சின்னக் கண்ணன் சார்,
நடையா! இது நடையா! ஒரு நாடகமன்றோ நடக்குது.! சிரித்தேன். ரசித்தேன். (ஆமாம் ...பத்தே நிமிடத்தில் இவ்வளவு பெரிய பதிவை டைப் செஞ்சுடுவேளா! ஆச்சர்யமாய் இருக்கே)
Printable View
சின்னக் கண்ணன் சார்,
நடையா! இது நடையா! ஒரு நாடகமன்றோ நடக்குது.! சிரித்தேன். ரசித்தேன். (ஆமாம் ...பத்தே நிமிடத்தில் இவ்வளவு பெரிய பதிவை டைப் செஞ்சுடுவேளா! ஆச்சர்யமாய் இருக்கே)
நண்பர்களே
நேற்று ஒரே நாளில் 45 பதிவுகள் .... எதற்கு பதில் சொல்வது என்று யோசிப்பதற்குக் கூட நேரமில்லை. நேற்று நாள் முழுதும் கணினி பக்கம் செல்ல முடியவில்லை. சின்னக் கண்ணன் சாரின் நடையைப் பாராட்டுவதா... அடுத்து திரைக்கு வர இருக்கும் படங்களைப் பற்றிய அறிவிப்பைப் பாராட்டுவதா, மிகச் சிறப்பான ஒப்பீடுகளுடன் கலக்கிக் கொண்டிருக்கும் ரவியின் எழுத்துச் சிறப்பைப் பாராட்டுவதா, இப்படி ஒவ்வொருவரும் அருமையான பங்களிப்பைத் தருவது மிகவும் மகிழ்ச்சியூட்டுகிறது.
டியர் முரளி சார்,
தங்களுடைய பாராட்டிற்கு நன்றி! தாங்கள் காட்டிய வழியில் இப்போதுதான் நடை போடக் கற்றுக் கொண்டு வருகிறோம். நான் தங்களுடைய விளையாட்டுப் பிள்ளை பற்றிய பதிவை நேற்றுதான் படித்து முடித்தேன். அற்புதமான பதிவு. நம்மிடம் உள்ள அலைவரிசை தாங்கள் குறிப்பிட்டது போல எப்போதும் ஒன்றுதான் என்று தங்கள் விளையாட்டுப் பிள்ளை பதிவைக் கண்டதும் மீண்டும் நிரூபணமாகிறது. இந்தப் படத்தின் வெற்றியைப் பற்றி எனக்கு இதுவரை அவ்வளவாகத் தெரியாது. தங்கள் பதிவின் மூலமாக விளையாட்டுப் பிள்ளை நல்ல வெற்றியைக் கண்டிருக்கிறார் என்பதை தெரிந்து கொண்டவுடன் உள்ளம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. தில்லானா என்ற சமுத்திரத்தின் வெற்றியில் இந்த நதி கண்டு கொள்ளப் படாமல் போய் விட்டது. அது மாத்திரமல்ல. மாபெரும் வெற்றியடைந்திருக்க வேண்டிய படம் திரைகதையில் சில ஓட்டைகள், தேவையில்லாத சில காட்சிகள் என்று சொதப்பப்பட்டதாலும், தில்லானாவோடு கம்பேர் செய்யப்பட்டதாலும் வெற்றியை மட்டுமே பெற முடிந்தது.
பாத்திரப் படைப்பு கடுமையானது என்று நடிகர் திலகம் சொன்னது முற்றிலும் உண்மை. உடல் ரீதியாக நடிகர் திலகம் மாபெரும் உழைப்பைக் கொட்டிக் கொடுத்ததால் அப்படி சொல்லியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.
இயக்குனர் மாதவன் பற்றிய பதிவுக்கு தங்களுடைய சப்போர்ட் நிஜமாகவே எனக்கு பெரிய டானிக். மிக்க நன்றி!
தங்களுக்காக இயக்குனர் மாதவன் பற்றிய ஆவணம் ஒன்றை விரைவில் தருகிறேன்.
நன்றி!
'விளையாட்டுபிள்ளை' (சண்டைக் காட்சிகள் தொடர்) பதிவைப் பாராட்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றி!
சரஸ்வதி லக்ஷ்மி மேடம்,
மற்ற மொழி நடிகர்களுடன் நடிகர் திலகத்தைப் பற்றிய ஒப்பீடு அருமை!
