-
புரட்சித் தலைவரின்
மலரும் நினைவுகள் பதிவில்
மற்றொரு வைரக்கல்
தன்னை நேசிக்கும் ரசிகன்
ஏழையோ
அவன் வாழும் இடம் குடிசையோ
அவன் இருப்பிடம் தேடி சென்று
விருப்பத்தை நிறைவேற்றும்
தங்கத் தலைவரை இனி எப்போது காண்போம்
படித்து பாருங்கள்
தமிழ் இந்து நாளிதழ்....2017ல் வந்தவை.... 15-5-19ன் தொடர்ச்சி....
புதுச்சேரியில் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த இளைஞர் கோவிந்தசாமி. எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதைவிட வெறியர். தனது திருமணத்தை எம்.ஜி.ஆர். நடத்தி வைக்க வேண்டும் என்று கோவிந்தசாமிக்கு ஆசை. இது சம்பந்தமாக கோவிந்தசாமி எம்.ஜி.ஆருக்கு சிலமுறை கடிதம் எழுதினார். எம்.ஜி.ஆரின் உதவியாளர்களே கடிதத்தைப் பார்த்துவிட்டு, ‘புதுச் சேரியில் மீனவர் குப்பத்தில் இருக்கும் யாரோ ஒருவரின் திருமணத்தை நடத்தி வைக்க எம்.ஜி.ஆரால் போகமுடியுமா? ’ என்று நினைத்தார்களோ என்னவோ? கடிதம் எம்.ஜி.ஆரின் பார்வைக்கே போகவில்லை.
ஒருநாள் கோவிந்தசாமியின் பெற்றோரும் உறவினர்களும் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு வந்துவிட்டனர். தன்னைப் பார்க்க காத்திருந்தவர்களை ஒவ்வொருவராக சந்தித்த எம்.ஜி.ஆரிடம் விஷயத்தைக் கூறினர். ‘‘நாங்க எழுதின கடிதத்துக்கு உங்களிடம் இருந்து பதில் இல்லாததால் கோவிந்தசாமி பித்துப் பிடிச்சவன் போல இருக்கிறான். கடலில் மீன் பிடிக்கவும் சரியாக போவதில்லை. நீங்கதான் கோவிந்தசாமியின் திருமணத்தை நடத்திவெச்சு அவனைக் காப்பாத்தணும்’’ என்று உருக்கமாக கோரினர்.
இது எம்.ஜி.ஆரை வெகுவாக பாதித்து விட்டது. ‘‘விரைவிலேயே புதுச்சேரிக்கு சுற்றுப் பயணம் வர இருக்கிறேன். நீங்கள் அப்போது அங்கு வந்து என்னை சந்தியுங்கள். உங்கள் மகன் திருமணத்தை நடத்தி வைக்கிறேன்’’ என்று அவர்களை எம்.ஜி.ஆர். சமாதானப்படுத்தினார். அந்த மீனவர்கள் நம்பிக்கையுடன் சென்றனர்.
சில நாட்கள் கழித்து புதுச்சேரிக்கு எம்.ஜி.ஆர். சுற்றுப் பயணம் சென்றார். அவர் தங்கியிருந்த இடத்துக்கு மீனவர் குப்பத்தைச் சேர்ந்தவர்கள் வந்தனர். விஷயம் எம்.ஜி.ஆருக்குத் தெரிவிக்கப் பட்டது. ‘‘திருமணத்தை நடத்தி வைத்து விட்டு கூட்டத்துக்கு போகலாம். மணமக்களையும் உறவினர்களையும் கூப்பிடுங்கள்’’ என்று எம்.ஜி.ஆர். கூறினார். மணமக்களை அழைத்துவர எம்.ஜி.ஆரின் உதவியாளர்கள் சென்றபோதுதான் அவர்களுக்கு விஷயமே தெரிந்தது.
