-
தங்கத்தை உருக்கி என்னநகைசெய்தாலும் அதுஅழகாகவேஇருக்கும் அதுபோல்தங்கமான மனம்படைத்த தம்பி திரு ராமச்சந்திரன் இன்று திரையுலகில் முன்னணி நடிகர் அரசியலில் நாளை ஜொலிப்பார். பேரறிஞர் அண்ணாவின் வாக்கு பொய்யாகுமா நூறுநாட்கள் ஓடும்படமென்று தலைவரின் அரசியல் கட்சி ஆரம்பத்தில் வாயாடியவர்களின் தலையைகுனியவைத்து இன்றுவரை நிமிரமுடியாமல் செய்த வெற்றித்திருமகன் புரட்சித்தலைவரின் அ.இ.அ.தி.மு.க 47. வதுஆண்டுவெற்றிவிழா இதுதான் தர்மத்தின்வெற்றி மதுரை எஸ். குமார்... Thanks Friends...
-
மலைபோல்வரும்சோதனை யாவும்பனிபோல்நீங்கிவிடும் நம்மைவாழவிடாதவர்வந்து நம்வாசலில்வணங்கிடவைத்துவிடும் என்றும்புரட்சித்தலைவரின் கொள்கையில் இரவுவணக்கம் மதுரை.எஸ் குமார்... Thanks...
-
தோல்வியே எதிரிக்கு
பரிசளித்து
பழகியவன்
நான்!
------------------------
மக்கள் திலகத்தின்
நிறைவான ஆட்சி
கலைக்கப்பட்டது
சந்தர்ப்ப வாதிகள்
வெளியேறினர்
நெஞ்சிலார்
நாஞ்சிலாரும்
வெளியேறினார்
நண்பரைகாண
மதுரை சென்றேன்
ஜங்ஷனில்
ஏணி கூட
வசதி இல்லாமல்
தொண்டன் ஒருவன்
குனிய அவன்
முதுகில் ஒருவன்
நின்று கொண்டு
போஸ்டர் ஒட்டுகிறான்
தலைவா
யார் எப்பக்கம்
சென்றாலும்
கவலையில்லை
நாங்கள் என்றும்
உன் பக்கம் தான்
தொண்டனின்
உணர்ச்சி
போஸ்டரின்
வாசகம்
இன்றும்
கண்கள்
குளமாகின்றன!
ஹயாத்!... Thanks Friends...
-
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!
இன்று அனைத்திந்திய அண்ணா திமுகவை புர*ட்சித்த*லைவ*ர் 1972 அக்டோப*ர் 17ல் துவ*க்கிய நாள்! 1973ல் திண்டுக்கல் பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி, கோவை பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி, ப*ட்ட*தாரிக*ள் ச*ங்க தேர்த*ல் வெற்றி, 1974ல் பாண்டிச்சேரி ச*ட்ட*மன்ற தேர்த*ல் வெற்றி, 1977ல் பாராளுமன்ற தேர்த*ல் வெற்றி என சொல்லிக்கொண்டே போக*லாம். இந்த* வெற்றிகள் அனைத்தும் மக்கள் திலகத்திற்கு சாதார*ணமாக கிடைத்துவிடவில்லை. எண்ணற்ற சோத*னைக*ளையும், வேத*னைக*ளையும் தாண்டி ஒவ்வொரு த*டைக்க*ற்க*ளையும் த*ன் வெற்றிக்கான ப*டிக்க*ற்க*ளாக மாற்றி உச்ச*த்தை அடைந்தார்.
அத*ற்கு முக்கிய கார*ணம் ஏழைமக்களும், ந*டுத்த*ர மக்களும், தாய்மார்க*ளும் மக்கள் திலகத்தின் நேர்மைமீது வைத்திருந்த அசைக்க முடியாத* ந*ம்பிக்கை. மக்கள் திலகமும் இறுதிவ*ரை த*ன்னை நேசிக்கும் மக்கள்மீது உண்மையான அன்பு கொண்டிருந்தார்.
