http://wiki.pkp.in/sivaji-ganesan-documentary
Printable View
My humble request to Shanthi theatre authorities & NT's family is that, atleast from this year onwards, they must take initiatives to screen NT's films regularly in Shanthi theatre as a tribute to our beloved Nadigar Thilagam.Quote:
Originally Posted by pammalar
Yesterday's “ Singathamizhan Sivaji “ in Vasanth TV was great, featuring Mrs. Jayanthi Kannappan as guest. Most of you must be aware that she is the daughter-in-law of Mr. A.L. Srinivasan, a good friend of NT, who produced movies under “ ALS Productions “. ALS is the elder brother of Kavignar Kannadasan.
She was reminiscing some unforgettable & beautiful moments of her life, concerning NT. Throughout the programme, she addressed NT as “ Sivaji appa “ and described the close knit relationship her family had with NT’s family for generations. She said that, “ Panam” was the first movie produced by ALS and that NT used to proudly say that “ Panam padathula nadicha piragudhan enakku neraya panam vara arambichudhu…”. There was many such interesting anecdotes in that half an hour programme.
When ALS died, NT was shooting in Ooty and after hearing the news, he rushed up to Chennai the same evening. She said, “ mama udala pathu Sivajippa kadhari azhudhadha ennala marakku mudiyadhu…”.
Scenes from Babu, Gnana Oli etc., were shown. In “ devaney ennai parungal “ song, just watch him walk in quick pace, according to the tune of the song, for the entire stanza starting from “ thaai madiyiley mazhalaigal oomayo…”. A big cloud passes exactly over NT’s head and its’ shadow will fall on the ground which makes the scene stunning. I was bowled over completely for nth time – enna manusanpa !!! B.N. Sundaram, the cinematographer, said in one of his interviews that this scene was really unexpected and it gave a wonderful effect. However, this never happened for the hindi remake. How nice it would be if this film is released now in theatres. And, that makes me to say that , in recent times, say about past three months, I’ve seen posters of Thaai sollai thattadhey, Panam padaithavan, Thaayai katha thanayan, Dharmam thalai kakum, Kumari koatam, Sirithu vazha vendum, in Chennai. MGR movies are continuously being played in Chennai theatres. Why is it not happening for NT’s films ???
Now, coming back to “ Singathamizhan…”. When Mrs. Jayanthi finally lamented about the dark day, I really felt a lump in my throat. They showed a picture of NT sleeping peacefully, leaving behind millions of fans in tears. I just couldn’t bear that terrible sight. You wouldn’t believe, that for a moment I saw images of NT in front of my eyes – Vasantha Maligai NT in white & white, NT in my avatar, Pasa malar NT, SP Chowdary, Raja……a painful moment, indeed. When the news began to spread, the phones in NT’s house were continuously ringing and she attended most of the calls, confirming the sad news. One such call was from the Canadian Radio Station. They put her live on air and she tearfully conveyed the news to the audience. She said, it was an unforgettable moment in her life.
Great suggestion Rangan. Such an obvious solution, why doesnt it occur to the concerned parties?Quote:
Originally Posted by rangan_08
நடிகர் திலகம் பற்றி மக்கள் திலகம் :
(1.11.1962 அன்று மதி ஒளி வெளியிட்ட நடிகர் திலகம் (1952 - 1962) பத்தாண்டுகள் சிறப்பு மலரிலிருந்து)
"தம்பி கணேசன் நாடகத்தில் நடித்த போது அந்த நடிப்புக்கு பாராட்டு குவிந்தது. சினிமாவில் நடிக்குமுன்பு வேறு நடிகர்களுக்கு குரல் கொடுத்த போது அந்தக் குரலுக்கு பெருமை குவிந்தது. பிறகு சினிமாவில் நடிக்கத் துவங்கிய போதும், வெற்றிப் படிகள் அவரை வரவேற்கக் காத்திருந்தன. எந்த நிலையிலும் தான் ஏற்கும் கலைத் தொழிலில் தனக்கென்று ஒரு ஸ்தானத்தைப் பெறக் கூடிய தகுதி, அவரிடம் வேரூன்றி இருக்கிறது.
தமிழ்ப் பண்பாடு உலகத்திலேயே மிகச் சிறந்த பண்பாடு என நல்லோர்களாலும் வல்லோர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அத்தகைய பண்பாட்டை, தாய்மொழியாம் தமிழில் தமிழ் இனத்தைச் சேர்ந்த தமிழன் எடுத்துச் சொல்லி, அதற்காகப் பாராட்டப்பட்டால், அது தமிழ் மொழிக்கு, தமிழினத்துக்கு, தமிழ்ப் பண்பாட்டுக்கு கிடைத்த பாராட்டாகும் அல்லவா! இந்திய துணைக் கண்டத்திலேயே சிறந்த நடிகர் என்று பாராட்டப்படும், "சிவாஜி கணேசன் யார் ?" என்ற கேள்வி எழும் போது , " அவர் நாடு தமிழ் நாடு; அவரது பண்பாடு தமிழ்ப் பண்பாடு" என்ற பதில் தான் கிடைக்கும். இதை விட வேறொரு தகுதி வேண்டுமா, அவரை ஒரு முகமாக எல்லோரும் பாராட்டுவதற்கு !"
