http://i1146.photobucket.com/albums/...psiji5t3t1.jpg
Printable View
திரையில் பக்தி
இந்த படத்தில் எந்த பாடலை சொல்வது
எல்லாமே விட்டல மகிமைதான்.. அருமை அருமை.
நான் சிறு வயதில் பார்த்து ரசித்த படங்களில் இதுவும் ஒன்று. (சாந்தா சக்குபாய், சக்ரதாரி)
இதோ நாகய்யா புஷ்பவல்லி, ஜெமினி நடிப்பில் அற்புத படம் (பக்த கோர கும்பர்)
https://www.youtube.com/watch?v=thkAc0mbNfM
தங்கப் பெட்டியுடன் ஹோட்டலில் ஸ்ரீகாந்த். வெற்றுடம்பு மனிதர்களுக்கு நடுவே ஆடும் பாவை ஜெயகுமாரி. கழுகு போல கண்காணிக்க வரும் இளமை விஜயகுமார். ஆர்ப்பாட்ட இசை. திகிலடயைச் செய்யும் ஆண் குரல்கள்.
'நீயோ தங்கமுள்ள பெட்டி
நானோ இன்ப வெல்லக் கட்டி'
என்று ஸ்ரீகாந்தைக் காப்பாற்றத் துடிக்கும் ஜெயகுமாரி. கேபரெட் பாடல்களுக்கென்றே அவதாரம் எடுத்த ராட்சஸி குரல்.
'அன்னம் இங்கே ஆடுகின்றது.
ஆசை நெஞ்சில் ஊறுகின்றது
என்னை யாரும் தொட்டதில்லை
கன்னம் காயப்பட்டதில்லை'
பாடல் கலக்குகிறது கோரஸின் துணையோடு. பாடலின் இறுதியில் ஈஸ்வரியின் 'தா தரதுரு தரதுரு தரரா' க்களைக் கேட்கத் தவறாதீர்கள்.
'மாணிக்கத் தொட்டில்' படத்தில் இதுவரை அதிகம் நீங்கள் கேட்டறியாப் பாடல்.
https://youtu.be/H1spMbPvdNA
ஒரு ஜோர் பாடல். நாயகன் ஓ.கே. ஆனால் நாயகி உவ்வே.... இடிக்கிறது. பாடகர் திலகம் குரலில் ஒலிக்கும் இந்தப் பாடல் 'ஜீவனாம்சம்' திரைப்படத்தில்.இந்த குமாரி செய்யும் அக்கிரமங்களை நினைத்தால் மனம் கொதிக்கிறது. எப்படி இப்படியெல்லாம்? சே! பாடலை பார்க்கும் ஆசையே விட்டுப் போகிறது.
https://youtu.be/9G2vXxxt-9Y
இன்னொரு அற்புதமான பாடல். அதே ஜெய்தான். டி.எம்.எஸ் கலக்கி எடுத்து விடுவார். சுசீலா அம்மாவும் பிய்த்து உதறி விடுவார்கள். ஜெய், முகமூடி அணிந்து பாரதி, சோ, விஜயஸ்ரீ, குமாரி ராதா அனைவரும் கலந்து கொள்ளும் பாடல். பாரதி, விஜயஸ்ரீ, ராதா எல்லோருக்குமே சுசீலா வாய்ஸ்தான். அதே போல ஜெய், சோ இருவருக்குமே டி.எம்.எஸ் பாடுவார். பர்த் டே கப்புக்குள் நிற்கும் பர்த் டே கேர்ள் விஜயஸ்ரீ. க்ரூப் டான்சர்ஸ் மூவ்ஸ் அருமை. குறிப்பாக பெண் டான்சர்ஸ்.
இசை சாம்ராஜ்யமே நடக்குமிந்தப் பாட்டில். டிரம்பெட், சாக்ஸ், கிடார், பியானோ என்று சகல இசைக்கருவிகளுக் கலந்து கட்டி விளையாடும்.