1977ல் பாராளுமன்ற தேர்த*லில் இந்திரா காங்கிர*ஸ் உட*ன் எம்ஜிஆர் கூட்ட*ணி வைத்தபோதும் சிலமாத*ம் க*ழித்து ந*ட*ந்த ச*ட்ட*மன்ற பொதுத்தேர்த*லில் காங்கிர*ஸ் கூட்ட*ணியில் கிடையாது. மார்க்சிஸ்ட் க*ம்யூனிஸ்ட், பார்வேர்ட் பிளாக், முஸ்லீம் லீக் க*ட்சிக*ளை மட்டும் இணைத்துக் கொண்டு தேர்த*லை ச*ந்தித்து அதிமுக 130 இட*ங்க*ள், கூட்ட*ணி க*ட்சிக*ள் 14 இட*ங்க*ளையும் கைப்ப*ற்றி ஆட்சிய*மைத்தார்.
1980ல் ந*ட*ந்த ச*ட்ட*மன்ற தேர்த*லிலும் சிபிஐ, சிபிஐ(மா), காம*ராஜ் காங்கிர*ஸ் (நெடுமாற*ன்), காந்தி காமராஜ் தேசிய காங்கிர*ஸ்(குமரி அன*ந்த*ன்), பார்வேர்ட் பிளாக், அர்ஸ் காங்கிர*ஸ் ஆகிய க*ட்சிக*ளை இணைத்துக்கொண்டு க*ளம் க*ண்டார். அண்ணாதிமுக அணி 162 இட*ங்க*ளில் வென்று 2வ*து முறை ஆட்சி அமைத்தார்.
1984ல் அமெரிக்காவில் சிகிச்சைக்கு அனுமதிக்க*ப்ப*ட்ட* போது ந*ட*ந்த தேர்த*லில் இருந்துதான் இந்திராகாங்கிர*ஸுட*ன் ச*ட்ட*மன்ற தேர்தலுக்கு கூட்ட*ணி வைக்க*ப்ப*ட்ட*து. அப்போது அண்ணாதிமுக அணி 195 இட*ங்களை வென்று அண்ணாதிமுக மூன்றாம் முறையாக தொட*ர்ந்து ஆட்சியை பிடித்த*து.
வெற்றிச் ச*ரித்திர*ம் தொட*ர*ட்டும்! 47ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அண்ணாதிமுக நூறாண்டைக் காண வாழ்த்துகிறேன்...... Thanks Friends...
-
திமுகழகத்தில் இருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர். அவர் கூறியபடியே, மறுநாளே பொது மக்களின் கருத்தை அறிய தனது சுற்றுப்பயணத்தின் முதல் கட்டத்தைத் தொடங்கினார். முதல் கட்டச் சுற்றுப்பயணம் செங்கை அண்ணா மாவட்டத்தில் தொடங்கியது.
ஆலந்தூரிலிருந்து தொடங்கிய அந்தப் பயணத்தில் இடம் பெற்றிருந்த ஊர்கள் பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், காஞ்சீபுரம், ஆரணி, அரக்கோணம் ஆகியவை ஆகும். அந்தப் பயணத்தில் புரட்சித் தலைவரோடு அனகா புத்தூர் இராமலிங்கம், ஆலந்தார் மோகனரங்கம் அங்கமுத்து, எம்.எம். காதர் முதலியோர் சென்றனர்.
அந்தச் சுற்றுப்பயணமானது எந்தவித முன்னன்றிவிப்பும் முன்னேற்பாடும் இன்றிப் பத்திரிகைகளில் விடுத்த ஒரே ஒரு அறிக்கைக்குப் பின்னர் ஒரு மாலை நேரத்தில் தொடங்கப்பட்டதாகும்.பட் ரோடு சந்திப்பில் தாமாகத் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கிடையே புரட்சித்தலைவர் சற்று நேரம் உரையாற்றினார். மக்கள் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ”ஊழலை ஒழித்துக்கட்டுங்கள், உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம்”. என்று முழங்கினார்கள்.
