http://i160.photobucket.com/albums/t...pso810z4kn.jpg
Printable View
https://youtu.be/lIcvw5jLIMA
ஒரு தாய் வயிற்றில் வந்த உடன்பிறப்பில்
கொஞ்சம் பிரிவு வந்தால்
பின்பு உறவு வரும்
நல்ல மனிதருக்கும் நன்றி மறந்தவருக்கும்
முன்பு உறவிருந்தால்
பின்பு பிரிவு வரும்
(ஒரு தாய் )
சோலை மலர்க் கூட்டம் சொந்தம் கொண்டாடி
சிரித்து உறவாடுதே
மாலை பனி மூட்டம் மலர்கள் இலை தோறும்
சிரித்து விளையாடுதே
இங்கு நான் அங்கு நீ, என்று நாம் வாழலாம்
அண்ணன் போற்றும் தம்பி
என்று நீயே கூறலாம்
(ஒரு தாய் )
உடலின் பின்னோடு உலவும் நிழல்கூட
இருளில் பிரிகின்றது
வெளிச்சம் வரும் போது உடலை நிழல்தேடி
இணைய வருகின்றது
என் மனம் பொன்மனம் என்பதை காணலாம்
நாளை அந்த வேளை
வந்து என்னை சேரலாம்
(ஒரு தாய் )
கண்ணை மறைக்கின்ற காலம் வரும் போது
தர்மம் வெளியேறலாம்
தர்மம் அரசாளும் தருணம் வரும்போது
தவறு வெளியேறலாம்
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
அண்ணா அன்று சொன்னார்
என்றும் அதுதான் சத்தியம்
(ஒரு தாய் )
https://youtu.be/D3ozdYUlKLg
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
https://youtu.be/2h7NZd76mtk
என் கண்ணனுக்கெத்தனை கோவிலோ
காவலில் எத்தனை தெய்வமோ
மன்னனுக்கெத்தனை உள்ளமோ
மனதில் எத்தனை வெள்ளமோ
(கண்ணனுக்கு)
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
(கண்ணனுக்கு)
என் கண்ணன் தொட்டால் பொன்னாகும்
அவன் கனிந்த புன்னகை பெண்ணாகும்
மங்கை எனக்கு கண்ணாகும்
மறந்து விட்டால் என்னாகும்
https://youtu.be/sKqF5MzQPFY
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
நல்ல நல்ல நிலம் பார்த்து
நாமும் விதை விதைக்கணும்
நாட்டு மக்கள் மனங்களிலே
நாணயத்தை வளர்க்கண்ணும்
(நல்ல...)
பள்ளி என்ற நிலங்களிலே
கல்விதனை விதைக்கணும்
பிள்ளைகளை சீர்திருத்தி
பெரியவர்கள் ஆக்கணும்
(நல்ல...)
கன்னியர்க்கும் காளையர்க்கும்
கட்டுப்பாட்டை விதைத்து
கற்பு நிலை தவறாது
காதல் பயிர் வளர்த்து (2)
அன்னை தந்தை ஆனவர்க்கு
தம் பொறுப்பை விதைத்து
பின் வரும் சந்ததியை
பேணும் முறை வளர்த்து
இருப்பவர்கள் இதயத்திலே
இரக்கமதை விதைக்கணும்
இல்லாதார் வாழ்க்கையிலே
இன்பப் பயிர் வளர்க்கணும்
( நல்ல...)
பார் முழுதும் மனிதக்குலப்
பண்புதனை விதைத்து
பாமரர்கள் நெஞ்சத்திலே
பகுத்தறிவை வளர்த்து(2)
போர் முறையை கொண்டவர்க்கு
நேர்முறையை விதைத்து
சீர் வளர தினமும் வேகமதை வளர்த்து
பெற்ற திருநாட்டினிலே
பற்றுதனை விதைக்கணும்
பற்றுதனை விதைத்துவிட்டு-
நல்ல ஒற்றுமையை வளர்க்கணும்
( நல்ல...)https://youtu.be/aMx-dTW9_Bw
https://youtu.be/0CNplJ-qiN4
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ....
கடவுள் என்னும் முதலாளி
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயி .... விவசாயி ...
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
முன்னேற்ற பாதையிலே மனச வைத்து
முழு மூச்சா அதற்காக தினம் உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ
வழங்கும் குணம் உடையோன் விவசாயி
விவசாயி ... விவசாயி ....
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்
விவசாயி .... விவசாயி ....
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
கருப்பென்றும் சிவப்பென்றும் வேற்றுமையாய்
கருதாமல் எல்லோரும் ஒற்றுமையாய்
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
பொறுப்புள்ள பெரியோர்கள் சொன்னபடி
உழைத்தால் பெறுகாதோ சாகுபடி
விவசாயி .... விவசாயி ....