1977 முதல் 1987 வரை பத்தாண்டுகளுக்கும் மேல் மக்கள் ஆதரவைப் பெற்று, தமிழக முதல்வராக இருந்து மறைந்த, நடிகர் திலகத்தின் உடன் பிறவா அண்ணன், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இன்று (24.12.2009) 22வது நினைவு தினம்.
அன்புடன்,
பம்மலார்.
பாராட்டுக்களுக்கு நன்றி , திரு. ராகவேந்திரன் சார் !Quote:
Originally Posted by RAGHAVENDRA
மேலும், சித்தூர் ராணி பத்மினி திரைப்படத்தின் ஒளிக் குறுந்தகடு/நெடுந்தகடு ஆகியவற்றை சென்னையில் உள்ள ராஜ் வீடியோ விஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அன்புடன்,
பம்மலார்.
அவசியம் எழுதுங்கள். தங்களது பதிவுகளை அனைவரும், ஆவலுடன் எதிர்பார்கின்றோம்.Quote:
Originally Posted by RAGHAVENDRA
அன்புடன்,
பம்மலார்.
வில்லன்களின் முகத்திரைகளை கிழித்தெறிந்து, உண்மைகளை உலகுக்கு உணர்த்திய சகோதரி சாரதா அவர்களுக்கு பற்பல நன்றி !Quote:
Originally Posted by saradhaa_sn
அன்புடன்,
பம்மலார்.
வெளிவராத திரைப்படம் பற்றி, தாங்கள் வெளியிட்ட தகவல்கள் பிரமாதம் !Quote:
Originally Posted by saradhaa_sn
அதிலே, ஒரு சிறு திருத்தம்:
ஜீவபூமி திரைப்படத்தில் கதாநாயகி ரோலில் நடித்தது சரோஜாதேவி.
அன்புடன்
பம்மலார்.
Wishing A Merry Christmas To All Hubbers.
Regards
சென்னை வாழ் நடிகர் திலகத்தின் அன்பு ரசிகர்கள் மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள அனைத்து சிவாஜி ரசிகர்களின் மெக்கா என்று அறியப்படும், அழைக்கப்படும் சாந்தி திரையரங்கம் தன் பொன் விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்ற தகவல் மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. இதை தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் பாவ மன்னிப்பு முதல் தெய்வ மகன் வரை அங்கே வெளியான படங்களின் பட்டியலையும் ஓடிய நாட்களையும் வெளியிட்டு அனைவரையும் சந்தோஷப்படுத்திய சுவாமிக்கு நன்றி!நன்றி! இனி வியட்நாம் வீடு முதல் வெளியாகப் போகும் இரண்டாவது பட்டியலுக்கு ஆவலோடு காத்திருக்கிறோம். மோகன் இங்கே சொன்னது போல் சாந்தியில் மீண்டும் நடிகர் திலகத்தின் படங்கள் திரையிடப்பட்டால் அதை விட மகிழ்ச்சி வேறொன்றுமில்லை.
சித்தூர் ராணி பத்மினி படத்தைப் பற்றிய கண்ணோட்டங்கள் அந்த படத்தை பற்றிய ஆவலை தூண்டியிருக்கும். நமது திரியில் ஏற்கனவே அந்த படத்தின் விமர்சனம் இடம் பெற்றிருக்கிறது. முதல் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த பக்கத்திற்கு செல்லும் சுட்டி இதோ.
http://www.mayyam.com/hub/viewtopic....௨௦
அப்போது போதிய அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் கூட இப்போது ஒளி நெடுந்தகடாக வெளிவந்திருக்கும் போது நல்ல சேல்ஸ். R.A.புரத்தில் உள்ள Moser Baer கடையில் இரு முறை வரவழைக்கப்பட்டு அவை அனைத்தும் விற்று தீர்ந்ததை நானே நேரில் பார்த்தேன். கடைக்கு வந்த ஒருவர் இந்த DVD-யைப் பார்த்து விட்டு திருச்சியில் உள்ள தன் நண்பரை கைபேசியில் அழைத்து DVD வந்திருக்கும் விவரத்தை சொல்லி அவருக்கும் சேர்த்து இரண்டு CD-களை வாங்கிப் போனதையும் நேரில் பார்த்தேன்.
