பெருகுமன்றோ ஆனந்தம்
பேராசை இங்கு அனர்த்தம்
சின்ன சின்ன ஆசைகள்
திகட்டாத தேன் துளிகள்
Printable View
பெருகுமன்றோ ஆனந்தம்
பேராசை இங்கு அனர்த்தம்
சின்ன சின்ன ஆசைகள்
திகட்டாத தேன் துளிகள்
துளிகள் மெல்ல மெல்ல
உடலில் இறங்கிக் கொண்டிருக்க
அந்தப் பக்கம்
உடலில் சேர்த்திருந்த
இயந்திரமும்
எண்களைக் கூட்டிக் கொண்டிருந்தது
நம்பிக்கையுடன்
நம்பிக்கையுடன் நகரும் வண்டி
ஒரு காலத்தில் ராக்கெட் வேகம்
இன்றோ அதற்கு நத்தை சுபாவம்
நகர்கிறதுதானே பாதை தவறாமல்
தொடரட்டும் இந்த வண்டிப்பயணம்
ஆனந்த நிலையம் அடையும் வரை
அடையும்வரை முயல்வாய்நிதம் அயராமலே உளத்தில்
படைகள்பல நகரும்வகை பலவாயொலி எழுப்பி
நடையாய்மனக் கனவைமிக நயமாகவே செதுக்க
விடையாகவே வருமேமிக வெற்றியேஅதை உணர்வாய்
உணர்வாய் உறங்கும் உன் பலம்
அனுமன் தோளை சிலிர்த்தால்
சிரஞ்சீவியும் சுமையல்லவே
கையில் உள்ளது வெண்ணெய்
வெண்ணெய் எடுப்பதற்காக
மத்தைத் தயிர்ப்பாளத்தில் போட்டு
ர்ர் எனத்தாளத்துடன்
மத்தால் சுழற்றி
மேலெழுந்து வரும்
உதிரிப் பூக்களை பக்குவமாய்ச் சேர்த்து
அருகில் இருக்கும்
தண்ணீர்ப் பாத்திரத்தில் போடுவாள் பாட்டி..
கொஞ்சூண்டு
ஒரு கோலிக்குண்டு சைஸ்
கிடைக்கும் எனக்கு
அவளுக்கு மனமிருந்தால்..
இல்லையென்றால்
போடா..பட்சணம் பண்ணனும்
இருந்தாலும் அந்தக்
துக்கிணியூண்டு வெணணெய்
சுவையோ சுவை..
தாங்க்ஸ் பாட்டி என்றால் ஓ
போடா பெரிஸ்ஸா இங்க்லீஷ் பேசறான் என்பாள்..
இப்பொழுது
எவ்வளவோ முன்னேறி
ஃப்ரீஸரில் வைக்கும்
வெண்ணெய்க் கட்டிகள்
சுவையாய்த் தான் இருக்கிறது
பாட்டியின் பாசம் மட்டும்
மிஸ்ஸிங்க்..
மிஸ்ஸிங்க்..ஏதோ மிஸ்ஸிங்க்..
கச்சிதமாய் கலரிங்க் ஷேடிங்க்
நேத்து பண்ணிய த்ரெடிங்க்
பாத்து செய்த ஷாம்பூ வாஷிங்க்
புள்ளியாய் புருவ மத்தியில்
மம்மிக்காக பொட்டு ஸ்டிக்கிங்க்
கண்ணாடி சொல்லுது சம்திங்க்
தப்பாய் முகத்தை காட்டுது
செய்தேன் கொஞ்சம் ஸ்மைலிங்க்
நினைவில் நேற்றைய கிஸ்ஸிங்க்
அடடா அழகாய் முகத்தில் சம்திங்க்
பெண்ணாய் என்னை மாத்தி
இப்போ ஆனது முகம் முழு மதி
முழுமதி நீயென்றால் முகிலென நான்வந்தே
..மோகமாய் முத்திட்டு முழுவதும் அணைத்திடுவேன்
பழுதிலை என்றெல்லாம் பாவைநீ கேட்குங்கால்
..பதறினற் போல்நடித்தே பக்குவத்தைக் கூட்டிடுவேன்
வழுவுதல் தவறென்றே வாதிட்டுப் பேசுங்கால்
..வஞ்சியுன் இடைதொட்டே வாகாக இழுத்தபடித்
தழுவியே தக்கபடி சொல்வதற்குப் பார்த்தாலோ
..தயங்கியே நழுவுகிறாய் நியாயமிலை அடிபெண்ணே..!