அதற்குப் பின்னர், தாம் சென்ற இடங்களிலெல்லாம் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று, உணர்ச்சி பொங்க ஆதரவு முழக்கமிட்ட மக்கள் கூட்டத்தைக் கண்டு புரட்சித் தலைவரும் உணர்ச்சிவசப் பட்டார். பல இடங்களில் மக்களின் பாச உணர்வில் சிக்கித் தடுமாறினார்.மாலை 5 மணிக்கு பட் ரோடு சந்திப்பில் தொடங்கிய சரித்திர நாயகரின் சுற்றுப் பயண நிகழ்ச்சி, இரவு 12 மணிக்கு அறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த காஞ்சி மாநகரத்தில் போய்நின்றது.,அந்த நள்ளிரவு வேளையிலும் காஞ்சி நகரம் அண்ணாவின் இதயக்கனியாம் புரட்சித் தலைவரை வரவேற்பதற்காகக் கண்விழித்துக் காத்திருந்தது.
நகர வீதிகளிலெல்லாம் குழல் விளக்குகள் எரிந்தன. வீடுகளிலெல்லாம் தோரணங்கள் ஆடின. திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் மொய்த்துக்கொண்டிருந்தது.தொண்டர்கள் தங்கள் இனிய தலைவரை வரவேற்றுத் தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாய் அழைத்துச் சென்றனர்.
அண்ணா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டத்திற்குச் செல்லப் புரட்சித்தலைவர் புறப்பட்டார். ஆனால், மேடைக்குச் செல்ல வழியில்லாத வகையில் மக்கள கூட்டம் நிறைந்து நின்றது. அக்கூட்டத்தைப் பிளந்து கொண்டு எப்படிப் போவது? என்று எம்.ஜி.ஆர். திகைத்து நின்றார்.
அந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் காஞ்சி பாலாஜி என்பவரும் பிற தோழர்களும் ஆவர். அவர்கள் மேடைக்குப் பின்புறம் அமைந்திருந்த ஒரு பெரிய சுற்றுச் சுவரை இடிக்கச் செய்தனர்; பின் அவ்வழியாகப் புரட்சித் தலைவரை அழைத்துச் சென்று, மேடையில் அமரச் செய்தனர்.
மேடையில் ஏறிய புரட்சித் தலைவர் காஞ்சி மாநகர மக்களைக் கை கூப்பித் தொழுதார்; பின், அறிஞர் அண்ணாவுக்கும் தமக்கும் இடையில் நிலவிய பாசப் பிணைப்பை பற்றி உணர்ச்சி உரையாற்றினார். ”பேரறிஞர் அண்ணா அவர்கள் பிறந்த இந்தக் காஞ்சி நகரம் நான் தொடங்கியுள்ள இந்த தர்மயுத்தத்தை அங்கீகரித்தால், அறிஞர் அண்ணா அவர்களே அங்கீகரித்ததற்குச் சமமாகும். நீங்கள் அளிக்கும் பதில் என்ன? நீங்கள் இதனை அங்கீகரிக்கிறீர்களா?” என்று கேட்டார், புரட்சிதலைவர்
உடனே அங்கே கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களும் ஒருமித்த குரலில், ”அங்கீகரிக்கிறோம்! அங்கீகரிக்கிறோம்!” என்று முழங்கினார்கள். காஞ்சிப்பயணம் வெற்றிகரமாக முடிந்ததும் எம்.ஜி.ஆரின் மனம் பூரிப்பில் திளைத்தது. தாம் ஆரம்பிக்க இருக்கும் தர்மயுத்தத்தைத் தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள் என்பதை அறிந்ததால் ஏற்பட்ட பூரிப்பு அது.