ஜீவ பூமியை பொறுத்த வரை கணிசமான அளவிற்கு படமாக்கப்பட்டது என்றே கேள்வி. அன்றைய நாளிதழ்களில் Coming Soon என்று தலைப்பிட்டு முழுக்க ஆங்கிலத்திலேயே முழு பக்க விளம்பரம் செய்யப்பட்ட அந்த விளம்பரத்தின் ஸ்கேன் காப்பி சென்னை மன்றங்கள் வெளியிட்ட மலரில் இருக்கிறது. இங்கே சாரதா குறிப்பிட்டது போல் நல்ல படைப்பாக வந்திருக்க வேண்டிய படம். ஏ.பி.நாகராஜன் திரைக்கதை வசனம் எழுத அவரது குருவான சோமு அவர்கள் [சம்பூர்ண ராமாயணம் படத்தை இயக்கியவர்] இயக்குனர் பொறுப்பை ஏற்றிருந்தார். ரசிகர்களுக்கு கிடைக்காமல் போன ஒரு முத்து என்றே நினைத்துக் கொள்ள வேண்டும்.
அன்புடன்
A RARE PHOTOGRAPH OF THALAIVAR
http://www.thehindu.com/mp/2009/07/1...1550030100.htm
THALAPATHY WITH THALAIVAR
http://im.rediff.com/movies/2009/sep/01ram.jpg
ABDUL HAMEED WITH THALAIVAR
http://www.bhabdulhameed.com/english/gallery.html
அனைவருக்கும் உளங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் !
அன்புடன்,
பம்மலார்.
டியர் முரளி சார்,
தங்களின் பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
நடிகர் திலகம் ரசிகர்கள் அனைவருக்கும் கிறிஸ்து பிறப்பு பெருவிழா நல்வாழ்த்துகள்!
அருள்மிகு மீனாட்சியம்மன் உடனுறை சுந்தரேஸ்வரர் அருள் பாலிக்கும் மதுரையம்பதியில், சென்ட்ரல் சினிமா திரையரங்கில், இன்று (25.12.2009) முதல் தினசரி 4 காட்சிகளாக, கலையுலக சுந்தரேஸ்வரரின் திருவிளையாடல் புராண காவியம் திரையிடப்பட்டுள்ளது. இறையனாரின் திருவிளையாடல் திரைக்காவியத்தை தரிசித்து இறையருள் பெறுவோம் !
பரம பக்தன்,
பம்மலார்.
-க்கு செல்லும் வாய்ப்பு கடந்த வாரம் கிடைத்தது .Quote:
Originally Posted by pammalar
மேல மாசி வீதியில் வந்து கொண்டிருந்த போது ஒரு தள்ளு வண்டி கடந்து சென்றது . கும்பிட்ட கையோடு (முருகா ! செந்தூர் வாழ் செல்வக் குமரா !) கட்டபொம்மனாக நடிகர் திலகத்தின் உருவம் பொறித்து 'சிவாஜி கணேசன் பருத்திப் பால்' என மூன்று புறங்களும் அழகுற எழுதப்பட்டிருந்தது . புகைப்படம் எடுக்க முனையும் முன் கடந்து சென்று விட்டது . முரளி சாரின் நினைவு தான் வந்தது :)
Quote:
Originally Posted by pammalar
\\ From Murali's 'NT acheivements Thread':Quote:
Originally Posted by pammalar
வருடம் - 1964
1. இந்த ஆண்டு மீண்டும் ரசிகர்களுக்கும் பொது மக்களுக்கும் மறக்க முடியாத ஆண்டு.
நடிகர் திலகத்தின் வெளி வந்த படங்கள் - 7
அவற்றில் 70 நாட்களை கடந்த படங்கள் - 6
100 நாட்களை கடந்த படங்கள் - 5
2. முதன் முதலாக சென்னையில் ஒரே வருடத்தில் ஒரே நடிகரின் 5 படங்கள் 100 நாட்களை கடந்து ஓடிய சாதனையை செய்தது நடிகர் திலகத்தின் படங்கள் தான்.
