Warm Welcome Smt Sharmila Murugan Madam for this wonderful thread of NT.
Awaiting your post on NT soon
Regards
Printable View
Warm Welcome Smt Sharmila Murugan Madam for this wonderful thread of NT.
Awaiting your post on NT soon
Regards
From Mr. Sudhangan's Face book
1967ம் வருடம் வந்த இன்னொரு சிவாஜி படம் ` தங்கை’
இது பாலாஜி தயாரித்த படம்!
இந்த படத்திலும் எல்லாப் பாடல்களுமே பிரபலமானது!
அப்போதைய ரசிகர்களின் ரசனையே வித்தியாசமானது!
சில மென்மையான பாடல்களைத்தான் வானோலி நேயர் விருப்பத்தில் அதிகமாக நேயர்கள் விரும்பி கேட்பார்கள்!
`தங்கை’ படத்தில் பி.சுசீலா குரலில் ஒரு அருமையான பாடலுண்டு!
`சுகம்! சுகம்! அது துன்பமான இன்பமானது
மனம் பேதை மனம்
அது மாறாத சொந்தமானது!
இனம் பெண்களின் இனம்
அது பூப்போல மென்மையானது!
நெஞ்சம் அறியாமல் ஒரு வார்த்தை
நீ என்றது!
என் உள்ளம் எதிரொலி போல்
நான் என்றது!
நான் என்றுன் நீ என்றுன் ஏன்
சொல்வது1
நான் வேறோ? நீ வேறோ?
யார் சொன்னது!
உந்தன் நிழலாக நான் மாறும்
நாள் வந்தது!
வரும் சுகம் துன்பம் சரிபாதி
கேள் என்றது!
பூவாகி காயாகி
கனியானது!
நீயாகி நானாகி
நாமானது!
இதை விட காதலின் ஐக்கியத்தை, மனங்கள் ஒன்றுபட்ட காதலுக்கு வேறு வார்த்தைகள் சொல்ல முடியுமா /
திரையிசை காதல் பாடல்களில் தான் நாயகா- நாயகி பாவங்களை எப்படியெல்லாம் பிழிந்து கொடுத்திருந்தார்கள்!
இதே வருடம் வந்த இன்னொரு படம் தான் ஸ்ரீதரின் `நெஞ்சிருக்கும் வரை’~
இதில் நடித்த கலைனர்களுக்கு மேக்கப்பே கிடையாது!
சிவாஜி, கே.ஆர் விஜயா, முத்துராமன், வி. கோபாலகிருஷ்ணன், ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திலும் அத்தனை பாடல்களுமே முத்து முத்தான பாடல்கல்!
அதில் ஹை லைட்டே ஒரு கல்யாண அழைப்பிதழையே பாடலாக்கியிருப்பார் எம்.எஸ். விஸ்வநாதன்!
`பூமுடிப்பான் இந்த பூங்குழலி’ பாடல் இல்லாத கல்யாணங்களே இல்லை என்றானது!
படங்கள் மக்களின் வாழ்க்கைக்கான வழிகாட்டியானது!
இந்தப் படத்தில் வந்த ` முத்துக்களோ கண்கள்! தித்திப்பதோ கன்னன்! சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்துவிட்டேன் என்னை!’ காதலர்களின் கீதமானது!
`நெஞ்சிருக்கும் எங்களுக்கும் நாளையென்ற நாளிருக்கும்’ தன்னம்பிக்கை ஸ்தோத்திரமானது!
படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை!
ஆனால் பாடல்கள் இந்த படத்தை இன்றும் நினைவில் வைத்துக்கொள்ளும்படியாக செய்துவிட்டது!
இந்த வருடம் வந்த இன்னொரு படம் பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி பத்மினி கே.ஆர். விஜயா நடித்த `பாலாடை’
குழந்தையில்லாத தம்பதிகளின் வேதனையச் சொன்ன படம் இது!
சிவாஜி- பத்மினி தம்பதிகளுக்கு திருமணமாகி பத்தாண்டுகளாகியும் குழந்தைகள் இருக்காது1
பெரிய பணக்காரர்கள்!
தனக்கு குழந்தை இல்லையென்று தன் பெண் குழந்தை என்று சிவாஜி நினைக்கும் பத்மினியின் தங்கை கே.ஆர். விஜயாவையே தன் கணவனுக்கு திருமணம் செய்து கொடுப்பார் பத்மினி!
இதிலும் அனைத்துப் பாடல்களுமே இனிமையானவை!