எனக்கு அப்போதிலிருந்து மிகவும் பிடித்த பாடல் இது.
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
நினைத்தால் மணக்கும்
கிடைத்தால் இனிக்கும்
தங்க நிறம் வண்டாடும் பூமுகம்
மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
முல்லை இனம் என்னென்ன வண்ணங்களோ
தங்க நிறம் வண்டாடும் பூமுகம்
மஞ்சள் நிறம் தள்ளாடும் மெல்லிடை
முல்லை இனம் என்னென்ன வண்ணங்களோ
(நினைத்தால்)
முத்தங்கள் சிந்தாதது
முந்தானை பின்னாதது
கன்னங்கள் பொன்னானது
கையோடு சேராதது
முத்தங்கள் சிந்தாதது
முந்தானை பின்னாதது
கன்னங்கள் பொன்னானது
கையோடு சேராதது
மானோ மீனோ மாங்கனி தானோ
வாழைப் பூவில் ஊறிய தேனோ
மானோ மீனோ மாங்கனி தானோ
வாழைப் பூவில் ஊறிய தேனோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
தித்திக்கும் செம்மாதுளை
சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது
அச்சாரம் கொள்ளாதது
தித்திக்கும் செம்மாதுளை
சிங்காரச் செண்டானது
அல்லிப்பூ பந்தாடுது
அச்சாரம் கொள்ளாதது
வேலோ வில்லோ விழியொரு பாவம்
மேலும் மேலும் விளையுது ராகம் (பாரதி அட்டகாசம் பண்ணுவார். கோரஸ் அருமை)
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
பாலூறும் பெண்மயிலே பல்லாக்கு செய்தானம்மா
ஈரேழு பருவத்திலே என்னென்ன வைத்தானம்மா
பாலூறும் பெண்மயிலே பல்லாக்கு செய்தானம்மா
நானோ நீயோ மாப்பிள்ளை யாரோ
யாரோ யாரோ யார் அறிவாரோ
நானோ நீயோ மாப்பிள்ளை யாரோ
யாரோ யாரோ யார் அறிவாரோ
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்பா என்னாவது
அம்மம்மா பெண்ணா இது
அப்பப்ப்பா என்னாவது
(நினைத்தால்)
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
ஹேப் ஹேப் ஹேப்
ஹேப் ஹேப்பி பர்த்டே
https://youtu.be/NbSzzahJ4tc
anbu vazhi
https://youtu.be/VPdWZyuJvRM
வாசு ஜி..
எனக்கும் "மாணிக்கப் பதுமைக்கு" பாட்டு மட்டும்தான் தெரியும். நீதிதேவன் படம் பற்றி எதுவுமே நினைவில் இல்லை.. ஆனால்... இன்னொரு பாட்டு கேட்க நல்லா இருக்கும்.. அதை யோசிச்சு சொல்றேன். ...
ஏ.வி.எம்.ராஜன், காஞ்சனா நடித்து "நியாயம் கேட்கிறேன்" என்று ஒரு படம் வந்தது. அதில் டி.எம்.எஸ் பாடும் "வேர்வைத்துளிகளே பேசுங்கள்" மற்றும் "கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை" என்ற இரு அழகான பாடல்கள் நினைவில் இருக்கின்றன. அதிலேயும் ஒரு டூயட் பாடல் கேட்ட நினைவு...
ராகவ்ஜி, வாசுஜி... மற்ற நண்பர்கள் யாருக்கேனும் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்க..
மதுண்ணா!
'நீதிதேவன்' படத்தில் சீர்காழி ஈஸ்வரி இணைந்து பாடும் பாடல் ஒன்று உண்டு.
'கோடையிலே மழை பொழிஞ்சி
ஓடையிலே நீர் நெறஞ்சி
காடு செழிச்சுதுன்னு கொட்டு மேளம்
அய்யா... கனவு பலிச்சிதுன்னு கொட்டு மேளம்'
இந்தப் பாட்டை சொல்றீங்களா? அல்லது வேறயா?