Originally Posted by
chinnakkannan
வாசு...
அந்தக் காலத்தில் மதுரை சாந்தி தியேட்டரில் பார்த்தபோது ஏற்பட்ட பரபரப்பு ஆர்வம் - தட்டட்டும் கை தழுவட்டும் பாடல் காட்சி- அதை அப்படியே வரிகளில் கொண்டுவந்திருக்கிறீர்கள் பாராட்டுக்கள்..மனப்பூர்வமாக..
சரோஜா தேவி மட்டும் இந்தப் படத்தில் சற்றே செழுமையாக (ஹி ஹி குண்டு என்றால் கோபிப்பீர்கள் தானே) இருப்பார்..ஆனால் இந்தப் பாட்டில் ஏனோ சற்றே ஒல்லியாகத் தென்படுவார்.. ந.தியின் ஸ்டைல் ப்ள்ஸ் பாடல் சிச்சுவேஷன்.. சுசீலாம்மாவின் குரல் ப்ள்ஸ் இசை.. பாட்டை எங்கோ கொண்டு போய்விடும்..
கன்னத்தில் விழுந்த முத்தங்கள்
எண்ணத்தில் நிறைந்து நிற்கட்டும்
வீரத்தை அணைத்துக் கொள்ளட்டும்
வெற்றிக்கே விரைந்து செல்லட்டும்
நூலாடும் மேலாடை சிரிக்கின்றதே
மேலாடும் பொன்னாடை அழைக்கின்றதே
சேலாடும் கண் இன்று துடிக்கின்றதே
போராடும் உனைக் கண்டு தவிக்கின்றதே
கவிஞரின் வரிகளுக்கு வாயசைப்பு சுசீலாம்மாவின் இனிமைக் குரல்..ப்ளஸ் ந.தி.. மறக்க இயலுமா..
ம்ம் காலங்கார்த்தாலே படுத்திவிட்டீர்கள் ஸ்வாமி.. தாங்க்ஸ்ங்க்ணா..:)