விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவின் வெளிச்சத்தில் காதல் உணர்வுகளை புதுமையாகப் பிரதிபலித்த பரிமளா துரை.
http://www.youtube.com/watch?feature...&v=_IeGUw7uSfs
Printable View
விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலாவின் வெளிச்சத்தில் காதல் உணர்வுகளை புதுமையாகப் பிரதிபலித்த பரிமளா துரை.
http://www.youtube.com/watch?feature...&v=_IeGUw7uSfs
நடிகர் திலகத்தின் நடை
*
5..பல்லால் எடுத்துவிட்ட பாம்பு…!
*
“குட்மார்னிங் பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ்”
“குட் மார்னிங்க் மிஸ்.”
“குட்மார்னிங்க் ஞெஞ்ஞமிஞ்ஞ…”
“யாரது..குட்மார்னிங்கோட என்னமோ சொன்னது.. நவீன் நீயா..என்ன சொன்ன..”
“ஆமா மிஸ்.. இந்த ப்ளூ ஸாரில நீங்க ரொம்ப பியூட்டி ஃபுல் மிஸ்..”
“சரி சரி..ஐஸ் வைக்காத..டெஸ்ட்ல மார்க்லாம் கூட்டிப் போடமாட்டேன்..ஓகே..க்ளாஸ்..இன்னிக்கு ஒங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன்..யூ நோ.. நேம்ஸ் நா என்ன..நீ சொல்லு ப்ரீத்தி..”
“டீச்சர்.. நேம்ஸ்னா பேர்கள்.. மை நேம் இஸ் ப்ரீத்தி.. யுவர் நேம் இஸ் அர்ச் அர்ச் அர்ச்சனா மிஸ்..சரியா டீச்சர்….இவன் என்னமோ சொல்றான்..”
“டேய் என்னடா சொன்ன..
“நான் சொல்றேன் டீச்சர்.. உங்களை பூனைக் கண்ணு மிஸ்னு சொல்றான்..”
“நான் அப்படிச் சொல்லவே இல்லை யே..இவ பொய் சொல்றா”
“சரி சரி.. அழாத.. பெயர் என்பது எல்லாருக்கும் அவங்களோட அப்பா அம்மாவால வைக்கப் படுவது..ஆனாக்க ஒரு ஆள் தன்னோடா நல்ல செயல்களால பேரெடுத்தா தான் குட்.. அவன் நல்ல ஆள்ங்கறோம்..இப்படித் தான் ஒரு நாள் ஒரு மகான் ஒரு ஊருக்குப் போனாராம்.. மகான்னா என்ன தெரியுமா..”
“டீச்சர் நானு”
“சொல்லு விஷால்.. “
“அதான் நானு சொன்னேனே.. எங்கப்பா என்னை என்னரும மவனேன்னு கொஞ்சுவார்..”
“ஹைய்யோ.. அது மகன் டா.. மகான்னா வேற.. அதாவது காட் ஐ நினைச்சு ஜபிச்சு காட் டோட அருள் பெற்றவங்க.. அந்த மகான் என்ன பண்றார்னா.. அந்த ஊருக்குள்ள போனா ஊரு முழுக்க அவர் பேரு..”
“அவர் பேரென்ன மிஸ்..”
“சொல்றேன்.. பாத்தா ஹோட்டல், மளிகைக் கடை அதாவது சூப்பர் மார்க்கெட், ஜவுளிக்கடை அப்படி இப்படின்னு எல்லாத்துலயும் அவர் பேர் தான்.. பாத்தாரு..யாரோட வியாபாரங்கள் இதுன்னு விசாரிச்சார்.
.”
“ஐ நோ டீச்சர்..ஏதாவது பொலிட்டீஷியனா இருக்கும்”
“சும்மா இரு படவா..கேட்டா அதெல்லாம் ஒரு அப்பூதி அடிகள்ங்கறவருக்குச் சொந்தம்ங்கறாரு..இவரும் அந்த அப்பூதி அடிகள் வீட்ட விசாரிச்சு போறாரு.. அவங்க வீட்டுத் திண்ணைல உட்கார்றார்.. என்னடா கையைத் தூக்கற..”
“திண்ணைன்னா என்ன டீச்சர்..