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
இருந்திடலாம் நாட்டில் பல வண்ணக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்ணப்படி
பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி
விவசாயி .... விவசாயி ....
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
இங்கிலீஷ படிச்சாலும் இன்பத் தமிழ் நாட்டிலே
இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே
உங்க சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
நான் எப்படி எப்படி இருக்கணுமோ
அப்படி அப்படி மாத்துங்க
சொற்படியே நடத்துக்குறேன் சொல்லுங்க
(இப்படித்தான்)
மானம் பாத்த வெவசாயிங்க நாடு அல்லவோ -
இங்குமானம் நாணம் பெண்களுக்கு ஆடை அல்லவோ..
அதுக்கு...
(இப்படித்தான்)
பூமுடிஞ்ச கூந்தல் பழைய நீளம் இருக்குதா -
இப்பபொம்பளைங்க எல்லாத்துக்கும் புருவம் இருக்குதா
கழுதை தேஞ்சு கட்டெறும்பாச்சு நாட்டுலே -
பெண்கள்காரியத்த ஆம்பள பாக்குறான் வீட்டுல
எல்லாரோட என்னையும் சேக்கக் கூடாது -
வேலைஎது கொடுத்தாலும் செய்வேன் தப்பாது..
சொல்லுங்க
களையெடுக்கணும் வெளைய வைக்கணும்
கதிரு முத்தின வயலறுக்கணும்
கட்டுஞ் சொமக்கணும் களமுஞ் சேக்கணும்
காத்தப் பாத்து தூத்தி விடணும்
காலம் நேரம் கடந்திடாமே
நாலாவேலையும் நாமே பாக்கணும்
ஹோ..ஹோ..ஹோ..
அதுக்கு
(இப்படித்தான்)
https://youtu.be/4feyBDQALQs
பாடுபட்ட காத்த நாடு கெட்டுப் போகுது
கேடுகெட்ட கும்பலாலே-
நீங்க கேடுகெட்ட கும்பலாலே.... ( பாடு )
சூடுபட்ட மடமை கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே-பெரும்....சூடுபட்ட
வேடிக்கையான பல வித்தையைக் கண்டு பயந்து
வேதனையில் மாட்டிக்கிடும் வீணராலே
வாடிக்கையாய் நடக்கும் வஞ்சகச் செயல்களுக்கு
வாழ இடமிருக்கு மண் மேலே-இன்னும்
வாழ இடமிருக்கு மண் மேலே-நாம்.... ( பாடு )
சூடுபட்ட மடமை,கூடுகட்டி வாழுது
மூடர்களின் தலைகளிலே...
வெண் முகிலே.. வெண் முகிலே.
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
சொன்னதை நீ அவரிடத்தில் சொல்லு
இல்லை என்னையேனும் அங்கழைத்துச் செல்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
வெண் முகிலே.ஏஏஏஏஏஏ
உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உறங்காமல் விழியிரண்டும் உறங்குதென்று சொல்லு
உயிரங்கே.. உடலிங்கே உள்ளதென்றும் சொல்லு
உருவிழந்து மகிழ்விழந்து கருகுவதாய் சொல்லு
உடலிழந்து போகும் முன்னே ஓடி வரவும் சொல்லு
ஓடி வரவும் சொல்லு
வெண் முகிலே கொஞ்ச நேரம் நில்லு
என் கண்ணீரின் கதை கேட்டு செல்லு
வெண் முகிலே ஏஏஏஏஏஏஏஏஏ
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
கார்மேகக் கூட்டங்கள் கலையாமல் மும்மாரி பெய்திட*
கார்மேகக் கூட்டங்கள் கலையாமல் மும்மாரி பெய்திட*
பார் மீது பயிர்கள் செழித்திட
பக்குவமாய் நடனம் புரிவாய் நீ
பார் மீது பயிர்கள் செழித்திட
பக்குவமாய் நடனம் புரிவாய் நீ
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
நான் கண்ட தெய்வங்கள் யாரென்று சொல்லு
நான் கண்ட தெய்வங்கள் யாரென்று சொல்லு
நல்லோர்களில்லாரை என்றென்றும் தள்ளு
நல்லோர்களில்லாரை என்றென்றும் தள்ளு
ஏனென்று கேட்பார்கள் இதமாக வெல்லு...
ஆஆஆஆ..ஆஆஆஆ..ஆஆஆஆ..