3. அது மட்டுமல்ல 5 படங்களும் சென்னையில் 15 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடிய முதன் முதல் சாதனை இன்று வரை முறியடிக்கப்படாத ஒன்றாகும்
கர்ணன் - 14.01.1964 - சென்னை - சாந்தி, பிரபாத், சயானி - 3
பச்சை விளக்கு - 03.04.1964 - சென்னை - வெலிங்டன், ராக்ஸி, மஹாராணி - 3
கை கொடுத்த தெய்வம் - 18.07.1964 - சென்னை - மிட்லண்ட், பிரபாத், சரஸ்வதி, ராம் - 4
புதிய பறவை- 12.09.1964 - சென்னை - பாரகன் - 1
நவராத்திரி - 03.11.1964- சென்னை - மிட்லண்ட், மஹாராணி, உமா, ராம் - 4
4. 1963-ல் வெளியாகி 1964- ம் ஆண்டு சென்னை காசினோவில் 100 நாட்களை கடந்த அன்னை இல்லத்தையும் சேர்த்தால் 6 படங்கள் 16 திரையரங்குகளில் 100 நாட்களை கடந்தது.//
--------------------------------------------
டியர் முரளி, பம்மலார், ராகவேந்தர், ஜோ, மோகன் மற்றும் நடிகர்திலகத்தின் தீவிர ரசிகர்களுக்கு.....
நான் மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று விஷயங்களால் நமக்குத்தெளிவாக தெரிவது என்ன?.
முதலில்.....
இந்த மண்ணை விட்டு மறைந்தாலும் எங்கள் மனதை விட்டு மறையாத அண்ணன் 'ராஜ்கபூர்' அவர்களுக்கு நன்றிகள்.
1964-ம் ஆண்டில் சென்னையில் எங்கள் நடிகர்திலகத்தின் படங்களை வெற்றிப்படங்களாக்கிய அண்ணன் 'ராஜ்கபூர்' அவர்க்ளுக்கு எங்கள் மனப்பூர்வமான நன்றிகள்.
உங்களின் 'சங்கம்' திரைப்படத்தின் ரீல்கள் சாந்தி தியேட்டரின் ப்ரொஜக்டரில் கழற்றமுடியாத அளவுக்கு, 200 நாட்களுக்கும் அதிகமாக ஒட்டிக்கொண்டதாலேயே, அந்த ஆண்டில் நடிகர்திலகத்தின் படங்கள் எல்லாம் மற்ற தியேட்டர்களில் வெளியாகி, உருப்படியாக ஓடி தொடர் வெற்றிகளைப்பெற்று ரசிகர்கள் மனதில் பாலை வார்த்தன.
1964 பொங்கல் முதல் 1965 பொங்கல் வரை 365 நாட்களில் 'கர்ணன்' படம் ஓடிய 100 நாட்கள் தவிர, 265 நாட்கள் சாந்தியில் வேறு படங்கள் இல்லை. காரணம் உங்கள் சங்கம் படம். உங்கள் படம் மட்டும் திரையிடப்படாமல் இருந்திருந்தால், பேராசைக்காரர்களால், அத்தனை படங்களும் ஒன்றன்பின் ஒன்றாக சாந்தியிலேயே வெளியாகி 'ஒருவழி' ஆகியிருக்கும். காப்பாற்றிய உங்களுக்கு நன்றிகள்.
'சித்தூர் ராணி பத்மினி' வெளித்தியேட்டரில் வந்திருந்தால், நிச்ச்யம் ஆறு வாரங்கள் ஓடியிருக்கும். 'அறிவாளி' வெளித்தியேட்டரில் வந்திருந்தால் நிச்சயம் 50 நாட்களைக்கடந்திருக்கும். (மறு வெளியீட்டில் அறிவாளி பெரும் சாதனை புரிந்துள்ளது). அதற்கு மாறாக, பாரகனில் 135 நாட்கள் ஓடிய 'புதிய பறவை' சாந்தியில் வந்திருந்தால் ஈவு இரக்கமின்றி 75 நாட்களில், நடிகர்திலகத்தின் வேறு படத்துக்காக, தூக்கப்பட்டிருக்கும்.
சாந்தியில் வெளிவந்ததாலேயே.......
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'பட்டிக்காடா பட்டனமா' 148 நாட்களில் தியேட்டர் மாற்றப்பட்டது.
100 நாட்களுக்கு மேல் ஓடியிருக்க வேண்டிய ராமன் எத்தனை ராமனடி' 75 நாட்களில் தியேட்டர் மாறியது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'அண்ணன் ஒரு கோயில்' (தியாகம் படத்துக்காக) 100+ நாட்களில் எடுக்கப்பட்டது.
வெள்ளிவிழா ஓடியிருக்க வேண்டிய 'தியாகம்' நல்ல கூட்டம் இருக்கும்போதே (ஜெனரல் சக்கரவர்த்தி படத்துக்காக) தூக்கப்பட்டது.
250 நாட்கள் ஓடியிருக்க வேண்டிய 'திரிசூலம்' (இமயம் படத்துக்காக) 175 நாட்களில் எடுக்கப்பட்டது. (இவையெல்லாம் சில சோறு பதங்கள். இன்னும் நிறைய இருக்கிறது).
சாந்தி தியேட்டரால் நடிகர்திலகத்தின் படங்களுக்கு சாதகமா? பாதகமா?.
