http://i59.tinypic.com/dxbuxh.jpg
Printable View
எல்லோருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் -
இந்த வருட ஆண்டுக் குறிப்பேடு ( calender ) என்னை பார்த்து கேலி செய்தது , என்னை தவிர வேறு எதை கிழித்தாய் இந்த வருடம் ? என்னிடம் பதில் இல்லை - இந்த பதிவை போடுவதன் மூலம் என் மௌனத்திற்கு சற்றே ஆறுதல் கிடைக்கும் என நம்புகிறேன் -----
திரு கலை வேந்தன் : நீங்கள் அலசின படம் தான் - உங்கள் நடையின் சுவை இந்த பதிவுக்கு பிறகும் குறையாது .
இந்த பதிவை , , சுட்டு குருவிகள் போல சுடப்பட்டு , நிலை குலைந்து நம்மையெல்லாம் சிலையாக்கி சென்ற 132 குழந்தைகளுக்கும் சமர்பிக்கின்றேன் ..
Part 1 : பெற்றால் தான் பிள்ளையா ????
"சின்ன அரும்புகள் செய்யும் குறும்புகள் சொல்ல சொல்ல இந்த உள்ளம் இனித்திடும் "
மெல்ல வளர்ந்திடும் செல்ல குழந்தைகள் நாளை உலகத்தை ஆளும் தலைவர்கள் !"
இப்படித்தானே எல்லா பெற்றோர்களும் உள்ளம் மகிழ்ந்து கனவுகள் காண்கிறார்கள் -- இதோ இந்த ஆனந்தன் கதையும் அப்படித்தான் , குழந்தையை பெறாமல் , கண்ணனின் மழலையில் , யாழும் , குழலும் அவனை அதிகமாக கவரவில்லை
முன்னுரை : சமீபத்தில் படித்த ஒரு உரையாடல் என் நினைவிற்கு வந்தது - எவ்வளவு அழகாக இந்த படத்திற்கு பொருந்துகின்றது என்று பாருங்கள் !!!
A father is flying a kite. His son is watching him carefully. After sometime son says “Dad, because of the string the kite is not able to go any further higher.”
Hearing this, the father smiles and breaks the string. The kite goes higher after breaking of the thread and then shortly after that it comes and falls on the ground. The child is very dejected and sad.
The father sits next to him and calmly explains “son, in life we reach a certain level of prosperity and then we feel that there are certain things in our life that are not letting us grow any further like home, family, culture, friendship etc.,
We feel we want to be free from those strings which we believe are stopping us from going higher. But going higher is easier than staying at the higher level. And friends, family and culture etc., are the things that will help us stay stable at the high heights that we achieved.
If we try to break away from those strings our condition will be similar to the kite.
Takeaway: “never go away from culture, family, friends and relationship as they help keep you stable while you are flying high. Life is beautiful .
தொடரும்
Part II - பெற்றால் தான் பிள்ளையா ????
இந்த படத்தை கீழ்வரும் வகையில் அலசலாம் என்று விழைகிறேன்
1. படத்தின் கதை சுருக்கம்
2. இந்த படத்தின் சிறப்புக்கள்
3. மனதில் தங்கும் வசனங்கள்
4. மனதை கவரும் இந்த படத்தின் மதுர கானங்கள்
5. நடிப்பில் வசீகரிக்கும் நடிகர்கள்
6. நாம் கற்று கொள்ள வேண்டியவைகள்
படத்தின் கதை சுருக்கம் :