பாராட்டுக்கள்.
ரவி சார்,
மீண்டும் சொல்கிறேன். தங்களுடைய intelligent பதிவுகள் தங்கள் மேல் எனக்கு சற்று பொறாமை கூட உண்டு பண்ணுகின்றன. ஒவ்வொரு பதிவிலும் எவ்வளவு அறிவார்ந்த விஷயங்கள்! உங்களிடம் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. ஜமாயுங்கள்.
டியர் கார்த்திக் சார்,
தங்களுடைய மனமுவந்த பாராட்டுதல்களுக்கு நன்றி! தலைவர், மஞ்சுளாவின் ராஜவீதிக்கு சிகப்புக் கம்பளம் போட்டு வரவேற்றதற்கும் நன்றி!
ஐட்டம் நடிகையர் வரிசையில் எதிர்பாரா விதமாக பிரமீளா பற்றி பதிவிட்டு விட்டீர்கள். அப்பாப்பா! பிரமிளாவைப் பற்றி பிட்டு பிட்டு வைத்து விட்டீர்களே! தாங்கள் கூறியது போல கவர்ச்சி, ஆபாசம் எதுவும் செய்யாமலேயே வெறும் உடல் மொழியை வைத்து பல பேருடைய தூக்கத்தை கெடுத்தவர்தான். பிரமிளா கார் பெல்ட் தயாரிக்கும் கம்பெனி வைத்தது கூட தெரிந்து வைத்துள்ளீர்களே!
திறமை வாய்ந்த நடிகை! ஆனால் விழுந்த முத்திரையோ வேறு மாதிரி. 'ராதா' என்றொரு படத்தில் முத்துராமனின் ஜோடியாக அற்புதமாக நடித்திருந்தார் பிரமீளா. இவர் நடித்த தேவரின் 'கோமாதா என் குலமாதா' சூப்பர் ஹிட் மூவி. சிவக்குமாருடன் 'தாய்ப்பாசம்' என்ற நல்ல ஒரு படத்தில் நடித்தார். சொந்தம், வாழையடி வாழை, அன்புச் சகோதரர்கள், வீட்டு மாப்பிள்ளை போன்றவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க படங்கள்.
காலத்தின் கோலம் இவர் காலை பத்து மணிக் காட்சி மலையாள நடிகை ஆனார். "ராத்திரிக்கு ராத்திரி என் நினைப்பு வர வேணும்"....எனப் பாடிய இவருக்கிருந்த ரசிகர் கூட்டமே தனி. மலையாள மண் இவரை மிக நன்றாகப் பயன்படுத்தி பணம் பார்த்தது. அவ்வளவு அழகு இல்லை...முகமெல்லாம் பரு... ரொம்ப கவர்ச்சியான உடல் வாகும் இல்லை.... இருந்தும் எந்தப் பெண்ணிலும் இல்லாத ஒன்று ஏதோ...அது...ஏதோ இவரிடம் இருந்திருக்க வேண்டும். ஆனால் கண்களில் ஏக்கத்தை போதையுடன் காண்பிக்க டி.ஆர்.ராஜகுமாரிக்கு அடுத்து இவர்தான்.
தாங்கள் இவரை நேரில் பார்த்த நிகழ்வை படித்ததும் இவர் மேல் பரிதாபமே மிஞ்சியது.
கார்த்திக் சார்! இந்த தொடர் சுவாரஸ்யமில்லாத தொடர் என்று நீங்கள் சொல்லக் கூடாது. அப்படி சொல்லும் வாய்ப்பே உங்களுக்கும் இல்லை... எங்களுக்கும் இல்லை. நிஜமாகவே வித்தியாசமான வெளிவராத பல தகவல்கள் கொண்ட தொடர். கரும்பு தின்னக் கசக்குமா?
சரி! இனி இவருடைய விஷுவல்.
'மனிதரில் மாணிக்க'த்துடன் பிரமீளா.
http://i812.photobucket.com/albums/z...psa67fa069.jpg
'தங்கப் பதக்கம்' படத்தில் சௌத்ரியுடன்
http://i812.photobucket.com/albums/z...ps545425d4.jpg
'கவரிமானு'டன் பிரமீளா.
http://i812.photobucket.com/albums/z...ps6488260d.jpg
'ரத்த பாசம்' படத்தில் நம்பியாருடன்.
http://i812.photobucket.com/albums/z...psa56c9f5c.jpg
இனி பிரமீளா நடிகர் திலகத்துடன் நடித்த படங்களின் பாடல்களை காணொளி வடிவில் காணுவோம்.