ஏனென்று கேட்பார்கள் இதமாக வெல்லு
எல்லோர்க்கும் ஒருவ*ன் உண்டென்று
எப்போதும் ஒரு நிலை நில்லு
இன்ப* துன்ப*ங்க*ள் யாவும் இயற்கை பொருள் வாழ்வில்
இன்ப* துன்ப*ங்க*ள் யாவும் இயற்கை பொருள் வாழ்வில்
பண்பில் விளைந்திடுமே பெரும் தெம்பு நிறை சுகமே
பண்பில் விளைந்திடுமே பெரும் தெம்பு நிறை சுகமே
கண்குளிர் காட்சிகளே வெரும் கற்பனை சூழ்ச்சிகளே
கண்குளிர் காட்சிகளே வெரும் கற்பனை சூழ்ச்சிகளே
அற்புதம் என்னவுண்டு உலகில் ஆராய்ந்து பார்த்திடிலோ
அற்புதம் என்னவுண்டு உலகில் ஆராய்ந்து பார்த்திடிலோ
அதிசயம் இல்லையதில் இகபரம் இரண்டிலும்
அன்பே தெய்வமென நினைத்து முடித்து
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
தன்மானம் போய்விடும்
சன்மானம் ஏது சொல்
தீர்மானம் சரியாக ஆடாவிட்டால்
கொல்லி மலை காட்டுக்குள்ளே
குள்ள நரி கூட்டமடி ....
குள்ள நரி கூட்டத்திலே
புள்ளி மான் நிக்கிதடி
கன்னி வெச்சு வல விரிச்சா ...
சின்ன மான் சிக்குமடி
போடு
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ .... ஹோய்
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு அச்சாரம் சொல்லி
ஹோ ஹோ ஹோ ...
கச்சை சலங்கை கட்டி
கை தாளம் மேளம் கொட்டி
கச்சை சலங்கை கட்டி
கை தாளம் மேளம் கொட்டி
அச்சாரம் ஏற்று கொள்ளும் ஆச மச்சான்
எந்தன் ஆட்டத்தே பாத்து தானே நேசம் வெச்சான்
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
சிங்கக்குட்டி போலே ஆடும் செவத்த மச்சானே
இந்த சேலைக்கேத்த ஜோடி நீயே
பாடு மச்சானே
கன்னகோல் போடுவதற்கும்
காவல் போர் செய்வதற்கும்
தந்தன தையா தானா தந்தன
தந்தன தையா தானா தந்தன
கன்னகோல் போடுவதற்கும்
காவல் போர் செய்வதற்கும்
களம் என்று பேரு வந்த காரணம் என்ன
கட்டு கதை எல்லாம் அளக்காமல் கூறடி நின்னு
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
ராத்திரி நேரம் யாரும் பார்த்திடா வண்ணம்
அந்த ரகசியம் நடப்பதாலே
பேருமே வைத்தார்
அந்த ராஜா தான் களம் என்று ஊரிலே சொன்னார்
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
சிங்கக்குட்டி போலே ஆடும் செவத்த மச்சானே
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஏழ் -எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு
தந்தன தையா தானா
தந்தன தந்தன தையா தானா தந்தன
ஏழ் -எட்டு பிள்ள பெத்து ஏழையாய் ஆகிவிட்டு
வாழாம வாடுறாங்க ரோட்டுல நின்னு
அந்த வாட்டத்த தீர்பதற்கு கூறனும் ஒண்ணு
கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து
கணக்காக ஒண்ணு ரெண்டு கச்சிதமாக பெத்து
படுக்கை தனை சுத்தி வைக்க வேணும் மச்சானே
பின்னாலே அதுக்காக சொத்து சுகம் சேரும் மச்சானே
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும்
சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
காலையில் தோன்றி நின்று
மாலையில் போய் மறையும்
தந்தன தையா தானா
தந்தன தந்தன தையா தானா தந்தன
காலையில் தோன்றி நின்று
மாலையில் போய் மறையும்
சூரியன் செயலும் என்ன கொஞ்சம் சொல்லடி
அந்த சூட்சுமத்த மட்டும்
எந்தன் காதில் சொல்லடி
பிறப்பதெல்லாம் இறக்கும் பேர் உண்மை தத்துவத்தை
பிறப்பதெல்லாம் இறக்கும் பேர் உண்மை தத்துவத்தை
சிறப்பாக சூரியனும் சொல்லும் மச்சானே
இந்த சேதியிலே சாமி கூட சேரும் மச்சானே
பம்பை உடுக்கை கொட்டி
பரிவட்டம் மேலே கட்டி
தங்கரதம் போலே ஆடும் சித்தாரக் கள்ளி
எந்தன் தாளத்தையே கேட்டு ஆடு
அச்சாரம் சொல்லி
ஒஹ் ஹோ ஹோ .....
https://youtu.be/TXkUdYztEt8
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவச் சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன் சிரிப்போ
ஆனந்தச் சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது,
அங்கே சிரிப்பவர் யார் அழுபவர் யார்
தெரியும் அப்போது
வயிறு வலிக்கச் சிரிப்பவர்கள் மனித ஜாதி
பிறர் வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி
மனிதன் என்ற போர்வையில்,
மிருகம் வாழும் நாட்டிலே
நீதிஎன்றும் நேர்மை என்றும் எழுதி வைப்பார் ஏட்டிலே! ....