ஆனந்த(ம் )ன் - ஏழையின் அத்தனை அம்சங்களையும் கொண்டவன் - நாடோடி - அவனிடம் இருக்கும் ஒரே சொத்து அவனுடைய ஆனந்தம் தான் - மற்றவர்களின் பசியை போக்குவதில் மகிழ்ச்சியை அடைபவன் - அவனது ஏழ்மை அவனிடம் இருக்கும் நேர்மையான குணத்திற்கு தலை வணங்கியது . எந்த பிடிப்பும் இல்லாமல், எந்த சொந்தமும் இல்லாமல் கால் போன போக்கில் சந்தோஷமாக அவன் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது . காலம் அவனை இன்னும் ஆனந்தமாக இருக்க ஆசைப்பட்டது -- அதன் விளைவு ஆனந்தனின் வாழ்க்கையில் கண்ணனின் பிரவேசம் --- அது மட்டும் அல்ல ஒரு மோகினியின் ரூபத்தில் அவனிடம் தன் உள்ளத்தை ஒரு தேவதை பறி கொடுக்கின்றாள் . யாரோ அனாதையாக கோயிலில் விட்டு சென்ற குழந்தையை எடுத்து வளர்க்கும் ஆனந்தன் , தன்னை மறக்கின்றான் , காதலியையும் மறக்கின்றான் , கண்ணனே எல்லாம் என்று ஆகிவிடுகின்றான் - பாரதியாரின் கவிதை தான் இங்கு நினைவுக்கு வருகின்றது " கண்ணன் -- எங்கிருந்தோ வந்தான் , இடைச்சாதி நான் என்றான் - இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன் !!" ஆனந்தன் செய்த தவம் அவனை கண்ணனிடம் அழைத்து சென்றது ---- குழந்தையை பெற்றவள் 5 வருடமாக அதை தேடி அளைகின்றாள் - போலீசில் புகாரும் செய்கின்றாள் - தன்னை ஏமாற்றி ஒரு குழந்தைக்கும் தாயாக்கினவன் ஒரு நாள் திருந்தி தன்னை ஏற்று கொள்ள மாட்டனா என்றும் ஏங்குகிறாள் - 5 வருடம் அவளிடம் இரக்கம் காண்பிக்காமல் இருந்த காலம் சற்றே அவளை இரக்கத்துடன் பார்த்தது . காலம் அவனுடைய கணவனை திருத்தியது - அதற்காக அவனுடைய ஒரு காலை பரிசாக கேட்டது - இருவரும் சேர்ந்து தொலைத்த குழந்தையை தேட ஆரம்பித்தார்கள் போலீசின் உதவியுடன் .... கண்ணன் , ஆனந்தனை தன் பாசம் என்ற புல்லாங்குழல் எழுப்பும் கண்ணன் என்ற மதுர கானத்தில் பைத்தியமாகவே ஆகி விட்டான் -- அவன் கண்களில் எங்கும் கண்ணன் , எதிலும் கண்ணன் - காதலியும் கண்ணனாகவே அவனுக்கு தெரிந்தாள் - ஆனந்தன் தன் உயிரைக்கூட யாரவது கேட்டால் தந்து விடுவான் - ஆனால் கண்ணனை கேட்டால் அவன் படும் வேதனை மரணத்தை விட கொடியதாக இருக்கும் ---
காலம் கண்ணனை அவனிடம் இருந்து பிரிக்க ஆசைப்பட்டது - கண்ணனை பெற்றவர்கள் , போலீஸ் உதவியுடன் , நீதி மன்றத்தின் அதிகாரத்துடன் , தான் பெற்ற குழந்தையை , பெறாமல் பெற்ற ஆனந்தனிடம் இருந்து பிரிகின்றார்கள் - ஆனந்தன் முதல் தடவையாக தன் ஆனந்தத்தை இழக்கின்றான் - தன் நிழலையே வெறுக்கின்றான் - கண்ணில் தெரியும் எல்லோருமே அவனுக்கு கண்ணனாக தெரிந்தனர் - அவனை சூழ்ந்து இருக்கும் அனைவருமே அவனுக்கு சதி செய்வது போல அவனுக்கு தெரிந்தது ......
உறவை நீதி மன்றம் பிரிக்கலாம் ; சட்டம் சதி செய்யல்லாம் ; நண்பர்கள் ஏமாற்றலாம் - ஆனால் உண்மை அன்பை யாருமே பிரிக்க முடியாது ... - கண்ணனை பெற்றவர்கள் அதை உணர்கிண்டார்கள் - கண்ணன் மீண்டும் ஆனந்தனிடம் சேர்கின்றான் - ஆனந்தன் இழந்த ஆனந்தத்தையும் , பிரிந்த மோகினியையும் மீண்டும் பெறுகிறான் - வாழ்க்கை அவனுக்கு பாசத்தின் அருமையை உணரவைக்கின்றது - குழந்தை செல்வம் தான் உண்மையான செல்வம் என்பதையும் உணர வைக்கின்றது - பாசம் காட்ட , அன்பை காட்ட , பெற்றவர்களாகத் தான் இருக்க வேண்டும் என்பதில்லை - பெறாமலும் அன்பை காட்டலாம் - எவ்வளவு அநாதை குழந்தைகள் இந்த உலகத்தில் - ஆனந்தன் போல ஒவ்வொரு வரும் நினைக்க ஆரம்பிந்தால் , அநாதை என்ற வார்த்தை நம் அகராதியில் இருந்தே , "வெள்ளையனே வெளியேறு" என்று விரட்டியது போல ஓடிவிடும்
ஈரமான கண்களுடன் ஆனந்தனிடம் இருந்து விடை பெறுகின்றோம் -------
தொடரும்
Part III - பெற்றால் தான் பிள்ளையா ????
