http://i818.photobucket.com/albums/z...ps89dc8f84.jpg
Printable View
ப்ராப்தம் தொடர்கின்றது -------
இந்த படத்தின் சில சிறப்பு அம்சங்கள்
1. இந்த படத்திலும் nt பணம் வாங்கவில்லை - மற்ற காரணங்களால் ஏற்பட்ட நஷ்டங்களிலும் பெரும் பகுதியை nt ஏற்று கொண்டார் .
2. தான் சொன்ன சில மாறுதல்களை சாவித்திரி ஏற்று கொள்ளாவிடிலும் அதனால் மனம் தளராமல் உதவி செய்தார்
3. பாடல்கள் மூலம் படம் நஷ்டத்தை ஈடு செய்தது
4. படத்தில் அதிகமாக தெலுங்கு வாசனை இருக்கும்
5. படத்தில் nt யின் நடிப்பு புதுமையாகவும் அருமையாகவும் இருக்கும்
தொடரும்
அன்புடன் ரவி
ஒரு படத்தின் வெற்றி என்பது - 100 நாட்கள் , அதற்கும் அதிகமாக ஓடினதை வைத்து மட்டுமே கணக்கிட முடியாது - படத்தின் கதை , பாடல்கள் , இயக்கிய விதம் , ஒளிபதிவு , தேர்ந்து எடுக்கப்பட்ட நடிகர்கள் , நகைச்சுவை கதையுடன் ஒட்டி போகுதல் , கதையின் விறுவிறுப்பு - இப்படி பல - இப்படி ஒன்றுமே இல்லாத பல படங்கள் 100 நாட்களும் , அதற்கும் மேலாக ஒட்டப்பட்டுள்ளன ( ஓடவில்லை) -
அந்த படத்தை பார்த்தாலே தெரியும் - ஓடினதா அல்லது , ஓட்ட படுள்ளதா என்று - அந்த படங்களில் - மற்றவர்களுக்கு வாய்ப்பு தராமல் , கதா நாயகனே தேவை இல்லாமல் இரண்டு வேடங்களில் வருவார் - ஒருவர் அதில் கெட்டவனாக இருந்தால் , அதற்க்கும் தனி வழியில் ஒரு கதை இருக்கும் - பட முடிவில் அவரையும் மனிதரில் மாணிக்கமாக காண்பித்து விடுவார்கள் - பல நடிகைகள் அவரை ஒரு தலையாக காதலிப்பார்கள் - அவர்கள் மட்டுமே காய , மன்னிக்கவும் கனவு காண வேண்டும் - ஹீரோ வுடன் ஓடி , ஆட - ஹீரோ ஒரு ராமனாக வே இருப்பான் ( ஆண்களில் ராமன் கிடையாது என்றாலும் -----)
வில்லன் , யம லோகத்தில் இருந்து இறக்குமதி ஆனது போல் , போல பாவத்தின் மொத்த வடிவமும் அவனே - அவனுக்கு ஹீரோ வை அடிப்பதுபோல ஒரு கனவு காட்சி கூட கிடையாது - தேவையில்லாமல் சத்தம் போட்டு சிரிக்க வேண்டும் - ஆனால் ஹீரோ விடம் அடி வாங்க தயங்க கூடாது - துப்பாக்கி , வெடி குண்டு (RDX ) கையில் வைத்திருந்தாலும் , ஹீரோவை பார்த்தவுடன் , அவைகள் சக்தியை இழந்துவிடும் - ஹீரோ விற்கு கண்ணிலாத சகோதரி , கணவன் இல்லாத தாய் கண்டிப்பாக இருக்கவேண்டும் - நகைச்சுவை என்பது ஒரு மருந்துக்கும் இருக்காது - அப்படி இருந்தாலும் ஹீரோ வை புகழ மட்டுமே அவை உபயோகப்படும் - மலையின் உச்சியில் , கண்கள் இல்லாத சகோதரியை வில்லன் கீழே தள்ள முயற்சிப்பான் - ஹீரோ காதலித்துகொண்டோ , அல்லது வீட்டில் தாய் கொடுக்கும் உணவை சாப்பிட்டுகொண்டோ , அப்படியே காலால் மலையின் உச்சியில் இருக்கும் வில்லனை அடிப்பார் ( theatre இல் விசில் பறக்கும்) - வில்லன் ஓடிவந்து , காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார் - ஹீரோ இரண்டு வேடம் இருந்தால் - இருவரும் சகோதர்கள் ஆகிவிடுவார்கள் - அதற்க்கு ஒரு "பின் கதை" இருக்கும் - நம் எல்லோர் காதிலும் குறைந்தது 20 முழமாவது பூவை சுத்துவார்கள் .
இப்படி எந்த மசாலாவுமே இல்லாமல் யதார்த்தமாக வந்து வெற்றி வாகை சூடியவைகள் தான் NT யின் படங்கள் - அதனால் வெற்றி என்று வேறு எவருக்காவது யாராவது சொன்னால் அது பல நடிகைகள் ஹீரோவுடன் சேர்ந்து காணும் கனவு கட்சிகள் போல - அதில் உண்மை கடுகளவும் இருக்காது , இருக்க முடியாது
அன்புடன் ரவி
:):smokesmile:
கதை சுருக்கம்
கண்ணன் & ராதா இளம் ஜோடி , காலேஜ்இல் ஒன்றாக படித்தவர்கள் - திருமணம் நன்றாகவே நடந்தது .அவர்களை தேன் நிலவுக்கு அனுப்ப அவர்களுடைய காலேஜ் முழுவதுமே திரண்டு வந்து வாழ்த்தி வழி அனுப்பியது - கதை அருமையாக ஆரம்பித்து மெதுவாக அவர்களின் பூர்வ ஜென்ம வாழ்க்கைக்கு அழைத்து சென்றது . சொந்தங்கள் ஒரு தொடர் கதை , முடிவே இல்லாதது என்பதை எடுத்துக்காட்டவே அவர்களின் முந்தய பிறவியின் தொடர்பை நமக்கு தெளிவு படுத்துவார்கள் . கதையுடன் நாமும் சற்றே பின்னோக்கி செல்கிறோம் -----
கண்ணன் , கோபியாக படகு ஓட்டும் பணியில் இருக்கிறான் - அவனின் உள்ளம் ராதாவை விரும்பிகின்றது - தடையாக வருவது அவர்களின் ஜாதி , அந்தஸ்து ---- இதன் நடுவில் கண்ணை gowri என்னும் பெண் , கண்ணனின் ஊரை சேர்ந்தவள் ஒருதலையாக காதலிக்கின்றாள் - கண்ணன் ராதாவை தானே விரும்புவான் !!