கோவிந்தசாமியின் உறவினர்கள் தயங்கியபடியே, ‘‘மன்னிக்கணும். எங்க குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். நேரில் வந்து தாலி எடுத்துக் கொடுத்தால் தான் திருமணம் பண்ணிக்குவேன் என்று கோவிந்தசாமி பிடிவாதம் பிடிக்கிறான்’’ என்று மென்று முழுங்கி தெரிவித்தனர். உதவியாளர்களுக்கு கோபம் வந்துவிட்டது. ‘‘அது எப்படி முடியும்? கடற்கரையோரம் உள்ள குப்பத்துக்கு மணலிலே வரணும். அங்கேயெல்லாம் வண்டி வராது’’ என்று சத்தமாக தெரிவித்தனர். பதிலுக்கு, ‘‘பாதையிலே மணலில் நாங்க செடி, தழைகளை போடுறோம். அதுமேல, வண்டி ஓட்டிக்கிட்டு வந்துடுங்க’’ என்று மீனவர்கள் கெஞ்சினர்.
வெளியே நடந்து கொண்டிருந்த கசமுசா, எம்.ஜி.ஆரின் காதுகளில் விழுந்தது. உதவியாளர்களை அழைத்து விவரம் கேட்டார். அவர்கள் சொன்னதும் சில விநாடிகள் யோசித்துவிட்டு, ‘‘சரி, போகலாம்’’ என்றார். உதவியாளர்கள் பதறிப்போய், ‘‘நாங்கள் விசாரிச்சோம். கடற்கரை மணலில் வண்டி நின்று விட்டால் நடந்து தான் போகணும். அவங்க குப்பம் இரண்டு கிலோ மீட்டருக்கு மேலே தூரமாக உள்ளது. நீங்கள் போக வேண்டாம்’’ என்றனர்.
எம்.ஜி.ஆர். கோபத்துடன், ‘‘என்ன பேசறீங்க? என்னோட ரசிகன். அவனுக்கு நான் எந்த உதவியும் செய்யலே. அவனை நான் பார்த்தது கூட இல்லே. ஆனாலும் என் மேலே வெறித்தனமான அன்போட இருக்கான். நான் வந்து நடத்தினால் தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு பித்துப் பிடிச்சா மாதிரி இருக்கான். நான் போய்த் தான் ஆகணும். வண்டி நின்னு போனா நடந்து போறேன். போய் ஏற்பாடு பண்ணுங்கய்யா’’ என்றார். அடுத்த விநாடி, மீனவர் குப்பத்துக்கு எம்.ஜி.ஆர். செல்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கின.
மணலிலும் பாதுகாப்பாக செல்லும் வகையில் ஃபோர் வீல் டிரைவ் எனப்படும் நான்கு சக்கரங்களும் ஒன்றாக இயங்கும் ஜீப்பில் எம்.ஜி.ஆர். சென்றார். கடலை ஒட்டிய மணல் பகுதியில் வழிநெடுக மீனவர்கள் திரண்டு நின்று எம்.ஜி.ஆர். தங்கள் குப்பத்துக்கு வருவதை பிரமிப்பு நீங்காமல் பார்த்தபடியே அவரை வாழ்த்தி கோஷமிட்டனர்.
பாதி வழியில், உதவியாளர்கள் பயந்தபடியே திடீரென மணலில் ஜீப் சிக்கிக் கொண்டது. டிரைவர் எவ்வளவோ முயன்றும் நின்ற இடத்திலேயே சக்கரங்கள் சுற்றிச்சுற்றி மணலை தோண்டியதே தவிர, நகரவில்லை. எம்.ஜி.ஆர். ஜீப்பை விட்டு இறங்கிவிட்டார்.
பாதையில் நின்றிருந்த மீனவர்கள் உதவிக்கு ஓடிவந்தனர். பலர் ஒன்று சேர்ந்து ஜீப்பை ‘அலாக்’காக தூக்கி வேறு இடத்தில் வைத்தனர். மீனவ மக்களின் ஆரவாரத்துக்கிடையே, எம்.ஜி.ஆர். தலைக்கு மேல் கைகளை உயரே தூக்கி வணங்கியபடி மீண்டும் பயணத்தைத் தொடங்கினார்.
கோவிந்தசாமியின் மீனவ குப்பத்தை ஜீப் அடைந்தபோது பெரிய கூட்டம் ஓடிவந்து வரவேற்றது. அதில் முதலில் ஓடிவந்தவர் இளைஞர் கோவிந்தசாமி. ‘எம்.ஜி.ஆர். வரும்வரை தாடியை எடுக்க மாட்டேன்’ என்ற சபதம் காரணமாக நீண்டு வளர்ந்திருந்த அடர்த்தியான தாடியுடன் கண்களில் நீர்வழிய, ‘‘எனக்காக நேரில் வந்த தெய்வமே’’ என்று கதறியபடி எம்.ஜி.ஆரின் காலில் விழுந்தார் கோவிந்தசாமி. அவரை வாரி அணைத்துக் கொண்டார் எம்.ஜி.ஆர்.!