2. இந்த படத்தின் சிறப்புக்கள் :
வலுவான கதை - ஆழ பதியும் வசனங்கள் - அருமையான நடிப்பு - கதைக்கேற்ற காதல் காட்ச்சிகள் , மனதை தொடும் பாடல்கள் ; அர்த்தமுள்ள , தேவையும் உள்ள சண்டை காட்ச்சிகள் - இழைந்தோடும் நகைச்சுவைகள் - எல்லோருக்கும் பாடம் சொல்லும் ஒரு படம் - MGR இன் பட்டறையிலிருந்து வெளியான ஒரு வைரக்கல் - ஒரு குழந்தையின் பாசத்திற்கும் முன் ஒரு உண்மையான காதல் கூட ஒரு இரண்டாம்பட்சம் தான் என்பதை அருமையாக சொல்லும் படம்
மனதில் தங்கும் வசனங்கள்
MGR :
" தம்பி பகிர்ந்து உண்ணும் பழக்கம் உன் தலைமுறையிலாவது எல்லாருக்கும் வரட்டும் "
"கெட்ட காரியங்களுக்கு உதவி செய்பவர்கள் ஆபத்து வந்ததும் மொத்தமா ஓடிவிடுவார்கள் , நல்ல காரியங்களுக்கு உதவி செய்பவர்கள் மட்டும் தான் நம்முடன் கடைசி வரை இருப்பார்கள் "
" இதுவரை உண்மையைத்தானே முழுங்கி கொண்டிருந்தார் - இப்பொழுது விசிலையும் முழுங்கிட்டாரா ??"
தொடரும்
Part IV - பெற்றால் தான் பிள்ளையா ????
3. மனதை கவரும் இந்த படத்தின் மதுர கானங்கள்
http://youtu.be/7iHLm9-JPzc
இது போன்ற பாடல்கள் பள்ளிப்பாடமாகக் கூட வைக்க வேண்டியவை. நம் சமுதாயத்தில் மிகச் சிலரே இதை ஏற்றுக் கொள்வார்கள். இயல் இசை நாடகம் மூன்றுமே சங்க காலத்தில் பாமரனின் வாழ்வில் இன்றியமையாத அம்சங்களாக இருந்தன. ஆனால் இப்பொழுது வரும் சில பாடல்களில் அர்த்தம் கண்டு பிடிப்பவர்களுக்கு " ஆயிரம் பொற்காசுகள் " என்று அறிவிப்பு விடலாம் . . இது போன்ற திரைப்பாடல்கள் சிறு வயதில் ஏற்படுத்தும் தாக்கத்தை நாலடியாரோ நான்மணிக்கடிகையோ கூட ஏற்படுத்த முடியாது.
இந்த பாடலில் வரும் கடைசி வரிகள் " மேடையில் முழங்கு அறிஞ்சர் அண்ணா வைப்போல் என்று எழுதப்பட்டவை - சென்சர் அது அரசியல் அந்த காலத்தில் என்று சொல்லி "திரு .வீ >க வைபோல்" என்று மாற்றி அமைக்க கோரியது - திறமை யாருக்கு இருந்தாலும்,, அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அதை மதிக்க வேண்டும் - இந்த பண்பு நம்மிடம் அறவே இல்லை என்று சென்சர் அன்றே அடித்து சொல்லி விட்டது .
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி !
சின்ன சிறு கைகளை நம்பி ஒரு சரித்திரம் இருக்குது தம்பி !
(நல்ல நல்ல பிள்ளைகளை ------ )
தவறு என்பது தவறி செய்வது , தப்பு என்பது தெரிந்து செய்வது - தவறு செய்தவன் திருந்த பார்க்கணும் , தப்பு செய்தவன் வருந்தியாகணும்
(நல்ல நல்ல பிள்ளைகளை ----- ! )
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம் , தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம் - இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம் - பேரை வாங்கினால் இந்த ஊரை வாங்கலாம் !