ராதாவின் மாமா கெளரியின் அழகில் மயங்கி அவளை அடையும் முயற்சியில் , கண்ணனால் தோல்வியை தழுவிகின்றார் . ராதாவும் சந்தர்ப்ப வசத்தினால் வேறு ஒருவனை ( ஸ்ரீகாந்த்) திருமணம் செய்துகொள்கின்றாள் - ராதாவின் திருமணம் வெகு நாட்கள் தங்க வில்லை - விளைவு - ராதா ஒரு விதவையாகி விடுகின்றாள் - கண்ணன் - ராதா உன்னதமான உறவை ஊர் ஏற்றுக்கொள்ளவில்லை - முடிவு அவர்களின் முடிவுடன் ஒத்துபோகின்றது - இருவரும் இன்னும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால் மீண்டும் கண்ணன் - ராதாவாகவே பிறக்க விரும்பினர் - அவர்கள் விருப்பம் நிறைவேறியது ---- சுபம்
தொடரும்
ப்ராப்தம் முழு நீள படம் கிடைக்கவில்லை - கிடைத்தவுடன் பதிவிடுகிறேன் - அது வரை இதன் ஹிந்தி version - Milan -1967 பார்க்கலாம் - இதன் கலர் இந்த படத்திற்கு ஒரு வெற்றியை தந்தது - இந்த NT தந்த அறிவுரையை சாவித்திரி கேட்டுருந்தால் , படத்தின் ப்ராப்தம் வேறு விதமாக அமைந்திருக்கும் ...
ப்ராப்தம் - அலசல் இத்துடன் முடிவடைகிறது - அடுத்த அலசல் - காவல் தெய்வம் - பிறகு பேசும் தெய்வம் ----- பதிவுகளை பொறுமையாக படிப்பதற்கு என் மனமார்ந்த நன்றிகள் ---
அன்புடன் ரவி
:):smokesmile:
http://youtu.be/zYNqF3koI7M
Mr Ravi
It is nice to see your reviews on Praptam and do continue
your good work.
Mr Murali Sir,
Thanks a lot for your quick response on Santhippu. It shows NT's BO Power once again
and it is a fitting reply to those who are propagating later part movies of NT will not
succeed well.
Regards
காவல் தெய்வம்
நம்மில் பெரும்பான்மையோர் கிடைக்க முடியாத வாழ்க்கைக்குத்தான் அதிகமாக அஸ்திவாரம் போடுகிறார்கள் .
கிடைத்த வாழ்க்கையை வெகு சீக்கிரமாக தொலைத்து விடுகின்றோம் - தேடி அது திரும்ப கிடைக்கும் சமயத்தில் வாழ்க்கையும் முடிந்து விடுகின்றது - இந்த இடைப்பட்ட நேரத்தில் , நாம் தான் எல்லாமே என்ற எண்ணம் வேறு !! - பல கற்பனைகள் நமக்குள்ளேயே பிறந்து மடிந்தும் விடுகின்றது -
ஒரு அருமையான பாடலுடன் ' காவல் தெய்வத்தை " அலச விழைகிறேன் ---
" பொறப்பதும் போவதும் இயற்கை
சிலர் புகழ்வதும் இகழ்வதும் செயற்கை
பறப்பதும் பாய்வதும் வேட்க்கை
பணி முடிந்தபின் ஒய்வது வாழ்க்கை "
பச்சை இலை பழுத்துவிடும் மரத்தினிலே
அந்த பழுத்த இல்லை உதிர்ந்துவிடுமோ
சில தினத்தினிலே -----
இச்சையினால் வந்த இந்த வாழ்கையிலே
என்னை என்ன என்னமோ
செய்ய வைத்தான் வேகத்திலே
( கோரஸ் --பொறப்பதும் ---)
தாய் அணிந்து மகிழ்ததுவும் ஒரு கயிறு
என்னை தாலாட்ட வந்ததுவும் ஒரு கயிறு
தென்னை மரம் ஏறிடவும் ஒரு கயிறு - இன்று
தூக்கிலிட வருவதுவும் ஒரு கயிறு
( கோரஸ்- பொறப்பதும் ---)
ஏறாத மரங்களே இல்லை ஐயா
எதிர்வரும் தூக்கு மரம் ஒரு துரும்பே ஐயா
மாறாத தீர்ப்பு அவன் தீர்ப்பேனையா
அதை மாற்ற வேறு தீர்ப்பு உண்டோ சொல்லுங்க ஐயா
(தனி குரல் -பொறப்பதும் )
Dear Sir,
I extend my sincere thanks for your good wishes. Our N.T. God was my inspiration. Now I'm looking for our legend photo to have it my house (Big) so that everyday i look at N.T. before leaving for my work.
Again thank you very much.
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Sir,
Truly touched by your good wishes and liked the way you have put the last sentence. I must say and admit that all our N.T. fans are very intelligent and intellectual the way they present our N.T. articles and photo's are high standards and it is on par with any standards.
Thank you again for your legal wishes!!
JAIHIND
M. Gnanaguruswamy
Dear Mr. RKS,
Many thanks for your good wishes, infact i as overwhelmed by the congratulations messages from all our beloved fans. I must say all our N.T. fans wishes are blessings for me and i feel i was blessed by the GOD N.T.
Thank you again!