என் மனதுக்கு எட்டியவரையில் பாதகம்தான்.
I keep saying this time & again Plum, both here in the hub & to Murali sir. He said that there are some practical difficulties involved in implementing this. Any way, let's hope that they come out with a pragmatic solution, soon.Quote:
Originally Posted by Plum
Thank you Harish. That's from " Paarthaal pasi theerum ". :thumbsup:Quote:
Originally Posted by HARISH2619
"சிவாஜி கணேசன் பருத்திப் பால்" விற்பவரின் வியாபாரம் தினந்தோறும் செழிக்க வேண்டும். அவர் நீடூழி வாழ வேண்டும்.Quote:
Originally Posted by joe
தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்காக திரு. ஜோ அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி !
அன்புடன்,
பம்மலார்.
சகோதரி சாரதா அவர்களுக்கு,Quote:
Originally Posted by saradhaa_sn
தங்களது கூற்றை, தலைப்பாக வைத்து, ஒரு பட்டிமன்றமே நடத்தலாம்.
தங்களின் ஆய்வு பிரமாதம்.
தங்களின் ஆதங்கம் நியாயமானது.
அன்புடன்,
பம்மலார்.
வாழ்வியல் திலகத்தின் "வாழ்விலே ஒரு நாள்" திரைக்காவியம் ஒளி நெடுந்தகடாக வெளிவந்துள்ளது. சென்னை ராஜ் வீடியோ விஷன் நிறுவனம் இதனை வெளியிட்டுள்ளது. ராஜ் வீடியோ விஷனுக்கு நமது நன்றிகள் என்றென்றும் !
அன்புடன்,
பம்மலார்.
சிங்கத்தமிழனின் சாந்தி சாதனைகள் தொடர்கிறது .........
29. வியட்நாம் வீடு - 11.4.1970 - 110 நாட்கள்
30. ராமன் எத்தனை ராமனடி - 15.8.1970 - 75 நாட்கள்
31. எங்கிருந்தோ வந்தாள் - 29.10.1970 - 100 நாட்கள்
32. தங்கைக்காக - 6.2.1971 - 83 நாட்கள்
33. சவாலே சமாளி - 3.7.1971 - 107 நாட்கள்
34. பாபு - 18.10.1971 - 102 நாட்கள்
35. பட்டிக்காடா பட்டணமா - 6.5.1972 - 146 நாட்கள்
36. வசந்த மாளிகை - 29.9.1972 - 176 நாட்கள்
37. பாரத விலாஸ் - 24.3.1973 - 100 நாட்கள்
38. எங்கள் தங்க ராஜா - 15.7.1973 - 102 நாட்கள்
39. கௌரவம் - 25.10.1973 - 102 நாட்கள்
40. தங்கப்பதக்கம் - 1.6.1974 - 176 நாட்கள்
41. அவன் தான் மனிதன் - 11.4.1975 - 113 நாட்கள்
42. மன்னவன் வந்தானடி - 2.8.1975 - 114 நாட்கள்
43. பாட்டும் பரதமும் - 6.12.1975 - 69 நாட்கள்
44. உத்தமன் - 26.6.1976 - 70 நாட்கள்
45. தீபம் - 26.1.1977 - 135 நாட்கள்
46. அண்ணன் ஒரு கோயில் - 10.11.1977 - 114 நாட்கள்
47. தியாகம் - 4.3.1978 - 104 நாட்கள்
48. ஜெனரல் சக்கரவர்த்தி - 25.6.1978 - 105 நாட்கள்
49. திரிசூலம் - 27.1.1979 - 175 நாட்கள்
50. இமயம் - 21.7.1979 - 48 நாட்கள்
51. பட்டாக்கத்தி பைரவன் - 19.10.1979 - 56 நாட்கள்
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு, நிரந்தர சக்கரவர்த்தி, சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
சாந்தி சாதனைகள் தொடரும் ...
அன்புடன்,
பம்மலார்.
டியர் ஜோ அவர்களே,
மதுரையில் நமது நண்பர்கள் யாரிடமாவது சொல்லி சிவாஜி கணேசன் பருத்திப் பால் புகைப்படத்தை நம்முடன் பகிர்ந்து கொள்ள கேட்டுப் பார்ப்போம்.
