டியர் சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் சிலை வழக்கு தொடர்பான தங்கள் தலைமையில் இயங்கும் பேரவையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன குறிப்பாக தங்கள் வழக்கறிஞரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
பாராட்டுக்கள்....
Printable View
டியர் சந்திரசேகர் சார்,
நடிகர்திலகத்தின் சிலை வழக்கு தொடர்பான தங்கள் தலைமையில் இயங்கும் பேரவையின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளன குறிப்பாக தங்கள் வழக்கறிஞரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது.
பாராட்டுக்கள்....
நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் ஐட்டம் நடிகையர் ( 8 )
சகலகலா'வில்லி' "சத்யபிரியா"
பல திரைப்படங்களிலும் அதைவிட பல தொலைக்காட்சித்தொடர்களிலும் நடித்து இன்றும் ரசிகர்களோடு உறவில் இருப்பவர் சத்யபிரியா. திரைப்படங்களில் எந்த அளவுக்கு வில்லித்தனம் செய்து ரசிகர்களை, குறிப்பாக தாய்மார்களை கொதிக்க வைத்தாரோ, அதற்கு பாவமன்னிப்பு தேடுவது போல சீரியல்களில் பாசமுள்ள அம்மாவாக வந்து பிழியப் பிழிய அழுது கொண்டிருக்கிறார். திரைப்படங்களில் நடிக்க வந்த சில நாட்களிலேயே நடிகர்திலகத்துடன் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர். அப்படி நடிகர்திலகத்துடன் நடித்தவற்றுள் இரண்டு படங்கள் மட்டுமே நினைவில் உள்ளது. இரண்டைத் தவிர வேறு படங்களில் அவருடன் நடித்தாரா என்பது தெரியவில்லை.
"தீபம்" ஏந்தி வந்த ஆஷா
தேக்க நிலையைப் போக்க வந்த 'தீபம்' படத்தில் நடிகர்திலகத்தின் முற்பகுதி ரோல் ஒரு பிளேபாய் என்பது தெரியும். படத்தின் முதல்காட்சியாக வரும் (சில பக்கங்களுக்கு முன் நண்பர் வாசுதேவன் பதித்த) 'ராஜா யுவராஜா' என்ற ஒரே பாடலில், பல அழகிகளோடு லூட்டி அடிப்பதிலேயே அவரது ரோல் தெளிவாகக் காட்டப்பட்டு விடும். அப்படத்தில் முற்பாதியில் அவரது நிரந்தர தொடுப்பாக வருபவர்தான் ஆஷா (சத்யபிரியா). இப்போதுள்ள சத்யபிரியாவை 37 வருடங்கள் பின்னோக்கி ரீவைண்ட் செய்து பார்த்தால் கிடைப்பவர் அழகான, ஒல்லியான, கவர்ச்சியான, எந்த மாடர்ன் ட்ரெஸ்ஸும் பொருந்தக்கூடிய, மந்தகாச புன்னகை வீசும் சத்யபிரியா.
ராஜாவின் (நடிகர்திலகம்) ஆசாபாசங்களுக்கு வடிகாலாக இருந்துகொண்டு அதன் பலனாக ராஜாவிடமிருந்து மிகவும் வசதியான வாழ்க்கை கிடைக்கப்பெற்று, தப்பான வாழ்க்கையில் பெருத்த நிம்மதி காணும் ஆஷா, தன் துணைவனின் கவனம் பியூன் ராமையாவின் மகள் ராதா (சுஜாதா) வின் பக்கம் திரும்பும்போது திடுக்கிடுகிறாள். வசதியான வாழ்க்கை கைமீறிப் போய்விடுமோ என்ற அச்சத்தில் ராஜா மீது அல்ல, அவரை திசைமாற வைத்த ராதாவுக்கு வில்லியாகிறாள். ராஜாவின் கவனம் தன்னைவிட்டு முற்றிலுமாக விலகிப்போக, அவர் வரவே நின்று போகிறது. தன்னைத்தேடி வந்த 'வரவு' குறைய அதனால் தனக்கு வந்துகொண்டிருந்த 'வரவும்' நின்று விடுமோ என்று அச்சமும் அதிர்ச்சியும் அடைந்து, அதன் பலனாக அவளது முழுக்கோபமும், (ராஜா திருந்தக் காரணமாயிருந்த) ராதா மீது திரும்புகிறது. அவள் எப்படி வாழ்ந்து விடுகிறாள் என்று பார்க்கிறேன் என்று மனதுக்குள் கொதிக்கிறாள். கெட்டவர்கள் கெட்டவர்களாகவே இருந்தால்தானே கெட்டவர்களுக்கு நல்லது.