JAIHIND
M. Gnanaguruswamy
தற்போதைய தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா அவர்கள் நடிகர் திலகம் சிவாஜிகணேசனை 1967 ம் ஆண்டு பொம்மை ஏடுக்காக நேர்காணல் செய்த வேளையில்
ஜெயலலிதா:சின்ன வயசிலே நீங்க நாடக மேடையில் நடிக்க ஆரம்பிச்சீங்க-இல்லையா?அப்போ ஏதாவது நினைச்சதுண்டா.அதாவது எதிர்காலத்தை பற்றி.இப்படி ஒரு நடிகரா வருவோம்னு நினைச்சதுண்டா?
சிவாஜி:இப்படி ஒரு நடிகனாகிவிடுவேன்னு கனவுகூட கண்டதில்லை.நடிக்க வேண்டும்கிற ஒரே ஆர்வம் தான் என்னை மேடைக்கு துரத்திச்சு தவிர,வருங்காலத்தைப் பற்றியோ,எதிர்காலத்தைப் பற்றியோ நினைக்க முடியாத நிலை.அப்போது அடுத்தவேளை சோத்துக்கே என்ன செய்யறது?எங்கே போறது என்ற நிலையில் எதிர்காலத்தைப் பற்றி நான் நினைக்கலே.அதுக்கு நேரமே கிடைக்கலேன்னு சொல்வேன்.
ஜெயலலிதா:நடிகர்கள் அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளவேணும்னு நீங்க நினைக்கிறீங்களா?அப்படி நடந்தால் தங்களது தொழிலுக்கும் அரசியலுக்கும் சமமான வகையில் பணியாற்ற முடியும்னு நினைக்கிறீங்களா?
சிவாஜி:அரசியல் வேறு,நடிப்பு வேறு.நடிகனாக இருப்பவன் நடிப்புக்குத்தான் முதலிடம் தரவேணும். நான் ஒரு அரசியல் கட்சியில் இருப்பதால் நான் முழுக்க முழுக்க அரசியலிலேயே இருக்க வேண்டும்னு அந்த கட்சியும் விரும்பாது. ஆனால் கட்சியில் இருப்பதாலே சில கடமைகள் அவனுக்கு உண்டு.சில கடமைகளை அவனிடமிருந்து எதிர்பார்க்கவும் கட்சிக்கு உரிமை உண்டு.உதரணமா எனக்கு இரண்டுமாசம் ஓய்வு கிடைக்குதுன்னு வச்சுக்குவோம்.ஒரு மாசம் நான் ஓய்வு எடுத்துக்கலாம்.ஒரு மாசம் கட்சிக்காக உழைக்கலாம். ஆனா கட்சி வற்புறுத்தாது.எப்பவும் வரலாம், போகலாம். அதனால கட்சி,நடிப்பு இரண்டுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. அது வேறு,இது வேறு.
ஜெயலலிதா:தமிழ் படங்கள் இப்போ முன்னேறியிருப்பதா நினைக்கிறீங்களா?அல்லது தரம் குறைந்து விட்டதாக எண்ணுகிறீர்களா?
சிவாஜி:எல்லாத் துறையிலும் நிச்சயமாக முன்னேற்றம் அடைஞ்சிருக்கு. அதேசமயம் சில படங்கள் மக்களது ரசனையை குறைச்சிடும் போலிருக்கு. இந்த மாதிரிப் படங்கள் நூற்றுக்கு இருபத்தஞ்சு இருக்கும். ஆக நாம் மேலே ஏறினாள்,இந்தப் படங்கள் கொஞ்சம் நம்மை கிழே இழுத்து விட்டுடுது.
ஜெயலலிதா:மிகுந்த திறமைசாலிகளுக்கும் சிலசமயம் அவங்க மேற்கொண்டு இருக்கும் தொழிலிலேயே சவாலாக சில விசயங்கள் முளைச்சிடும். அதுபோல சிறந்த நடிகரான உங்களுக்கே,சவாலா இருந்த வேஷம் எது?
சிவாஜி:நல்ல கேள்வி.கப்பலோட்டிய தமிழனாக நடிச்சேனே,அதுதான் உண்மையிலேயே எனக்கு சவாலாக இருந்த வேடம்.ஏன்னா கப்பலோட்டிய அந்த பெருமகனாரை நேரில் பார்த்த பலர் இன்னைக்கும் நம்மோடயே இருந்துக்கிட்டிருக் காங்க. கதைக்குள்ள வரும் பாத்திரங்களை ஏற்று நடிப்பது சுலபமான காரியம்.ஆனால் நமது வாழ்க்கையில் சந்தித்த,அதுவும் சமீப காலம் வரைக்கும் இருந்த ஒரு பெரிய மனிதரைப் போல நடிக்கிறோம் என்று சொல்றபோது,அந்த நடிப்பை எல்லோரும் ஏத்துக்கணும். அதிலே மாறுபாடு எழக்கூடாது.பெரியார் அவங்களைப் போல நடிக்கிறோம் என்றால்,பாக்கிறவங்க 'பெரியாரைப் பார்ப்பதுபோலவே இருந்ததுன்னு சொல்லணும்.அப்போதான் நடிப்பு பூரணத்துவம் பெரும்.அந்த மாதிரியான ஒண்ணுதான் இந்தக் கப்பலோட்டிய தமிழன் வேஷம்.இதில் நான் நடிச்சதை பார்த்துட்டு,அந்தப் பெரியவர் வ.உ.சி.யின் மகன் 'என் அப்பாவை நேரில் பார்த்ததுபோல இருந்தது' என்று சொன்னார்.ஒரு வெற்றியாகத்தான் நான் இதைக் கருதுகிறேன்.
ஜெயலலிதா:சில நாவல்கள் படிக்கிறோம்,கதைகளை கேட்கிறோம்.ஆஹா! அந்த மாதிரி வேஷம் நமக்கு வரக்கூடாதா?கிடைக்காதா?என்று நினைக்கிறோம்.அந்த மாதிரி நீங்க எதிர்பார்த்து நடிச்ச வேஷம் ஏதேனும் இருக்கா?
சிவாஜி:கட்டபொம்மன் வேஷம் அப்படிப்பட்டது.கட்டபொம்மன் கதையை தெருக்கூத்தா நான் பார்த்தேன்.நான் வீட்டை விட்டு நாடகத்தில் போய்ச்சேர தூண்டுதலாக இருந்ததே இந்த கட்டபொம்மன் கதைதான்.