அடிபெண்ணே ஆதங்கமேன்
உலகை எழுப்பும் சேவல்
அகங்காரம் அதன் கூவல்
பெட்டை நீயிடுவாய் முட்டை
பொறுமையாய் காப்பாய் அடை
இனத்தை காக்கும் உன் குணம்
அதற்கு துப்பில்லா ஆணினம்
அதனோடு ஏன் வீண் மோதல்
மோதலில் ஆரம் பித்தோம்
...மோகினி நானும் நீயும்
சோதனை யாக வந்த
...சூழலும் அந்த நேரம்
வேதனை தந்த பின்பு
..வென்றது நெஞ்சை அன்றோ..
காதலைக் கொண்டு விட்டோம்
..கடிமணம் செய்வ தெப்போ
எப்போ வருமென
ஏங்கி தவித்து
வாடி வதங்கி
வருந்திய பின்னே
வந்த மழையும்
விடாது பெய்ய
விடிய விடிய கொட்ட
அதுவும் வருத்தமே
பொல்லா மனக்குறை
கூட வரும் நிழலோ
நிழலோ நிஜமோ
எனத் தெரியவில்லை தான்..
கருகருவெனக் கூந்தல்
கண்களில் பளீர்
கொஞ்சம் வெளிர்சிவப்பு உதடு
முன்பு சேலை கட்டுவாய்
இன்றோ சுடிதார்..
ஆனால் எனக்கு வயதானது போல்
ஏன் உனக்காகவில்லை..
முகத்தில்
டன் டன்னாய் இளமை..
எப்படி
ஹாய் என்னை
என நான் ஆரம்பிக்க
உன்னிடமிருந்து சிரிப்பு..
தெரியும் அங்க்கிள்..
அம்மா சொல்லியிருக்கிறார்கள்..
சின்னதாய் வழியத் தான் முடிந்தது..
முடிந்தது ஆகிறது முடியாதது
முதுமையின் ஆதிக்கமாகிறது
பிடித்தது ஆகிறது பிடிக்காதது
பித்தும் பிடிவாதமும் கூடுது
பயணம் நெடுகிலும் தடைகள்
போராட்டம் மட்டும் தொடருது
தொடருது
கவலைகள்
சந்தோஷங்கள்
நினைவுகள்
வேதனைகள்
சுழன்று சுழன்று
சுழலாய்
தெரியவில்லை
என்று நிற்கும் என..
நிற்கும் என நினைத்த இடத்தில் நிற்கவில்லை ஊர்தி
விற்கும் என நினைத்த கடையில் விற்கவில்லை வடை
நினைப்பது நடக்காமல் போனால் மிஞ்சும் ஏமாற்றம்
நினைக்காமல் நடக்கும் பல அதிசயங்கள் யதார்த்தம்
யதார்த்தமென நானுமங்கு ஏதேதும் அறியாமல்
சதாயெதையோ நினைப்பதுபோல் அமர்ந்ததுஏன் அம்மானை?
சதாயெதையோ நினைப்பதுபோல் அமர்ந்ததுநீ இருந்தாலும்
சதாகாலம் தொடர்ந்துவரும் கதையதுவே அம்மானை?
கதாகாலட் சேபமிலை காதலது அம்மானை!