“காலம்.. திண்ணைன்னா அந்தக் காலத்துல வீட்டுக்கு வெளில மேடை மாதிரி வாசலுக்குப் பக்கத்துல போட்டிருப்பாங்க.. நீ அபார்ட்மெண்ட்டா உனக்குத் தெரிய வாய்ப்பில்லை.. சரியா.. அங்க மிஸஸ் அப்பூதி சின்ன குண்டுக் கொழுக்கட்டையாட்டமா வந்து விசாரிக்கறா..கூடவே அப்பூதி அடிகளும்.. “சார் நீங்க மகா பெரியவா போல இருக்கேளே.. நீங்க யாரு..”
அதுக்கு அந்த மகான் ஒரு தெய்வீகச் சிரிப்புச் சிரிக்கறார்..” நான் யார்ங்கறது இருக்கட்டும்..ஒன்னோட வீட்டில இது என்ன பேருன்னு கேக்கறார்.. இதுவா.. சார்.. இது திரு நாவுக்கரசர் இல்லம் அப்படிங்கறார் அப்பூதி..என்னடா தூங்கற..”
“இல்ல டீச்சர் கண்ணுல தூசி.. ப்ராமிஸா..”
“அப்புறம் கேள்வி கேட்டா ஆன்ஸர் சொல்லலைன்னா பிச்சுடுவேன்.. அப்பூதி சொல்றார்.. சார்..அது என்னோட மானசீக குரு நாதர்..மிக உயர்ந்தவர்.. நிறைய நல்ல காரியம் பண்றவர்..காட் மாதிரி அதனால அவர் பேர் வெச்சேன்ங்கறார்.. இந்தப் பெரியவர் சிரிக்கறார்.. அவன் என்னடாப்பா பண்ணிட்டான்..அவனப் போய் ஓஹோங்கறியே.. அப்பூதிக்கும் அவர் வொய்ஃபுக்கும் கோபம் வருது..இன்னா சார்..என்னோட குருவப் பத்தி அவன் இவன்னு பேசுறங்கறார்..கொஞ்சம் இரு..”
“டீச்சர் நான் வேணும்னா ப்ரின்சிபல் ரூம் வாசல்ல கோல்ட் வாட்டர் எடுத்துக்கிட்டு வரட்டா..
“இதுவே போதும்.. அந்தப் பெரியவர் நான் தான் அந்த நாவுக்கரசர்னு சொல்லிச் சிரிக்க கொஸ்டின்க்கு ஆன்ஸர் தெரியலைன்னா நீங்கள்ளாம் முழிப்பீங்களே அதே மாதிரி மிஸ்டர் அண்ட் மிஸஸ் அப்பூதி முழிக்கறாங்க.. தென் அவர் கால்ல டபக்குன்னு விழுந்துடறாங்க..அப்ப இந்த நவீன் மாதிரி ஒல்லியா ஒரு பையன் வீட்டுக்கு உள்ள இருந்து வர்றான்.. இவன் தான் என்னோட சன்..உங்க பேர் நாவுக்கரசர்னு வெச்சுருக்கேன்ங்கறார்.. ஓ குட். அப்படின்னு அந்தப் பெரியவர் சிரிக்கறார்.. அப்பூதி “சார்..எங்க வீட்டில நீங்க லஞ்ச் சாப்பிடணும் கொஞ்சம் ஹாஃப் அன் அவர் கொடுத்தீங்கன்னா என் வீட்டுக்காரி தூள் கிளப்பிடுவான்னு சொல்றார்..என்னடா கையைத் தூக்கறே..
ஹாஃப் ஹவர்ல ஹோட்டல்லதான் கிடைக்கும் மிஸ்..வீட்டில முடியாது.. டூ அவர்ஸ் ஆகும் டொமொட்டோ ரசம், பொடொட்டோ கறி பண்ண..”
“ஏன் அப்பா ஹெல்ப் பண்ண மாட்டாரா..”
“சமைக்கறதே அவர் தானே மிஸ்.. அம்மா ஒக்காந்து சூப்பர் சிங்க்ர் பாத்துக்கிட்டிருக்கும்.. நான் பக்கத்துல ஒக்காந்து ஹோம் வொர்க் பண்ணுவேன்..ப்ராமிஸா மிஸ்..”