ஜெயலலிதா:இப்போ புதுசா ஒரு பிரச்சினை தலை தூக்கியிருக்கு.முத்தக்காட்சிகளை அனுமதிப்பதா இல்லையான்னு?நீங்க என்ன சொல்றீங்க?
சிவாஜி:சே..சே..வெட்கக்கேடு.முத்தம் கொடுக்கிறதை காட்டவே கூடாது.முத்தம் கொடுக்கிறது மாதிரி நடிக்கணும்.மூடிக்காட்டுவதுதான் கலை.
பச்சையா உள்ளதை அப்படியே காட்டினா அது கலையாகாது.அதனால் முத்தம் கொடுப்பதையெல்லாம் திரையிலே காட்டக்கூடாது என்பதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
ஜெயலலிதா:உங்களுக்கு எவ்வளவோ விசிறிகள் இருக்காங்க.நீங்க யாருக்காவது விசிறியாக இருந்ததுண்டா?
சிவாஜி:ஓ!இப்பவும் நான் விசிறியாக இருக்கேன். பி.ஆர்.பந்துலு மேடையில் நடிச்சு வந்தபோது,நான் அவருடைய விசிறிகளில் ஒருவன்.ஹிந்தி நடிகை நர்கீஸின் விசிறி நான்.சார்லஸ் போயர் ரசிகன் நான்.
ஜெயலலிதா:உங்களுக்கு லதாவின் பாட்டு என்றால் ரொம்பவும் பிடிக்கும் போலிருக்கே?
சிவாஜி:என் தங்கையாச்சே பிடிக்காம இருக்குமா.அது மட்டுமா?சமீபத்திலே நான் ஒரு நியூஸ் கேள்விபட்டேன்.இண்டர்நேஷனல் லெவல்லே உலகம் பூராவும் ஒலிபரப்பப்ட்டு பாடகர்களின் வரிசையில் லதாவின் பாட்டுக்கள் நாள் ஒன்றுக்கு இருபது மணிக்கும் மேலே ஒலி பரப்பாகுதுன்னு சொன்னாங்க.உலகிலேயே எந்தப் பாடகிக்கும் இல்லாத தனி கவுரவம் என் தங்கச்சிக்கு இருக்கு.
ஜெயலலிதா:நீங்க நாடகங்களிலே நடித்து வந்த காலத்தில் சினிமாவுக்கு அடிக்கடி போவதுண்டா?
சிவாஜி:அப்ப மட்டும் என்ன?இப்பவும்ந்தான். மெட்ராஸ் சிட்டியிலே நான் பார்க்காத படமே ஓடாது. நேத்து ராத்திரிகூட ஒரு குப்பை படத்துக்கு நான் போயிட்டு வந்தேன்.
ஜெயலலிதா:அந்த மாதிரியான நாளிலே நீங்க ரொம்ப விரும்பி பலமுறை பார்த்த படம் எது?
சிவாஜி:ருடால்ப் வாலண்டினோ நடித்த 'தி ஷீக்' என்ற படம்.
ஜெயலலிதா:ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் சில சம்பவங்கள் மறக்கமுடியாததாக அமைந்துவிடும்.அந்த மாதிரி உங்க வாழ்க்கையிலே ஏதாவது நடந்திருக்கா?
சிவாஜி:எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் ஆசிய ஆப்பிரிக்க படவிழாவின்போது நடந்தது.அன்னிக்கு விழாவுக்கு வந்த படங்களின் ரிசல்ட் சொல்றாங்க.
நான் பின்னாலே உட்கார்ந்திருந்தேன். அங்கிருந்த வங்க எல்லாம் என்னை ஏதோ டெக்னீசியனு நினைச்சிருந்தாங்க.அங்கே வந்திருந்தவங்களெல்லாம் பெரியவங்க,உயரத்திலும் ஏழடி.
அங்கே பல பெரிய நாடுகளிலிருந்து பல கலைஞர்கள் கூடியிருந்தாங்க.நீதிபதிகள் எல்லோரும் வந்தாங்க.
கட்டபொம்மன் தான் சிறந்த படம்.கட்டபொம்மனா நடிச்ச நான்தான் சிறந்த நடிகன்னு சொன்னாங்க.என் பேரைச் சொல்லி கூப்பிட்டாங்க.நான் எழுந்து நின்னேன்.வாழ்க்கையில் நான் எதற்கும் சாதாரணமா மசிஞ்சு கொடுக்காதவன்.நடுக்காட்டில் புலி துரத்தி வந்தபோதுகூட அசையாமல் இருந்தவன்.
ஆனா அன்னிக்கு கெய்ரோவில் நடந்த அந்த சம்பவம் என்னை அசத்திட்டது.என் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பத்மினி என்னை தாங்கிப் பிடிச்சிட்டாங்க.இல்லாட்டி நான் நிச்சயம் விழுந்திருப்பேன்.நான் என்னையே மறந்து உணர்ச்சி வசப்பட்டது அந்த ஒரு நாள்தான்.
isi முத்திரை உள்ள அக்மார்க் உலக நாயகன் சிவாஜி கணேசன் அவர்கள் !
காவல் தெய்வம் - தொடருகின்றது
01-05-1969
Director : K.Vijayan
NT யின் 128வது படம் - 1969 வது வருடமும் NT யின் பல வெற்றி படங்களை தந்தது . இந்த படத்தில் NTயின் நடிப்பை பார்த்து பாராட்டதவரே இல்லை . MGR ருக்கு பிடித்த படங்களில் காவல் தெய்வமும் ஒன்று . இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள் :
1. SV சுப்பையா பண முடையில் இருக்கும்போது அவருக்காக பணம் வாங்காமல் NT நடித்து கொடுத்தார் - இந்த படம் சுப்பையாவிற்கு பெரும் புகழும் , நல்ல லாபத்தையும் ஈட்டி தந்து - படங்களில் மிகவும் பவ்யமாக வருபவர்கள் எல்லாம் நிஜ வாழ்கையில் அப்படி இருக்க மாட்டார்கள் , நன்றியை நினைவு வைத்துகொண்டிருப்பார்கள் என்றும் சொல்ல முடியாது என்பதற்கு SV சுப்பையா ஒரு நல்ல எடுத்துகாட்டு
2. படத்தின் கதாநாயகன் சிவகுமார் , அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருகின்றார் : " நான் தான் ஹீரோ - கற்பூரம் அணைத்து சத்யம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் - வரும் சில காட்சிகளிலே சிவாஜி எல்லோரையும் சாப்பிடுவிடுவார் - இதே மாதிரி பல படங்களில் என்னை இல்லாமல் செய்து விடுவார் - அவருடன் படத்தில் இருகின்றோம் என்ற ஒரு சந்தோஷமே என்னக்கு போதும் !"