(அங்கே சிரிப்பவர்கள் )
நாணல் போல வளைவதுதான் சட்டமாகுமா?
அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேணுமா?
தர்மத் தாயின் பிள்ளைகள்
தாயின் கண்ணை மறைப்பதா?
உண்மைதன்னை ஊமையாக்கித்
தலைகுனிய வைப்பதா?
(அங்கே சிரிப்பவர்கள் )
தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ
அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ ..
நான் ஒரு கை பார்க்கிறேன்
நேரம் வரும் கேட்கிறேன்
பூனை அல்ல புலி தான் என்று
போகப் போகக் காட்டுகிறேன்
போகப் போகக் காட்டுகிறேன்
(அங்கே சிரிப்பவர்கள் )
https://youtu.be/_-FVYosWTOk
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தால் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
சிறு மணல் வீட்டில் குடிஏறும் நண்டானது
இவள் கண் பார்த்து மீன் என்று திண்டாடுது
பொங்கும் நுரையோடு கரை சேரும் அலையானது
இந்த பெண் பார்த்து நிலவென்று விளையாடுது
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
வண்ண பூ சேலை மலர் மேனி மறைக்கின்றது
அதை பூங்காற்று மெதுவாக இழுக்கின்றது
இடம் கொடுக்காமல் தளிர் கைகள் தடுக்கின்றது
வெட்கம் தாளாமல் இளம் நெஞ்சம் துடிக்கின்றது
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கோயில் சிலை ஒன்று உயிர் கொண்டு நடை போடுதோ
இரு விழி கொண்டு என்னை பார்த்து எடை போடுதோ
ஒரு துணை வந்து விலை கொள்ள தடை போடுதோ
அதை நான் வாங்க அவள் நாணம் தடை போடுதோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
கதகதப்பா மாறிடுமோ
காதலித்தாள் ஆறிடுமோ
கடலோரம் வாங்கிய காத்து
குளிராக இருந்தது நேத்து
https://youtu.be/ZMHZXaTa1uo
ஆணிப்பொன் தேர்கொண்டு
மாணிக்கச் சிலையென்றுவந்தாய் நின்றாய் இங்கே....
காணிக்கைப் பொருளாகும் காதல் என் உயிராகும்
நெஞ்சை தந்தேன் அங்கே...
அழகிய தமிழ்மகள் இவள் -
இருவிழிகளில் எழுதிய மடல் -
மெல்லமொழிவது உறவெனும் குறள்
படித்தால் ரசிக்கும் கனிபோல இனிக்கும்
(அழகிய)
வானுலகம் என்னும் மாளிகையில் மின்னும்
பூமகளின் கன்னம் தேனிலவின் வண்ணம்
நீலவிழிப் பந்தல் நீயிருக்கும் மேடை
கோலமிடும் ஆசை தூதுவிடும் ஜாடை
இளமையில் இனியது சுகம் -
இதைப்பெறுவதில் பலவித ரகம் -
இந்தஅனுபவம் தனியரு விதம்
மலரும் வளரும் பல நாள் தொடரும்
(அழகிய)
பாலில் விழும் பழம் எனும்
போதை பெறும் இளம் மனம்
அள்ளத்தான் அள்ளிக் கொள்ளத்தான்.
.காதல் நிலா முகம் முகம்
கண்ணில் உலா வரும் வரும்
மெல்லத்தான் நெஞ்சைக் கிள்ளத்தான்
கொடியிடை விளைவது கனி - அந்த
கனியிடை விளைவது சுவம் -
அந்தசுவை பெற நமக்கென்ன குறை
நெருக்கம் கொடுக்கும் நிலைதான் மயக்கம்
(அழகிய)
பாவை உனை நினக்கையில்.
.பாடல் பெறும் கவிக்குயில்
பக்கம் வா.. இன்னும் பக்கம் வா
கோவை இதழ் இதோ இதோ
கொஞ்சும் கிளி அதோ அதோ.
.இன்னும் நான் சொல்ல.
..இன்னும் நான் சொல்ல.. வெட்கம்தான்....
