http://i64.tinypic.com/25he1rq.jpg
Printable View
இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழர்கள் அதிகமாய் உச்சரித்த ஆங்கிலச்சொல் எம்.ஜி .ஆர். ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் 26 அதில் எந்த எழுத்தை வேண்டுமானாலும் மறந்து விடலாம் ஆனால் அந்த மூன்று எழுத்தை மட்டும் மறக்கவே மாட்டார்கள் தமிழ் மக்கள் அதுதான் M G R - CHANDRU-PARIS - PARIS,பிரான்ஸ்
இப்போதும் அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கு மிக முக்கிய காரணம் அவர் சிறு கதா பாத்திரங்கள் ஏற்று நடிக்கும் காலத்திலே எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தம்மிடம் உதவி கேட்டு வருபவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தது தான் . தனக்கு சிறு வயதில் சாப்பாட்டிற்கு ஏற்பட்ட கஷ்டம் படிக்கும் வயதில் உள்ள மாணவ சமுதாயத்திற்கு நேர கூடாது என்பதால் பெருந்தலைவரின் மதிய உணவு திட்டத்தை சத்துணவு திட்டமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி கூடங்கள் விரிவாக்கம் செய்தார். அவர் நடிக்கும் காலத்திலும் அவர் முதல்வராக இருந்த காலத்திலும் ஏழை எளிய மக்களின் துயரை தம்மால் இயன்ற அளவிற்கு துடைக்க முயற்சி மேற்கொண்டார் என்பதை நிச்சயம் தமிழக வரலாறு மறுக்காது . இன்னும் 100 ஆண்டுகாலம் அவர் பெயர் தமிழக திரையுலக மற்றும் அரசியல் உலகில் நீங்காது இருக்கும் . Venkataraman Subramanian - Chennai,இந்தியா
M G R ஒரு சஹாப்தம். யாராலும் வெல்ல முடியாது. இந்த உலகம் உள்ளவரை அவரது புகழ் நிலைத்து நிற்கும். nara simhan - Johannesburg,தென் ஆப்ரிக்கா
மக்கள் திலகம் எம் ஜி ஆர் புகழ் வாழ்க. என்றும் போற்றுதற்குரிய புரட்சி தலைவர் மக்களோடு மக்களாய் ரத்தத்தின் ரத்தமாய் வாழ்ந்து தமிழக முதலவார்கவே மறைந்த ஒரு சகாப்தம். இவரை உருவாக்கிய தமிழ் திரை கலைஞர்களும் என்றும் வாழ்க. சொல்லி கொண்டே போகலாம் . Swamikal PPA - West Coast, CA,யூ.எஸ்.ஏ
தமிழ் சினிமா வரலாற்றில், மக்கள் திலகத்தின் பங்களிப்பு , ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும், தனி முத்திரையுடன், ஒளிரும். Karuppiah Sathiyaseelan - Kinshasa,டெம் ரெப் ஆப் காங்கோ
courtesy - dinamalar.
மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர் என்றெல்லாம் பல பட்டப்பெயர்களுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர். அவரது மறைவு தினம் டிசம்பர் 24. பல்வேறு பட்ட எதிர்ப்புகளையெல்லாம் துணிந்து எதிர்த்து நின்று வாழ்க்கையில் வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். அவரது வாழ்க்கை நம்பிக்கையிழந்து, சோர்ந்து கிடக்கும் உள்ளங்களுக்கெல்லாம் உற்சாகத்தை, நம்பிக்கையினைக் கொடுக்குமொரு நூல்.
அவரது திரைப்படப் பாடல்களும், படங்களும் மீண்டும் மீண்டும் வாழ்க்கைக்கு நம்பிக்கையூட்டக் கூடிய தத்துவங்களையே வலியுறுத்தின. அதனால்தான் அவை இன்றும் கேட்கும்பொழுது சோர்ந்து துவண்டு கிடக்கும் உள்ளங்களுக்கு ஒருவித உத்வேகத்தினை, உற்சாகத்தினைக் கொடுக்கின்றன.
