-
ரவி films
பட்டிகாட்டு ராஜா 1975
கனக சண்முகம் என்று ஒருவர் ராமண்ணாவின் assistant ஆக இருந்தவர்
டைரக்ட் செய்த படம்
சிவகுமார் ஜெயசுத கமல் ஸ்ரீப்ரிய படாபட் அசோகன் தேங்காய் மனோரமா நடித்து வெளி வந்த படம்
ஷங்கர் கணேஷ் மியூசிக்
டிட்டோ ராமண்ணா சாயல்
அசோகன் நான் பட பாணியிலே நடித்து இருப்பார்
"மாற்றன் தோட்டத்து மல்லிகையே வா வா
மன்சூர் கண்டு எடுத்த பெட்டகமே வா வா "
இந்த மன்சூர் ஆக குணாளன் என்பவர் வருவர் என்று நினவு
மாற்றன் தோட்டத்து மல்லிகை ஸ்ரீப்ரிய
கமல் இன் மெல்லிசை பாடல் ஒன்று
பாலாவின் குரலில்
"உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
ர பர பர பர பர "
அந்நாளைய எல்லா மேடை பாடகர்களுக்கும் அரிச்சுவடி
சுசிலாவின் குரலில்
"கொஞ்சும் கிளி வந்தது" தரரர
"கண்கள் குறி வைத்தது"
"தொட்டால் துவளும் மேனி He He He Heiy
காதல் சாம்ராஜ்ய ராணி
நெருங்கினால் நெருப்பு நான் "
•heiyy Lalalalalala Lalallalala Lalal Alal Laa
முதல் சரணத்தில்
"தொடாதது கை விரல்கள் படாதது
தராதது யாரும் இது பெறாதது
நான் தானே புத்தம் புது தேன் தானே "
(எதை சொல்ல வராங்க தெரியலே)
எச்செள்ளன்ட் ஹம்மிங்
டபுள் பங்கோ அண்ட் chorus
-
உங்கள் விருப்பம் படத்தில் இன்னொரு பாடல் கூட உண்டு இல்ல சார்
"என்ன மகாராணி அழகு அழகு
இன்னும் சில நேரம் பழகு பழகு பழகு "
பாலா வித் வாணி
அதே போல்
கோவை சௌந்தரராஜன் வித் அஞ்சலி (ஈஸ்வரியின் தங்கை தானே )
"மஞ்சள் பூசி மஞ்சம் கொண்ட ராம ராம
மந்திரத்தை சொல்லி சொல்லி விடு சீத சீத
-
vasu sir
மெல்லிசை மாமணி குமார் இன் கானங்கள் பற்றிய அலசல்
காத்து இருக்கிறோம் சார்
-
கிருஷ்ணா சார்,
'கொஞ்சும் கிளி வந்தது' கண்ணியப்பாடகி கோரஸுடன் கலக்கு கலக்கு என்று கலக்கி இருப்பார்கள். அ வும் இல்லாமல் ஆ வும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட, மாத்திரை சற்றே குறைந்த ஆவை ஒரு ஹம்மிங் போட்டு 'கண்கள் குறி வைத்தது'என்பாரே!
ஆஹா! நெடுநாள் வாழட்டும் இந்த இசைக் குயில்.
-
பட்டிக்காட்டு ராஜாவில்
http://tamillyrics.hosuronline.com/p...u%20raja_1.jpg
இன்னொரு சூப்பர் பாடல்
என்னோடு வந்தான்
கண்ணோடு நின்றான்
நெஞ்சோடு கலந்தானே
நேற்றுவரை நானே
நினைத்ததில்லை மானே
பாலாவும், வாணியும்,அட்டகாசம் புரிவார்கள். கேட்டிருக்கிறீர்களா?
நீங்கள் கேட்காத பாட்டு என்று ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லை.
-
பட்டிக்காட்டு ராஜாவில்
https://i1.ytimg.com/vi/DlTnHUyHZZs/mqdefault.jpg
இன்னொரு பாட்டும் சூப்பர்.
கண்ணன் யாரடி
கள்வன் யாரடி
பார்த்துச் சொல்லடி
கண்ணே மயங்காதே
நெஞ்சே நெருங்காதே
சுசீலாவின் அற்புதமான பாடல்.
