welcome thiru cs.kumar sir
Printable View
welcome thiru cs.kumar sir
thalaivar ninaivu naal in parris
http://i1170.photobucket.com/albums/...ps0ba3e564.jpg
http://i62.tinypic.com/6iab01.jpg
The name Kumar immediately take us to:
http://www.youtube.com/watch?v=hy1_5...=RDhy1_5aHKgOQ
புரட்சி தலைவர் எம்ஜிஆர் மக்கள் திலகம்/ பொன்மன செம்மல் என்று அழைக்கப்படுவது ஏன்????
இதோ விளக்கமளிக்கிறார் நடிகர் .சிவக்குமார்....
அப்போது எம் ஜி ஆர் சினிமாவில் வாய்ப்புகள் தேடி அலைந்த காலம் ..
ஒன்றிரண்டு காட்சிகளில் துணை நடிகராக நடித்த காலம் .
Mgr, சக்கரபாணி, ஆகியோர் தன் தாயாரோடு தட்டுதடுமாறிய ஜீவனம் .
Mgr சினிமா வாய்ப்புகளுக்காக அலையவும், சக்கரபாணி அவர்கள் வேற வேலைக்கும் தடுமாறுகிறார்கள் ..
ஒருநாள் mgr மண்ணடியில் இருந்து கோடம்பாக்கம் நடந்தே சென்று வாய்ப்பு தேட எங்கும் அமையல. காலையில் வீட்டில் குடித்த பழங்கஞ்சிதான். மாலை 4 மணி அளவில் ஒரு சினிமா கம்பெனில மறுநாள் துணை நடிகர் நடிப்புக்கு வரசொல்லி, ரூ 10 அட்வான்ஸ் கொடுத்தாங்க..
பெருமகிழ்ச்சியோடு அதை வாங்கிய mgr கடைத்தெரு போய் அரிசி பருப்ப வாங்க போனார் ..
அரிசிகடை வாசல்வரை போய்ட்டாரு. அப்ப "அண்ணே" என
குரல் கேட்க, திரும்பினார். தம்மோடு நடித்த துணை நடிகர் ..
அவர் "அண்ணே வீட்ல 3 குழந்தைங்க மனைவி எல்லாம் பட்டினினே. ஏதாவது வாய்ப்பு வந்தா எனக்கும் சொல்லுங்கன்னே" என அழுதார் ..
துடித்து போன எம் ஜி.ஆர் , ஏம்ப்பா உன் பிள்ளைங்க எல்லாம் சின்ன குழைந்தகளாச்சே..
ஆமாம்னே. . .
Mgr யோசிக்கவே இல்லை.. தன்னிடமிருந்த அந்த ஒத்தை பத்து ரூபாய அவர்ட்ட கொடுத்துட்டார்
"போய் அரிசி ஜாமான் வாங்கிட்டு போப்பா " என அனுப்பிட்டு மீண்டும் மன்னடிக்கு நடந்தே வந்தார். வந்து தன் தாயிடம் நடந்தத கூறினார் . .
அந்த அம்மா, "நல்ல காரியம் செஞ்சேடா, நாம பெரியவங்க.. பசிய தாங்கிக்கலாம்.
பாவம் அந்த குழைந்தைங்க. அதுங்க எப்படி தாங்கும் " என மகனை பாராட்டினார் . .
அதுதான்
mgr.
http://i1170.photobucket.com/albums/...ps6c46c99a.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் சாவித்திரி அம்மாவின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தியபோது எடுத்தபடம். சாவித்திரி எம்ஜிஆரோடு பழக்கம் அவ்வளவாக இல்லாதவர். ஆனால் சாவித்திரியின் இறப்பை அறிந்தவுடன் உடனே தன் மனைவி ஜானகியுடன் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.
http://i57.tinypic.com/2589y05.jpg
மக்கள் திலகத்தின் திரியில் நெடுங்காலமாக வெறும் பார்வையாளர் மற்றும், விமர்சகராக இருந்து வந்து மற்ற நண்பர்களை ஊக்குவித்த இனியநண்பர்
திரு. சி.எஸ். குமார் அவர்களின் வருகையால் (இந்த கன்னி மாடம் -ஆயிரத்தில் ஒருவன் வசனம்) பெருமை அடைகிறது .