ராதாவை கண்ணனுக்கு (விஜயகுமார்) மணமுடித்த பிறகாவது, ராஜா பழைய நினைப்பில் தன்னைத்தேடி வருவான் என்று எதிர்பார்த்த ஆஷாவின் ஆசை நிறைவேறவில்லை. திருந்தியவன் திருந்தியவனாகவே இருந்து தங்கையின் திருமணம் போன்றவற்றில் தன் கவனத்தைத் திருப்ப ஆஷா இன்னும் கொதிப்பாகி, இத்தனைக்கும் காரணமான ராதாவைப் பழிவாங்க ஒரேவழி அவள் காதலித்து மணந்த கண்ணனை தன் வலையில் வீழ்த்தி அவளை சித்திரவதைக்கு உள்ளாக்குவது. அதற்கு கிடைத்த கருவி மேனேஜர் ராமதாஸ். ஆபீஸில் தன் இடத்தைப்பறித்த கண்ணனை பழிவாங்க அவனுக்கும் ஒரு வாய்ப்பு. இம்மாதிரி சமயங்களில் கைகொடுக்கும் மிகப்பெரிய ஆயுதம், கட்டியமனைவி மீது சந்தேகத்தை விதைப்பது. அதை செம்மையாக செய்து கண்ணனை ஆஷாவின் மடியில் விழ வைக்கின்றனர். இது பின்னர் ராஜாவுக்கு தெரியவர கோபத்தின் எல்லைக்குப்போகும் ராஜா அவளைக் கடுமையாக எச்சரிப்பதோடு ஆஷாவின் ரோல் முடிகிறது. ("இனிமே, கண்ணன் இந்தப்பக்கம் வந்தான்னு தெரிஞ்சது, உன்னை பீஸ் பீஸா கட் பண்ணிடுவேன்" - இது ஆஷாவுக்கு. "ஆபீஸில் மட்டுமல்ல, இந்த ஊர்ல உன்னை எங்கு பார்த்தாலும் உன் தலையை எடுத்திடுவேன்" - இது மேனேஜருக்கு).
'பாலாஜி சாருடைய தீபம் படத்துல உங்களை வில்லி ரோலுக்கு புக் பண்ணலாம்னு வந்திருக்கேன்' என்று சுஜாதாசினிஆர்ட்ஸ் நிர்வாகி கிருஷ்ணமூர்த்தி (பின்னாளில் 'பில்லா' கிருஷ்ணமூர்த்தி) மொட்டையாக சொன்னபோது, "நான் இப்போ கதாநாயகி ரோலில் நடிச்சிக்கிட்டிருக்கேன். வில்லி ரோல் வேண்டாமே" என்று சத்யபிரியா மறுக்க, "சிவாஜி சார் கூட காம்பினேஷன் ரோலில் நடிக்க மறுக்கிறீர்களே" என்று கி.மூ.சொன்னதும் "என்னது, சிவாஜி சார் கூடவா?. இதை ஏன்சார் மொதல்லேயே சொல்லலை?. வில்லி ரோல்னு இல்லை, அவர்கூட எந்த ரோலிலும், சின்ன ரோலில் கூட நடிக்க நான்தயார்" என்று மகிழ்ச்சியுடன் சத்யபிரியா ஏற்று நடித்த ரோல் இது. அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
'பைலட் பிரேம்நாத்தின்' பாந்தமான மருமகள்
1977 ஜனவரியில் தீபம் படத்துக்குப்பின் 1978 தீபாவளியன்று வெளியான பைலட் பிரேம்நாத் படத்திலும் சத்யபிரியா நடித்திருந்தார். நடிகர்திலகத்தின் இரண்டாவது மகன் ஜெய்கணேஷின் ஜோடி. பிரேம்னாத்தின் கோ-பைலட் 'சீக்கியர்' தேங்காய் சீனிவாசனின் மகள். இப்படத்திலும் ஓவர் கவர்ச்சியுடன் நடித்திருந்தார். ஜெய்கணேஷுடன் இவரது டூயட் பாடலான 'அழகி ஒருத்தி இளநி விக்கிறா கொழும்பு வீதியிலே' பாடலின்போது நீச்சல் உடைக்காட்சிஎல்லாம் உண்டு.