3. சிவாஜியுடன் படத்தில் இருந்த விறு விறுப்பும் படம் முடிவதற்கு முன்பே முடிந்துவிடும் .
4. ஒரு ரசிகர் இந்த படத்தை பார்த்துகொண்டிருந்தார் - சிவாஜியை தூக்கிலிடும் காட்சி - அத்துடன் பலர் அழுதவண்ணம் எழுந்து சென்று விட்டனர் - சில பேர்களே இருந்தனர் - அந்த ரசிகர் அவர்களிடம் - ஏன் கிளம்பவில்லை என்று கேட்டதிற்கு - அவர்கள் சொன்ன பதில் வியப்பானது - நாங்கள் இந்த theatre இல் வேலை செய்பவர்கள் - நீங்கள் பண்ணிய அதிர்ஷ்ட்டம் நங்கள் செய்யவில்லை என்றனர் .
5. பாடல்கள் மிகவும் அருமை , வசனம் ஜெயகாந்தனுடையது - இந்த படத்திலும் NT க்கு ஜோடி இல்லை .
6. நம்பியார் நல்லவராக நடித்த சில படங்களில் இதுவும் ஒன்று
7. சிவாஜியின் மரம் ஏறும் அழகை இன்று முழுவதும் பார்த்துக்கொண்டே இருக்கலாம் - அவருக்கு வெறும் 5நிமிடங்கள்தான் பயிற்சி கொடுத்தார்களாம் - டூப் போட NT மறுத்துவிட்டார்
தொடரும்
ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதனாக சாதித்து, கன்னட மக்களின் மனதில் என்றும் நிலை கொண்டிருக்கும் திரு ராஜ்குமார் அவர்களை வீரப்பன் பிடியில் இருந்து ஒரு போன் கால் மூலம் அறிவுரைத்து விடுவித்த நம் நடிகர் திலகம்.
அதன் நன்றிகடனாக நடிகர் திலகத்தால் உயிர் பிழைத்து விடுதலை ஆன உடன் தமிழகம் வந்து, நடிகர் திலகத்தை மட்டுமே கண்டு கண்ணீர் மல்க நன்றி கூறி அடுத்த விமானத்தில் பெங்களூர் சென்ற திரு.ராஜ்குமார் அவர்கள்.
ஒரு உயிரை இரண்டு அரசாங்கம் கூட காப்பாற்ற யோசித்த ஒரு விஷயத்தை, திரு நக்கீரன் மூலம் அறிந்து தக்க தருணத்தில் வீரப்பனுக்கு இப்படி நடப்பது முறையன்று என்று நடிகர் திலகம் அறிவுரைத்து வீரப்பன் மனத்திலும் கருணை தோன்றசெய்து அதன் மூலம் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டது மனசாட்சி உள்ள மக்களும் அறிந்த ஒரு விஷயம்.
இது தான் உண்மையான சாதனை !
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்பதை மீண்டும் நிரூபித்தவர் தமிழகத்தின் பெருமையாம் நம் நடிகர் திலகம் அவர்கள்.
ஒரு அரசாங்கம் செய்ய முடியாததை தனி ஒரு மனிதனாக சாதித்து, கன்னட மக்களின் மனதில் என்றும் நிலை கொண்டிருக்கும் திரு ராஜ்குமார் அவர்களை வீரப்பன் பிடியில் இருந்து ஒரு போன் கால் மூலம் அறிவுரைத்து விடுவித்த நம் நடிகர் திலகம்.
அதன் நன்றிகடனாக நடிகர் திலகத்தால் உயிர் பிழைத்து விடுதலை ஆன உடன் தமிழகம் வந்து, நடிகர் திலகத்தை மட்டுமே கண்டு கண்ணீர் மல்க நன்றி கூறி அடுத்த விமானத்தில் பெங்களூர் சென்ற திரு.ராஜ்குமார் அவர்கள்.
ஒரு உயிரை இரண்டு அரசாங்கம் கூட காப்பாற்ற யோசித்த ஒரு விஷயத்தை, திரு நக்கீரன் மூலம் அறிந்து தக்க தருணத்தில் வீரப்பனுக்கு இப்படி நடப்பது முறையன்று என்று நடிகர் திலகம் அறிவுரைத்து வீரப்பன் மனத்திலும் கருணை தோன்றசெய்து அதன் மூலம் ராஜ்குமார் விடுவிக்கப்பட்டது மனசாட்சி உள்ள மக்களும் அறிந்த ஒரு விஷயம்.
இது தான் உண்மையான சாதனை !
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது என்பதை மீண்டும் நிரூபித்தவர் தமிழகத்தின் பெருமையாம் நம் நடிகர் திலகம் அவர்கள்.