வாழ்வில் அனைத்துச் சவால்களையும் உறுதியாக எதிர்கொண்டு வெற்றிக் கொடி நாட்டியவர் எம்ஜிஆர். இருந்தவரையில் சினிமா, அரசியல் இரண்டிலுமே தனிக்காட்டு இராஜாவாக இருந்து மறைந்தவர் எம்ஜிஆர். இறந்து 28 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அவரது ஆளுமை தமிழ் சினிமா மற்றும் அரசியல் ஆகியவற்றைப் பாதிப்பது ஆச்சரியமானதொன்றல்ல.
courtesy - net
வாத்தியார் பாடசாலையில் கல்வி மூன்றாம் வகுப்புவரையில் படித்திருந்தாலும், வாழ்க்கைப் பள்ளியில் நிறையவே படித்தவர். ஒருவரால் அவரைப் போல் உயர்ந்த நிலைக்கு வர முடியுமென்றால், இறந்த இத்தனை வருடங்களின்பின்னரும் மக்களின் மனதில் ஆட்சி செலுத்திக்கொண்டிருக்க முடியுமென்றால் அது ஒன்றும் சாதாரண விடயமல்ல. மக்களை குண்டடிபட்டுச் சீரழிந்த குரலுடன் வாத்தியார் 'இரத்தத்தின் இரத்தமே' என்ற இரண்டு வார்த்தைகள் அசைத்துவிடுவதொன்றும் சாதாரணவிடயமல்ல. நியூயார்க் மருத்துவ நிலையத்தில் இருந்துகொண்டு தேர்தலில் வெல்வதென்பதொன்றும் சாதாரண விடயமல்ல. அவரது சத்துணவுத்திட்டம், இறந்தபின் தன் சொத்துக்களை குருடர், செவிடர் நல்வாழ்வுக்காக ஒதுக்கிய பண்பு, ஈழத்தமிழர்கள் விடயத்தில் அவர் காட்டிய கரிசனை.. இது போன்ற பல விடயங்கள் முக்கியமானவை. அவரது திரைப்படங்களில் தொடர்ந்து வலியுறுத்தப்படும் வாழ்வின் முன்னேற்றத்திற்கான கருத்துகள் இவையெல்லாம் முக்கியமானவை.
courtesy - net
என்ன சொன்னார் எம்ஜிஆர்? புதிய படைப்பாளிகளுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம், அடுத்த கட்டப் படங்களை உருவாக்குவதில் நாம் கவனமெடுக்க வேண்டும் என்பதே. ஒரு முறை எம்ஜிஆர் அவர்களிடம், உங்களை மாதிரி மக்களுக்கான படங்களை உருவாக்கவே நான் முயற்சித்து வருகிறேன் என்றேன். அதற்கு அவர், அந்தமாதிரி செய்துவிடாதே... நான் உருவாக்கியதைப் போன்ற படங்களை நீயும் ஏன் முயற்சிக்கிறாய்?. ஒரு படிக்கட்டுக்குப் பக்கத்தின் இன்னொரு படிக்கட்டு எதற்கு?. முடிந்தால் அதைவிட உயரத்தில் ஒரு படிக்கட்டை கட்டு என்றார்.
நடிகர் கமல்
நிகழ்வு தொடங்கியதும் முதலாவதாக எனது பெயரை அறிவித்தார்கள்.எல்லோருக்கும் சிறிய அதிர்ச்சி.காரணம் நான் பாடப்போகும் செய்தி பெரியளவில் மற்றவர்களுக்கு போய்ச்சேரவில்லை.நானும் கைகால்கள் பதற மேடையில் ஏறிநின்று பாடினேன்.பாடிக்கொண்டு இருக்கும்போதும், பாடிமுடிந்ததும் ஒரே கைதட்டல்,ஆரவாரம் என மண்டபமே அதிர்ந்தது.இத்தனையும் எனக்கல்ல அந்தப்பாடலுக்கே.ஏனெனில் இரண்டு வருடங்களுக்கு முன்பே வெளியாகி எட்டுத்திக்கிலும்,எல்லோரினதும் வாயிலும் ஒலித்துக்கொண்டிருந்த பாடலிது.இதைவிட சிலவாரங்களுக்கு முன்புதான் இப்பாடல் இடம்பெற்ற படம் வெளியாகி இருந்தது.அந்தப்படத்தை பார்கப்போவோரை விட படம் திரையிடப்பட்ட யாழ்ப்பாணம் ராணி திரைஅரங்கில் காணப்பட்டஉருவப்படங்கள் (கட்அவுட்) பார்க்கவே அதிக கூட்டம் நின்றது. மிக உயரமும்,அழகும் நிறைந்த இது நகருக்குள் நுழைய முன்பே கம்பீரமாக காட்சி அளித்தது.இவ்வளவு முக்கியத்துவம் கொண்டதென்றால் இது யாருடைய படமாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்.வெற்றியின் அதிபதி கலையுலகில் மக்களை நேசித்த மனித நேயன் இவன் போல் இனி யாருமில்லை என்று தனது செயற்பாடுகளால் உலகுக்கு உணர்த்திய பொன்மனச் செம்மல்,புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் அடிமைப்பெண் என்ற படம்தான்.1969ம் ஆண்டில் மிகவும் பரபரப்பாக ஓடிய இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலை கவிஞர் ஆலங்குடி சோமு அவர்கள் எழுதி திரையிசைத்திலகம் கே வி மகாதேவன் இசையமைக்க கம்பீரக்குரலோன் சௌந்தரராஜன் பாடியுள்ளார்.