இவ்விரண்டு படங்கள் தவிர நடிகர்திலகத்துடன் வேறு படங்களில் நடித்தாரா என்பது நினைவில்லை. எனக்கு நினைவில்லாவிட்டால் என்ன, நமது திரியில்தான் அசகாய சூரர்கள் உண்டே விட்டுவிடுவார்களா?.
ரஜினியுடன் 'பணக்காரன்', பிரபுவுடன் 'பெரிய குடும்பம்' உள்பட ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கிறார். தேவயானியின் அம்மாவாக இவர் நடித்த 'கோலங்கள்' ஒரு வெற்றி சீரியல். தற்போது ரம்யா கிருஷ்ணனின் அம்மாவாக ஒரு சீரியலில் நடித்து வருகிறார். திருமணமாகி, கணவரும் இறந்தபின் தற்போது சீரியல்களில் நடித்துக்கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் சத்யபிரியா.
பல்லாண்டு வாழ்க.....
Dear Murali Srinivas sir,I acknowledge your thanks.
Dear Ravi Sir,excellent Buddha story and the punch lines.
One thing about your VANDHAARAI vaazhavaikkum lines.
Once it was VANDHAARAI VAAZHAVAIKKUM TAMIZHAGAM,
now it has become "VANDHAARAI MATTUM VAAZHA VAIKKUM TAMIZHAGAM"
தீபம் பட ஒப்பந்தத்தின்போது சத்யப்ரியாவுக்கும் பில்லா கிருஷ்ணமூர்த்திக்கும் இடையே நடந்த உரையாடல், ஜெயா டி.வி.யின் 'திரும்பிப்பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் சத்யப்ரியாவே சொன்னது...
சிவாஜி சிலையை அகற்றுவதா? கையெழுத்து வேட்டை நடத்துகிறது இயக்குனர்கள் சங்கம்
சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாகவும் அதனை அகற்ற வேண்டும் என்றம் ஒருவர் பொதுநல வழக்கு ஒன்றை சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு நீதிமன்றம் போக்குவரத்து காவல்துறை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த நிலையில் சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று இயக்குனர்கள் சங்கம் கையெழுத்து வேட்டை நடத்தி வருகிறது.
இதுகுறித்து இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன், ‘ரம்மி’ படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழாவில் கூறியதாவது: நாம் வணங்கும் இறைவன் உருவத்தையும், தேச தலைவர்களின் வாழ்க்கையையும் கலைவடிவில் நமக்கு காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி. அவர் சிலைய அகற்ற ஒரு நாளும் அனுமதிக்க மாட்டோம். இதற்காக இயக்குனர்கள் சங்கம் ஒரு கையெழுத்து வேட்டையை துவங்கி உள்ளது. அதில் திரையுலகைச் சேர்ந்த ஒவ்வொரும் கையெழுத்திட வேண்டும். ஒவ்வொரு சங்கத்தினரும் தங்கள் உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெற்று இயக்குனர்கள் சங்கத்தில் ஒப்படைக்க வேண்டும். அதனை போக்குவரத்து கமிஷனரிடம் வழங்க இருக்கிறோம். என்றார்.