பிரபல நாடகாசிரியரும், சிறுகதை எழுத்தாளருமான பிலஹரி இந்தப் படத்திற்கான வசனங்களை எழுதினார்!
இந்த வருடம் வந்த பல சிவாஜி படங்களை சொல்லிக்கொண்டு வரும் நான், அந்த வருடம் வந்த முக்கியமான படத்தை சொல்லவில்லையே என்று சில தீவிர சிவாஜி ரசிகர்கள் நினைக்கலாம்!
அந்தப் படத்தைப் பற்றி விரிவாகத்தான் சொல்ல வேண்டும்!
அந்தப் படம் சிவாஜியின் கலையுலக பிரயாணத்தில் மிக முக்கியமான படம் என்றே சொல்ல வேண்டும்!
இந்தப் படமும் சிவாஜி – ஏ.பி.நாகராஜன் கூட்டணியில் வந்த சிவனடியார்களைப் பற்றிய படம்!
இதுவும் பகுத்தறிவு, கடவுள் மறுப்பின் மூலமாக ஆட்சிக்கு வந்த திமுகவின் முதலாமாண்டு வந்து பெரும் வெற்றியைப் பெற்ற படம் !
அந்தப் படம் தான் ` திருவருட் செல்வர்’
இதில் சிவாஜிக்கு சேக்கிழார், சுந்தரர், திருநாவுக்கரசர்! சிறுகுறிப்புத் தொண்டர் என்று நான்கு வேடங்கள்!
இதில் எல்லோரையும் பிரமிக்க வைத்த பாத்திரம் திருநாவுக்கரசர் பாத்திரம்தான்!
அந்த நாட்களில் இந்த பட போஸ்டரில் சிவாஜியின் திருநாவுக்கரசர் வேடப் படம் இருக்கும்!
சைவர்கள் பலரும் அவரை காஞ்சி பரமாச்சாரியரை கண்ட மாதிரி அந்த போஸ்டர்களை கும்பிட்டு விட்டு போனதை பார்த்திருக்கிறேன்1
அந்த வேடம் மிகவும் வயோதிக வேடம்!
சிவாஜி அந்த மேக்கப் போட 3 மணி நேரங்களுக்கு மேல் ஆகும்!
கமல் தசாவதாரம் படத்தில் பத்து வேடம் போட்டிருப்பார்!
பல்வேறு ஒப்பனைகளோடு வருவார்!
கமல் காலத்தில் ஒப்பனைக் கலையில் தொழில் நுட்ப வசதிகளும், பொருட்களும் ஏராளமாக வந்துவிட்டன!
ஆனால் 1967ம் வருட சிவாஜிக்கு அந்த வாய்ப்பெல்லாம் இல்லை!
காலை சூரியோதய காட்சியில் திருநாவுக்கரசர் நடிக்கவேண்டுமென்றால், அவர் விடியற்காலை 2 மணிக்கே எழந்திருந்து ஒப்பனைக்கு உட்கார்ந்தால்தான் விடியற்காலை படப்பிடிப்புக்கு தயாராக முடியும்!
இந்த காட்சியில் யார் உங்களுக்கு இன்ஸ்பிரேஷன்?
சிவாஜியை கேட்டேன்.
மதுரை மாநகரே குலுங்கியது.. ஒரு பழைய திரைப்படத்திற்கு டிரைலர் வெளியீடா...அதுவும் மதுரை மாநகரிலா என புருவகங்கள் உயர்ந்தன... வழக்கத்தை மாற்றி தலைநகர் சென்னையில் மட்டுமே நடந்து வந்த டிரைலர் வெளியீட்டினை, புதுப்படத்திற்கே சென்னையைத் தாண்டி வெளியூரில் விழா நடத்த யோசிப்பவர்கள் மத்தியில், ஒரு பழைய படத்திற்கு டிரைலர் வெளியீட்டு விழா அதுவும் சென்னையைத் தாண்டிய வெளியூரில் என்பதே தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தின் துவக்கமாக அமைந்தது, மக்கள் தலைவர் நடிகர் திலகம் சிவாஜியின் சிவகாமியின் செல்வன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா. விழாவின் சிறப்பம்சம் உத்தரகாண்ட் மாநிலத்தில் விமானப்படை வீரராக தன் இன்னுயிரைத் தியாகம் செய்த திரு பிரவீண் அவர்களின் சேவையைப் பாராட்டும் விதத்திலும் அவருடைய தியாகத்தைப் போற்றும் வகையிலும் அவருடைய தாயார் மேடையில் அழைத்து கௌரவிக்கப்படுவதாக வெளிவந்த அறிவிப்பும் பலரது புருவத்தை உயர்த்தியது.