"I will sing for you I will dance for you" வீடியோ பாடல்.
https://www.youtube.com/watch?v=6jdQ...yer_detailpage
'சோதனை மேல் சோதனை'
https://www.youtube.com/watch?v=7YS4To2v03I&feature=player_detailpage
'பூப் போலே உன் புன்னகையில்'
https://www.youtube.com/watch?v=OS-yqyytVtY&feature=player_detailpage
Dear Vinod Sir - many more happy returns ( belated) - I personally derive lots of inspiration from your dedication to the assignment being handled. Every one knows what is PPP project is - it is Public Private Partnership - I always say in many forums - only 3Ps are not adequate for success of a PPP project - it requires another 3Ps - Passion , Perseverance and Patience ( Patience because - back ended return on investment and not upfront) - these 3Ps , highly visible in NT and MT 's threads and glad to say that you are one of the founding fathers of MT thread . Great and long live Sir !!
Ravi
:smile2::smile2:
கார்த்திக் சார்,
நம் பாலாஜிக்கு தான் தயாரித்த 'அண்ணாவின் ஆசை'முதல் படத்திலேயே இந்தி நடிக, நடிகைகளை தமிழுக்கு வரவழைக்கும் மோகம் ஏற்பட்டு விட்டது.
மதுமதி என்ற நடன இந்தி நடிகையை ஒரு பாடலுக்கு ஆட வைத்து பாலாஜி அண்ணாவின் ஆசை நிறைவேறியது.
அது மட்டுமல்ல... பிரபல இந்தி நடிகர் அசோக்குமாரையும் ஒரு காட்சியில் நடிக்க வைத்திருந்தார் பாலாஜி.
பாலாஜி நடிகர் திலகத்தை வைத்து தயாரித்த படங்களில் நடித்த ஐட்டம் நடிகையர் பற்றி நமது திரியில் கிட்டத்தட்ட அலசியாயிற்று.
'உனக்காக நான்' படத்தில் பம்பாய் லீனா தாஸ் என்ற நடன நடிகை "நீ என்னை சந்தித்ததுண்டோ!?" பாடலுக்கு காபரே ஆடுவார்.
'நல்லதொரு குடும்பம்' படத்தில் 'சச்சாச்சா' பாடலுக்கு பிந்து (இந்தி நடன நடிகை) நடிகர் திலகத்துடன் ஆடுவார்.
ரஜினி நடித்த 'பில்லா' வில் கிழ ஹெலனை மீண்டும் பிடித்துக் கொண்டு வந்தார் பாலாஜி.
இலங்கை இந்திய கூட்டுத் தயாரிப்பான சுரேஷ் மஹாராஜாவின் 'தீ' படத்தில் நடிக்க இந்தியிலிருந்து பிரபல அருணா இராணியையும், இலங்கையிலிருந்து ஷோபனா என்ற நடிகையையும் தருவித்தார் பாலாஜி.
தீர்ப்பு, நீதிபதியில் சில்க்கோடு ஏனோ விட்டு விட்டார் பாலாஜி. 'குடும்பம் ஒரு கோவிலி'ல் ஜெயமாலினியை ஒப்பந்தம் செய்து விட்டார்.
'பந்தம்' படத்தில் ஐட்டம் நடிகையை இறக்குமதி செய்யாமல் கதாநாயகியையே (குமாரி காஜல் கிரண்) நடிகர் திலகத்தின் மகளாக நடிக்க பம்பாயிலிருந்து வரவழைத்தார் பாலாஜி.
இன்னும் நிறைய இருக்கின்றன. யோசித்து சொல்லுவோம்.
'அந்த நாள்' படத்தில் தலைவரின் அற்புதமான போஸ் இது. என்ன ஒரு அற்புதமான புகைப்படம்! தலைவரின் இடது பாதி முகம் இருட்டாகவும், வலது பாதி முகம் வெளிச்சத்துடனும் மிகவும் கலை நயத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் புகைப்படத்தின் பின்னணியில் அருமையாக உழைத்துள்ள எஸ். மாருதிராவ் அவர்களின் அசாத்தியத் திறமையை வர்ணிக்க வார்த்தைகள் ஏது?.
http://thedrunkenmonk.files.wordpres...ial-sivaji.png