“சமத்து தான் போ..அப்புறம் என்ன ஆச்சுன்னா நாவுக்கரசர்..சரின்னு சொன்னவுடனே மிஸஸ் அப்பூதி சமைக்கறாங்க..பையன்கிட்ட போய் வீட்டுக்குப் பின்னால போய் பனானா லீவ் பறிச்சுட்டு வாடாங்கறாங்க..அவன் பறிக்கறச்சே பாத்தா அவன் காலுக்குக் கீழ ஒரு பாம்பு..”
“அச்சசோ.. அந்த பாம்ப மிதிச்சுட்டானா டீச்சர்..பாம்பு செத்துப் போச்சா..பாவம் பாம்பு..”
“அடச்சே..அந்தப் பாம்பு கடிச்சு பையன் மயக்கமா வாழையிலையோட போய் அம்மாகிட்ட கொடுத்துட்டு பொசுக்குன்னு போய்டறான்..
“போய்டறான்னா..”
காட் கிட்ட போய்டறான்..அதான் நீயே சொன்னேல்ல செத்துப் போய்டறான்..இவங்க ஒரே அழுகை..ஹஸ்பெண்ட் அப்பூதிகிட்டயும் சொல்ல அவரும் அழுகை..சரி சரி..குரு வந்துருக்கார்..குருன்னா டீச்சர். குருவுக்கு சாப்பாடு போட்டுடுவோம்னு சொல்லிகிட்டு இருக்கறச்சே நாவுக்கரசர் அப்படியே குளிச்சு முடிச்சுட்டு வயசான தளர் நடையில் வர்றார்.. அழகா இருக்கும்..சாப்பிடலாமான்னு அப்பூதி கேக்க சரிங்கறார்.. ஒன்னோட பையனையும் கூப்பிடுங்கறார்.. பையன் தான் காட் கிட்ட போய்ட்டானே.. ரெண்டு பேரும் அழறாங்க.. விஷயத்தைக் கேள்விப் பட்டதும் வெக்ஸ் ஆகி ஒரு பாட்டுப் பாடறார் பாரு.. பாம்பே வந்து வெஷம் எடுத்துடுது..
”
“நிஜம்மாவா ..ஹவ் இஸ் இட் பாஸிபிள்..”
“கேள்வி கேக்கறதப் பாரேன்..எல்லாம் சிவன் அருளால..
*
எல்லையிலா சக்தியினை ஏற்றமுடன் கொண்டதென
கிள்ளை மொழியினைத் கீறித்தான் பார்த்தனையோ
நல்ல பெயரெல்லாம் நாகமே நீஎடுக்க
பிள்ளை பிழைக்கவைப் பாய்..
அப்படின்னு சொல்றாரா..
*
அதுக்குப் பாம்பு என்ன பண்ணித்து//
கசப்பாய் உடலெங்கும் காட்டருவி போல
விஷத்தால் கருநீல வண்ணமென மாறிவிட
கல்லே உருகக் கதறிய பாடலினால்
பல்லால் எடுத்துவிட்ட பாம்பு..
*
புரியுதா..”
*
“ஆமா ஏன் டீச்சர் திடீர்னு வேற லாங்க்வேஜ்ல பேசறாங்க..ஹிந்தி தானே ரேணு..”
“இல்லடா..அது ஃப்ரெஞ்ச்னு நினைக்கறேன்..இல்லையா டீச்சர்..”
அடி கொடுப்பேன்.. நான் பாடினது தமிழ்ப் பாட்டு தான்..ஸோ அப்புறம் என்ன.. மிஸ்டர் ,மிஸஸ், மாஸ்டர் அப்பூதி ஹாப்பியாகி நாவுக்கரசர் கால்ல விழுந்தாங்க.. அவரும் பை சொல்லிட்டுக் கிளம்பிட்டார்..”
அவ்ள தானா..
“இல்லப்பா..இன்னும் ஒரு கதை சொல்லலாம்..அத நாளைக்குச் சொல்றேன்..ஒரே ஒரு விஷயம் மட்டும் சொல்லிடறேன்.. நாவுக்கரசர் தாத்தா.. அவர் பேரன் மாதிரி இன்னொரு மகான் ஞான சம்பந்தர் நவீன் வயசு இருக்கும்.. ஆனா அவன் மாதிரி சோம்பேறி கிடையாது.. நிறைய ஞானஸ்தர் இறைவனருள் பெற்றவர்..அவரோட இவரும் சேர்ந்து அருட்பார்வையோட அந்தச் சிறுவனுக்கு இணையா நடப்பார் பாரு..வாவ்.. ரொம்ப அழகா இருக்கும்”
“யாரு சிவாஜி தானே டீச்சர்..திருவருட்செல்வர் தானே படம்”
“எப்படிடா தெரியும்..