பக்கத்திலேயே மேடான இடத்தில் சிறிய பந்தல் போடப்பட்டிருந்தது. பதினைந்து நிமிடத்தில் மணமக்கள் தயாராகி வந்தனர். எம்.ஜி.ஆர். தாலி எடுத்துக் கொடுக்க, மணமகள் கழுத்தில் கட்டினார் கோவிந்தசாமி. ‘‘இனிமே ஒழுங்கா குடும்பத்தையும் தொழிலையும் கவனி’’ என்று கோவிந்தசாமியிடம் கூறிய எம்.ஜி.ஆர்., மணமக்களிடம் தனித்தனியே பரிசளித்தார்.
மீனவர்கள் கொடுத்த கோலி சோடாவை சிறிது குடித்துவிட்டு ஜீப்பில் ஏறி நாலாபுறமும் திரும்பி கையசைத்தபடி எம்.ஜி.ஆர். விடைபெற்றபோது, மீனவர்கள் கண்களில் ஆனந்தக் கண்ணீர்!
அன்புடன்
புரட்சித் தலைவர் பக்தன் சேர்மக்கனி 👍🏼............... Thanks wa.,
-
அது ஒரு மாலைப்பொழுது..சத்தியமங்கலம் அருகே பேருந்தில் ( சாமுவேல்) பயணிக்கிறேன்...ஒரு நிறுத்தத்தில் ஒரு கால் இல்லாத நிலையில் கைத்தடியுடன் தோள்பை சகிதமாக அழுக்கான தேகத்துடன் அந்த முதியவர் பேரூந்தில் ஏற சிரமபடுகிறார். இதைக் கவனித்த நான் கைத்தாங்கலாக அவரை தூக்கி இருக்கையில் அமர வைக்கிறேன். நன்றி தெரிவித்து அமைதியாக என்னுடன் பயணிக்கிறார். பேருந்தில் சில இளைஞர்கள் மது போதையில் கூச்சலிட்டுவர ' இன்னுமா இவர்கள் திருந்தவில்லை, அந்த காலத்துல நாங்க நடிக்கும்போது எம்ஜிஆர் ஒழுக்கத்தைப் பற்றி எவ்வளவோ எடுத்துச் சொல்வார், இன்னைக்கு அப்படி சொல்ல ஆள் இல்லையே' என்றார் சலிப்புடன். சட்டென ஆச்சரியக்குறியோடு அவரை பார்க்கிறேன். ' அய்யா நீங்க சினிமா நடிகரா? யார் நீங்க?' பதிலை அவசரமாக எதிர்பார்க்கிறேன். ' நான்தான் தம்பி கெம்பையா...எம்ஜிஆரோட உலகம் சுற்றும் வாலிபனில் புத்த துறவியாக நடித்தவன்'. மறுகணம் பேருந்தே அவரை திரும்பி பார்த்தது. 'நம்ப முடியவில்லையே. உருவம் கொஞ்சம்கூட ஒத்துப்போகவில்லையே' என சந்தேகம் எனக்கு. நீண்ட நேர உரையாடல் தெளிவுபடுத்தியது. அன்றே இவரது தோற்றத்தை நம் தலைவர் எவ்வளவு அற்புதமாக புத்த துறவியாக்கி காட்டியுள்ளார் என வியந்தேன். இப்போது வயது முதிர்வு காரணமாக இவரை அவ்வளவு எளிதில் அடையாளம் காணமுடியவில்லை. வீட்டில் அவரை ஆட்டோ மூலமாக சேர்த்தேன். 400 ரூபாய் எடுத்து கையில திணித்தார். மறுத்து அவரது சட்டைப்பையில் போராடி வைத்தேன். 'வழக்கமாக என்னை வீட்டில் சேர்ப்பவர்களுக்கு கொடுப்பதுதான், வாங்கிக்கங்க தம்பி' என்றார். மறுத்தேன். 'சரி தம்பி உங்களைப்பற்றி....?' என வினவினார்.' நான் எம்ஜிஆர் பக்தன்' என கூறிவிட்டு அங்கிருந்து நகர்ந்தபோது....'