http://i1.ytimg.com/vi/agjyrRCVkUI/hqdefault.jpg
(ஆமாம்! ஸ்ரீபிரியா இந்தப் படத்தில் ரொம்ப.ஓ..ர்)
-
வாசு சார்
நடுவில் வேறு ஒரு வேலையில் held up ஆகி விட்டேன்
பட்டிகாட்டு ராஜாவில்
"கண்ணன் யாரடி கள்வன் யாரடி
பார்த்து சொல்லடி பெண்ணே மயங்காதே "
பாட்டு interlude மியூசிக் கொஞ்சம் பாஸ்ட் track இல் அடித்து இருப்பார்கள்
இந்த பாட்டை பற்றி யோசித்து கொண்டு இருக்கும் பொது
பாலச்சந்தர் படத்தில் ஒரு பாடல் திடீர்னு நினவு
"உனைத்தான் எண்ணி நினைச்சேன்
அதை தான் எண்ணி சிரிச்சேன்
மேலாடை கொஞ்சம் மெதுவா மெதுவாக "
எங்க ஊர் கண்ணகி - பாலா வித் சுசீல்
விச்சுவின் சூப்பர் மெலடி
சரத்பாபு அண்ட் சீமா ஜோடி
இந்த படத்தை உண்மையில் பாலச்சந்தர் தான் டைரக்ட் செய்தாரா என்று இந்த படம் வெளியான காலத்தில் குமுதம் பத்திரிகையில் வெளி வந்த நினவு
-
ராணுவ வீரனில் 1981
விச்சுவின் பாலா வித் சுசீல்
1. சொன்னால் தானே தெரியம் என்னை கண்ணால் பாரு புரியும்
அழகி உனக்கு கோவம் எதற்கு ஆசை அதிகம் நெஞ்சில் இருக்கு
கோழியும் இங்கே சேவலும் இங்கே குடும்பத்தை பார் இங்கே
ஜோடியும் இன்றி பறவைகள் கூட வாழ்வது தான் எங்கே
பறவையின் நிலை வேறு மனிதனின் கதை வேறு
மனிதர்கள் இனம் போலே பறவைகள் கடமையை அறியாது
தபேலா ஜாலம் புரியும்
interlude கொஞ்சம் இமயம் "கங்கை யமுனை இங்கு தான் சங்கமம் "
பாடலில் வருவது போல் இருக்கும்
ரஜினி வித் ஸ்ரீதேவி அழகோ அழகு
2. பாலாவின் "வாருங்கள் ஒன்றாய் சேருங்கள் "
இந்த 'ள்' ஒரு அழுத்து அழுத்துவார் பாருங்க
-
மு.க.முத்துவின் இரண்டாவது படம் 'பூக்காரி' (1973 தீபாவளி - உடன் வந்த படங்கள் கௌரவம், பாக்தாத் பேரழகி, அலைகள்)
மஞ்சுளாதான் பூக்காரி.
வியாபாரியான ராட்சசியின் குரலில் "முப்பது பைசா மூணு முழம் முல்லை மல்லிகை கனகாம்பரம்" பாடலும் அதற்கு பாவாடை தாவணியில் மஞ்சுவின் துள்ளிக்குதித்த ஆட்டமும் செம பொருத்தம்.
(அதென்ன வியாபாரி ராட்சசி?. 'அரும்பா இருந்தது நேத்து' (ராஜா வீட்டுப்பிள்ளை), எலந்தப்பயம் (பணமா பாசமா), மாம்பழம் வாங்குங்க (உயிரா மானமா), டி... டி...டி சாத்துக்குடி (பட்டிக்காட்டு பொன்னையா), நான் ஏழு வயசுல எளனி வித்தவ (நம்நாடு).... ஈஸ்வரி பார்க்காத வியாபாரம் உண்டா?)
அகலமான கூடைத்தட்டில் பூக்களை வைத்துக்கொண்டு வீடு வீடாக துள்ளித்துள்ளி ஆடிக்கொண்டு போய் பூ விற்கும்போது நம்ம தெருவுக்கும் இந்த மாதிரி ஒரு பூக்காரி வந்தால் எப்படியிருக்கும் என்று தோன்றும்.
முத்துவுக்கும் மஞ்சுளாவுக்கும் பாஸ்ட் டூயட் "முத்துப்பல் சிரிப்பென்னவோ, முல்லைப்பூ விரிப்பல்லவோ" டி.எம்.எஸ்.-சுசீலா. கானமும் காட்சியும் செம ஜோர்.
ஜெய்குமாரிக்கு ஒரு பார்ட்டி டான்ஸ் பாட்டு "புத்தகம் விரிப்பதிங்கே தத்துவம் படிப்பதற்கே" மீண்டும் ராட்சசி. ( ஜெய்குமாரி ஆடு ஆடென்று ஆட, அமிர்தம் கேமராவைப் போட்டு ஆட்டு ஆட்டென்று ஆட்டியிருப்பார்)
ரொம்ப பாப்புலரான பாடல் "காதலின் பொன் வீதியில் காதலன் பண்பாடினான்" இளையராஜா வருவதற்கு முன் அத்தி பூத்தார்போல எழுதிக்கொண்டிருந்த பஞ்சு அருணாச்சலத்தின் பாடல். டி.எம்.எஸ்.ஜானகி. படத்தில் முத்துவுடன் நிர்மலா.
1973 தீபாவளிக்கு வந்த அத்தனை படங்களிலும் மெல்லிசை மன்னர் எவரெஸ்ட்டின் உச்சியில் (மாமா தெலுங்கில் பிஸி).
-
டியர் கிருஷ்ணாஜி, ஒரு சின்ன யோசனை (சொல்லலாமா? பயமா இருக்கு)
திரியை நாம் ஒரு பத்து பேர் மட்டும் படிக்கவில்லை, பலர் படிக்கின்றனர். எனவே 'விஜி - பத்து ஜோடி' என்று கோட் வேர்டில் எழுதுவதற்கு பதிலாக மூன்று செகண்ட் கூடுதலாக எடுத்துக்கொண்டு விஜயகுமார் - பத்மப்ரியா என்று முழுசா எழுதலாமே.