அம்மானை ஆடி
ஆலவட்டம் சுத்தி
கிளித்தட்டு தாவி
கண்ணாமூச்சியில்
களித்த காலத்திலே
கண்ட சொர்க்கம்
விரல் நுனி ஆடும்
ஆட்டத்தில் இருக்குதா
இருக்குதா என்று கேட்டால்
...இல்லைபோல் முகத்தைக் காட்ட
விறுக்கென விரல்கள் விரித்து
..வேகமாய்க் காட்டி அங்கே
நறுக்கென இருக்கும் மிட்டாய்
.. நயமுடன் சிரிக்க மேலும்
களுக்கென உந்தன் சிரிப்பு
..களிகொளும் மனதை என்றும்..
என்றும் பழசின் மதிப்பு பெரிசுதான்
எங்கோ சாலையை வெட்டி மராமத்து
அதனால் நடந்தது இணைய துண்டிப்பு
பாழாய் தோன்றின என் பொழுதுகள்
பழக்கம் மறந்த தோட்ட வேலைகள்
பழக இனிய குடியிருப்புவாசிகள்
நூலகத்திலெடுத்த கதை புத்தகங்கள்
பாழாய் போன புது பித்தான இணையம்
பிடுங்கி நட்டுவிட்டது வேறுலகில்
பொய்யான மாய சொர்க்கத்தில்
அம்மானை ஆடி, ஆலவட்டம் சுத்தி,கிளித்தட்டு தாவி, கண்ணாமூச்சியில் களித்த காலத்திலே கண்ட சொர்க்கம், விரல் நுனி ஆடும் ஆட்டத்தில் இருக்குதா..?
கவிதை..?
சூப்ப்ப்ப்ப்பர்..!
நன்றி, aregu! அதென்ன எடிஎம் அட்டையில் பணம் எடுத்த சாதனை? புரியலியே!
சொர்க்கம் கிடைக்க வேண்டி வாழ்வை
நரகமாக்கல் மனித மடமை.
-
கிறுக்கன்
மடமை என்றால் என்ன
ரசனை மாறிய காலத்தில்
புதுமை எடுக்கும் கோலத்தில்
கவிதை என்ற பெயரில்
கால் மொளச்ச ரங்கோலி
என முழங்க கேட்கையில்
மனம் உணரும் வெறுப்பு
மகிழ மறுக்கும் கிறுக்கு
கிறுக்கென்றாள் கண்களிலே கோபமதைத் தக்கவைத்து
..கீச்செனவே குளிர்குரலில் சொன்னதனைக் கேட்டபின்னர்
கிறுக்கென்றேன் உன்மேலே எதனாலே சொல்லிடவா
..கீற்றாகப் பிளந்திருக்கும் வெண்ணிலவுப் புன்னகையும்
விருப்பமுடன் தாளமுடன் அசைகின்ற பின்னலுடன்
..வீச்செனவே தெறித்தேதான் மிரட்டுகிற பார்வையுடன்
திரும்பவைக்கும் பேரெழிலும் மென்னடையும் என்னெஞ்சைத்
..தீண்டியதால் என்றாலோ காட்டுகிறாய் வக்கணையை..
வக்கணையை ஒழித்து வைத்து
வாயை இறுக மூடிக் கொண்டு
வந்த விருந்தினரை உபசரித்து
வழக்கமில்லா வழக்கமாயவள்
வருத்திக்கொண்டதை கண்டு
வெடிக்கப்போகும் எரிமலை
விளையப்போகும் விபரீதம்
விதிமுறைகள் மறப்பேனோ
மறப்பேனோ எனக்கேட்டால் ம்ஹூமில்லை..
..மயங்கவைத்த வார்த்தைகள்தாம் அறிவீர் நீரே
துறந்திடவும் நானுமொன்றும் புத்தனுமில்லை
..தூயவெண்ணம் கொண்டவசை என்றால் இல்லை
புறம்பேசும் மக்களென்றா அதுவும் இல்லை
..புன்சிரித்துப் பேசிநின்ற நண்பர் தாமே
சுரவுளறல் போற்சொன்ன வார்த்தை நெஞ்சில்
..சுடுகிறதே என்னாளும் என்செய் வேனே..