மழை தரும் முகிலென குழல் -
நல்லஇசை தரும் குழலென குரல் -
உயிர்ச்சிலையென உலவிடும் உடல்
நினைத்தேன் அணைத்தேன்
மலர் போல பறித்தேன்
(அழகிய)
https://youtu.be/fUpTQb2pfxc
பாற்கடல் அலைமேலே
பாம்பணையின் மேலே
பள்ளிகொண்டாய் ரங்கநாதா -
உந்தன் பதமலர் நிதம் தேடி
பரவசமோடு பாடி கதி பெறவே
ஞானம் நீ தா தேவா
காதகனான ஒரு சோமுகன்
கை கொண்டு கடலிடையே ஒளித்த மறைநாலும்
பின்னர் மேதினி தான் மீள
பாதகன் தான் மாள
மீனவதாரம் செய்த திருமாலே
வானவரும் தானவரும் ஆழி அமுதம் கடைந்த
மந்தரகிரி தன்னை தாங்கிடவே -
ஒரு கூனுடைய ஓடு கொண்ட கூர்மவதாரம் என
கோலமுற்றாய் புகழ் ஓங்கிடவே
ஹீனன் ஹிரன்யக்சன் என்னும் படுபாவி
பாயாய் ஏழு கடலுள் மறைத்த பூதேவி -
அவள் தினரக்சக சகல ஜீவரக்ஷக எனவே
நானிலத்தை தூக்கிய வராஹ வடிவானவனே
எங்கிருக்கிறான் ஹரி (அவன் ) எங்கிருக்கிறான் என்ற
ஹிரணியன் சொல்லைக் -கேட்டிடை மறித்தே அவன் பிள்ளை
எங்கும் இருப்பான் தூணில் இங்கும் இருப்பான் -
அந்த தூணில் இருப்பான் என்று
இயம்பியதால் நேர்ந்த தொல்லை
நீங்கவும் பொங்கு சினவம்பனர்கள்
பூத உடம்பும் தசை தின்ரெழுந்து
தோண்டியோடு மணிகுடலும் உதிரம் சிந்தவே
நகம் கொண்டு கீறும் நரசிங்கமான அவதாரனே
ஷங்கு சக்ர தாரனே
உபகாரனே ஆதாரனே
மூவடி மண் கேட்டு வந்து
மண்ணளந்து விண்ணளந்து மா பலி சிரம் அளந்த வாமனனே
க ப த ரி க ப த ச ரி க ப த ம க ரி ச நி த ம க ரி
தந்தை ஆவியை பிரித்ததனால்
சூரியகுல வைரியாக அமைந்த பரசுராமன் ஆனவனே
தேவர்களை சிறை மீட்டு
ராவணாதி உயிர் மாய்த்த
தஷரத ஸ்ரீ ராம அவதாரனே
பூமி தனிலே புகழையும்
உழவோர் கலப்பை தனை புயமதில் தாங்கி நின்ற பலராமனே
ஆவணி ரோஹிணியில் அஷ்டமியிலே
அஷ்ட ஜாம நேரத்திலே அவதரித்தோனே
ஆயர்பாடி ஏறிய யசோதை நந்தலாலா
பதினாயிரம் கோபியர் பரமானந்த லோலா
பூபாரம் தீர்க்க பாரத போர் முடித்த ஷீலா
கோபாலகிருஷ்ணனா ஆதிமூலா பரிபாலா
பஞ்ச பாதகம் வாதுடன் கொடிய
வஞ்சகம் மித்ரபேதகம் செய்த
அஞ்சிடாதவர் ஆடிடும் நாடக மேடை
ஆடிய கலியுகம் அழிக்கவே தர்மம் தழைக்கவே
அன்புருவாகிய கல்கி அவதாரன்
சிங்காரன் தசாவதாரன் நீயே
https://youtu.be/StcPEr1ZqL8
ஆதி கடவுள் ஒன்றே தான் ...
ஊருக்கு நீ உழைத்தால்
உன்ன*ருகே அவ*ன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்
ஆஆஆஆ..ஆஆஆஆ...
ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான்
உள்ளத்தில் உள்ளவனை
ஒளிவிளைக்காய் நிற்பவனை ஆஆஆஆஆ..
ஊரெங்கும் தேடினாலும்
ஒரு நாளும் காண்பதில்லை
க*ண்ட*வ*ரும் சொன்ன*தில்லை
சொன்ன*வ*ரும் க*ண்ட*தில்லை
காற்றைப் போல் பூமியிலே
கலந்திருப்பான் ஆண்டவனே
ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான்
ம*த*ம் என்ற* சொல்லுக்கு
வெறி என்றோர் பொருளும் உண்டு
ம*னித*ராய் பிறந்த*வ*ர்க*ள்
ம*த*த்தால் பிரிந்து விட்டார்
ம*த*த்தால் பிரிந்தவ*ர்க*ள்
அன்பினால் ஒன்றுப*ட்டு
ஒன்றே குலமாக* ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்
ஆதி கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
ஆதிகடவுள் ஒன்றே தான் !
https://youtu.be/fG42xgPoRqg
வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
வனமேவும் ராஜகுமாரா
வளர் காதல் இன்பமே தாராய்
மனமோகனா சுகுமாரா
மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரியே
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
மனம்போலே நாம் இனி பாரில்
மனம்போலே நாம் இனி பாரில்
மகிழ்ந்தே செல்வோம் அதன் தேரில்
மகிழ்ந்டெய் செல்வோம் அதன் தேரில்
நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
நிழல் நீயே தேகம் நானே
நிஜம் இது கேள் பெண்மானே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
மலர் மேவும் தென்றல் போலே
நிலை மாறுதே உன்னாலே
வனமேவும் ராஜகுமாரா
மல்லாடும் வீரரெல்லாம் ....