Attachment 3161
பார்த்ததில் பிடித்து -12
ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு எழுதுவதில் மிக்க மகிழ்ச்சி
வேலை பளு காரணமாக எழுத முடியவில்லை மனிக்கவும்
எழுதாத இந்த 10 நாட்காளில் கிட்ட தட்ட 7 நடிகர் திலகத்தின் படங்களை பார்த்தேன் ஏற்கனவே பார்த்த படங்களையும் மீண்டும் ஒரு முறை பார்த்தேன் , இந்த 7 படங்களை பற்றி தான் அடுத்த பார்த்ததில் பிடித்ததில் எழுத உள்ளேன்
குடும்ப கதைகளில் அதுவும் 1978 முதல் 1980 க்கு பிறகு நடிகர் திலகம் கலக்கிய படங்களை பற்றி தான் அடுத்த சில பதிவிகள்
அதில் முதலில் நான் எழுத போகும் படம்
1980 ல் வந்த ரிஷிமூலம்
இந்த பார்த்ததில் பிடித்தது series ல் முதலில் நான் எழுதின முதல் படம் கவரிமான் , அந்த படம் தான் அன்றைய இளம் இயகுன்னர் SPM டைரக்ட் செய்த முதல் படம்
சிவாஜி சார் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று கவரிமான் . முதல் படம் நல்ல குடும்ப சித்திமாக அமைந்த போதும் மிக பெரிய வெற்றியை பெறவில்லை (எல்லாம் இருந்தும் , ஏன் எப்படி )
ஒரு சின்ன கேப் க்கு பிறகு SPM மற்றும் நடிகர் திலகம் இருவரும் கை கோர்த்து நம் பார்வைக்கு கொடுத்த படம் த்ஹன் இந்த ரிஷிமூலம் . இந்த கூட்டணிக்கு பக்கபலம் மகேந்திரனின் இயல்பான கதை வசனம்
இந்த படம் முதலில் சேஷாத்ரி அவர்களால் நாடகமாக நடத்து பட்டு வந்தது , இந்த படத்தின் கதை , கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள் ,15 வருடம் கழித்து மீண்டும் சந்திகிறார்கள் , பிரிந்த இருவரும் எப்படி மீண்டும் சேர்ந்தார்கள் என்பதே கதை .
EGO என்ற மூன்று எழுத்து தான் மனுஷனின் வாழ்கையை புரட்டி போடுகிறது.
மிக பெரிய போலீஸ் அதிகாரியாக நம்ம சந்தோஷ் (சிவாஜி சார்) , மிகவும் கண்டிப்பான , நேர்மையான அதிகாரி . அவரின் கடந்தகாலம் அவரை பயமுறுத்துகிறது , அதற்கான காரணம் பின்னாடி தெரிய வருகிறது
முதல் காட்சியில் அவர் அறிமுகம் ஆகும் பொது , அவர் பீலிசிவதை கண்டிக்கும் விதத்தில் என்ன ஒரு மிடுக்கு , முன்னாடி பார்த்த தங்கபதக்கத்தின் சாயல் கொஞ்சம் கூட இல்லையே (எப்படி இவரால் மட்டும் இப்படி முடிகிறது )
SP சௌத்ரி ஒரு பரம்பரை பணக்கார் , போலீஸ் அதிகாரி , சந்தோஷ் வாழ்க்கையில் அடி பட்டு , மிதி பட்டு , போலீஸ் அதிகாரி ஆனவர் அந்த வித்தியாசத்தை தான் அவர் காட்டி இருப்பார்
அந்த காட்சியில் அவர் கத்தி முடித்ததும் , அவர் cigarette யை பத்த வைக்கும் ஸ்டைல் இருக்கே , அதுவும் ஓவர் emotional ஆன உடன் அவர் கண்கள் கலங்கி ,yellowish -red கலர் ல் தெரியும் பாருங்கள் chanceless
இப்படி பட்ட நபரின் மனைவி கோகிலா (KR விஜயா ), நடிகர் திலகத்தின் மிகவும் ராசியான ஜோடிகளில் ஒருவர் , அடியேன் வாணிஸ்ரீ மற்றும் ஜெயலலிதா ஜோடியின் ரசிகன் ,ஊட்டி வரை உறவு மட்டும் விதிவிலக்கு
கோகிலா ஒரு பணக்கார பெண் , ஒரு சின்ன தவறு நடந்தாலும் அதை சகிக்க முடியாத நபர் , இவரை பார்க்கும் பொது எனக்கு கோபம் தான் வந்தது
இவரின் தந்தை மேஜர் ,எதை பற்றியும் கவலை படாத கேரக்டர்
இந்த மூவரின் mentalities படி தான் முதல் பாதி கதை நகர்கிறது
முதல் பாதியில் நடிகர் திலகமும் , KRV காட்சிகள் , படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்துகிறது , மனைவி உடன் தனியாக பேசி கொண்டு இருக்கும் பொது , மகன் எழுந்து விடுவதும் , நடிகர் திலகம் பார்க்கும் பார்வை இருகிறதே , சாக்லேட் குடுத்த குழந்தையிடம் அதை பிடுங்கி விடும் பொது அது காடும் பாவத்தின் ஆச்சு அசல்
முந்தின சில படங்களில் அவர் உடை அவர் வயதுக்கு உகுந்தது போல் இல்லை என்று சொல்லுவோர் பல நபர்கள் , இந்த படத்தில் அவர் make up
மற்றும் உடைகள் டாப் , அதும் அவர் நைட் டிரஸ் simply superb , இதை போன்ற உடைகளை தேடி தேடி அலுத்து விட்டேன் , சமிபத்தில் சென்னைக்கு வந்த பொது கூட பல இடங்களில் தேடினேன் , கிடைக்கவே இல்லை
அப்போது அவர் பாடும் பாடலும் நல்ல situation சாங் , இளையராஜா , கண்ணதாசன் கூட்டணிக்கு கேட்க வேண்டுமா ஜமாய்த்து இருப்பார்கள் , இன்னும் ஒரு காலத்தால் அழியாத பாடல் பற்றி பிறகு எழுதி உள்ளேன்
எந்த ஒரு ரகசியமும் ஒரு நாள் வெளி வந்தே தீரும் , அப்படி தான் அந்த ரகசியமும் வெளியே வர , குடும்பத்தில் புகம்பும் (அந்த காரணம் மிகவும் சின்ன காரணம் )
பல குடும்பத்தில் மனைவி கத்த ஆரம்பித்த உடன் கணவர் silent ஆகி விடுவார் , அதற்க்கு காரணம் 100/90 % henpecked nature கிடையாது , இருவரும் கத்தினால் வீடு ரெண்டாவது உறுதி , அதை தடுக்க தான்
தன் கணவர் படிக்கிற வயதில் செய்த ஒரு சின்ன தப்பை பெருதாக ஊதி விட்டு KRV சண்டை போடும் பொது , நடிகர் திலகம் சாரி சந்தோஷ் கெஞ்சும் காட்சி , அவர் பேசும் வசனம் , இயல்பு , மிகவும் எதார்த்தம் .