பம்மலாறாக கலக்கிக் கொண்டிருக்கும் பம்மலாரின் சாந்தி திரையரங்க விவரங்கள் பிரமிப்பையூட்டுகின்றன. சாரதா அவர்கள் சொன்னது போல் மற்ற திரையரங்குகளில் நமது படங்கள் புரிந்த சாதனையை நமது திரையரங்குகளில் புரிய விடாமல் தடுத்த பெருமை நம்மைச் சார்ந்தவர்களையே சாரும் என்பது புலனாகிறது. அடுத்தடுத்து நம் படங்கள் சாந்தியில் வராமல் வெளிவந்திருந்தால் 100 நாட்கள் வெள்ளி விழாக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் கூடியிருக்கும். திருடாதே திரைப்படம் நமது சாந்தியில் தான் வர இருந்தது. பின்னர் 73ல் உலகம் சுற்றும் வாலிபன் நம் சாந்தி திரையரங்கில் வெளி வர வாய்ப்பிருந்தது. இப்படி பல வரலாறுகளைத் தன்னிடத்தில் உள்ளடக்கி 50 ஆண்டுகளில் வியக்கத்தகு சாதனைகளை புரிந்துள்ளது.
திரையரங்கைப் பற்றிப் பேசும் போது ஒரு சுவையான தகவல். ஒரு மாணவி நடிகர் திலகத்தின் தீவிர ரசிகை. அவள் நடிகர் திலகத்தின் திரைப்படத்தை முதல் நாள் முதல் காட்சியிலேயே பார்த்தாக வேண்டும். அன்று மட்டும் அவளுக்கு வகுப்பில் தலைவலி வந்து விடும். உடனே நடிகர் திலகம் எனும் மருத்துவரிடம் சென்று அவர் படம் என்ற மருந்தை அருந்தி தன் தலைவலியைப் போக்கிக் கொள்வார். இதை ஒருநாள் தோழியர் கவனித்து விட்டனர். அதற்கடுத்த வாய்ப்பில் நடிகர் திலகம் படம் வெளியாவதற்கு முதல் நாள் வகுப்பில் அந்த மாணவியை கலாய்த்து விட்டனர். நாளை உனக்கு தலைவலி வந்து விடுமே என்று....
அந்த மாணவி யார் ....
சற்றுப் பொறுங்கள்...
ராகவேந்திரன்
I like to hear such news which makes me immensely happy :thumbsup:Quote:
Originally Posted by Murali Srinivas
Grrrreat !!! Madurai rasigargal are very very fortunate & lucky.Quote:
Originally Posted by pammalar
நடிகர் திலகத்தின்பால் வைத்த அன்பால் உருவானது இந்த பருத்திப் பால் கடை.Quote:
Originally Posted by joe
என்னே கணேச பக்தி !!!
வாழ்க அந்த வியாபாரி.
வாழ்க நடிகர் திலகம்.
Very well said :clap:Quote:
Originally Posted by saradhaa_sn
:shock:Quote:
Originally Posted by saradhaa_sn
Apart from acting, NT should have taken more care on such issues also. But what to do, this man knows only 3 things in life - Acting, Acting & Acting (only on screen, by the way ).
உண்மைதான்.....Quote:
Originally Posted by RAGHAVENDRA
எம்.ஜி.ஆர், தனிக்கட்சி ஆரம்பித்தபின். முதல் படமாக வந்தது 'உலகம் சுற்றும் வாலிபன்'. அப்படத்தை வெளிவராமல் தடுக்க அப்போதிருந்த கலைஞர் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. அவற்றில் ஒன்று, சுவரொட்டிகளுக்கான வரியை சென்னை மநகராட்சி மூன்று பங்காக உயர்த்தியது. அதனால் அப்படத்துக்கு சென்னையில் ஒரு போஸ்ட்டர் கூட ஒட்டப்படவில்லை. செய்தித்தாள் விளம்பரங்களும், ஸ்டிக்கர் விளம்பரங்களும்தான். (பாவம், அந்த வரி உயர்வினால் மற்ற படங்கள்தான் வெகுவாக பாதிக்கப்பட்டன).
அடுத்த தடங்கலாக, 'உ.சு.வாலிபன் படத்துக்கு யாரும் தியேட்டர் தரக்கூடாது' என தியேட்டர் உரிமையாளர்கள் அரசினால் மிரட்டப்பட்டனர். அரசைப் பகைத்துக்கொள்ள விரும்பாத தியேட்டர் உரிமையாளர்கள் உ.சு.வாலிபன் படத்தைத் திரையிடத்தயங்கினர். அப்போது ஒரு கலைஞனுக்கு ஏற்பட்ட பிரச்சினை தனக்கும்தான் என்பதை உணர்ந்த நடிகர் திலகம், 'அப்படி யாரும் தியேட்டர் தரவில்லையென்றால், சிவாஜி புரொடக்ஷன்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் சாந்தி, கிரௌன், புவனேஸ்வரி தியேட்டர்களில் அண்ணனின் படம் வெளியாகட்டும். நாங்கள் தியேட்டர் தருகிறோம்' என்றார். அப்போது நடந்த 'மேக்கப்-மென் சங்கக்'கூட்டத்தில் மக்கள் திலகம், நடிகர்திலகம் இருவரும் கலந்துகொண்டனர். அப்போது அந்த மேடையில் மைக்கில் பகிரங்கமாகவே நடிகர்திலகம் இதை அறிவித்தார்.