என்செய்வேன் என்றிருந்து நின்ற காலம்
..இளங்கன்றாய்த் துள்ளும்போது இருக்க வில்லை
வன்மமிகு நல்லுலக வாழ்க்கை தன்னில்
..வாகாகக் கற்றதிலும் இருந்தி டவில்லை
திண்ணமென எவரெனையும் இகழ வுமில்லை
..சீயென்றே சொல்லுமனம் இருந்த துமில்லை..
எண்ணமெனச் சொன்னவரை மாற்றங் கொள்ள
..எழுதவேணும் பலவிதமாய் அருள்வாய் வாணி..
வாணி என்றெந்தன் பேர் சொல்ல
வா நீ என்றுரிமையோடழைக்க
வாழ்வை என்னோடு பகிர்ந்திட
வாழ்த்தவேண்டும் உறவெல்லாம்
வாழை மரம் நட்டு மேடை கட்டு
விருந்துண்ண அனுப்பு அழைப்பிதழ்
அழைப்பிதழ் தரவே வந்த
...அழகியல் சற்று நாணி
வலைவிடும் கண்ணால் பேசி
..வாழ்த்திட வருக என்றாள்
கலைகளும் சிறப்பும் இன்னும்
..க்ன்னிநீ பெறுவாய் என்றேன்
நிலைத்திட நேரில் வந்தால்
..நினைவினில் இனிக்கும் என்றாள்..
இனிக்கும் என்றாள் அந்த பழக்காரி
இருந்தாலும் எனக்குள் அவநம்பிக்கை
இதற்குமுன் நானிருந்த என் மாளிகை
இகலோகம் காணா இனிப்புடை கனிகள்
இச்சையுடன் நான் உண்ட பழ வகைகள்
இன்னும் அழியாமல் ருசிக்குதென் நாவில்
நாவில் எழுதி விட்டு நங்கை சென்ற பின்னர்
பாவில் ஆரம் பித்தே பாங்காய்ச் சொன்ன வண்ணம்
மேவிப் பலவூர் சென்று மயக்கும் கவிதை நெய்தே
தூவினான் கவிமலர்கள் தூயவன் காளி தாஸே
காளி தாஸே மனம் கசந்து போவான்
இன்றவன் கவிதையும் கதையும் எழுதி
இலக்கிய ரசனையற்ற "மேதைகள்"தான்
மதிப்பெண் வழங்கும் நீதிபதிகளாய் இங்கு
அழைக்கப்படும் அவலம் நிலவுதல் கண்டு
கழுதைக்கு தெரிவதில்லை கற்பூர வாசனை
வாசனை தூக்கத் தூக்க
செண்ட் போட்டு க் கொண்டு
வருவாள் எதிர் ப்ளாட் ஆண்ட்டி..
ஆனால்
மிகப்பெரிய பீரோ
கட்டில்
மற்றும் பல பொருட்கள்
சுமந்து இறக்கி வைத்த
கூலியாட்கள்
கொஞ்சம் காப்பிச் செலவுக்குக்
கொடுங்க என்ற போது
முடியாது போப்பா கூலி மட்டும் தான்
என்ற போது
அவளது செண்ட்டின் மணம்
மறைந்திருந்தது..
மறைந்திருந்தது என்ன
அறிவாயா ஆண்மகனே
பிறந்த வீட்டை மாற்றி
பின்னுள்ள பெயரை மாற்றி
வாரிசுகளை பெற்றெடுத்து
கொடியுடை தொலைத்து
சுய விருப்பங்கள் மறந்து
பழைய நட்புகள் துறந்து
பம்பரமாய் என்றும் சுழன்று
பளிச்சென பொழுதும் நின்று
நட்ட இடத்தில் தழைத்து
அல்லும் பகலும் உழைத்து
அலுப்பும் களைப்பும் மறைத்து
பழகிய பல செலவை குறைத்து
உன் வீட்டை துலங்க வைக்கும்
உன்னவளின் உள்ளத்தின் உள்ளே
உள்ளது வெறும் சின்ன ஆசைகள்
அன்பான ஒரு வார்த்தை போதும்
ஆதரவாய் அரவணைப்பே தேவை
அறிவாய் பெண்ணின் பெருமை
போற்றுவாய் அவள் அருமை
அருமை என்றெல்லாம்
சட்டென்று
சொல்லமாட்டார் தாத்தா..
