-
http://i44.tinypic.com/2lvznuc.jpg
KUDUMBA THALIVAN - 51-ST ANNIVERSARY TODAY
தேவரின் ''குடும்ப தலைவன் ''
15.8.1962
மக்கள் திலகத்தின் சிறந்த படங்களில் இந்த படமும் இடம் பெறுகிறது .
அண்ணன் -தம்பி கதை அமைப்பில் வந்த குடும்ப சித்திரம் .
இனிய பாடல்கள் - நடிப்பு என்று வந்த அருமையான படம் .
தொடர்ந்து 50 ஆண்டுகளாக மறு வெளியீடு செய்யப்பட்டு வரும் படம் .
-
-
மக்கள் திலகத்தின் '' கணவன் '' இன்று 46 வது ஆண்டு துவக்கம் .
http://i41.tinypic.com/24zb1o1.jpg
15.8.1968ல் வந்த படம் .
http://i40.tinypic.com/os7o0o.jpg
மக்கள் திலகத்தின் கதையின் மூலம் உருவான பொழுது போக்கு படம் . இனிய பாடல்கள் நிறைந்த படம் ..
உண்மையின் சிரிப்பை ரசிக்கின்றேன் .....
அடி ஆத்தி ..யாருக்கு நீ ------
நான் உயிர் பிழைத்தேன் .. உன் ....
மயங்கும் வயது ....
நீங்க நினைச்சா நடக்காதா ....
சொர்ணத்தின் அருமையான வசனங்கள் - இன்றும் பொருந்தும் .
-
Quote:
Originally Posted by
kaliaperumal vinayagam
தேசப்பற்று கொண்ட தெய்வம், தேசிய ஒருமைப்பாட்டில் நம்பிக்கை கொண்ட தேவன்,
தமிழக மக்களின் மனதில் நிரந்தரமாக வீற்றிருக்கும் தங்கத் தலைவரின் அற்புதமான தோற்றம் .......ஆஹா ! என்ன அழகு !
அருமைச் சகோதரர் திரு. கலியபெருமாள் அவர்களுக்கு நன்றி !
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல் வாழ்த்துக்கள் !
அன்பன் :: சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
-
-
-
எம்.ஜி.ஆரின் பொன்மொழிகள்
நம்பிக்கை எதன் மீது ஏற்பட்டாலும் சரிதான்; அது உண்மையில் நம்பிக்ககைக்க உரியதாக இருக்க வேண்டும்; அப்போதுதான் வெற்றிக் கிட்டும்.
கடமைகளை இன்முகத்துடன் ஆற்றி உரிமைகளைப் பெற்றிடுவோம்! அமைதியும் ஒற்றுமையும் காத்து வளர்ச்சிக்கு வழிவகுப்போம்! புதிய சமத்துவ சமதர்ம அமைப்புக்காகத் தொடர்ந்து பாடுபடுவோம்!
அறிவியல் துறையில் போட்டி வேண்டும். ஆற்றலுக்கு முதலிடம் தரப்பட வேண்டும். ஆற்றல் இல்லாதவர்களுக்கு அது கிடைக்க வழி செய்யப்பட வேண்டும்.
சமுதாய உணர்வோடு நாம் பிரச்சினைகளை அணுக வேண்டும்; நாம் தனி மனிதர்கள் என்பது எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியமானது நாம் ஒரு சமுதாயத்தின் அங்கங்கள் என்பது!
வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொண்டால் மட்டும் போதாது! விலங்கினங்கள் கூடத்தான் வயிற்றுப் பசியைத் தீர்த்துக் கொள்கின்றன. அவற்றினின்றும் மேம்பட்ட நிலையை ஒவ்வொரு செயலிலும் ஓர் ஒழுங்கினை வரையறுத்துக் கொள்ள வேண்டும்.
வன்முறைதான் போராட்ட முறை என்றால் தோல்விதான் அதற்குப் பரிசாக்க் கிடைக்கும் என்பது நிச்சயம்.
http://i43.tinypic.com/2db2r6d.jpg
எழுத்தாளர்களின் திறமை என்பது காலப்போக்கில் மாறுவது என்றாலும் அந்த எழுத்தாளர்களின் எழுத்துக்கள் எதிர்காலச் சந்ததிகளின் தலையெழுத்தை நிர்ணயிக்கின்றவைகள்.