மாநில அரசு இடைஞ்சல் செய்தபோதும், மத்தியில் இருந்த இந்திரா அரசுடன் எம்.ஜி.ஆருக்கு சுமுகமான உறவு இருந்ததால், அவர்கள் தலையீட்டில் தியேட்டர் பிரச்சினை தீர்க்கப்பட்டு, சென்னையில் தேவி பாரடைஸ், அகஸ்தியா, உமா, சீனிவாசா ஆகிய தியேட்டர்கள் புக் ஆகின. பின்னர் சீனிவாசா தியேட்டர் கைவிடப்பட்டது. மற்ற மூன்றிலும் உலகம் சுற்றும் வாலிபன் வெளியானது.
:clap: What a great & timely help. This is how friendship should be honoured.Quote:
Originally Posted by saradhaa_sn
நாளை வைகுண்ட ஏகாதசி.
I still remember that even about 15 or 18 years ago, they used to screen " bhakthi " movies continuously on the night of Ekadasi (they do it even now in some places, but not spiritual movies). Mainly, movies like Thirumal perumai, Thiruvilayadal & Saraswathi sabatham will be screened without fail.
மக்களை ஏகாதசி விரதம் இருக்க வைத்தமாதிரியுமாயிற்று (to be awake for the whole night).
அவர்களை ஓரளவு இறை சிந்தனையோடு இருக்க வைத்தமாதிரியுமாயிற்று.
எல்லோரையும் நடிகர் திலகம் படங்களை பார்க்க வைத்தமாதிரியுமாயிற்று :D
Gone are those golden days.
டியர் மோகன்,
பழைய நினைவுகளை கிண்டி விட்டுள்ளீர்கள். ஒரு வைகுண்ட ஏகாதசியின் போது, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன், பாடியில் ஒரு கீற்றுக் கொட்டகை இருந்தது. அப்போதெல்லாம் அது மிகவும் அந்துவானத்திலிருந்த குக்கிராமம். வைகுண்ட ஏகாதசி சிறப்பு இரவுக்காட்சியில் ஒரே டிக்கெட்டில் மூன்று படங்கள். சென்னையில் ரசிகர்களுக்கு கனவாக இருந்து கொண்டிருந்த புதிய பறவை அவற்றில் ஒன்று. என் நண்பன் வந்து சொன்னவுடன் நாங்கள் 5 பேர், சிவாஜி ரசிக நண்பர்கள், திருவல்லிக்கேணியிலிருந்து கிளம்பி விட்டோம். நீண்ட இடைவேளைக்குப் பின் புதிய பறவை பார்க்கும் சந்தோஷம், வந்து மற்றவர்களிடம் பெருமை பீற்றிக்கொள்ளக்கூடிய வேகம், காரணம் - ரிலீஸுக்குப் பின் அப்படம் மிக நீண்ட இடைவேளைக்குப் பின் தான் சென்னையில் திரையிடப்பட்டது, இந்தக் காரணங்களால் மிகவும் எதிர்பார்ப்புடன் சென்றோம். முதல் படம் என் அண்ணன். நாங்கள் அனைவரும் டிக்கெட் வாங்கிக் கொண்டு அமர்ந்தோம். எங்களைப் போல் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து பல சிவாஜி ரசிகர்கள் வந்திருந்தார்கள். அவர்களை அறிமுகப் படுத்திக் கொண்டோம். பிறகு சொல்லி வைத்தார் போல் அனைவரும் தூங்கி விட்டிருந்தோம். எதேச்சையாக எழுந்து நான் பார்த்தால் என்னுடன் வந்த என் நண்பர்கள் உட்பட நாங்கள் அறிமுகப் படுத்திக்கொண்ட பல சிவாஜி ரசிகர்கள் ஆழ்ந்த உறக்கம். பின்னர் என் அண்ணன் படம் முடிந்த வுடன் புதிய பறவை. இப்படம் ஆரம்பித்தது தான் தாமதம். அப்போது தான் புரிந்தது. வந்த கூட்டம் அத்தனையும் சிவாஜி ரசிகர்கள்.. புதிய பறவைக்காக சிலர் செங்கல்பட்டு, திருத்தணி உட்பட சுற்று வட்டாரத்திலிருந்த பல ஊர்களிலிருந்து வந்திருந்தனர். பலத்த ஆரவாரம் கேட்க வேண்டுமா... குறிப்பாக காவல் நிலையத்தில் விரல் சொடுக்குப் போட்டு நடப்பாரே, அந்தக் காட்சியில் அந்தக் கூரையே பிய்த்து வந்து விடும் அளவிற்கு ஆரவாரம். புதிய பறவை முடிந்த பின் சரசா பி.ஏ. படம். நான் அந்தப் படத்தை முழுதும் பார்த்தேன். திரும்பிப் பார்த்தால் திரும்பவும் அனைத்து சிவாஜிரசிகர்களும் உறக்கம். வைகுண்ட ஏகாதசி விழிப்புக்கு குட்பை. புதிய பறவைக்கு வரவேற்பு. இப்படிக் கழிந்தது.