(இனி இதுபோன்ற பல்வேறு காரணங்களைத் தேடி பலரும் விழா எடுப்பர் என்பதற்கும் இதுவே முன்னோடி).
அந்த நாளும் வந்தது.
நேற்று 28.02.2016 ஞாயிறு காலை மதுரை சினிப்ரியா திரையரங்கம் தன்னுடைய கொள்ளளவான 1000த்தையும் தாண்டி இருக்கைகளின்றி மாடியிலும் கீழ்தளத்திலும் கட்டாந்தரையிலும் மக்கள் அமர்ந்து விழாவைக் கண்டு களித்தது குறிப்பிடத்தக்கதாகும்.
விழாவைப் பற்றி முரளி சாரின் எழுத்தில் படிக்கவேண்டும் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொண்டு திரையரங்க அலங்காரம், மக்களின் கலந்துரையாடல், பிரவீண் அவர்களின் தாயாருடன் நண்பர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டது போன்ற நிழற்படங்களின் அணிவகுப்பை இங்கே இடம் பெறுகிறது. அரங்கினுள் மேடையில் இருந்ததால் நிழற்படம் எடுக்க முடியவில்லை. அவை இதர இணையதளங்களிலிருந்து பகிர்ந்து கொள்ளலாம்.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...43&oe=575377B9
பள்ளி மாணவர்கள் பிரவீண் அவர்களின் பேனரைக் கையில் பிடித்து, ஜெய் ப்ரவீண், ஜெய் ஹிந்த் எனக் குரல் எழுப்பியது தேச பக்தியை நம் சிவாஜி ரசிகர்களால் மட்டுமே மக்கள் மத்தியில் ஆழமாக பதிய வைக்க முடியும் என்பதற்கு சான்றாக அமைந்தது.
https://scontent-sin1-1.xx.fbcdn.net...12&oe=5761BE77
மேலே உள்ள நிழற்படத்தில் நீலவண்ண சேலையுடன் காட்சி தருபவர் தான் பிரவீண் அவர்களின் தாயார். முரளி சார், அவரின் வலப்பக்கம் நமது சந்திரசேகர் மற்றும் முரளி சாரின் இடப்பக்கத்தில் அகில இந்திய சிவாஜி மன்ற இணைப்பொதுச்செயலாளர் திரு முருகவிலாஸ் நாகராஜன் ஆகியோர்.
ஒரு விஷயத்தை சென்னைவாசியாக குறிப்பிட விரும்புகிறேன். நமது தலைநகர் மட்டும் என்ன குறைந்ததா,,, நமது தலைநகரில் நடைபெற்ற விழாக்களில் வாரநாட்களும் அடங்குமே... அதுவும் அரங்கு நிறைந்து விழாக்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது... சினிமா பிரபலங்கள் வந்தாலும் வராவிட்டாலும் தலைவரின் ரசிகர்கள் அவரை மட்டுமே மனதில் வைத்து ஓடி வந்து விடுவார்களாயிற்றே..வந்தார்களே... அதனால் சென்னைவாசிகளாகிய நாங்களும் காலரைத் தூக்கி வைத்துக்கொள்வோமே...
திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த பேனர்களில் ஒரு சில பார்வைக்கு..
https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...bec30cc5f86b8d
https://scontent-sin1-1.xx.fbcdn.net...a6&oe=576F68A0
மேலும் நிழற்படங்கள் மேலே உள்ள முகநூல் பக்கத்தில் பார்க்கலாம்.
Sivakamiyin Selvan Trailer:
https://www.youtube.com/watch?v=czGlp3u_pwA
https://www.facebook.com/vee.yaar/vi...2333733817298/
VERY VERY RARE VIDEO OF HANDSOME NT OPENING THE NAME BOARD ...SIVAJI GANESAN PRESENTS...
A DELIGHT TO WATCH
FROM THE FILM GAURI
Raghavender sir descalender for feb and march with highlights of NT fil,s of relative months may be published,
thanks
https://fbcdn-sphotos-h-a.akamaihd.n...abd5002e45901e
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
https://www.facebook.com/writersura/...8376851533046/
சிவாஜி எட்டாவது அதிசியம் அல்ல... எவரும் எட்டாத அதிசியம்.
Thank you Ramajayam Sir. Shall do it asap.