(நல்ல நல்ல பிள்ளைகளை ----- ! )
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம் , கடமை இருந்தால் வீரனாகலாம் ; பொறுமை இருந்தால் மனிதனாகலாம் - இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம் ----
(நல்ல நல்ல பிள்ளைகளை ----- ! )
இந்த பாடலின் தாக்கம் இன்னும் ஏழு தலை முறைக்கும் நீடிக்கும்
தொடரும்
Part V - பெற்றால் தான் பிள்ளையா ????
http://youtu.be/eVp26XEkFkM
அதே பாடல் - பி .சுசிலாவின் குரலில் , சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கல குரலில்
http://youtu.be/c2ZwdkMaaLU
கண்ணன் பிறந்தான் :
செல்ல கிளியே மெல்ல பேசு ------
http://youtu.be/fH1ToWpJ6lw
The melodies composed by MS Viswanathan alone and with TK Ramamurthy rose above all challenges and are still ringing even today. இதில் MGR அவர்களின் சுறு சுறுப்பும் , நடிப்பும் கண்களை விட்டே அகலாது - இதே பாடல் சோகமாகவும் ஒரு முறை வரும் - நம் கண்கள் குளமாகிவிடும்
http://youtu.be/miHGvS385h0
இதோ அந்த பாடல் - சுசிலாவின் இனிய குரலில் --- கண்கள் குளமாகி விட்டால் நான் பொறுப்பு அல்ல ------
http://youtu.be/Tjwxq4Vh4a0
சக்கரை கட்டி - நல்ல கற்பனை வளம் கொண்ட பாடல் - ராஜாவின் பார்வை ராணியின் பக்கம் -- இந்த பாடலை நினைவுபடுத்தும் .
தொடரும்
Part VI - பெற்றால் தான் பிள்ளையா ????
4. நடிப்பில் வசீகரிக்கும் நடிகர்கள்
MGR
ஒரு வழக்கமான MGR யாரை இதில் பார்க்க முடியாது - ராஜ்கபூர் வருவதுபோல தொப்பி அணிந்து வருவார் ( to add more feathers in his cap ) - படம் ஆரம்பித்து கடைசி வரை இமைகள் மூடாமல் அவரையே பார்த்து கொண்டிருக்க வைப்பது அவரின் மாறுப்பட்ட நடிப்பு , குழந்தை தனமான சிரிப்பு , வெட்கத்துடன் கூடிய காதல் , கண்களில் கண்ணீரை அருவியாக வரவழைக்கும் அவரின் கண்ணன் பாசம் - குழந்தை தனது இல்லை என்று சொல்வதில் இருந்து அவர் நடிப்பு கொடி கட்டி பறக்க ஆரம்பிக்கும் - பாலையாவிடம் அவர் நெளியும் நளினம் , தூறு வாங்க போகும் வேகம் , தன் கண்ணனை போலீஸ் , திருடன் என்று சொல்லும்போது வரும் கோபம் , மோகினி யும் , அவள் அண்ணன் கபாலியும் தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று நினைக்கும் பொது வரும் விரக்தி , கோர்டில் அவர் வாதாடும் திறமை , கண்ணனை விட்டு பிரிந்து ஒரு பைத்தியக்காரனாக திரியும் போது அவர் காட்டும் வெகுளித்தனம் -- இவ்வளவு உணர்ச்சிகளை எங்கு ஒளித்து வைத்திருந்தார் என்று என்ன தோன்றும் .
"வாழ நினத்தால் வாழலாம் - வழியா இல்லை பூமியில்" என்று NT பாடல் வரிகளை அவர் சொல்லும்போது இந்த இரு திலகங்களும் ஏன் இன்னும் நிறைய படங்களில் இன்னும் சேர்ந்து நடித்திருக்க கூடாது என்றே எண்ண தோன்றும்
சரோஜா தேவி
அதிகமாக நடிக்கும் வாய்ப்பு இல்லை என்றாலும் கண்களால் தன் காதலை வெகு அழகாக தெரிவிப்பார் - தன் காதலன் , கண்ணனைத்தானே அதிகம் கொஞ்சுகிறார் என்று அவர் ஏக்கத்துடன் பேசும் பொழுது இந்த கதாபாத்திரத்தை இவரை தவிர வேறு எவரும் இவ்வளவு அழகாக வெளி கொண்டு வந்திருப்பார்களா என்பது சந்தேகமே !!
