பறவைப் பாடல்கள் – 9
சாற்றும் உறவதனின் சிறப்பான தன்மையினை
வாத்துகள் கூட்டமும் தான்..
ஆத்தி இது வாத்துக் கூட்டம்.. நாடோடித் தென்றலில் கார்த்திக், நித்தி ஸாரி ரஞ்சி..! : :)
https://youtu.be/02merlhLX2Q
Printable View
பறவைப் பாடல்கள் – 9
சாற்றும் உறவதனின் சிறப்பான தன்மையினை
வாத்துகள் கூட்டமும் தான்..
ஆத்தி இது வாத்துக் கூட்டம்.. நாடோடித் தென்றலில் கார்த்திக், நித்தி ஸாரி ரஞ்சி..! : :)
https://youtu.be/02merlhLX2Q
பறவைப் பாடலக்ள் – 10
முன்னால் படித்து மனதை நெகிழ வைத்த கவிதை..
நேரே உடைத்து வாயில்..
இல்லையெனில் ஆம்லெட்
வளர்ந்தால்
சிக்கன் 65 எனப் பெயர்
ஆக
இயற்கை மரணம்
நிச்சயமாய் இல்லை.. (அடப்பாவிகளா என கவிதைத்தலைப்பு அண்ட் சில கோழிகள் வருத்தத்துடன் பார்ப்பது போல ஃபோட்டோ – குமுதம் என நினைக்கிறேன்)
ஊழிப் பெருவெள்ளம் ஓடியே வந்தாலும்
கோழிநீ கூவுவா யே..
சரி இதுக்கு என்ன பாட்…ஒசந்த இந்தம்மா ஏனிப்படி ஆடறாக..
https://youtu.be/-wghwODHyEo
கோழி கூவும் நேரத்தில தள்ளிப்போயிருக்கலாமில்லை…
//ஓஹ்.. ஒண்ணரை மணி நேரமாச்சுங்க்ணா குறளும் பாட்டும் எழுதி திரைப்பாட்டும் தேட..ஓகேயா//
விட்டுப்போன பறவைகளைச் சொல்ல மாட்டீங்களா என்ன.. :)
ஹாய் குட்மார்னிங்க் ஆல்..
கவிதையும் கானமும்..(இது எத்தனாவது)
முத்தம் என ஆரம்பிக்கும் அழகிய நவீன கவிதை கிடைத்திருக்கும் கவிதைக்குக் கவிதை த்ரெட்டில்
தோழி பி.பிக்கா பேரனைப் பற்றி எழுதி விட்டார் நார்மல் கவிதை..எனில்.. நான் எழுதிப்பார்க்கிறேன்.. ஒரு நவீன கவிதை..
*
முத்தம் எக்காலத்திலும்
தேவையில்லாத ஒன்று என்று தான் படுகிறது..!
கன்னத்தில் சப்பக்க்
உதட்டில் ச்ச்
நெற்றியில் ஷ்ச்ச்
ம்ஹூம் முத்தம் கெட்ட ஒன்று..
எச்சல் பத்து …
அலம்பவேண்டும்..
கன்ன வேர்வை உடலுக்குக் கெடுதி..
தோல் டிஸீஸ், உப்பால் பி.பி. வரும்..!
சிறுவயதில் அம்மா அப்பா தாத்தா பாட்டி அத்தை மாமா
கொடுத்த முத்தங்கள் நினைவில் இல்லை
ஈரமும் காய்ந்து புகையாகக் கூட…..
ப்ளஸ்டூ படிக்கும் போது
பதினொண்ணாம் வகுப்பு பாக்கிய லஷ்மியை
ரகசியமாய்
மொட்டைமாடிக்கு அழைத்துச்சென்று
மூச்சு விட்டு மூச்சு விட்டு
முதல் காளை முத்தம் கொடுக்க முயல்கையில்
முகஞ்சுளித்தாள்…...