மல்லாடும் வீரரெல்லாம்
வணங்க வரும் மன்னவரே அல்லாவின் அருளாலே
எனக்கெனவே பிறந்தவரே
உல்லாச வேளையிலே ஓவிய பூங்காவிணிலே
உள்ளன்பால் தேடி வந்தேன்
உறவாடும் பூங்குயிலே உறவாடும் பூங்குயிலே
கலை வீசும் கண்களாலே
கனிந்தேன் கண்ணே அன்பாலே
கவி பாடும் இன்பதாலே
கவர்ந்தாய் கண்ணா இன்னாளே
வளமாகும் காதலினாலே
மகிழ்வோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனீமேலே
வளமாகும் காதலினாலே
இயலோடு இசை போலே
எழில் மேவும் சோலையிலே
இணை இல்லா ஜாடை சேர்ந்ததே
புயல் மேவும் அலை போலே
பொங்கிடும் காதலரால்
பொறாமை கொள்ள நேர்ந்ததே
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
வனமேவும் ராஜகுமாரி
வளர் ஜோதியே சுகுமாரி
மனமோகனா சுகுமாரா மனமோகனா சுகுமாரா
மறவேன் உனை எழில் தீரா
மறவேன் உனை எழில் தீரா
வளமாகும் காதலினாலே
மகிழ்வாகினோம் மேன்மேலே
நிழலோடு தேகமும் போலே
நிஜ வாழ்வில் நாம் இனிமேலே
https://youtu.be/A0vWwk2l73M
சரச ராணி கல்யாணி
சுக சரச ராணி கல்யாணி
சங்கீத ஞான வாணி மதி வதனி
சரச ராணி..........
புனித ராஜ குல திலகா
தவ புனித ராஜ குல திலகா
பூலோகம் போற்றும் அழகா குண ரசிகா
புனித ராஜ குல திலகா.........
கனியில் மேவும் ரச இனிமைப்போலே
இந்த வனிதை வாழ்வில் நீ தர வா
கனியில் மேவும்...
நான் எனது வாழ்வில் பெரும் பெருமை யாவும்
உந்தன் மகிமையால் வருவதல்லவா
நான் எனது.............
எனை புகழ்ந்து பேசுவது தகுமா ராஜா
எனை புகழ்ந்து.........
மனம் மகிழ்ந்து கூறும் மொழி
நிஜமாய் ராணி
மனம்..........
நிலை மறந்தேன் கண்ணா
உளம் தெரிந்தேன் கண்ணே
இல்லறமாம் நல்லறம் நாடும் முறையாலே
இணையான இருவரால் மலரும் நேசம்
அதில் ஏற்படும் சந்தோஷம் விசேஷம்
இருவரால் மலரும் நேசம்........
https://youtu.be/Yhb2pXHKBNw
https://youtu.be/kY1l9PO1W7s
நிலவோடு வான் முகில் ....
நிலவோடு வான் முகில் விளையாடுதே
அந்த நிலை கண்டு எனதுள்ளம் துணை தேடுதே
நிலவோடு வான் முகில் ........
எழில் மேவும் கண்கள்
என்மேல் வலை வீசுதே
எழில் மேவும் கண்கள்
என்மேல் வலை வீசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
இனிதாகவே இன்ப கதை பேசுதே
நிலவோடு வான் முகில் ...........
புதுப் பாதைதனை காண மனம் நாடுதே
உண்மை புரியாமல் வெட்கம் வந்து திரை போடுதே
மது உண்ண மகிழ்வோடு வரும் காதல் வண்டின்
மனம் நோக மலரே தன் இதழ் மூடுமா
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
இதயம் ஒன்றாகி உறவாடுவோம்
எந்நாளும் பிரியாத நிலை காணுவோம்
நிலவோடு வான் முகில் ..............
நிலவோடு வான் முகில் ......
