வெறும் கையே தொலைபேசியாக இதயத்தின் ஒலியை வெளிப்படுத்தும் ஹிந்தி பாடல் இது... படம் சர்கம்.. நம்ம சிரி சிரி முவ்வாவேதான்..
https://www.youtube.com/watch?v=lW74yFcxnMA
Printable View
வெறும் கையே தொலைபேசியாக இதயத்தின் ஒலியை வெளிப்படுத்தும் ஹிந்தி பாடல் இது... படம் சர்கம்.. நம்ம சிரி சிரி முவ்வாவேதான்..
https://www.youtube.com/watch?v=lW74yFcxnMA
ஹலோ ஹலோ ஹலோ.... ( சிக்கா... ஷாஜஹான் இல்லீங்க.. மும்தாஜ் மட்டும் )
https://www.youtube.com/watch?v=vIkroF5H0Rk
ஹாய் குட்மார்னிங் ஆல்..
சி.செ.. வண்ணக் கோலங்கள் எஸ்.வி.சேகர் சீரியல் நினைவிருக்கிறதா..அதில் டெலிஃபோன் இலவசம் என வரும் ஒரு குறுக்கெழுத்துப் போட்டிக்கு மாய்ந்து மாய்ந்து சேகர் குட்டி பத்மினி அப்புறம் அந்த கணக்கு வாத்தியார் எல்லாம் ஃபில்லப்பண்ணி அனுப்புவார்கள்..பரிசாக் இந்த தீப்பெட்டி டெலிஃபோன் கிடைக்கும்..(அதெல்லாம் டெலிஃபோன் கனெக்*ஷன் சுலபமாகக் கிடைக்காமல் இருந்த காலம்)
மதுண்ணா.. இந்த சிரி சிரி முவ்வா பத்திப் போட்டாச்சா போடவில்லையெனில் போடுங்களேன்.. மதுரையில் ஸ்ரீதேவி ரிலீஸ் தான்..ஆனால் வெகு சின்னவயதிலும் சரி தற்போதும் சரி நான்பார்த்ததில்லை..
தமிழ் ஸ்கூல் மாஸ்டர் படத்தில் ஜெமினியையும் சௌகாரையும் அவர்கள் பிள்ளைகள் பங்கு போட்டு பிரித்துக் கொண்டு போக கணவரிடம் பேசத் துடிக்கும் சௌகாருக்கு பேத்தி டெலிபோனில் டிரங்க் கால் புக் செய்து கொடுத்து பாடும் பாட்டு ஒன்று உண்டு...
பாத்தா சிறுசுதான் பாட்டி... இது தாத்தாவைக் கொண்டு வரும் கூட்டி
காதோரம் மெல்ல மெல்ல மாட்டி.. சேதி தருவதே இது செய்யும் டியூட்டி
புஷ்பலதா பாடிய பாடல்.... கேட்டே நாளாச்சு... இதுல வீடியோவுக்கு எங்கே போவது ?
ராகவேந்தர் சாரின் அபார ஞாபக சக்த்தியை வியந்து இப்பரிசு ...தீப்பெட்டி டெலிபோன்....புதியவார்ப்புக்கள் படத்திலிருந்து
என்ஜாய் 9 : 50 லிருந்து!
https://www.youtube.com/watch?v=nHvT2yAbb9U
சொன்னாற்போலவே ராகவேந்தர் சொன்ன போது சரி ச்சும்மா இதயம்குங்குமம்னு கோட் செய்கிறார் என நினைத்துவிட்டேன்.. நீங்கள் படக்காட்சி போட்ட பிறகு தான் பு.வார்ப்புகள் இலிருந்து அந்தக் காட்சி என நினைவுக்கு வந்தது..உங்களுக்கும் அபாரமான ஞாபக சக்தி சி.செ.
ஃபோனாட முக்கியத்துவம் க்ளைமாக்ஸ்ல சர்ரூக்காக கே.பி பயன்படுத்தியிருப்பார்..
”பங்கஜம் என்ன பண்றான்னா தூக்க மாத்திரையை எண்ணறா” சர்ரூ...
“சரிங்க அப்புறம் என்ன ஆகிறது” கதை கேட்கும் சுவாரஸ்யத்தில் நாகேஷ்..
:அப்ப என்ன ஆச்சுன்னா” காட்சி சர்ரூவிற்கு மாற ஒரு பூனை வந்து கண்ணாடித்தம்ளரை த் தட்டி விடுகிறது ச்ச்சிலீர் சத்தம்..
கடகடவென சிரிக்கும் சர்ரூ “ என்ன ஆச்சுன்னாக்க பூனை வந்துஅவளோட தம்ளரை த் தட்டி விடறது அவ இன்னொரு கிளாஸை எடுக்கறா” எனச் சொல்ல கேட்கும் நாகேஷூக்கு உறைக்கிறது..
”கதைல தானே கண்ணாடி டம்ளர் உடையும்..இங்க நெஜமாவே சத்தம் கேட்குதே ஒருவேளை” எனத் தடுமாறி யூகித்து “ஹலோ.. ஹலோ பங்கஜம் சாகக் கூடாதுங்க.. நான் கேக்கறது உங்களுக்குக் கேக்குதா ஹலோ ஹலோ”
ஃபோன் சர்ரூ கையிலிருந்து நழுவப் பார்க்க அதைப் பிடித்த படி சர்ரூ கலங்கி க் கலங்கி “ நெள இட் இஸ் டூ லேட் நாராயண்.. பங்கஜம் எல்லா மாத்திரையும் சாப்பிட்டுட்டா.. அவ கதை முடிஞ் போச்” எனக் குழறிச் சொல்லி மறுபடியும் டம்ளர் தரையில் படார்.. டெலிஃபோனும் நழுவ மறுமுனையில் பதற்ற நாராயண நாகேஷ் “ஹலோ ஹலோ “ வெனக் கதறுவார்..
படம் தாமரை நெஞ்சம் எனச் சொல்லவும் வேண்டுமோ :)
//படம் தாமரை நெஞ்சம் எனச் சொல்லவும் வேண்டுமோ//
நெஞ்சம் மறப்பதில்லை:)
கறுப்பு பச்சை சிவப்பு மஞ்சள்(?) டெலிஃபோன்களுக்கிடையில் ந.தி அலைபாயும் வரலாற்றுப் படம் நினைவிருக்கா வாசுசார்..:)