chinnakannan sir declared and elected at vasantha maligai released on 29/9/1972. proceed.....
Printable View
http://3.bp.blogspot.com/-jTy7BPIte_..._2088655_n.jpg
johny shooting suhasini worked as Assistant camera (wo)man
http://www.thehindu.com/multimedia/d...m_1456934g.jpg
அமைதிப்படை படபிடிப்பில் இளைமையான மணிவண்ணன்
எல்லா பள்ளி, கல்லூரி மேடைகள் மட்டுமல்ல, எல்லா தொலைக்காட்சி சான்ல்களின் போட்டியிலும் தவறாமல் பங்கேற்கும் ஒரு பாடல் ஆபாவாணன் (ஊமை விழிகள்) பாடியது. கேட்டுப்பாருங்கள், உங்களுக்கு ஏற்கனவே பிடித்த பாடலாக இது இருக்கும். வெளியில் வாராத இரண்டு பேர் திரை படத்தில் இசை சுனில் வர்மா (மனோஜ் கியான் இரட்டையரில் கியான் அவர்களின் குமரன் என்று நினைவு )
http://www.inbaminge.com/t/r/Rendu%2...Varan.eng.html
வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
ரயிலு வண்டியிலே மெயிலு வண்டியிலே
பறந்து வராண்டா பாஞ்சு வராண்டா
காட்டு வழியிலே எதிர் மேட்டு வழியிலே
தீ மூட்ட வராண்டா கொடி நாட்ட வராண்டா
வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
ஏழு கடல தாண்டி
ஏழு கடல தாண்டி ஏழு மலைய தாண்டி
வருவான் பூச்சாண்டி
வருவான் பூச்சாண்டி வலைய விரிப்பாண்டி
மனசெல்லாம் தோண்டி பாடம் படிப்பாண்டி
மனசெ குடுப்பாண்டி சபதம் முடிப்பாண்டி
வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
கொல்லிமலை தாண்டி
கொல்லிமலை தாண்டி குடகு மலை தாண்டி
காத்தா வருவாண்டி
காத்தா வருவாண்டி கருப்பா வருவாண்டி
வேசம் கலைப்பாண்டி வெரதம் முடிப்பாண்டி
ஆரியக்கூத்தாடி காரியம் முடிப்பாண்டி
வரான் வரான் பூச்சாண்டி ரயிலு வண்டியிலே
வாரணாசி கேட்டை தாண்டி மெயிலு வண்டியிலே
ஆபாவாணன் (ஊமை விழிகள்)
முதன் முதலில் இவர் தர விரும்பிய படம் ‘இரவுப்பாடகன்’ ஆனால் அது வெளிவரவே இல்லை. இதே போல் விஜயகாந்தை வைத்து இவர் தர நினைத்த மூங்கில் கோட்டையும் வெளிவரவே இல்லை. இறுதியாக இவர் தர நினைத்த ’இரண்டு பேர்’ திரைப்படமும் வெளிவராமலே போய்விட்டது. வித்தியாசமாகவே தர நினைத்தாலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்ததால் பெரிய நட்டத்தினை அடைந்தார். இறுதியாக இவர் பங்களிப்பில் வெளி வந்தது கங்கா யமுனா சரசுவதி நெடுந்தொடரே. பாலச்சந்தரின் நாடகத்திற்குப் பின்பு, சன் டிவி நெடுந்தொடரில் காலோச்சிய காலத்தில் ராஜ் டிவியில் வந்து ஓரளவு வெற்றியடைந்த தொடரும் அது ஒன்றே! இவருடையது மட்டுமல்ல, ஒரு காலத்தில் இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படக் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பும் கூட ஏனோ இப்பொழுது இல்லாமலே போய்விட்டது. கொடுத்ததில் பாதி வெற்றிப்படங்கள், பாதி தோல்வியாக இருந்தாலும், தன் படங்களின் மூலம் ஏற்படுத்திய, அதிர்வுகளையோ, அதில் தொனித்த வித்தியாசங்களையோ, பிண்ணனியிலுள்ள திறமை கலந்த உழைப்பையோ எளிதில் புறந்தள்ளிவிடமுடியாது….
(இணையத்தில் திரட்டிய தகவல்கள்)
இரவுப்பாடகன் - நண்பர் போகன் பகிர்ந்து கொண்டது -நெல்லை சீமையை சேர்ந்தவர்
எம்ஜியாரை இந்த சிறிய வாழ்க்கையில் இரண்டு முறை பார்த்திருக்கிறேன் என்பது இப்போது எண்ண வியப்பாக இருக்கிறது.ஒருமுறை ரத்னா தியேட்டர் எதிரில் இருந்த வளாகத்துக்கு அவர் வந்தபோது.இன்னொருதடவை சேர்மாதேவியில் அவர் மணிமுத்தாறு போவதற்கு வந்தபோது வழியில் ஒரு ரயில்வே கேட்டில்.அந்த சமயம் சரியாக ரயில்வே கேட் அடைக்கப்படும் என்று தெரிந்து நான் உட்பட ஒரு சிறிய கூட்டம் அவர் காருக்காகக் காத்திருந்தது.நினைத்தபடியே அவர் கார் வந்தது.ஆனால் கார் கண்ணாடி இறக்கப்படவே இல்லை.காவல் கூட்டம் ச்ச்ச்சூ ச்சூ என்று எங்களை விரட்டிக் கொண்டிருந்தது.என் பக்கத்தில் ஒரு பெண் ஒரு குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தார்.குழந்தை அழுதுகொண்டே இருந்தது,ரயில் நீண்ட கூச்சலுடன் வந்து போய்விட்டது எம்ஜியார் மூஞ்சியைக் காண்பிக்கிறார் இல்லை.ரயில்வே கேட் திறக்கப்பட்டது. கூட்டம் முண்டியது.நெரிசல்.' அவருக்கு உடம்பு சரியில்லை போங்க போங்க'என்று யாரோ விரட்டினார்கள்.அவர்கள் லேசாகத் தள்ளியதில் அந்தப் பெண்மணி தடுமாறி விழப் போக குழந்தை மேலும் பெரிதாக அழுதது..முன்வண்டிகள் புறப்பட்டு எம்ஜியாரின் வண்டியும் புறப்படுகையில் சட்டென்று கண்ணாடி இறக்கப்பட்டு எம்ஜியாரின் சிவந்த கரம் நீண்டு அந்தக் குழந்தையின் முகத்தைத் தொட்டது.குழந்தை திகைத்து அழுகையை நிறுத்தியது.அதன் கையில் ஒரு நூறு ரூபாய்த் தாள்
என்னைத் தோள் மீது தூக்கிக் கொண்டிருந்த சித்தப்பா திரும்பி ''எம்ஜியார் அழுறதைப் பார்த்தேண்டா''என்றார் .''எம்ஜியார் அழுதார்!''