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
சுகம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே
வெட்*கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வெட்கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே
வண்ணமேக தேரேறி போவோம் அங்கே
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மௌனமென்பதொரு பாவம்
முத்தமென்பதொரு பாடல்
மங்காத சங்கீதம் என் மேனியில்
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே
காணாத தேன்கிண்ணம் காண்பேன் அங்கே
தங்க கோபுரம்
சின்ன தாமரை
வண்ணம் பாடுது
உன்னை தேடுது
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
https://youtu.be/BWsX8Zsq6-o
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ
நீ தென் பாங்கு திருமகளோ
பண்பாடு குலமகளோ
எல்லாம் உன்னோடு தானோ
திருவளர்செல்வியோ
நான் தேடிய தலைவியோ
ஆறு குணங்கள் கொண்டவளாம் ஒரு பாவை
அது யாரோ எவரோ ராமன் தேடிய சீதை
தேவை ஒரு காவிய செல்வம்
தேடாமல் தேடிய தெய்வம்
நீயானால் சம்மதம் அம்மா
நெஞ்சம் உன் சந்நிதி அம்மா
எல்லாம் உன்னோடு தானோ ஓ ஓ ஓ ஓஓஒ
(திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ )
பஞ்சனை மேலே நெஞ்சினில் ஆடும் தோகை
என் பார்வை அறிந்து காலமறிந்த சேவை
மனதோடு காவல் இருந்து இம்ம்ம்ம்
மணவாளன் ஆசை அறிந்து இம்ம்ம்ம்ம்
உறவோடு ஊடல் புரிந்து இம்ம்ம்ம்ம்
நிலவோடு தேடும் விருந்து இம்ம்ம்ம்
எல்லாம் உன்னோடு தானோ
( திருவளர்செல்வியோ நான் தேடிய தலைவியோ ) லலலலல
மஞ்சள் அணிந்து குங்குமம் சூடும் மங்கை
புது மல்லிகை பூவை பின்னி எடுத்த நங்கை
நாணத்தில் ஆடிய பாதம்
ராகங்கள் பாடிய கண்கள்
மானத்தில் ஊறிய உள்ளம்
வரவேண்டும் நாயகன் இல்லம்
எல்லாம் உன்னோடு தானோ
https://youtu.be/HM8yBZ-Ya3M
மச்சானா மாமாவா யாரோ இவரோ
என்னை வச்ச கண்ணு வாங்காம பாக்கறாரு
பாக்கறாரு
அச்சம் தருவாரோ
அடையாளம் பெறுவாரோ
மீதி உள்ள செய்தி சொல்ல
தேதி வைக்க சொல்வாரோ
மச்சானா .....
மாமரத்து தோப்புக்கு தன்னந்தனியா
மாப்பிள்ளை நீ என்னை வரச் சொன்னியா
சாமிக்கு தேவை என்ன -தேரோட்டம்
பூமிக்கு தேவை என்ன -நீரோட்டம்
ஆசைக்கு தேவை என்ன -கண்ணோட்டம்
மந்திரம் தந்திரம் கண்ணுக்குள்ளே தான்
மயக்கமும் கிறக்கமும் பெண்ணுக்குள்ளே தான்
வயசுக்கு வந்தாளைய்யா வா வா வா
மனசைத்தான் கேட்டாளைய்யா தா தா தா
விட்டுத்தான் செல்லாதைய்யா நில் நில் நில்
தொட்டு தான் கட்டில் பாடம் சொல் சொல் சொல்
மச்சானா ...
https://youtu.be/3NJwjO7-Aes
நல்லது கண்ணே கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..சீதா.. சீதா..சீதா.. சீதா...
நல்லது கண்ணா கனவு கனிந்தது
நன்றி உனக்கு
உறவில் எழுந்ததுஅன்பு விளக்கு
எனது மடியினில் வா..ராமா...ராமா..ஸ்ரீ ராமா...
காலோடு கால்கள் பின்ன
ஊர்கோலம் போகும் மேகம்
மாப்பிள்ளை பெண்ணோடு
பன்னீரில் நீராடச் செல்கின்றதோ
( நல்லது கண்ணே)
தேடும் உறவுகள் இரவை நினைந்து
வாடும் நிலை கண்டேன்
பாடும் பறவைகள் பனியில் விழுந்து
கூடும் சுவை கண்டேன்
தேவைகள் ஆயிரம்
பார்வையில் தீருமோ
( நல்லது கண்ணா)
மாலைப் பொழுதினில் மன்னனின் மார்பின்
மஞ்சள் பதியாதோ
காலைப் பொழுதில் கட்டி அணைத்துக்
கண்கள் சிவக்காதோ
நீண்ட நாள் வாழ்வினை
வேண்டினேன் வந்தது
( நல்லது கண்ணே)
https://youtu.be/_4qdk-RyBMU
இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும்..........
புதிய காலம் பிறந்ததென்று
போர் முகத்தில் ஏறி நின்று
பகைவர் வீழ போர் புரியும் நாட்டிலே
நீயும் பழம் பெருமை விளக்க வந்தாய் வீட்டிலே
இதழ் இரண்டும்........