காஞ்சிப்பயணத்தை முடித்துக்கொண்ட புரட்சித் தலைவர், ஆரணிக்கு அதிகாலை மூன்று மணிக்குச் சென்றார். பின்னர் அரக்கோணம் நகருக்கு காலை நான்கு மணிக்குச் சென்றார். முதல் நாள் மாலை ஆறு மணிக்குக் கூடிய மக்கள் கூட்டம், எட்டு மணி முதல் பத்து மணி நேரம் வரை இருந்த இடத்தைவிட்டு நகராமல் காத்திருந்தது.
காஞ்சியில் பொதுமக்களிடம் தாம் கேட்ட அதே கேள்வியை எம்.ஜி.ஆர். ஆரணியிலும் அரக்கோணத்திலும் கேட்டார். மக்களும் அதே பதிலைச் சொன்னார்கள்.
இவ்வாறு புரட்சித்தலைவர் தாம் சென்ற இடங்களிலெல்லாம் கேட்ட கேள்வியும் ஒன்றே, மக்கள் அளித்த பதிலும் ஒன்றே! எம்.ஜி.ஆரின் போராட்டத்தை மக்கள் ஆதரித்ததோடு மட்டுமின்றி, அவர் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
ஒரு கட்சியிலிருந்து விலக்கப்பட்ட அரசியல் தலைவர் ஒருவரைப் புதிதாக ஒரு கட்சி ஆரம்பிக்கும்படி பொது மக்களே வேண்டிக் கொண்டது வரலாறு காணாத ஒரு விஷயம் ஆகும். அதேபோல, ஓர் அரசியல்வாதி, புதிதாக ஒரு கட்சியைத் தொடங்கலாமா என்று, சுற்றுப்பயணம் செய்து பொதுமக்களின் கருத்தைக் கேட்டதும் வரலாறு காணாத விஷயம்தான்.
மற்ற அரசியல் தலைவர்களெல்லாம் புதிய கட்சியை ஆரம்பித்துவிட்டு அதற்கு ஆதரவுகோரி மக்களிடம் செல்வார்கள். அதுதான் வாடிக்கையாகும். இந்த வாடிக்கையைப் புரட்சித் தலைவர் மாற்றினார்…!!!.... Thanks Friends...
-
#த*மிழ*க*த்தின் அக்டோப*ர் புர*ட்சி#
தமிழக அரசியல் வரலாற்றில் 1972 அக்டோபர் மாதம் 10-ம் தேதி மறக்கவியலாத தினம். அன்றுதான் தி.மு.க-விலிருந்து எம்.ஜி.ஆர் நீக்கப்பட்டார். அடுத்த ஒரு வார*த்தில் அக்டோப*ர் 17ல் அண்ணா திமுக*வை துவ*க்கினார்.
புர*ட்சித்த*லைவ*ர் 1972-ம் ஆண்டு அக்டோபர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முதன்முறையாக எம்.ஜி.ஆர், கருணாநிதிக்கு எதிரான ஒரு உரையை நிகழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் அது பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து அதே தினத்தில் சென்னை லாயிட்ஸ் சாலையில் நடந்த அண்ணா பிறந்தநாள் விழாவிலும் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டதாக சொந்தக்கட்சியின் தலைவர்கள் மீதே எம்.ஜி.ஆர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். எம்.ஜி.ஆரின் அந்தப் பேச்சை கருணாநிதிக்கு உளவுத்துறை அனுப்பிவைத்தது. கோபம் கொண்டார் கருணாநிதி.... 8.10.1972 அன்று எம்.ஜி.ஆர் பேசிய அந்தப்பேச்சின் அடுத்தடுத்த நடவடிக்கைகளைத் தொடர்ந்துதான் திராவிட இயக்கத்தில் அ.தி.மு.க என்ற புதிய கட்சி உதயமானது. அரசியலில் அடுத்தடுத்த காய்நகர்த்தல்கள் அரங்கேறின. தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்திய அந்தப்பேச்சு இதுதான்....