கடவுளே இத்தனை வருஷம் கழிந்து உண்மையான எம்ஜிஆர் ரசிகரை சந்திச்சிருக்கேனே...' என ஆனந்தத்தில் உரக்க கத்தினார். ' நான் முட்டாள், எம்ஜிஆருடன் தொடர்ந்து இருந்திருந்தால் ஈரோடு மாவட்டத்தில் நானும் இன்று முக்கியமான நபராக இருந்திருப்பேனே' என அங்கலாய்த்தார். அடுத்தடுத்த சந்திப்புகளில் அடிக்கடி இப்படி புலம்பித் தீர்ப்பார். இவர் பற்றி காட்டுத்தீயாய் தகவல் பரப்பினேன். தலைவர் பக்தர்கள் எட்டுத் திக்கிலிருந்தும் ஓடோடி வந்து பார்த்து தொட்டு வணங்கிச் சென்றனர். உறவினர்களால் ஓரளவு புறக்கணிக்கப்பட்டு அல்லது வீட்டை மறந்து கிட்டத்தட்ட ஊர்சுற்றிக்கொண்டிருந்த திரு. கெம்பையாவுக்கு தலைவர் பக்தர்களால் அவரது வீட்டாரிடையே மீண்டும் நல்ஆதரவும் மரியாதையும் கிடைத்ததை கண்டு பகவான் எம்ஜிஆருக்கு நன்றி சொன்னேன்.நாட்கள் நகர தினமும் என் இருப்பிடம் வந்து சத்தமாக என்னை கூப்பிடுவார். ' எம்ஜிஆர் ரசிகரை பார்ப்பதே மகிழ்ச்சி' என்பார்.' இல்லை அய்யா , தலைவரே தூக்கிய உங்களை நானும் தூக்கி இருக்கிறேன், அவருடன் பேசி நடித்த உங்களுடன் தினமும் பேசுகிறேன்.அதல்லவா எனக்கு மகிழ்ச்சி' என்பேன். ( சத்தியமங்கலத்திற்கு வேலைக்கு வரும்முன் எப்போதோ இதயக்கனி மாத இதழில் இவரைப் பற்றிய செய்தி படித்திருந்தேன். 2009 ல் சத்தியமங்கலம் வந்த போது இவரை மறந்துவிட்டேன். நண்பர் ஒருவர் கெம்பையா சத்தியமங்கலத்தில்தான் இருக்கிறார் என ஞாபகமூட்ட அவரைப் போய் பார்க்க தாமதமாகிக் கொண்டே இருந்தது. நீண்ட நாட்கள் இவர் எனது அடுத்த தெருவில்தான் வசித்து வந்துள்ளார் என அறியாமல் இருந்துள்ளேன். )என்றாலும் தலைவர் என்னை கெம்பையாவுடனான சந்திப்புக்கு அருள்பாலித்தார். உலகம் சுற்றும் வாலிபன் மறு வெளியீடு டிரெய்லர் இவரை வைத்தே வெளியிட நானும் டிஜிட்டல் தயாரிப்பாளர் திண்டுக்கல் திரு.சாய் நாகராஜன் அவர்களும் ஆசைப்பட்டோம். வழக்கம் போல திரு.கெம்பையா பல ஊர்களில் சுற்றி வருவதை அறிந்து வருந்தினேன். அவரை அடிக்கடி பார்ப்பது குறைந்தது. ஒருநாள் அந்த ' செய்தி' வந்தது. திரு.கெம்பையா அவர்கள்......??????? தற்போது மீண்டும் புரட்சித் தலைவருடன்!............. Thanks wa.,
-
http://i67.tinypic.com/28slt1i.jpg'
திரு.சாமுவேல், சத்தியமங்கலம் குறிப்பிட்ட திரு.கெம்பையா மக்கள் திலகம் .எம்.ஜி.ஆர்.அவர்களின் மகத்தான வெற்றி படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன் " திரைப்படத்தில் புத்த பிட்சுவாக நடித்திருந்தார் . ஆனால் இப்போது மறைந்து விட்டதாக திரு.சாமுவேல் குறிப்பிட்டிருந்தார் .
-
-
-
-
-
-
-
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரை பேட்டி காண்கிறார் நடிகை லதா .
http://i66.tinypic.com/2i3uv7.jpg