எங்க குட் ஓல்ட் தாத்தா எப்பவும் பழைய படம் தான் பாப்பார்..அப்ப பார்த்திருக்கேன்..”
“டேய் சிவாஜின்னே படம் இருக்குல்லடா..”
“அது வேறடா..இந்த சிவாஜி நடிகர் திலகம்..”
”அதுக்கில்லடா..எங்கப்பா அந்தப் படத்தோட ஹீரோயினோட ஃபேனாக்கும்!”
“ச் ச்.. என்ன பேச்சு.. ஸோ க்ளாஸ்..இந்தக் கதை மூலமா என்ன தெரிஞ்சுக்கிட்டீங்க..”
நான் சொல்லட்டுமா மிஸ்..”
“சொல்லு ரேணு..”
“யாராவது கெஸ்ட் வந்தாங்கன்னா வீட்டில இருக்கற எவர்ஸில்வர் ப்ளேட்ல்யே தான் சாப்பாடு போடணும்.. சரியா டீச்சர்..”
“உன்னை உதைக்கணும்..டிங் டிங்.. சரி சரி பெல் அடிச்சுடுச்சு..ஸீயூ இன் நெக்ஸ்ட் க்ளாஸ்”
“தாங்க் யூ மிஸ்..”
“ஏண்டா இப்படி க் கத்தறீங்க..ஓகே..பை..:)
***
வாசக தோஷ ஷந்தவ்யஹ :)
Pudayal - watch online
<iframe width="560" height="315" src="http://www.indopia.com/embed/Vaecdzyzzzymzztn/" frameborder="0" allowfullscreen></iframe>
:):smokesmile:
சின்னக் கண்ணன் சார்
தங்களுடைய நடையில் நடிகர் திலகத்தின் நடையைப் படித்துக் கொண்டே நடை போட்டேன் பாருங்கள்... விழாத குறை ...
இனிமேல் செல் போனில் இன்டர்நெட் பார்க்கக் கூடாது என்பது ஒரு படிப்பினை... இத்தனைக்கும் வீட்டுக்குள்ளேயே....
ரவி சார்
ஹனுமான் சாலீச... நடிகர் திலகம் .... என்ன அருமையான ஆய்வு... சூப்பர் சார்...
கோபால் ..
தங்கம் புதைக்கப் பட்ட இடம் இது தான் ...
ஆமாம்... இந்த மய்யம் திரியில் தான் அந்தத் தங்கம் உள்ளது...
இப்போது எங்கெங்கோ தோண்டுகிறார்களே.... வேஸ்ட்...
கோபால் என்கிற தங்கப் புதையல் நடிகர் திலகம் உருவம் பொதித்த நாணயங்களாக தேடி எடுத்துத் தரும் புதையலை எடுத்துச் செல்லுங்கள்...
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத் தங்கமே..
அவர் ஏதும் அறியாரடி ஞானத் தங்கமே...
வாசு சார்
இயக்குநர் வரிசையில் தங்களுடைய சிறந்த பதிவுகளுக்காக...
பிரபல ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ வை நினைவு படுத்தும்...
சூப்பர் ஸ்டைல் கிங்கின் அட்டகாசத் தோற்றம்..
http://i1146.photobucket.com/albums/...ps423fcdf9.jpg
//that day is not very far from reach // நல்ல கட்டுரை ரவி ஜி..இன்னும் எழுதுங்கள்..
ஆர்.எஸ்.. பார்த்து.. நடக்கும் போது அடிபடவில்லையே... :) நன்றி..ஆனால் எனக்கு உங்களோட முன் அவதார் தான்பிடிச்சுருந்தது..ஜி.எஸ் ஸோட வாக்வாதம் பண்ணிட்டு அடுத்து என்ன பதில் சொல்லலாம்னு யோசிக்கறா மாதிரி :) கண்ணா எஸ்கேப்