“திருக்கழுக்குன்றத்தில் பேசுகின்ற நேரத்தில் எனக்கு என்ன உணர்ச்சி ஏற்பட்டதோ என்ன என்ன பேச வைத்தார்களோ அதே சூழ்நிலையைத்தான் நான் இங்கு காண்கின்றேன். அண்ணா அவர்களுடைய உருவச் சிலையை அங்கே திறந்துவைத்து பேசிவிட்டு வந்திருக்கிறேன். ஆகவே, அண்ணா அவர்களைச் சந்தித்துவிட்டு வந்திருக்கிறேன். அண்ணாவின் அனுமதியோடு நான் பேசுகிறேன்.
‘எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர்.’ என்று சொன்னேன். உடனே ஒருவர், “நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?” என்று கேட்டார். நான் சொல்கிறேன் நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. எனக்கும் உரிமை இருக்கிறது. உனக்குத் துணிவில்லாததால் என்னைக் கோழை ஆக்காதே!
உனக்கு துணிவிருந்தால் நான்தான் தி.மு.க. என்று சொல்! நான் மறுக்கவில்லை. நான் மட்டும் தி.மு.க. என்றால்தான் கேள்வி! இதைக்கூட புரிந்துகொள்ளாத தமிழர்கள் கட்சியில் வந்து மாட்டிக் கொண்டார்களே என்பதை நினைத்து அனுதாபப்படுகிறேன். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தேவையற்றவை. மதி பேசுகையில் நான் கலைத்துறையில் பணியாற்றுவதோடு இன்னும் கொஞ்சம் அதிகமாக அரசியலில் பங்கு கொள்ள வேண்டும் என்று சொன்னார். இவ்வளவு கொஞ்சமாக அரசியலில் பங்கு கொள்வதையே சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லையே! இன்னும் அதிகமாக ஈடுபட்டால் எல்லோருக்கும் என்ன ஆகுமோ? பரிதாபத்துக்கு உரியவர்கள்!
முன்பொருமுறை சொன்னேன், காமராசர் அவர்களை தலைவர் என்றும் அண்ணாவை வழிகாட்டி என்றும். தலைவர்கள் பலர் இருப்பார்கள். இந்தக் கூட்டத்துக்கு அரங்கநாதன் தலைமை வகிக்கிறார். இன்னொரு கூட்டத்துக்கு இன்னொருவர் தலைமை வகிக்கலாம். இப்படித் தலைவர்கள் பலர் இருக்கலாம். ஆனால், கட்சிகளுக்குக் கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். இப்போது ஒப்புக் கொள்கிறார்கள். அண்ணா அவர்கள்தான் தி.மு.க-வுக்கு வழிகாட்டி, காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. இதிலே ஒரு வேறுபாடு அப்போது ஏற்பட்டது.
அப்போதும் இதே மதுரை முத்து, தூக்கி எறிவோம் என்று சொன்னார். தூக்கி எறிந்தது பழக்கம்! ஆனால், யாரை என்றே தெரியவில்லை.
கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன். நான் மக்களைச் சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய் வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளவேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை. நான் தொண்டர்களைச் சந்திக்கிறவன். மக்களை நம்புகிறவன். அண்ணா ‘மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று சொன்னது மாதிரி மக்களை நம்புகிறவன். எனக்கு ஒரு கொள்கை இருந்தது. முன்பு காங்கிரசில் இருந்தேன். அதற்குப் பிறகு நான்கு ஆண்டு காலம் எந்தக்கட்சியிலும் இல்லாமல் அஞ்ஞாதவாசம் இருந்தேன். எந்த அரசியல் கட்சியிலும் என் கொள்கை இருக்கும்.
கடைசியாக பணத்தோட்டம் என்ற அண்ணாவின் புத்தகத்தைப் படித்தபிறகு, அதிலுள்ள பொருளாதாரத் தத்துவங்களை உணர்ந்த பிறகு அதுதான் சரியான பாதை; அண்ணாவின் வழியில் செல்ல வேண்டுமென்று முடிவெடுத்துக் கொண்டு கழகத்துக்கு வந்தவன்.