இதுக்கா இப்படி
ஸ்கூல் மொட்டை மாடிக்குக் கூப்பிட்ட
நம்ம ஃப்ளாட் மொட்டை மாடிக்கே
போயிருக்கலாமில்லை
லிஃப்ட்ம் இருக்கு..”
என்றவள்
“போய் வாய் கொப்பளி
நல்லா நாலுதடவை பல் தேய்
ஒரே கப்ப்பு..”
சென்றுவிட்டாள்..
கல்லூரியில் கிடைத்த முத்தம்
வித்தியாசமானது….
லேபராட்டரிக்கும் ரெஸ்ட் ரூமுக்கும்
இடையில் இருந்த காரிடாரில்
வேகமாய்ச் சென்ற
இருபத்தெட்டு வயது ஃப்ரொபஸர் கலாவை நிறுத்தி
விஷயம் சொன்ன போது
கையைக் கொடு மேன் சொல்லி
குலுக்காமல்
புறங்கையில்மெலிதாய்
உதட்டுச் சாயம் தீட்டி
“நல்ல ஆள்ப்பா நீ
ஃபுட்பால் டோர்ணமெண்ட்ல
வின் பண்ணினதச் சொல்ல
நல்ல இடம் பார்த்தே”
சொல்லிவிட்டு
விரைந்து போன இடத்தில்
அவரின் பாய்ஸன் பர்ஃப்யூம் வாசனை!
நேற்று
வளர்ந்த என் பேத்தியை
உச்சி முகர அழைத்த போது
வந்து
பின் முகஞ்சுளித்தாள்
தாத்தா..
மார்னிங்க் மட்டும் பண்ணாத
ஈவ்னிங்க்கும் பண்ணு ஷேவிங்க்..
குத்துது….
எனக் கன்னந்தடவிச் சென்று விட்டாள்..
ம்ம்
முத்தங்கள் எப்போதும் தேவையில்லை எனத்
தான் தோன்றுகிறது..
ஏனெனில் முத்தங்கள் மோட்ச நிலை
அடைய உதவி செய்வதில்லை
அவை இருப்பது
பல் நிலைகள் கீழே!
***
கடைசி வரி புரிந்தால் இது நவீன கவிதை இல்லை.. புரியவில்லை என்றால் ஹையா எனக்கு நவீன கவிதை எழுத வ்ருதே :)
**
சரி சரி பொருத்தமா ஒரு முத்தாப் பாட்டு போட்டுறலாமா…:)
முத்தமிடும் நேரமெப்போ முகம் தொட்டுக் கதை சொல்லும் நேரமெப்பெப்போ..
https://youtu.be/18_6LOOHC2s
அதுல பாருங்கோ.. திடீர்னு பார்த்தா யாரையும் காங்கலை..
இப்படித் தான் ஒரு காலத்தில ஒரு கிராமத்தில ஒரு இளம் பெண் காத்துகினு இருந்துச்சு.
எங்கிட்டு..
*
ஊரு கோடில்ல ஒதுக்காக அரசமரம்
..ஒளிஞ்சு பேசத்தான் இடமுண்டு பின்னால
யாரும் பாக்காம நானும்மென் மச்சானும்
..ராவும் பகல்பொழுதும் பேசித்தான் இருந்தோமே
வாடி பொழுதெல்லாம் சாய்கின்ற போதினிலே
...வாரேன் பாத்திடலாம் பேசிடலாம் என்றமச்சான்
போதும் போயிடுச்சு இருட்டவும் ஆரம்பிக்க
..பொழுதாய் வருவேன்னு சொன்னவுக காங்கலையே..
*
ம் அவளுக்கு க் காதலனைக் காணோம்..இங்க நண்பர்களைக் காணவில்லையே ..என்ன செய்யலாம்..
ஹை..
காணவில்லைன்னு பாட்டுப் போட்டா வரமாட்டாஹளா என்ன
கண்ணதாசன் என்ன சொல்றார்..