எதை பற்றியும் கவலை படாத தன் மாமனார் மேஜர் தன் மருமகன் கூட பேசும் காட்சியில் , தன் மீதே அணைத்து தப்பும் என்று சொல்லும் இடமும் , தன் மனைவியை விட்டு குடுக்காமல் பேசும் போதும் , என் கண்ணில் , இதை எழுதும் பொது தெரிகிறது
தன் மனைவி கேட்ட விவகாரத்தை , அவர் தந்து விட்டு , பிள்ளையும் தானே வளர்த்து விடும் வாய்ப்பு இருந்தும் , முதலில் அதை தன் மனைவி கிட்ட கொடுப்பதும் , அவர் மறுத்த பின் , அந்த பொறுப்பை அவரே எடுத்து கொண்டு சிறப்பாக முடிப்பதும் , இடையில் ரீனா ரூபத்தில் ஒரு சின்ன ட்விஸ்ட் இருந்தும் அதை அவர் லாவகமாக handle செய்வதும் , simply hats off , அதுவும் அவர் மலையாளம் சம்சாரிக்கும் காட்சி பார்த்த பொது சகலகலா வல்லவனே என்று ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது
பிரிந்த ஜோடிகள் மீண்டும் சந்திக்கும் பொது இருவரும் காட்டும்
முக பாவனைகள் இருகிறதே - ஜாம்பவான்கள் (இருவரும் தான் ) கலக்கி இருப்பார்கள்
டைரக்டர் SPM இருவரிடமும் நீங்கள் பேச கூடாது , reactions மட்டும் தான் என்று சொன்னால் எத்தனை நடிகர்கள் இப்படி சிறப்பாக நடிப்பார்கள்
நம்மவர்க்கு இது சர்வ சாதாரணம்
அந்த காட்சி
இவரின் (NT ) கண் close up தெரியும் பொது , KRV வின் கண் காட்ட படும் , NT வின் வாய் துடிக்கும் பொது , KRV வின் காது காட்ட படும் ,
wonderful சீன்
இந்த படத்தில் NT மகனாக வருபவர் சக்ரவர்த்தி நன்றாக நடித்து இருந்தாலும் கொஞ்சம் ஓவர் action என்றே தோன்றியது , இன்று பின்னணி குரல் கொடுப்பதில் கோடி கட்டி பறக்கிறார்
KRV வின் நடிப்பு மட்டும் என்ன , கர்வம் பிடித்த பெண் என்று சொல்லி விட அதிகமாக சான்ஸ் இருந்தும் , ஒரு சின்ன நூல் அளவு வித்தியாசம் காட்டி அதை வித்தியாச படுத்தி காட்டி இருப்பார் , குறிப்பாக அவர் மகன் தான் டென்னிஸ் பிளேயர் அமர்நாத் என்று தெரிந்து அவர் தவிக்கும் காட்சி , தன் மகனை சந்திக்க அவர் வீட்டுக்கு வரும் பொது , சிவாஜி சார் அவரை மிகவும் கூலாக deal செய்யும் காட்சியும் , கொஞ்சம் கூட கோபம் இல்லாமல் , தன் மகன் வளர்ப்பு சரி தான் என்பதை எடுத்து காட்ட செல்லமாக டீஸ் செய்யும் காட்சி , KRV வின் நிலைமை யை நினைத்து கொஞ்சம் சிரிப்பு தான் வருகிறது
அதே புருஷனின் தயவு தேவை படுகிறது கோகிலாவுக்கு , தன் மகன் தன்னை அங்கீகரிக்க , வாழ்கை என்ற வட்டம் , மேலே கிழே செல்லும் என்பதற்கு ஒரு அழகான எடுத்துகாட்டு.
அதுவும் , நடிகர் திலகம் அந்த காட்சியில் , தன் மனைவியை தன் மகன் அலட்சிய செய்து விட்டு வரும் பொது கண்டிக்கும் காட்சி , தன் மனைவியை போலே தன் மகனும் சினத்தினால் வாழ்கையை தொலைத்து விட கூடாது என்பதை பார்வையாளர்களுக்கு உணர்த்துகிறது
இதை படிக்கும் நண்பர்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள்
தன் மாணவிக்கு advice செய்யும் காட்சியில் நடித்த நடிகையின் பெயர் என்ன என்பதை யாரவது தெரிந்தால் சொல்லுங்கள் , அவரை பல MGR படங்களில் பார்த்து இருக்கேன் , குறிப்பாக , ரிக்க்ஷகாரன்(காலேஜ் principal ) , உழைக்கும் கரங்கள் போன்ற பங்களில் பார்த்து இருக்கேன்
கடைசியாக ஐம்பதிலும் ஆசை வரும் என்ற காலத்தினால் அழியாத பாடல்
அந்த பாடல் படபிடிப்பு நடந்த இடம் ஒரு பெரிய மலை உச்சி , இருவரையும் நடத்தியே அழைத்து சென்று படம் பிடிக்க பட்டது , சிவாஜி சார் செல்லம்மாக சலித்து கொண்டாராம்
அடுத்த நாள் SPM மற்றும் பாபு (ஒளிபதிவாளர் ) இருவரும் அடிவாரத்தில் ஒரு காட்சி , பிறகு 10 அடி உயரத்தில் ஒரு காட்சி , 20 அடி உயரத்தில் ஒரு காட்சி என்று எடுத்து , மலை உச்சிக்கு அழைத்து சென்று விட்டார்கள்
இதை அறிந்து கொண்ட நடிகர் திலகம் இருவரையும் பார்த்து திருட்டு பசங்களா , என்னை இப்படியே போக்கு காட்டி உச்சிக்கு அழைத்து வந்து ஷூட் பண்ணிடிங்க என்று செல்லமாக கோபித்து கொண்டு பின்பு location யை பார்த்து பாராட்டினார் என்று SPM , AVM தந்த SPM என்ற புஸ்தகத்தில் எழுதி உள்ளார்
இந்த இடம் கேரளாவில் இருக்கும் KRV க்கு சொந்தமாக பாக்டரி பக்கத்தில் எடுக்க பட்டது , KRV அணைத்து உதவியும் செய்தார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்
