என்னமோ போங்க – 13
*
ஊர்வலம் என்றால் என்ன..ப்ரொஸஸன் என்று தமிழில் சொல்வார்கள்..அதாவது நாலுக்கும் மேற்பட்ட நபர்கள் ஒரு காரியமாகக் கூடி தெருவில் நடந்து செல்வது என்று வைத்துக் கொள்ளலாமா..
மாப்பிள்ளை ஊர்வலம், கட்சி ஊர்வலம், என நிறையவே வரும்.. கல்லூரி மாணவிகள் பஸ்ஸில் செல்வதைப் பார்த்தால் இளம் சிட்டுக்களின் ஊர்வலம் என சில பலகல்லூரி மாணவர்கள் சொல்வார்கள்..
இங்க பாருங்க இந்த அந்தக்கால இள நங்கை என்னவாக்கும் செய்யறாள்..
முத்தாகப் பற்களுமே மோகனமாய்த் துலங்கிடவே
..மூடிவைத்த இதழ்திறந்து மோகினியும் மென்னகத்து
குத்திவிடும் ஈட்டியென கூர்விழியின் கீழிமைகள்
…குளிர்வாகப் படபடத்து பார்வையிலே பனித்தூவி
சித்தமதைக் கலைத்துவிடும் சீரழகு நடையாலே
…சிரித்திங்கே ஜதியுடனே தோகைமயில் ஆட்டமென
வித்தைகள் பலவாறாய்க் காட்டித்தான் பாடுகிறாள்
…விந்தையிது வஞ்சியிவள் மொத்தவெழில் ஊர்வலமோ..
(ஹப்பா எப்படியோ ஆரம்பிச்சு ஊர்வலம்னு முடிச்சுட்டேன்)
*
இளம்பெண்ணுக்கே உரித்தான ஆசை கனா இவளுக்கும் இருக்கு..ஆனா அது நானில்லை என்கிறாள் எல்லா ஆசையையும் சொல்லி..ம்ம் என்னமோ நாணம்னு சொல்வாங்களே அதுவா இருக்கலாமா.. ம்ம் என்னமோ போங்க..
*
முத்தான ஊர்கோலமோ
அத்தானின் கல்யாணமோ
ராஜாக்கள் எல்லோரும் சீர்கொண்டு வருவார்களோஓஓ
மை வண்ணம் கலையாத கண் என்ன
https://youtu.be/fw6CW7Ry0Kc?list=PL...60IEJoJTa5mD8V
அன்னையும் பிதாவும் இல் வாணிஸ்ரீ…கூட தோழிகளில் ஒருவர் ஜெயந்தியா
..