பூவொன்று கண்டேன் முகம் காணவில்லை
ஏனென்று ஏனென்று நான் சொல்லலாகுமா?
ஏனென்று நான் சொல்ல வேண்டுமா?
அப்படிங்கறார் படித்தால் மட்டும் போதுமால்ல பாலாஜி மூலமா
வைரமுத்து.. சங்கீத ஜாதி முல்லை காணவில்லை ந்னு தேடறார் காதல் ஓவியத்துல
இன்னொரு காதலன் என்னைக் காணவில்லையே நேற்றோடு அதைத் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு அன்பேன்னு கதர்றான்..
பாவம் பொண்ணுங்க பாடு தான் எக்காலத்திலும்.. மனசக் கொய்றாளான்னு அந்தக் காலத்துல கேட்கப் பட்ட மனீஷா கொய்ராலா பாம்பேல என்ன சொல்றார்..
கண்ணாளனே என் நெஞ்சை நேற்றோடு காணவில்லை..
*
பணங்காசு இருந்தென்ன.. அப்படிங்கறா இந்தப் புதுமுகப் பொண்ணு மேமாசம்னு பட்த்துல..மார்கழிப்பூவை என்னா சொல்லிக் கேக்கறா
சுதந்திர வானில் பறந்ததுமில்லை
சுடச் சுட மழையில் நனைந்தும் இல்லை
சாலையில் நானாகப் போனதுமில்லை
சமயத்தில் நானாக ஆனதுமில்லை
ஏழை மனம் காணும் இன்பம்
நான் காணவில்லை
மார்கழிப் பூவே மார்கழிப் பூவே
உன் மடி மேலே ஓரிடம் வேண்டும்
மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை
உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை
*
மகாகவி பாரதியார் நிலையேதும்காணவில்லை எங்கள் முத்து மாரிங்கறார் அவரோட பாட்டில் ( திரையில் பாடலாய் வரவில்லை)
உலகத்து நாயகியே!-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
பய னொன்று மில்லையடி-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மணி வெளுக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்து
மாரியம்மா, எங்கள் முத்து மாரி!
*
என் அன்பில் கலந்தாயோன்னு ஒரு பாட் கிடைச்சது..அதுல காணவில்லை வருதான்னா எனக்குத் தெரியாது..(ஈவ்னிங்க் தான் சொல்ல முடியும்)
ஆனா கூகுளாண்டவர் என்ன சொல்றார்னா..
காணவில்லை பேதையை அவன் லட்சியமே செய்யவில்லை ராதையை ...
என்று வருதுன்னு.. நீங்க கேட்டுச் சொல்லுங்களேன்...
https://youtu.be/y0dKZiqa5_U
சரி சரி..ந.தி பாட் போட்டு ரொமப் நாளாச்சு ப்ளஸ் எனக்கு ரொம்ப்ப்ப் பிடிச்ச பாட்டு ..போட்டுக்கட்டா
பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை..
https://youtu.be/rUmL6PFD1OE
appuram vaarEn..:)..
எள்ளூப் பூ வெண்மையாக இருக்குமாம்.. கொஞ்சம் கூராக ஒரு வித ரைட் ஆங்கிள்ட் ட்ரையாங்கிள் போல இருக்கும் போல..படத்தில் கொத்தாக இருப்பதால் சரிவரத் தெரியவில்லை( நான் பார்த்த வெப்சைட்ல)
எள்ளுப் பூவை முழுதாகக் காம்பைக் கிள்ளி அப்படியே வாயில் போட்டு முழுங்கினால் கண்ப்ராப்ளம்ஸ்லாம் வராதாம்.. இன்னும் பல மருத்துவ குணங்கள் கொண்டதாம் இந்த எள் ஃபேமிலி..
இருந்தாலும் இந்த எள்ளுப்பூவைத் தான் அடிக்கடி பெண்களின் நாசிக்கு உவமையாகச் சொல்வார்களாம் தமிழ் சங்கப் பாடலில்..