courtesy - malarum ninaivugal -நன்றி-சர்வானந்தன் சுப்பிரமணியம் C
ஒருநாள் அன்பே வா செட்டில் mgr இருந்தபோது
யாரோ ஒரு பெரியவர் தரையில் வார்னிஷ் போட்டுக் கொண்டிருந்ததார்
அடிக்கடி அவரையே உற்று பார்த்த mgr நேராக அவரிடம் போய் நீங்க இன்னார்தானே என்று கேட்டதும் அந்த பெரியவர் நெகிழ்ந்து போனார்
ரொம்ப காலத்திற்கு முன்பு ராஜபார்ட் வேடங்கள் போட்டு நடித்தவராம் காலத்தின் கோளாறு காரணமாக செட்டின் கீழே அமர்ந்து வார்னிஷ் போட்டுக்
கொண்டிருந்தார் அவரை எழுப்பி அப்படியே கட்டி அணைத்துகொண்டு தனது பிரத்யேக மேக்கப் அறைக்கு அழைத்து போனார் தனக்கு வந்திருந்த மத்திய உணவை பகிர்ந்து கொண்டார் மறுநாள் முதல் அந்த பெரியவர் வேலைக்கு வரவில்லை mgr ன் பார்வை பட்டுவிட்டதால் அவரது வாழ்கை இனி வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற நிலையை கடந்து விட்டதை நாங்கள் புரிந்து கொண்டோம்
தன்னுடன் எந்த காலத்தில் பணியாற்றியவர்களையும் mgr மறந்ததில்லை
புரட்சி தலைவரை, ஜனவரி 12, 1967 அன்று பேசிக்கொண்டிருக்கும் போதே திடீரென்று துப்பாக்கி எடுத்து எடுத்து சுட்டு விட்டார் m.r. ராதா, இரண்டு மாதங்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றார் மக்கள் திலகம்.
சிகிச்சை முடிந்து மீண்டும் வீட்டுக்கு திரும்பியவுடன் முதலில் கலந்து கொண்ட படபிடிப்பு, காவல்காரன் படத்தில் வரும் நினைத்தேன் வந்தாய். .....நூறு வயது டூயட் படக்காட்சி, புரட்சித் தலைவியுடன் இணைந்து பாடிய பாடல்.
இயக்குனர் :ப.நீலகண்டன்
கதை வசனம் :வே. லட்சுமணன்
தயாரிப்பு :r.m.வீரப்பன்
தொண்டையில் குண்டடிப்பட்ட தால் , தலைவரின் குரலில் பாதிப்பு ஏற்பட்டது. அதனால் டப்பிங் பேச வைக்கலாம் என எண்ணி , வீரப்பன் தயக்கத்துடன் தலைவரிடம் கேட்டார் ஆனால் பிடிவாதமாக மறுத்து விட்டார். நான் நடிக்கும் எல்லா படங்களிலும் சொந்த குரலிலேயே பேசி நடிக்க விரும்புகிறேன். இப்போது உள்ள குரலை ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் நான்சினிமாவில் நடிப்பதையே விட்டு விடுகிறேன் அதற்கு மேல் சினிமாவில் நடிக்கமாட்டேன் என்றார் தன் திரைப்பட வாழ்க்கையில் மக்கள் திலகம் நடித்த மொத்த படங்கள் 136 குண்டடிப்பட்ட பிறகு 10 ஆண்டுகளில் 42 படங்களில் நடித்துள்ளார்.
தலைவர் மருத்துவமனையில் இருந்த நேரம், பொது தேர்தல் வந்தது. திமுக வின் பலமே தலைவர் தான், அண்ணா சொன்னார் ராமச்சந்திரன் குண்டடிப்பட்ட படத்தையும் , உதயசூரியன் சின்னத்தை மட்டுமே போஸ்டராக அடித்து தமிழ்நாடு முழுக்க ஒட்ட சொன்னார்.
அந்த போஸ்டரின் விளைவாக, தீயசக்தி உட்பட அனைவரும் ஜெயித்தார்கள். அண்ணா முதல்வரானார்.
இப்படி கட்சிக்காக உயிரை கொடுத்து உழைத்த தலைவரை, தீயசக்தி கட்சியை விட்டே வெளியேற்றியது. அதன் பலனை நம் இதயதெய்வம் அம்மாவின் மூலமாக தீயசக்தி அனுபவித்து கொண்டிருக்கிறது.