தங்கள் வரவு நல்வரவு ஆகுக. எண்ணிலடங்கா அளவில், புரட்சி தலைவரின்
அருமை, பெருமைகள், புகழ் பரப்பும் ஆவணங்கள், புத்தகங்கள், புகைப்படங்கள் ,
பொக்கிஷங்கள் ஆகியவற்றை காலம் காலமாக காத்து வரும் தாங்கள் முற்றிலும்
தங்களுக்கே உரிய புதிய பாணியில் , கோணத்தில் இனிமையான பதிவுகள் இடுவீர் என்கிற நம்பிக்கையுடன் -என் சார்பிலும், அனைத்துலக எம்.ஜி.ஆர். பொதுநல சங்கம் சார்பாகவும் அன்பான வாழ்த்துக்கள் /பாராட்டுக்கள் .
ஆர். லோகநாதன்.
24.12.1987 எம்ஜிஆர் மறைந்த நாள்.அன்று சென்னையை நோக்கி சென்ற வாகனங்கள் என்னிக்கை அடங்கா வாகனங்கள்.காலையில் இருந்தே சென்னை பர பரத்தது நேரம் செல்ல செல்ல தமிழகம் முழுவதும் இருந்து வந்த வாகனங்களால் சென்னை போக்குவரத்து ஸ்தமித்து போனது. செய்வதறியாமல் காவல் துறை கலக்கமடைந்தது.வாகனங்களில் சென்றவர்கள் போக்கு வரத்து பாதிப்பாள் இறங்கி எல்லோரும் நடக்க ஆரம்பித்து விட்டனர்.இனி ஒரு வண்டியும் சென்னை நகருக்குள் வர அனுமதி இல்லை என தடுத்து விட்டனர்.தென்னகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் எல்லாம் செங்கல்பட்டு அருகே தடுத்து விட்டது காவல்துறை.கிழக்கு கடற்கரை சாலை, ஆந்திராவில் இருந்து வரும் சாலை,பெங்களூரில் இருந்து வரும் சாலை என சென்னை நகருக்குள் வரமுடியாமல் காவல்துறை தடுத்து விட்டது.அமரர் எம்ஜிஆர் முகத்தை பார்க்க முடியாமல் லட்சக்கணக்கான மக்கள் ஏமாந்து போனார்கள்.பலநூறு கிலோமீட்டரில் இருந்த வந்துள்ளோம் என எவ்வளோ சொல்லி பார்த்தார்கள் காவல்துறை மசியவில்லை.அறிஞர் அண்ணா மறைந்தபோது வந்தகூட்டம் இதனால்வரை உலக தலைவர்கள் மறைவுக்கு கூட வந்ததில்லை.ஒருவர் இறப்புக்கு அதிக மக்கள் கூடியது அண்ணா ஒருவருக்கே. இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கின்னஸ் சாதனை.ஆனால் எம்ஜிஆர் மறைவின்போது நாளாபக்கமும் சென்னை செல்லும் சாலையை பல கி.மீ முன்பே காவல்துறை தடுத்தி நிறுத்தியிருக்கா விட்டால் அண்ணா மறைவுக்கு வந்த கூட்டத்து கின்னஸ் சாதனையை,எம்ஜிஆர் மறைவுக்கு வந்த கூட்டம் முறியடித்திருக்கும் என்று பல பத்திரிகைகள் எழுதின.
சும்மா கிடந்த நிலத்தை IN COLOUR
http://www.youtube.com/watch?v=PfK-B1e6E0A