http://i39.tinypic.com/2v19ls7.jpg
Printable View
Dear Mr. VELLORE RAMAMURTHY.
WELCOME BACK - THANK YOU FOR UPLOADING THE IMAGES, NEWS & EVENTS ON THE OCCASION OF RE-RELEASE AFTER SEVERAL TIMES, OUR BELOVED GOD's "NAADODI MANNAN" FUNCTION AT SALEM. I WAS HAPPY TO NOTE THAT THE EVENING SHOW RAN WITHI PACKED HOUSE AND OTHER SHOWS ARE ALSO MAKING HUGE CROWD.
LOOKING FOR CONTINUED VALUABLE POSTINGS FROM YOU, AS USUAL.
Dear RAVICHANDRAN Sir,
THANK YOU FOR THE KOVAI INFORMATION ON 'NINAITHTHADAI MUDIPPAVAN' WHICH CREATES RECORD WHENEVER AND WHEREVER IT IS RE-RELEASED WITHIN A SHORT SPAN OF TIME.
Dear ROOP Sir,
THANK YOU FOR YOUR POSTINGS ON 'NETRU INDRU NAALAI' ANOTHER MAKKAL THILAGAM's MOVIE RE-RELEASED AGAIN AND AGAIN IN CHENNAI AND GIVES LIFE TO ITS DISTRIBUTOR.
With Kind Regards,
S. Selvakumar
Endrum M.G.R.
Engal Iraivan
சமுதாய நலனில் அக்கறை கொண்ட சமதர்ம சமுதாய காவலனாம் நமது பொன்மனசெம்மலின் பல்வேறு அழகிய தோற்றங்களை கண்கவர் இயற்கை எழில் கொஞ்சும் பிண்ணனிக் காட்சிகளுடன் பதிவிட்டு வரும் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு அனைத்து எம். ஜி. ஆர். பக்தர்கள் சார்பில் நன்றி !
அன்பன் : ,சௌ. செல்வகுமார்
என்றும் எம். ஜி. ஆர்.
எங்கள் இறைவன்
'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில், ஒரு பாடல் காட்சி கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. அதை 4 மணி நேரத்தில் சரோஜாதேவி நடித்துக் கொடுத்தார்.1961-ல் சின்னப்பா தேவர் எடுத்த படம் 'தாய் சொல்லைத் தட்டாதே.' இதில் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி, எம்.ஆர்.ராதா நடித்தனர். ஆரூர்தாஸ் கதை- வசனம் எழுத, எம்.ஏ.திருமுகம் டைரக்ட் செய்தார்.படம் தயாராகி முடிந்ததும், முதல் பிரதியைப் போட்டுப் பார்த்தார்கள்.
இன்னொரு பாடலைச் சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார், தேவர். உடனே பாடல் எழுதப்பட்டது.பொதுவாக ஒரு பாடல் காட்சியைப் படமாக்க, இரண்டு நாட்களாவது தேவைப்படும். ஆனால், சரோஜாதேவி ஒரு இந்திப் படத்தில் நடிக்க `கால்ஷீட்' கொடுத்திருந்தார். அதை ரத்து செய்ய முடியாது. 'அரை நாள் மட்டும் ஒதுக்கிக் கொடுங்கள். பாடல் காட்சியில் உங்கள் சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுத்து முடித்து விடுகிறேன்' என்றார், தேவர். அதற்கு சரோஜாதேவி சம்மதித்தார்.
அதன்படி, அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மின்னல் வேகத்தில் படமாக்கப்பட்டன.நான்கு மணி நேரத்தில் பாடல் காட்சியை நடித்து முடித்துவிட்டு, பம்பாய்க்குப் பறந்தார், சரோஜாதேவி. 'தாய் சொல்லைத் தட்டாதே' படத்தில், கடைசியாக சேர்க்கப்பட்ட அந்தப் பாடல் பெரிய 'ஹிட்' ஆக அமைந்தது. 'பட்டுச்சேலை காத்தாட...' என்ற பாடல்தான் அது .
வி.சந்திரன், திருச்சி.
குறுகிய நேரத்தில் எடுத்த பாடல்.
http://www.youtube.com/watch?v=ogY07oKFhRQ
கேள்வி : உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால் பாடல் பற்றி….
திரு.காந்தி கண்ணதாசன் : ஆம்… ‘மாபெரும் சபைதனில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும்.’ இந்த இடத்தில் மாலைகள் என்பது பூமாலைகளை தான் குறிக்கவேண்டும் என்பதில்லை.. அவை புகழ் மாலைகளாகவும் இருக்கலாம்.
அப்பா அவருக்கு எழுதிய வார்த்தைகளின் படி இறுதிவரை புகழ்மாலை சூடிக்கொண்டே இருந்தவர்களுள் எம்.ஜி.ஆரும் ஒருவர். பிற அரசியல் தலைவர்கள் போலல்லாமால் செல்வாக்கின் உச்சியில் புகழின் உச்சியில் மறைந்தவர் அவர். பல அரசியல் தலைவர்களுக்கு அவர்கள் இறுதிக் காலம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை .
ஆனால் எம்.ஜி.ஆர். வாழும் காலத்தில் புகழோடு வாழ்ந்து , புகழோடு மறைந்து இதோ அண்ணாவுக்கு பக்கத்தில் கடற்கரையில் சமாதியில் இருக்கிறார்.
இன்றைக்கும் எம்.ஜி.ஆருக்கு இளைய தலைமுறை ரசிகர்கள் இருக்கிறார்கள். என்னுடை பேரக்குழந்தைக்கு இப்போது கூட எம்.ஜி.ஆர். என்றால் அவ்வளவு பிரியம்.
இதற்கெல்லாம் காரணம் என்ன? அவர் செய்த தான தருமங்கள் அவரை இறுதி வரை காப்பாற்றியது.
அதுமட்டுமல்ல இன்னொரு காரணமும் உண்டு…. கண்ணதாசன் என்கிற உண்மையான கவிஞன் எழுதிய வரிகள் அப்படியே பலித்தது.
நன்றி : rightmantra.com
வி.சந்திரன், திருச்சி.
சேலம் அலங்காரில் நாடோடிமன்னன் திருவிழா காட்சிகள் தொடர்ச்சி ...
http://i42.tinypic.com/29g2azb.jpg
என்றும் எங்கள் குலதெய்வம் எம்ஜியார் ..