பிழியும் பால்நிலாவின் பேர்சொல்லும் நெற்றி
..பேசித் தீர்க்காமல் மெளனமுகக் கண்கள்
விழியும் விழியிமையும் படபடக்கும் போது
….மனதும் பரபரத்துப் பலகவிதை நெய்யும்
கயலாய் நீந்துகின்ற மைவிழியின் கீழே
..கனிவாய் வழிசொல்லும் எள்ளுப்பூ நாசி
சலிப்பாய் இல்லாத செங்கதிரின் வண்ணம்
…சாய்க்கும் செவ்விதழும் கொண்டவளும் அன்றோ
(மதுரை சின்னக் கண்ணனார்!)
ஆக இந்த எள்ளுப்பூவை எப்படிக் கையாண்டிருக்கிறார் கவியரசர். கண்ணதாசன்..
பிள்ளை அழகும் பிஞ்சு முகமும்
கிள்ளிய வெற்றிலைப் பாக்கு
சிறு எள்ளுப் பூவை அழகு பார்க்கும்
இளைய கண்ணனின் மூக்கு
(ஹி ஹி..என் மூக்குதான்..ஆமா என் மூக்கைப் பத்திக் கவிஞருக்கு எப்படித்தெரியும்!)
வெகு அழகான பாடல்….இல்லறத்தை வெகு நாசூக்காய் வெகு அழகாய்ச் சொல்லியிருக்கிறார் கவிஞர்.. எனக்கு மிகப் பிடித்த பாடல்..
மங்கல மங்கையும் மாப்பிள்ளையும் அன்று
கைகள் கலந்தாட
மஞ்சள் முகத்தினில் வெண் பிறை நெற்றியில்
வேர்வை வழிந்தோட
சங்கொலி பொங்கிட பஞ்சணையில் ஒரு
சம்பவம் உண்டாக
தாமரைக் கோவிலில் பிள்ளை வளர்ந்தான்
மல்லிகைச் செண்டாக
ஒவ்வொரு தடவையும் இந்த ‘தாமரைக் கோவில்’ பிரயோகம் கேக்கறச்சே, படிக்கறச்சே மனசுக்குள்ள ஒரு சிலிர்ப்பு ஏற்படுது..
பாடல் இடம்பெற்ற படம் நீலவானம் ந.தி.தேவிகா, குட்டி பத்மினி..அப்புறம் ராஜஸ்ரீ..
https://youtu.be/gh2NZ8T5mzc
அனைத்து நண்பர்களுக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்..
அமுதே தமிழே அழகிய
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
சுவையொடு கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
https://youtu.be/zX97xtTwtGY
மக்கள்ஸ்லாம் வருவாங்கன்னு நம்பிக்கை இருக்கு..
தேடும் விழிகளுக்குத் திண்ணமாய்ச் சொல்லிடுவேன்
ஓடி வருவாரே பார்..
ம்ம் நான் உன்னைத் தேடுகிறேன் பாட் போட்டுக்கலாமா..
https://youtu.be/wG6hp7bew3w
சின்னக்கண்ணன், கல்நாயக் எப்படி இருக்கீங்க? கொஞ்சம் வேலை. அதான் வரமுடியல.
உங்களுக்கும்(இருவருக்கும்) திரு.வாசு சார், திரு.கிருஷ்ணா சார், ஐதராபாத் திரு.ரவி சார், திரு.ராகவேந்திரா சார், திரு.கோபால், திரு.ராஜேஷ் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
விரைவில் பாட்டோடு வரேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கலைவேந்தன் புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி..உங்களுக்கும் என் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...
மையம் உறவுகள் அனைவருக்கும், இனிய.... மன்மத புத்தாண்டு வாழ்த்துக்கள்.
https://lh3.googleusercontent.com/-7...672-no/lig.jpg