கவிஞர் கண்ணதாசன் சொல்கிறார்; கருணாநிதி அவர்கள் என்னை கட்சிக்கு அழைத்து வந்தாராம். பாவம்! அண்ணாவை எனக்கு அறிமுகம் செய்தது டி.வி.நாராயணசாமி. எனக்கும் கருணாநிதிக்கும் அடிக்கடி விவாதம் ஏற்படும். நான் காங்கிரசைப் பற்றிப் பேசியிருப்பேன். அனுபேத வாதங்களைப் பற்றிப் பேசியிருப்பேன்.
ஒரு சமயம், கம்யூனிஸக் கொள்கைகளை ஏற்று தீவிரவாதியாக இருந்தவன். ரயில்கள் கவிழ்க்கப்பட்டபோது, அது எனக்குத் தெரிந்திருக்குமோ? என்னவோ? ஆனால், நேதாஜியைப் பற்றி கம்யூனிஸ்டுகள் ரஷ்யாவின் உத்தரவின் பேரில் குறை கூறியதும் என் தொடர்புகளை அறுத்துக் கொண்டேன். இந்தியத்துணைக் கண்டத்தின் அரசியலை இந்தியத் துணைக் கண்டம்தான் தீர்மானிக்கவேண்டுமென்ற கொள்கையை உணர்ந்தேன்.
இப்படி ஒவ்வொரு விதமாக உணர்ந்தபிறகு அண்ணாவின் கொள்கைதான் நாட்டுக்கு மறுமலர்ச்சியைத் தரும் என உணர்ந்து நான் கழகத்துக்கு வந்தவன். அண்ணாவைத் தெரிந்துகொண்டபோது நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு செயின்ட் மேரிஸ் மண்டபத்தில் அவர்கள் தலைமையில் நடந்த சீர்திருத்த மாநாட்டில் மேடையில் இரண்டு நாள்களும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக்கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில் தி.மு.கழகத்துக்கு வாக்குத் தாருங்கள்; இன்னென்ன கொள்கையை நிறைவேற்றுவோம் என்று சொன்னவன் நான். அப்படிச்சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டுமென்று இப்போது சொல்ல உரிமை இல்லையா?
கழகத்துக்கு வாக்குத் தாருங்கள், இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது; நேர்மை இருக்கும் என்று சொன்னேனே; அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவதற்கு சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம்.ஜி.ஆர். போய்விடுவார் என்று சொல்ல அவர்களுக்கு அச்சம், யாருக்கோ என்னுடைய கேள்வி உறுத்துகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குகாட்ட வேண்டுமென்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது?
ராமச்சந்திரனுக்கு ஒரு பங்களா இருந்தால் அது ஆட்சிக்கு வந்தபிறகு வந்ததா, அதற்கு முன்னால் வந்ததா, என் மனைவி மீது, உறவினர்கள் மீது பங்களா, சொத்து வந்திருக்குமானால் அது எப்படி வந்தது, மாவட்ட, வட்ட, கிளைக் கழகச் செயலாளர்களுக்கு எப்படி வந்தது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்; சம்பாதிக்கிறான்; நீ சம்பாதித்தால் அதற்கு கணக்குக் காட்டு!
இதை எதிர்க்கட்சிகள் கேட்க வேண்டியதில்லை. நாமே கேட்டுக் கொள்வோம். இந்தத் தீர்மானங்களை பொதுக்குழுவில் கொண்டுவர இருக்கிறேன். மக்கள் என் பக்கம் இருக்கிறார்கள் பொதுக்குழுவில் இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் இந்தக் கேள்வியைத் தீர்மானமாக உருவாக்குவேன். மக்களைச் சந்திப்பேன்.