சௌகார் ஜானகி :
குழந்தையை தனியே விட்டு விட்டு தற்கொலை செய்துகொள்ள போகிறார் - யாரோ இவரை காப்பாற்றியவுடன் மீண்டும் தன் குழந்தையின் நினைவு வருகின்றது - தேடுகிறார் - தேடுகிறார் - 5 வருடமாக - நடுவில் தன் கணவன் அசோகனிடம் தன்னை ஏற்று கொள்ள வேண்டி சோக ஜானகி யாக மாறுகிறார் - கண்ணன் கிடைத்தவுடன் தன் நடிப்பிற்கும் , அழுகைக்கும் ஒரு முற்று புள்ளியை வைக்கிறார் .
MR ராதா : தனக்கே உரித்தான ஏமாற்றும் தொழில் - படத்தில் இவரது வில்லத்தனம் குறைவே - வட்டியும் முதலுமாக படத்தின் வெளியே காட்டி விட்டாரே !! என்ன சொல்வது - கொடுமை ??
TS Balaya - இவர் நடிப்பை பற்றி சொல்லவேண்டுமா ? தொரை என்று சொல்லியே ஆனந்தனை இவர் கலாய்ப்பது வெகுவும் சுவாரசியம் ! கொவரமான வேடமானாலும் அசத்தி விடுகிண்டார்
தங்கவேலு : நல்ல மனம் உடையவர் - பல புத்திமதிகளை குழந்தைகளுக்கு சொல்லுவார் - வரும் எல்லா இடமும் கல கலப்பாக இருக்கும்
அசோகன் : வழக்கமான சண்டை காட்ச்சிகள் கிடையாது - சௌகாரை ஏமாற்றி ஒரு குழந்தையை தருகிறார் - வேறு பெண்ணிடம் உறவு - ஒரு விபத்தில் ஒரு காலை இழக்கிறார் - புத்தி வருகின்றது - சொவ்காருடன் சேர்ந்து கண்ணனை தேடுகிறார் ------
நம்பியார் : வழக்கமான வில்லன் - குழந்தையை மறைக்க பார்க்கிறார் - முடிவில் தோல்வியை தழுவுகிறார்
பாடல் /இசை - வாலியின் பாடல்கள் நிரந்தரமானவை - ஒவ்வொன்றும் தேனில் தோய்த்து எடுத்தவை - இசை MSV & ராமநாதன் - வசனம் - ஆரூர் தாஸ் -- கோர்ட் ஸ்க்ரீன் வசனங்கள் தூள் பறக்கும்
தொடரும்
Part VII - பெற்றால் தான் பிள்ளையா ????
5.நாம் கற்று கொள்ள வேண்டியவைகள்
இந்த படம் அனாதைகளை புறம்கனிக்கும் சமுதாயத்திற்கு ஒரு சவால் - குப்பை தொட்டிகள் தாயாக இருக்கும் வரை பல கண்ணன்களை காப்பற்ற ஒரு ஆனந்தன் தேவை - ஏன் நாம் அந்த ஆனந்தனக்காக காத்து இருக்க வேண்டும் - நாம் ஒவ்வருவரும் ஒரு ஆனந்தனாக மாறினால் - அநாதை என்ற வார்த்தை அனாதையாக போய் விடுமே - யோசிக்க வேண்டிய , கற்று கொள்ள வேண்டிய பாடம்
பொறுமையாக படித்த எல்லா நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் என் நன்றி
அன்புடன்
ரவி
[COLOR="#0000FF"]அன்பு நிறை பண்பாளர் திரு. ரவி சார் அவர்களுக்கு,
உங்கள் பெருந்தன்மை அடக்கம் காரணமாக என் விமர்சனத்தின் சுவை குன்றாது என்று நீங்கள் கூறினாலும் இந்த ஒரு பாராவிலேயே அசத்தி விட்டீர்கள். இந்த வரிகளைப் படிக்கும்போது உண்மையிலேயே கண் கலங்கினேன். பாகிஸ்தானில் குழந்தைகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் என்னையும் மிகவும் பாதித்தது. உங்கள் எழுத்துக்களிலேய உங்கள் ஈர இதயம் தெரிகிறது. தங்களின் அருமையான விமர்சனத்துக்கு நன்றி சார். தொடர்ந்து உங்களிடம் இருந்து சிந்தனையைத் தூண்டும் அருமையான பதிவுகளை எதிர்பார்க்கிறோம் சார். மிக்க நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/COLOR]