இந்த படம் பார்த்து விட்டு காபி குடித்த பின் ஐஸ் வாட்டர் குடிக்க பழகி உள்ளேன் நன்றாக உள்ளது
தென்னை மரம் ஏறி , வானத்தின் எல்லையில் தன் மகளுக்காக வீடு கட்டி , இன்னிசை பாடிகொண்டுஇருந்தான் அவன் - மகள் தான் அவனுடைய காவல் தெய்வம் - அவள் தான் அவனது வாழ்க்கை - அவள் சந்தோஷம் தான் அவன் தினமும் உண்ணும் உணவு - கவலைகளை மரம் ஏறும் போது அங்கேயே விட்டு விட்டு தினமும் மகிழ்ச்சியை மட்டும் வீட்டுக்கு கொண்டு வருவான் - உலகம் அவனுடைய மகள் மூலம் அவனை சுற்றி சுற்றி வட்டமிட்டது அவனும் தென்னை மரமும் , அவளும் தான் தான் உலகம் என்று வாழ்ந்தான்
விதி அவன் வாழ்வில் சற்றே விளையாட ஆசைப்பட்டது - அதனுடைய விலையை பாவம் அவனால் கொடுக்க முடியவில்லை - உபசரிக்கப்பட்ட நண்பர்கள் அவன் இல்லாதபோது அவனுடைய மகள் மூலம்அவனுக்கு இருந்த கனவுகளை எல்லாம் அழித்தார்கள் - மகளின் கதறலை கேட்ட அவன் - அவளது வாழ்வை சூறையாடிய இருவரில் ஒருவனை பிடித்து தேங்காயை சீவுதுபோல தலையை சீவினான் - சிறைக்கு ஒரு அடிபட்ட சிங்கமாக சென்றான் - விதி அவனக்கு சற்றே கருணை காட்டியது - அவன் மகளை மானபங்கம் செய்தவனை சிறையில் பார்க்கிறான் - இரத்தம் கொதித்தது - அவனை கொன்றால் தான் மகளுக்கு சாந்தி கிடைக்கும் என்று அந்த வாய்ப்புக்காக காத்திருகின்றான் -
சிறைக்கு அருகில் ஒரு தெரு கூத்து - ஹிரன்ய கசிபுவின் கதை - நரசிம்மமாக சிறையின் கம்பிகளை உடைத்துக்கொண்டு அந்த கயவன் இருக்கும் அறையில் நுழைகிறான் - அந்த கயவனின் கதை முடிகின்றது - மிகவும் மன நிம்மதியுடன் தூக்கு மேடையை சந்திகின்றான் - அது அவனை அவனுடைய மகளிடமும் , மனைவியிடமும் அவனை கொண்டு சேர்க்கிறது - நல்ல நடிப்பு இதனுடன் முடிவடைவதால் - மிஞ்சியுள்ள படத்தை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை
தொடரும்
நடிப்பு என்றால் இதுதான் - ஒரு கனவு சிதைத்து போது வரும் கோபம் , அருமை மகளை இழந்த சோகம் - மனித வடிவில் திரியும் மிருகங்களை கொல்ல துடிக்கும் வேகம் - அப்பப்பா சொல்ல வார்த்தைகள் இல்லை-------
http://youtu.be/mEy_1K15MRE
நம்பியார் நல்லா பேசினாலுமே வில்லனாக தான் காட்சி தருவார் - தூக்கில் போடபோகும் செய்தியை அவர் சிவாஜி க்கு சொல்லும் காட்சி - கல்லும் கரையும் ----------
http://youtu.be/v_PpMbGf-vs
Dear Ravi Sir,
Superb write ups of Praptham , Kaaval deivam( both movies, I did not watch , will watch soon ,kudos to your writings), Paper cuttings of Moondru Deivangal rare one, I appreciate your sincere work
சிங்கத்திற்கு சிங்கத்தின் தீனியை போட்ட படம் --------
http://youtu.be/Iz4sfMxKA5k
அலசல் முடிவுபெற்றது
அன்புடன் ரவி
:):smokesmile:
இனி பேசும் தெய்வம்
http://i818.photobucket.com/albums/z...psecf680a0.jpg
Dear RKS,
Can you kindly translate your context in English, though I'm Tamil speaking Indian very difficult to read our language as i learnt kannada here in Bangalore.
JAIHIND
M. Gnanaguruswamy
இன்று ஒரு உன்னதமான நாள் - இனிய நாள் - மஹாசிவராத்திரி - எல்லோரும் இந்த அருமையான நாளில் இறைவனை வழிபாட்டு எல்லா இன்பங்களும் பெற வேண்டும் என்று இறைவனை வணங்கிவிட்டு - nt படங்களில் இடம் பெற்ற சிவனை புகழும் சில படங்களையும் , பாடல்களையும் இங்கு உங்களுக்கு சமர்பிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் - அவர் படங்களை விட்டால் உவமை காட்ட வேறு யார் உள்ளார்கள் ? எந்த படம் அப்படிப்பட்ட சிறப்பை அடைந்துள்ளது ?
அன்புடன் ரவி
1972 ஜனவரி தமிழ் திரை உலகை திரும்பி பார்க்க வைத்த ஆண்டு.
ராஜா திரைப்பட ஜனனம் !
அதுவரை திரைஅரங்குகள் காணாத ஒரு வரவேற்ப்பு ! வெற்றி என்றால் அப்படி ஒரு வெற்றி !
வசூல் என்றால் திரைஅரங்குகள் காணாத அப்படி ஒரு மேலான வசூல் !
அதற்க்கு முந்தைய அனைத்து ரெகார்ட்களையும் முறியடித்து தேவி பாரடைஸ் திரை அரங்கில் புதிய ஒரு வசூல் சாதனை !
தொடர்ந்து 107 அரங்கு நிறைந்த காட்சிகள் - வசூல் ருபாய் 3,13,124.80 பைசா
Attachment 3162