மதுண்ணா!
ஒரு டவுட். 'நியாயம் கேட்கிறேன்' என்று ஆனந்தபாபு நடித்து ஒரு படம் வெளிவந்தது. நன்றாகத் தெரியும். அப்படியே விஜயலலிதா போன்ற முக அமைப்பு கொண்ட தேவிபாலா என்பவர்தான் நாயகி.
ஏ..வி.எம்.ராஜன் நாயகனாக நடித்த படம் 'நியாயம் கேட்கிறோம்' என்று ஞாபகம். 1973-ல் வந்த படம் என்று நினைவு.
நீங்கள் சொன்னது போல்
கண்ணன் பிறந்ததும் சிறைச்சாலை
அந்த காந்தி இருந்ததும் சிறைச்சாலை
சிறைச்சாலை ஒரு கல்லூரி
அங்கு சென்று திரும்பியவன் ஒரு குருநாதன்
புரட்சியைத் தந்ததும் சிறைச்சசாலை
பல புத்தகம் பிறந்ததும் சிறைச்சாலை
இருட்டில் இருந்து வெளிச்சத்திற்கு வர
இறைவன் படைத்ததும் சிறைச்சசாலை
என்று வரிகள் கொஞ்சம் நினைவுக்கு வருகின்றன. சரியா தவறா என்று தெரியவில்லை. தேடிப் பிடித்து விடுவோம்.