News from Today's Dinamalar
//அப்படி நடிகர்திலகத்துடன் நடித்தவற்றுள் இரண்டு படங்கள் மட்டுமே நினைவில் உள்ளது. இரண்டைத் தவிர வேறு படங்களில் அவருடன் நடித்தாரா என்பது தெரியவில்லை. // எனக்கும் நினைவிலில்லை.. ஆனால்படம் வந்த போது - தீபம்- பத்தோடு ஒன்று என்று தான் தோன்றியது..சில வருடங்களுக்கு முன் தீபம் மறுபடி பார்த்த போது அரை டிராயர் டாப்ஸ் என நினைக்கிறேன்.. தமாஷாக இருந்தது..சத்யப் ப்ரியா உங்கள் பதிவைப் படித்தால் சந்தோஷப் படக் கூடும்..;) சூர்ய வம்சத்தில் தேவயானி அம்மாவாக உப்மா சாப்பிடுவார் என்று நினைவு..
Malaimalar - 26-10-2013
http://www.maalaimalar.com/2013/10/2...rt-sivaji.html
சென்னை, அக். 26–
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே நிறுவனப்பட்டுள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது என்றும் எனவே அந்த சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த வழக்கில் போக்குவரத்து போலீசார் விளக்கம் அளிக்க கோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் போலீஸ் கமிஷனருக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:–
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பல பெருமைகளுக்கு உரியவர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றப்படும் ஒரு அற்புதமான கலைஞர்.
அத்தகைய கலை பொக்கிஷம் ஆன நடிகர் திலகம் சிவாஜிகணேசன் சிலையை ராணி மேரி கல்லூரி எதிரில் நிறுவப்பட்டுள்ளதால் போக்குவரத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார். காவல் துறை சார்பிலும் விளக்கம் அளிக்க நீதியரசர் உத்தரவு அளித்துள்ளார்.
சிலை நிறுவப்பட்டு பல வருடங்களாகியும் போக்குவத்துக்கு எந்த இடையூறு ஏற்படவில்லை என்பதுதான் உண்மையான நிலை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த உண்மை நிலையினை தாங்கள் நீதிமன்றத்திற்கு அளிக்கும் விளக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நடிகர் சங்கத்தின் அனைத்து உறுப்பினர்கள் சார்பாகவும், ஒட்டு மொத்த தமிழ் திரையுலகம் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவாஜி ரசிகர் மன்ற தலைவர் கே.வி.பி. பூமிநாதன், சிவாஜி சமூக நல பேரவை தலைவர் சந்திரசேகரன் ஆகியோரும் சிலை அதே இடத்தில் நீடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
(Thank you Chandrasekhar sir for the link and your actions)
Dear Karthik Sir,
Thanks for your appreciation regarding Nadigarthilagam Statue issue.
சிவாஜிகணேசன் சிலை விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகிய இருவரும் ஒரு அறிக்கை விடுத்துள்ளனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பல பெருமைகளுக்கு உரியவர். தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல், இந்திய அளவிலும், உலக அளவிலும் போற்றப்படும் ஒரு அற்புதமான கலைஞர். அத்தகைய கலை பொக்கிஷமான அவருடைய சிலை, ராணி மேரி கல்லூரிக்கு எதிரில் நிறுவப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசு தலைமை வழக்கறிஞர் சம்பந்தப்பட்ட வழக்கில், நீதிமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார்.
காவல்துறை சார்பிலும் விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சிலை நிறுவப்பட்டு பல வருடங்கள் ஆகியும் போக்குவரத்துக்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை என்பதுதான் உண்மையான நிலை என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறோம். இந்த உண்மை நிலையை தாங்கள் நீதிமன்றத்துக்கு அளிக்கும் விளக்கத்தில் தெரிவிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழ் திரையுலகம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
News from Dailythanthi