கடுமையான பணி சுமை காரணமாக நான் திரிகளில் முன் போல் வருவதில்லை
Printable View
கடுமையான பணி சுமை காரணமாக நான் திரிகளில் முன் போல் வருவதில்லை
சுக ராம் சார் உங்களின் பதிவுகள் அசத்தல் குறிப்பாக வசூல் விபரங்கள்
9.9.2015
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவரான திரு இராம வீரப்பன் அவர்களின் இனிய பிறந்த நாள்
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியின் நண்பர்கள் சார்பாக திரு ஆர் .எம் வீரப்பன் அவர்களுக்கு நம்முடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
http://i60.tinypic.com/15rgw0j.jpg
மக்கள் திலகத்தின் திரை உலக வரலாற்றிலும் , அரசியல் பயணத்திலும் முக்கிய பங்காற்றியவர் .
மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கும் , மக்கள் திலகத்திற்கும் இணைப்பு பாலமாக விளங்கியவர் .
பேரறிஞர் அண்ணாவின் ஆலோசனையின் பேரில் மக்கள் திலகத்தின் திரை உலக நிர்வாகியாக பணி யாற்றியவர்
நாடோடி மன்னன் முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மக்கள் திலகத்தின் படங்களுக்கு பணியாற்றியவர் சத்யா மூவிஸ் நிறுவனத்தை துவக்கி தெய்வத்தாய் .முதல் இதயக்கனி வரை 6 வெற்றி படங்களை தயாரித்தவர்
மக்கள் திலகம் அதிமுகவை தொடங்கிய போது முக்கிய பங்காற்றி 1977 முதல் 1987 வரை தமிழக அமைச்சரவையில்
இடம் பெற்று சிறப்பாக பணி புரிந்தவர்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் மன்றத்தை திறம்பட இயக்கி பல விழாக்கள் , மாநாடுகள் , பட விழாக்கள் நடத்தி வெற்றி கண்டவர் . மக்கள் திலகத்தின் எண்ணங்களை குறிப்பறிந்து செயலாற்றியவர் . அனைத்துலக எம்ஜிஆர் மன்றங்களை
சிறப்பாக வழி நடத்தியவர் . சிறந்த பண்பாளர் . சிறந்த பேச்சாளர் . மக்கள் திலகத்திற்கு சோதனைகள் ஏற்பட்ட நேரங்களில் உறுதுணையாக நின்றவர் . அவர் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோம் .
சகோதரர் திரு.யுகேஷ் பாபு அவர்களுக்கு,
தங்கள் பதிவுகளுக்கு நன்றி. தங்கள் பணிச் சுமை புரிகிறது. எனக்கும் கடுமையான வேலைகள். கடந்த 11 நாட்களில் 4 நாட்கள் மட்டுமே திரிக்கு வந்துள்ளேன். அடுத்த சில நாட்கள் வர முடியுமா என்று தெரியவில்லை. நேரம் கிடைக்கும்போது நிச்சயம் திரிக்கு வந்து பதிவிடுங்கள். அது நம் அனைவரின் கடமை. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
யுகேஷ்
இன்றைய அரசியல் சூழ் நிலை பற்றி கவலை இல்லை .மக்கள் திலகம் எம்ஜிஆர் வாழ்ந்த காலத்தில திரு ஆர்.எம்.வி
அவர்கள் உண்மையாக உழைத்தார் . மக்கள் திலகத்தின் ரசிகர்களாகிய நாம் பெருந்தன்மையுடன் நடப்பது மக்கள் திலகத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் .
ஒரு மனிதனின் எண்ணமும் நோக்கமும் மட்டுமே நல்லதாக இருந்தால் மட்டும் போதாது, செயலும் பண்பாட்டுடன் இருக்க வேண்டும். இதை ஓவ்வொரு வரும் உணர்ந்தால் நாட்டில் நல்லவை நடக்கும்.
- புரட்சித்தலைவர்
எண்ணம் நீயாக, எல்லாம் நீயாக
என்றும் வழ வேண்டும் - மண்ணில்
எங்கும் வழ வேண்டும்
திண்ணம் மனங்கொண்ட தலைவன் புகழ்வாழ்க - எம்.ஜி.ஆர்.
என்னும் குணங்கொண்ட தொண்டர் தாம்வாழ்க வாழ்கவே.