http://i1065.photobucket.com/albums/...ps59p1mhvh.png
Printable View
தினமணி இன்றைய நாளிதழின் இணைய தளப்பக்கத்திலிருந்து..Quote:
http://media.dinamani.com/2015/03/06...-logo-main.png
இந்த நாளில் அன்று (19.06.1960) 1959-ம் ஆண்டின் சிறந்த நடிகர் சிவாஜி கணேசன்; சிறந்த நடிகை பத்மினி; சிறந்த படம் கல்யாணப் பரிசு
http://media.dinamani.com/2015/03/27.../padmini-3.jpg
1959-ம் ஆண்டில் திரையிடப்பட்ட பல தென்னிந்திய மொழி சினிமாப் படங்களில் சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், டைரக்டர்கள் ஆகியோருக்கு சென்னை கவர்னர் ஸ்ரீ விஷ்ணுராம் பரிசுகள் வழங்கினார்.
சினிமா ரசிகர்கள் சங்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த பரிசளிப்பு விழாவுக்கு திரையுலகப் பிரமுகர்களும், ஏராளமான ரசிகர்களும் வந்திருந்தனர்.
சிறந்த படமாக வீனஸ் பிக்சர்ஸின் கல்யாணப் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகராக சிவாஜி கணேசன் (பாகப்பிரிவினை), சிறந்த நடிகையாக பத்மினி (தங்கப்பதுமை), சிறந்த டைரக்டராக ஸ்ரீதர் (கல்யாணப் பரிசு), சிறந்த துணை நடிகராக டி.எஸ். பாலையா (பாகப்பிரிவினை), சிறந்த துணை நடிகையாக சி.ஆர். விஜயகுமாரி (கல்யாணப் பரிசு), சிறந்த நகைச்சுவை நடிகராக கே.ஏ. தங்கவேலு (மஞ்சள் மகிமை), சிறந்த இசையமைப்பாளராக ஏ.எம்.ராஜா (கல்யாணப் பரிசு) சிறந்த குழந்தை நட்சத்திரமாக மாஸ்டர் பாபுஜி (கல்யாணிக்குக் கல்யாணம்) உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
இணைப்பு - http://www.dinamani.com/impressions/...cle2873333.ece
இதில் கூறியிருப்பது ஒரு விஷயம். ஆனால் மிக முக்கியமான விஷயம் யாதெனில் திரு தேவர் அவர்களின் மணிவிழாவை நடத்தியே ஆகவேண்டும் என்று அதற்க்கு முதல் முதலாக முயற்சி எடுத்து ( தேவர் மணிவிழா விருப்பம் இல்லை என்று கூறியபிறகும் ) திரு தேவர் அவர்களுக்கு மணிவிழா காணாமல் வேறு யாருக்கு மணிவிழா காணுவது என்று விடாபிடியாக இருந்து மணிவிழா நடத்தினார் நமது நடிகர் திலகம் !
வியாபாரம் வேறு..தனிமனித மரியாதை அதனால் வரும் மனிதாபிமானம் வேறு என்பதை செயலில் உணர்த்திகாடியவர் நமது நடிகர் திலகம்.