http://i57.tinypic.com/2vb9d8g.jpghttp://i60.tinypic.com/f1lcmf.jpg
Printable View
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்று எனக்கு உணர்த்திய நண்பர் பெங்களூர் எஸ்வி சார் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.http://i59.tinypic.com/117efe1.jpg
ORIGINALLY POSTED BY THIRU RAGAVENDRAN SIR
. ஒரு முறை மத்திய அரசின் ஒரு விளக்கப்படத்தில் கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு இந்திய சினிமாவைப் பற்றிய ஆய்வு இடம் பெற்றது. அநத ஆய்வில் சுமார் அரை மணி நேரத்திற்கு தமிழ்த்திரைப்படங்களைப் பற்றிய தொகுப்புரைகளும் காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. அந்தத் தொகுப்பில் மௌனப்படம் தொட்டு இத்திரைப்படம் தயாரான காலம் வரையிலான தமிழ்க் கலைஞர்களைப் பற்றியும் இடம் பெற்றிருந்தன. அதில் அக்கால கட்டத்தில் தமிழ்த்திரையுலகில் பங்காற்றிய பலரைப் பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது. நடிகர் திலகத்தைப் பற்றியும் இடம் பெற்றிருந்தது. மூன்று நான்கு நிமிடங்களில் அவரைப் பற்றிச் சொல்லப்பட்டது. காட்சிகளாக அவர் மேக்கப் போடுவது, ஷூட்டிங்கிற்கு கிளம்புவது போன்றவை இடம் பெற்றிருந்தன. அதில் ஒரு பகுதியாக நடிகர் திலகத்தின் பேட்டியும் இடம் பெற்றது.
ஆனால் மருந்துக்குக் கூட எம்.ஜி.ஆர் பற்றி அதில் இடம் பெறவில்லை. அப்போது அப்படத்தைத் தயாரித்த மத்திய அரசு நிறுவனத்துடன் வாக்குவாதம் செய்தவன் நான். காரணம். அதில் தமிழ்ப்படங்களைப்பற்றிய தகவல்கள் மிகவும் குறைவாக மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் கடனுக்கு செய்தது போல் இருந்தது. நான் கேட்கும் வரை அங்கு யாரும் வாய் திறக்கவில்லை. இத்தனைக்கு அங்கிருந்தவர்கள் பெரும்பாலும் தமிழ்த்திரைப்படத்தில் அக்காலத்தில் பணியாற்றியவர்கள். நான் கேள்வி கேட்ட பின் ஒவ்வொருவராக உடன் குரல் கொடுத்தனர். தமிழ்ப் படங்களை எங்கு சென்றாலும் விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதே அவர்களுக்கு நான் அன்று விடுத்த வேண்டுகோள். அன்று முழுதும் எனக்குக் கிடைத்த பாராட்டு மழைக்கு அளவேயில்லை. அவர்களில் பலர் இன்றும் திரையுலகில் பணியாற்றிக் கொண்டுள்ளனர்.
Thanks Ragavendran sir
இனிய நண்பர் திரு ராகவேந்திரன் சார்
மத்திய அரசு நடத்திய விழாவில் மக்கள் திலகத்தை இருட்டடிப்பு செய்தமைக்கு தாங்கள் குரல் கொடுத்தது அறிந்து
மிக்க நன்றி .