மாவட்டச் செயலாளர்கள், கிளைக் கழகச் செயலாளர்கள், வட்டச் செயலாளர்கள், பதவிகளில் இருப்பவர்கள் குடும்பத்துக்கு வாங்கியிருக்கிற சொத்துகள் இருந்தால் கணக்கு காட்ட வேண்டும். அவைகள் எப்படி வந்தது என்று விளக்கம் சொல்லவேண்டும். பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காக குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை மக்கள் முன்னால் நிரூபிக்கலாம்.
நிரூபிக்க முடியாதவர்களை மக்கள் முன்னால் நிறுத்தி அவர்கள் தவறு செய்திருந்தால் அவர்களைத் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன்னால் நிறுத்தி தூக்கி எறிவோம்!
இதுவே அந்த* வீர* உரை!
ந*ன்றி: இனிய*ன் கிருபாக*ர், பூமிநாத*ன் ஆண்ட*வ*ர்..... Thanks Friends.......
-
அனைத்து மக்கள் திலகம் அபிமானிகள் எல்லோருக்கும் இனிய "சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை" நல்வாழ்த்துக்கள்...
-
எந்த அளவுக்கு தி மு க உடான்ஸ் பிறப்புக்களுக்கு அறிவில்லைன்னா … இறந்து முப்பாந்தாண்டுகளாகியும் மக்கள் திலகம் என்கிற பெயரைக்கேட்டாலே இவனுங்களுக்கு ........... போயிடுது … அவர் குரலை மைய்யப்படுத்தி தான் இவனுங்க கேலியும் கிண்டலும் …
மக்கள் திலகத்திடம் ஒரு முறை சிலர் சென்று ஆதங்கப் பட்டார்களாம் .... தலைவரே உங்களை பற்றி கருணாநிதி ... ஊமையன் நாட்டை ஆளலாமா என்று மக்களிடம் மேடை தோறும் கேட்டு வருகிறார் என்று .... அதற்கு மக்கள் திலகம் சொன்னது என்ன தெரியுமா ? ரசிகர் மன்றக் கூட்டத்தை கூட்டுங்கள் என்றார் ... கூடிய மாபெரும் கூட்டத்தில் மக்கள் திலகம் பேசியது சில வார்த்தைகள் தான் .... அதாவது என் ரத்தத்தின் ரத்தங்களே நீங்கள் எல்லோரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள் என்றார் .... மேடையில் இருந்த எல்லோருக்கும் அதிர்ச்சி ... என்ன தலைவர் இப்படி பேசுகிறாரே என்று .... அடுத்த நாள் எல்லா ஊடகங்களிலும் இது தான் தலைப்புச் செய்தி ... கிளம்பினார் கருணாநிதி .... ஒரு முதல்வர் இப்படி பொறுப்பற்ற முறையில் தொண்டர்களை கத்தி வைத்துக் கொள்ளச் சொல்லி பேசலாமா என்று மேடைகள் தோறும் கேள்வி எழுப்பினார் .... 2 வாரங்களுக்கு பிறகு மக்கள் திலகத்திடம் ஆதங்கப் பட்டவர்களை மீண்டும் அழைத்தார்
என்னை ஊமையன்னு ஊரெல்லாம் சொன்ன அதே கருணாநிதியை இன்னைக்கு அதே ஊரெல்லாம் சென்று முதல்வர் இப்படி பேசலாமா என்றும் கேட்க வைச்சிட்டேன் பாருங்க .... நான் பேசுவதை அவரே மக்களிடம் ஒப்புக் கொள்கிறார் .... என்றார் ....
அவர் குரல் தேவையில்லை .. இரட்டை விரல் போதும் உங்களை ஓடவிட … போக்கத்த ஈர வெங்காயங்களா... Thanks Friends...
