நிறுத்துவார்கள் சீண்டலையென
பொறுமை காத்தாள் புது மருமகள்
புரிந்துகொண்டாள் கொண்டவனவர்கள்
கைப்பாவையாய் இயங்குவதை
புரிதலில்லா துணையுடன் இது
நரகமென்று விலகித் தீவானாள்
இருந்தும் இல்லாத இந்த அவலம்
புதிய தலைமுறை காணாதது
Printable View
நிறுத்துவார்கள் சீண்டலையென
பொறுமை காத்தாள் புது மருமகள்
புரிந்துகொண்டாள் கொண்டவனவர்கள்
கைப்பாவையாய் இயங்குவதை
புரிதலில்லா துணையுடன் இது
நரகமென்று விலகித் தீவானாள்
இருந்தும் இல்லாத இந்த அவலம்
புதிய தலைமுறை காணாதது
”காணாதது கண்ட மாதிரி
நடந்து கொள்ளாதே..
நாசூக்காக..நளினமாக நட..
கொஞசம் அடக்கி வாசி”
வேறு எப்படிச் சொல்ல..
அறையினுள் மகனை அனுப்பினால்
மறு நாள் காலையில்
அவ்ன் முகத்தில் சில கீறல்கள்..
அந்தப் பக்கம்
கொஞ்சம் வாசிப்பு அதிகமாம்!!’
அதிகமாம் மக்கள் ஆதரவு
ஆணவமாய் எண்ணியது
பொய்யாய் போனது கணக்கு
பொங்கி எழுந்தது ஊர்சனம்
மிரட்டியதும் சுரண்டியதும்
போதுமென சொன்ன தேர்தல்
தேர்தல் மட்டுமே
ஜனநாயக கடமையாம்
அதன் பின்
ஐந்து வருடம்
ஐயுறு வந்தாலும்
அடக்கி வாசிக்க
வேண்டுமாம்
குரல் எழுப்புதல்
ஜனநாயக குந்தகமாம்.
குந்தகமாம் தூக்கத்திற்கு
கணவனின் குறட்டை சத்தம்
கோர்ட்டுக்கு போவாள் வெள்ளைக்காரி
கோபமாய் மணவிலக்குக் கோரி
கொண்டையை பிடித்து உலுக்கி
காலால் மிதித்து உதைத்து
கொடுமை பல செய்தாலும் இங்கே
கொண்டவனை கும்பிடுவாள் குலமகள்
கொட்டும் மழை அவள் வார்த்தைக்கு
குருட்டு நம்பிக்கையில் வளமாய் ஆணினம்
ஆணினம் ஆதிக்கவாதிகளா
அடங்கி வாழும்
அடிமைகளா என்பது
ஆண்டவனுக்கே வெளிச்சம்
சமஉரிமை வேண்டியவர்
சமமில்லை உயர்நிலையென
ஊழலில் உணர்த்திட்டார்.
உணர்த்திட்டார் ஒரு 'உம்'மில்
உப்பும் உரைப்பும் கச்சிதம்
பக்குவமான நல்தாளிதம்
ருசியும் மணமும் அதிகம்
கண்மை கரைய சமைத்தவள்
அடைகிறாள் புளங்காகிதம்
புளங்காகிதம் அடைகிறது மனது
சட்ட திருத்தம் செய்யும்
குழுவில் லல்லு போன்ற
புழுக்கள் உள்ளது
என அறியும் போது
புரிந்த போதும்
பயத்தில் பதுங்கி
பணிய மறுக்கிறது
புலி வேடம் கொண்ட
குள்ளநரி கூட்டம்.
கூட்டமாய் தான் படையெடுக்குமாம் துன்பங்கள்
ஒத்தை வரிசையில் வராதாம் மோதிப் பார்க்க
மெத்த சரியாகத்தான் சொன்னார் ஷேக்ஸ்பியர்
தன்மானமும் தன்னம்பிக்கையும் துவளவிடாதே
துவளவிடாதே நண்பா
தூரெடுக்கும் போது
துர்நாற்றம் வீசத்தான் செய்யும்
துணிந்து எடுத்துவிட்டால்
தூய நீரை சுவைத்திடலாம்.