வேளை வரப்போகுது
தருமம் தீர்ப்பை தரப்போகுது
நியாயங்கள் சாவதில்லை என்றும் நியாயங்கள் சாவதில்லை
இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும்
நானா பார்த்திருப்பேன்
ஒரு கடவுள் உண்டு அவர் கொள்கை உண்டு
அதை எப்போதும் காத்திருப்பேன்
எதிர்காலம் வரும் என் கடமை வரும்
இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பபேன்
பொது நீதியிலே புதுப் பாதையிலே
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
-
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
நல்ல சமத்துவம் உண்டாகணும்
அதிலே மகத்துவம் உண்டாகணும்
நாம பாடுற பாட்டும் ஆடுற கூத்தும்
படிப்பினை தந்தாகணும் நாட்டுக்கு -
படிப்பினை தந்தாகணும்
ஏய்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணி விடாதே
பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்து விடாதே
ஒரு நாள் இந்த நிலைமைகெல்லாம் மாறுதல் உண்டு
அந்த மாறுதலை செய்வதற்கு தேர்தல் உண்டு
ஒரு சம்பவம் என்பது நேற்று -
நேற்று அது சரித்திரம் என்பது இன்று -
இன்று அது சாதனை ஆவது நாளை -
நாளை வரும் சோதனைதான் இடை வேளை
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
நீதியின் தீபத்தை ஏற்றிய கைகளின்
லட்சிய பயணமிது
இதில் சத்திய சோதனை எத்தனை நேரினும்
தாங்கிடும் இதயமிது
அண்ணனின் பாதையில் வெற்றியே காணலாம்
தர்மமே கொள்கையாய் நாளெல்லாம் காக்கலாம்
-
-
-
-
-
-