மைசூர்பாகென்றால் ஒரு விள்ளல்
லட்டு என்றால்
பிடிப்பதற்கு முற்பட்ட பூந்தி
காராசேவ், ஓமப் பொடி எல்லாம்
ஒரு குட்டி ஸ்பூன்
தட்டை பாதி மட்டும்
எது செய்தாலும்
சுவை தெரிய முதலில்
தந்தாக வேண்டும்
கொடுத்துப் பயத்துடன்
பார்க்கும் பாட்டிக்கு ஒரு
அலட்சியப் பார்வை
பின்
வரும் பலவிதமாய்..
உப்புக் கம்மி
உரைப்பு அதிகம்
இப்படியா கடக்குன்னு பண்ணுவா
பல் என்னாறது..
ஒரே நெய் திகட்டுது
சர்க்கரை கம்மி
என..
ஒரு நாளும் பாராட்டியதில்லை
பாட்டியை..
பாட்டிக்கு அதுவே போதும்
பிர்ம்மானந்தம்..
ஒரு நாள்
திடீர் நெஞ்சுவலியில்
சோபாவில் சாய்ந்தவர்
அருகில் வந்த பாட்டியிடம்
கொஞ்சம் கண்கள் குழறிப்பார்க்க
பேச்சு மட்டும் திடமாய்
“பாத்துண்டியேடி என்னை அருமையாய்..”
சொன்னார்…
போய்விட்டார் …
போய்விட்டார் பயந்து பணிந்த பாவையர்
தொழுவில் கட்டிய பசுக்கள் இங்கில்லை
வெருட்டி விழித்து விவாகரதத்தென்று
வீராப்பாய் மீசை முறுக்கினால் இன்று
ஆஹா எவ்வளவு எனக்கு ஜீவனாம்சம்
விட்டு விடுதலையாகி பறப்பாளே பூவை
பூவை அவள்விழியில் பொங்கிவிட்ட எண்ணமென்ன
..புதிதாய்த் துளிக்கின்ற நீர்த்துளியின் சாரல்கள்
பாவை கன்னத்தில் மெளனித்து இறங்குவதும்
..பார்வை வெகுதூரம் வானொட்டிப் பார்ப்பதுவும்
தேவை என்னவெனக் கேட்டாலும் கூறாமல்
..தென்னை மரமெனவே நிற்கின்ற நிலையதுவும்
நாவைத் திறந்துமொழி சொன்னால்தான் தெரியுமெனில்
.. நங்கை நிற்கின்றாள் நாயகனை உள்ளிருத்தி..
உள்ளிருத்தி பத்திரமாய்
திரையிட்டு பாதுகாத்து
பூஜிக்கும் தெய்வமே
என் செல்ல சுய கர்வமே
கர்வமே கொண்ட ராவண்
..கண்களால் விழித்து அந்த
அர்த்தமும் பொருளும் பூண்ட
..அகத்திய முனியை வீணை
முற்றிலும் இசைக்க வைத்து
..முடிவுடன் தானும் செய்ய
வெற்றியாய் மலையும் உருக
..வீழ்ந்ததே ஆண வம்தான்
ஆணவம்தான் வேறென்ன
உண்மை உரைக்க பயமென்ன
செவிட்டு பாவனை காட்டி
தன் பாதையில் பிசகாது
அப்பாவியாய் ஒரு முகம்
அமுக்கமாய் தன் குறியில்
குவித்த முழு முனைப்பு
மௌனமாய் சாதனை
ஆணுக்கு வெறும் சத்தம்
பெண்ணுக்கு பல ஆயுதம்
ஆயுத மென்று வில்லை
..அழகுறப் பின்னால் வைத்து
தேயுதே பொழுது என்று
..தேம்பியே கதிரோன் நிற்கும்
சாய்ந்திடும் மாலை ராமன்
..சட்டென விழியு யர்த்த
பாய்ந்ததே சீதை பார்வை
…பற்றினான் அவளை நெஞ்சில்