எழுத்துக்கள் என்பதில் பல்வேறு வகை இருக்கின்றன. பிறரைச் சிந்திக்க வைக்கிற மாதிரி எழுதுவது ஒரு வகை. பிறரைப் புண்படுத்தாமல் எழுதுவது ஒரு வகை. பிறரை வைத்துச் சிந்திக்க வைப்பது ஒருவகை அப்படிச் சிந்திக்க மறுப்பபவர்களைச் சந்திக்கு இழுப்பது என்பது ஒருவகை.
எழுத்தாளர் என்றால் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
உழைப்பே உயர்வு தரும்; உழைப்போம் உயர்வோம்; உழைப்போரே உயர்ந்தோர்; உழைப்பவராலே உலகம் உயர்ந்திடும்.
நமது சமுதாயத்தின் அனைத்துப் பகுதி மக்களும் நல்லிணக்கமான முறையில் சீராக முன்னேற்றம் பெற உத்தரவாதம் தரப்பட வேண்டும்; சமநிலைக்குப் பங்கம் ஏற்படாத வகையில் வளர்ச்சிகள் அமைய வேண்டும்.
அரசியலோடு நாகரிகத்தை, அரசியலோடு நாணயத்தை, அரசியலோடு நல்ல நோக்கத்தை, அரசியலோடு ஜனநாயகத்தை, அரசியலோடு உயர்ந்த பண்பாட்டை இணைத்துத் தந்த நல்ல ஜனநாயகவாதி அண்ணா அவர்கள்.
சமத்துவச் சமுதாயம் காண்பதே உழைக்கும் வர்க்கத்தின் உண்மையான இலட்சியம் எனும் மூலக் கருத்திற்கு முதலிடம் தாருங்கள்.
உழைக்கும் மக்களே ஒன்று சேர்ந்திடுங்கள். பேதப்படுத்தும் சக்திகளை ஒதுக்கித் தள்ளிடுவீர். உழைப்பவரே உயர்ந்தோர் என்னும் த்துதவத்தை நிலைநாட்டுவீர்.
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிமை தேவை. மகிழ்ச்சி தேவை. இந்தத் தேவைகளுக்கு அடிப்படை வளரவும் வாழவும் தடையில்லாமல் இருப்பதுதான்.
தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள், பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் நலன்களைக் காப்பாற்றி அவர்களை மேம்படுத்தப் பாடுபடுவோம்.
சமுதாயத்தில் மக்கள் வாழ்வதற்காக ஏற்றத் தாழ்வற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்.
சமூக முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் ஒரு நாட்டின் இன்றியமையாத தேவை என்றாலும், அதன் பலன்கள் ஏழை, எளிய மக்களுக்குக் கிடைப்பதுஅவசியம்.
தமிழ் நலன், தமிழின் பண்பாடு, தமழ்ச் சமுதாயம் தமிழ் கலாச்சாரம் வளர வேண்டும் என்பது நமது நோக்கமாக இருத்தல் வேண்டும்.
ஒரு மனிதனின் எண்ணமும், நோக்கமும் மட்டுமே போதாது. செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்
-
மாநிலத்தில் தொழில்கள் வளர வேண்டுமென்றால் மத்திய அரசின் உதவியும் அனுமதியும் முதலீடும் அவசியம்; தனியார் துறையின் ஆரவமும் அதிகரிக்க வேண்டும் என்பதையும் அவர் மிக விரைவிலேயே புரிந்து கொண்டார் என்றாலும் இருக்கின்ற நிதி வசதியை வைத்துக்கொண்டு ஏழை எளிய மக்களுக்குப் பயன்படுமாறு என்னென்ன திட்டங்களை உருவாக்க முடியும் என்று யோசித்தார்.
”ஏழைமக்களை வாட்டும் இரு பிரச்சினைகள் பசிக் கொடுமையும், வேலையில்லாத திண்டாட்டமுந்தான் இவை இரண்டையும் நான் நன்றாய் அறிவேன். என் இளமைக்காலத்தில் இவ்விரண்டையும் நான் அனுபவித்திருக்கிறேன்.!”
- இது முதல்வர் புரட்சித் தலைவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசியதாகும்.
http://i39.tinypic.com/k3ksr9.jpg
இவ்வாறு ஏழைகளின் முக்கிய தேவையைத் துல்லியமாகய் உணர்ந்திருந்த புரட்சித் தலைவர் எடுத்துக்கொண்ட முதல் திட்டம் கிராம மேம்பாட்டுத் திட்டமாகும்.
பொருளாதார ஆதார சுருதி
விவசாய வளர்ச்சியே நம்நாட்டுப் பொருளாதாரத்தின் ஆதார சுருதி ஆகும்; அதனால் விவசாயிகளுக்கு வழங்கும் மின்சாரக் கட்டணத்தை யூனிட்டுக்கப் பன்னிரண்டு காசுகளாக்க் குறைத்தார் புரட்சித் தலைவர்.
விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கும் கடனை விரிவுபடுத்தினார். சுமார் 40 கோடி ரூபாயை உடனடியாக வழங்கச் செய்தார்.
அடுத்து, விவசாயத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதியங்களை நிர்ணயம் செய்து ஒரு சட்டத்தை நிறைவேற்றினார். இதனால் நெல் உற்பத்தி ஆண்டுக்கு 60 இலட்சம் டன்களாக உயர்ந்தது.
புதிய தொழில்கள் பலவற்றைத் தொடங்க தனியார் துறைக்கு ஊக்கமளித்தார். அரசுத் துறையிலும் புதிய பல தொழில்களைத் தொடங்க ஏற்பாடு செய்தார். தொழிற்கழகங்களும் மாவட்டத் தொழில் மையங்களும், மாவட்டம் தோறும் தொடங்கப்பட்டன.
132 கோடி ரூபாய் முதலீட்டில் காகித ஆலை ஒன்றும் தொடங்கப்பட்டது.
கைத்தறி நெசவாளர்களின் வாழ்வை உயர்த்துவதற்காக என்றே தனியாக அமைச்சர் ஒருவரை நியமித்தார்.
அரிஜன மேம்பாட்டுக்காகத் தனி இயக்குநர் ஒருவரின் தலைமையில் தனித்துறையை ஏற்படுத்தினார். அரிஜன வீட்டு வசதி வாரியம் ஒன்றும் தனியாக நிறவப்பட்டது. நலிந்த பிரிவினருக்கு ஏராளமான வீடுகளைக் கட்டிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்தார்.
-
புரட்சித் தலைவர் நடித்துக் கவியரசர் பாடல்கள் எழுதியுள்ள படங்கள் பெரும்பாலனவற்றுள், தத்துவார்த்தமான பாடல்கள் ஒன்றிரண்டு நிச்சயமாக இடம் பெற்றிருக்கும்.
அப்பாடல்களே கதையின் உச்சகட்ட நிலையின் உயர்மகுடங்களாகவும் திகழ்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
விளையாட்டு வீரராக, சமூகசேவை செய்யும் வாலிபராகக் ‘குடும்பத் தலைவன்’ படத்தில் வரும் நாயகன் எம்.ஜி.ஆர், உலகியல் தத்துவத்தைக் கூறி நடிப்பதாக வரும் பாடல் காட்சிக்கென்று, கண்ணதாசன் எழுதி, டி.எம். சௌந்தரராஜன் இனிய குரலில் பாடிய பாடலைக் காணுங்களேன்!
“மாறாதய்யா மாறது!
மனமும் குணமும் மாறாது!
துறவியின் வாழ்வில் துயரம் வந்தாலும்
தூய தங்கம் தீயில் வெந்தாலும்…(மாறா)
காட்டுப் புலியை வீட்டில் வச்சு
கறியும் சோறும் கலந்து வச்சாலும்
குரங்கு கையில் மாலையைக் கொடுத்து
கோபுரத்தின் மேல் நிக்க வச்சாலும்… (மாறா)
வரவறியாமல் செலவழிச்சாலும் நிலைக்காது!
மனசறியாமல் காதலிச்சாலும் பலிக்காது!
காலமில்லாமல் விதை விதைச்சாலும் முளைக்காது!
காத்துலே விளக்கை ஏத்தி வச்சாலும் எரியாது!
திட்டும் வாயைப் பூட்டி வச்சாலும்
திருடும் கையைக் கட்டி வச்சாலும்
தேடும் காதைத் திருகி வச்சாலும்
ஆடும் கண்களை அடக்கி வச்சாலும்….(மாறா)”
பாடலைக் கண்டீர்கள்!
இதில் இடம்பெற்றுள்ள உலகியல் உண்மைத் தத்துவங்களில், எவற்றைப் பொய்யென்று நம்மால் புறந்தள்ள முடியும்?
இவற்றைப் புரட்சித்தலைவர், திரையில் கூறித் தோன்றும் காட்சிகளில் திரையரங்குகளில் எழுந்த தரவொலிகளைக் கேட்டு மனம் மகிழாதாரும் இருந்ததுண்டோ? இப்படி எத்தனையோ நாட்டு நடப்புத் தத்துவப் பாடல்களை, நல்லவர் எம்.ஜி.ஆர். படங்களில், கவியில் வல்லவராம் நம் கண்ணதாசன் எழுதியுள்ளார்.
-