வாளோடு போர்க்களத்தில் அவர் ஆடுவார்
கை வளையோடு அவர் மார்பில் நான் ஆடுவேன்
எங்கள் தோளோடு கிளிப்போல நீ ஆடுவாய்
வெற்றித் துணிவோடு தாய் நாட்டின் புகழ் பாடுவோம்
கண்ணே இதழ் இரண்டும்...........
வீறு கொண்ட வேங்கை போல வெற்றி கொள்ளுவார்
தான் வென்று வந்த சேதி எல்லாம் உனக்கு சொல்வார்
மாறி மாறி முத்தம் இட்டு வார்த்தை உரைப்பார் இன்று
மாலை இட்ட மங்கைப்போல என்னை அணைப்பார்
கண்ணே இதழ் இரண்டும் பாடட்டும்
இமை இரண்டும் மூடட்டும்
உதய சூரியன் மலரும் போது
https://youtu.be/q5Z4-HFYGY8
உனது கண்கள் மலரட்டும்
இதழ் இரண்டும்.........
ஓ வெண்ணிலா.. ஓ வெண்ணிலா
வண்ண பூச்சூட வா வெண்ணிலாஓ வெண்ணிலா...
ஓ மன்னவா.. வா மன்னவா
வண்ண்ப் பூச்சூட வா மன்னவாஓ மன்னவா..
நேற்று கனவாக நான் கண்ட இன்பம்
இன்று நினைவாக நீ இங்கு வந்தாய்
ஆலிலைப் பனி போல நான் வாழ்ந்த வேளை
அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா
(ஓ மன்னவா)
பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை
பார்த்து கதை பேசும் பழம் போன்ற மென்மை
மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்
வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா
( ஓ மன்னவா)
https://youtu.be/PGvEySGEVqo
https://youtu.be/X4Pex1fh0zs
நிலவென்ன பேசும் குயிலென்ன பாடும் மலரென்ன சொல்லும்
மனதிலேகதை பேசுமோ இன்பக் கவி பாடுமோ
இங்குகண்ணோடு கண் சொல்லும் மொழியிலே
தங்கச்சிலை போல உறவாடும் காளை
அழகில் விளையாடும் இவ்வேளை -
என்அழகில் விளையாடும் இவ்வேளை
வானகம் கீழே வையகம் மேலே
மாறுதல் போலவே தோன்றுவதாலே
( நிலவென்ன )
இரு கரை போல தனியாக இருந்தோம்
அக்கறையோடு இங்கே கலந்தோம்
வருமென்று எதிர்பார்க்கும் முன்னே
வரும் மழை போலே நீ வந்தாய் கண்ணே
கவலை அல்லவோ கொண்டு வந்தேன் -
நான்காதல் கதை இங்கே சொல்லித் தந்தேன்
பருவங்கள் ஒன்றாக மகிழும் நிலையில் -
நீலப்பட்டாடை போல் தோன்றும் வானோடு
( நிலவென்ன )
நெஞ்சிருக்கும் வரைக்கும நினைவிருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
கொஞ்சும் இளமை குடியிருக்கும்
பார்வை குறுகுறுக்கும் மேனி பரபரக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
வாளினிலே ஒருகை ம*ல*ர்ந்திருக்கும்
வாளினிலே ஒருகை ம*ல*ர்ந்திருக்கும்
மறுகை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்
வாளினிலே ஒருகை ம*ல*ர்ந்திருக்கும்
மறுகை மங்கை என் முகம் தேடி அசைந்திருக்கும்
தோளினிற்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
தோளினிற்கும் மலைக்கும் தொடர்பிருக்கும்
இந்த தோகைகென்றே இதயம் திறந்திருக்கும்
எந்தன் நெஞ்சிருக்கும் வரைக்கும் நினைவிருக்கும்
அந்த நினைவினில் அவர் முகம் நிறைந்திருக்கும்
எந்தன் !
https://youtu.be/mKPb3Dm7ecM
எம் ஜி ஆர் அடைந்த வெற்றி போல் இனி எவராலும் வெற்றி பெறமுடியாது
எம் ஜி ஆர் சாதனைகளை இனி எவராலும் சாதிக்க முடியாது
எம் ஜி ஆர் பெற்ற மக்கள் சக்தியை போல் இனி எவராலும் பெறமுடியாது
எம் ஜி ஆர் அடைந்த புகழின் உச்சியை இனி எவராலும் அடையமுடியாது
எம் ஜி ஆர் பெற்ற பக்தர் படையை இனி எவராலும் பெறமுடியாது
எம் ஜி ஆர் பொற்க்கால ஆட்சியை போல் எவராலும் தரமுடியாது
எம் ஜி ஆர் போல் ஒரு வள்ளல் இனி பிறக்கஂமுடியாது
எம் ஜி ஆர் சக்தி போல் எவராலும் வெல்ல. முடியாதஂசக்தி இனி உருவாக்கஂமுடியாது
courtesy net