வாசு - இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று - தாயை புகழும் பாடல் என்பதால் மட்டும் அல்ல - பாடல் முழுவதும் ஒரு positive vibe ஏற்படும் - பாலாவின் குரலும் , ம .தி போன்றே வெகு சுறுசுறுப்பாக இருக்கும் - அந்த காலத்தில் 100க்கு 40 மார்க் வாங்கினவன் கூட தன் அம்மாவிடம் இந்த பாடலைத்தான் பாடுவான் .. இந்த பாடல் மிகவும் பிரபலம் ஆகி தேர்தல் மேடைகளில் பின்பு முழங்க தொடங்கியது --
இப்பொழுதெல்லாம் எங்களால் பாலாவிற்கும் வாசுவிர்க்கும் அதிக வித்தியாசங்களை கண்டு பிடிக்க முடிவதில்லை - இருவரும் தடம் பதித்தவர்கள் - ஒருவர் பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தார் - இன்னொருவர் அலசி , ஆழமாகத் தோண்டி , பாடல்களை எடுத்துவந்து , தூசிகளை கலைந்து , மெருகு ஊட்டி இந்த திரியில் எல்லோரையும் மயக்கிக்கொண்டிருக்கிறார் ..