இப்படி பல வைகுண்ட ஏகாதசிகள்...
நான் முன்னர் கூறிய அந்த மாணவி யார் .... ஊகிக்க முடிகிறதா...
ராகவேந்திரன்
சாரதா,
சாந்தியில் வெளியிடப்பட்டதால் நன்றாக ஓட வேண்டிய படங்கள் கூட குறைந்த நாட்களிலே மாற்றப்பட்டதன் வேதனை உங்களுக்கு மட்டுமல்ல,அனைத்து சிவாஜி ரசிகர்களுக்கும் உள்ள ஒன்றாகும். எனக்கு தெரிந்த வரை மதுரையில் இந்த மாதிரி பிரச்சனைகளை நமது படங்கள் சந்தித்தில்லை. அபூர்வமாக இரண்டு முறை மட்டுமே இப்படி நடந்ததாக நினைவு. 1968-ம் ஆண்டு தீபாவளிக்கு [21.10.1968] நியூசினிமாவில் வெளியான எங்க ஊர் ராஜா 69-ம் ஆண்டு ஜனவரி 1ந் தேதி வெளியான அன்பளிப்பு படத்திற்காக மாற்றப்பட்டது. இல்லையென்றால் மற்றும் ஒரு நூறு நாள் படமாக அமைந்திருக்கும். அது போல 1979-ம் ஆண்டு சென்ட்ரலில் வெளியான நல்லதொரு குடும்பம் 79 நாட்களில் இமயம் படத்திற்காக மாற்றப்பட்டது. இதுவும் நிச்சயமாக நூறு நாட்கள் ஓடியிருக்கும். இதை போன்றே வியட்நாம் வீடு திரைப்படமும் ஞான ஒளி படமும் 90 நாட்களில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கும் போதே மாற்றப்பட்ட அநியாயமும் நடந்தது. என்ன செய்வது! எப்படியாவது படத்தை ஓட்டும் பாணி நமக்கு இல்லையே!
மோகன் நீங்கள் சொல்வது உண்மையே. வைகுண்ட ஏகாதசி அன்று சிறப்பு நடுநிசிக் காட்சி நடைபெறும். மதுரையைப் பொறுத்த வரை வருடத்தில் இரண்டு முறை. ஒன்று வைகுண்ட ஏகாதசி மற்றொன்று சித்திரை திருவிழாவின் போது அழகர் கோவிலிருந்து வரும் பெருமாளை எதிர்கொண்டு அழைப்பது என்ற நிகழ்ச்சி எதிர்சேவை என்ற பெயரில் நடைபெறும். அன்று இரவும் நடுநிசிக் காட்சி உண்டு. அநேகமாக இன்று மதுரை சென்ட்ரல் திரையரங்கில் திருவிளையாடல் நடுநிசிக் காட்சி நடைபெறும் என்றே நினைக்கிறேன்.
அன்புடன்
மதுரை சென்ட்ரல் அரங்கிற்கு, பக்த கோடிகள் அலைகடலெனத் திரண்டு வந்து கொண்டே இருக்கின்றனர். கலையுலக சொக்கநாதரின் திருவிளையாடலை தரிசிக்கத் தானே இந்தக் கண்கள். வெள்ளிக்கிழமை (25.12.2009), முதல் நாள் மட்டும் , மொத்த வசூல் ரூ. 10600 /- (ரூபாய் பத்தாயிரத்து அறுனூறு). பழைய படங்களின், முதல் நாள் வசூலில், இது சிகர சாதனை.
முரளி சாரின் யூகம் சரியே. நாளை திங்கட்கிழமை (28.12.2009) வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்ட்ரலில், திருவிளையாடல், நடுநிசிக் காட்சியாக நள்ளிரவு 1:30 மணிக்கு திரையிடப்படுகிறது.
தகவல்களை வழங்கிய மதுரை ரசிக நல்லிதயங்களுக்கு பசுமையான நன்றிகள் !!!
அன்புடன்,
பம்மலார்.
DEAR PAMMAL SIR AND MURALI SIR,
EAGERLY WAITING TO READ THE THEATRE HAPPENINGS OF THIRUVILAIYAADAL WITH PHOTOS
Wild guess - Jayalalitha?Quote:
Originally Posted by HARISH2619