-
தமிழ்நாடு கல்வியில் முதலிடம் பெற ஆண் சரஸ்வதி ஆக மேற்கல்வி கடவுளாக அருளினார் எம்.ஜி.ஆர்., பள்ளியில் மேற்கல்வி ப்ளஸ் டூ அறிமுகம் செய்து எளிமை படுத்தினார், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், பாரதியார் மற்றும் பாரதி தாசன் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்கள் ஏற்படுத்தி தமிழர்களை இந்தியாவிலேயே கல்வியில் முதலிடம் காண செய்தார் எம்.ஜி.ஆர்., வணங்குவோம் அவரை ... வளர்க, நீடுழி வாழ்க எம்.ஜி.ஆர்., புகழ்...
-
கழகம் தோன்றிய தினத்தை கொண்டாடும் போது உயிரைகொடுத்த தொண்டனின் தியாகத்தை சொல்லணும் முதல் தியாகி வத்தலகுண்டு ஆறுமுகம்
,
இந்த நிலையில் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில், 1971–ம் ஆண்டுத் தேர்தலில் வெற்றி பெற்ற ராஜாங்கம் என்னும் தி.மு.க. எம்.பி. மரணமடைந்தார். அதனால் அங்கே இடைத்தேர்தல் 1973ம் ஆண்டு நடைபெற இருந்தது.
திண்டுக்கல் தொகுதியில் தி.மு.க. போட்டியிடுவதும் அதன் கூட்டணிக்கட்சிகள் அதை ஆதரிப்பதும் உறுதியாகி விட்டது.ஸ்தாபன காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதும் உறுதியாகிவிட்டது. அதைச் சுதந்திராக்கட்சி ஆதரித்தது.இந்த நிலையில் புரட்சித்தலைவர் என்ன செய்யவிருக்கிறார்? என்பதை நாடே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.
புரட்சிதலைவரோ ஆறுமாத குழைந்தை அதிமுகவை கையில் ஏந்தி தனித்துபோட்டி என்று அறிவித்துவிட்டு மாயத்தேவர் என்பவரை வேற்பாளராக அறிவித்துவிட்டு பிரச்சாரம் செய்ய கிளம்பிவிட்டார் !!
திண்டுக்கல் தொகுதிக்குப் பல்லாயிரக்கணக்கான அண்ணா தி.மு.க. தொண்டர்கள் திரண்டு வந்து தேர்தல் பணியாற்றினர். அண்ணா தி.மு.க. கூட்டங்களில் கல்லெறிந்தனர்; அடி தடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர்; அ.தி.மு.க. தொண்டர்களைக் கண்ட இடங்களில் வெட்டினர். கை கால்களை உடைத்தனர்; பிரச்சார வேன்களைக் கவிழ்த்தனர். வாக்காளர்களை அச்சுறுத்தினர்; இந்த வெறியாட்டத்துக்கு திண்டுக்கல் தொகுதியில் முதன்முதலில் களபலியானவர் வத்தலகுண்டு எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளரான ஆறுமுகம் ஆவார்.
இரத்த வெள்ளத்தில் பிணமாகி மிதந்த அவரைக் கண்ட பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்கள், ”பதிலுக்குப் பதில்! பழிக்குப் பழி!” என்று கிளம்பிவிட்டனர். அந்தச் செய்தியை அறிந்ததும், எம்.ஜி.ஆர் விரைந்து சென்று, கம்பும் கழிகளும் அரிவாளும் தாங்கிக் கொண்டு ஆயிரக்கணக்கில் திரண்டு விட்ட அ.தி.மு.க. தொண்டர்களை வழிமறித்ததார்.!!கம்பால் அடித்தால் மறந்துவிடுவார்கள் மாயதேவரை வெற்றி பெறசெய்து அவர்கள வாழ்கையில் மறக்கமுடியாத வலியை ஏற்படுத்தவேண்டும் என்றார் அவர் காலம் வரை திமுக ஆட்சிக்கு வரமுடியவில்லை மட்டுமல்ல பெரிய அளவில் எதிர் கட்சியாககூட சோபிக்க முடியவில்லை... Thanks Friends...