-
வாத்தியார் ரசிகர்களின் அலங்காரப் பொய்கள்.
தமிழ் திரைப்பட துறையில் பெரிய சிறிய நிறுவனங்களென பல படதயாரிப்ப நிறுவனங்கள் இருந்தன இருக்கின்றன. இவற்றில் முக்கியமான பெரிய நிறவுனங்கள் என சொல்லப்படுபவை இவைகள் .
மாடர்ன் தியேட்டர்ஸ்
ஜெமினி ஸ்ருடீயோ
எ வி எம் நிறுவனம்
தேவர் பிலிம்ஸ்
சரவணா பிலிம்ஸ்
சத்யாபிலிம்ஸ்
சுஜாதா சினி ஆர்ட்ஸ்
பத்மினி பிக்சர்ஸ்
சித்திராலயா
மற்றம் சில
மேற்கண்ட நிறுவனங்களில் ஒரு சில தவிர்ந்த ஏனைய நிறவனங்கள் அனைத்து நடிகர்களையும் வைத்து படங்களை தயாரித்து வெளியிட்டுள்ளன.
இதில் வேடிக்கையான விடயம் என்னவெனில் பெரிய பட நிறவனங்களில் ஒரு படம் நடித்து கொடுத்ததுடன் நிறுத்திக்கொண்டது ஏன் என எம் ஜி ஆரை சுத்தமான தங்கம் என காட்டுவதற்காக ஏம் ஜி அர் ரசிகர்களால் அவிழ்த்து விடப்படும்
அலங்காரப் பொய்கள் இதற்குமட்டுமல்ல எம் ஜி ஆரைப்பற்றி சொல்லப்படும் அனைத்திலுமே அலங்கரிக்கப'பட்ட பொய்களே.
மாடர்ன்ஸ் தியேட்டர் நிறவுனத்தின் அலிபாபாவும் 40 திருடர்களும்
திரைப்படத்தில் எம் ஜி ஆர் நடித்திருந்தார் .முக்கால்வாசி படப்பிடிப்ப நிறைவடைந்தவிட்டது பாக்கி படப்பிடிப்பு எம் ஜி ஆர் நடிக்கவேண்டியவை வழமையான தன் திருவிளையாடலை எம் ஜி அர் அங்கும் காட்டினார் கால்சிட் கொடுக்காமல் இழுத்தடிப்பு கொதித்துப்போன மாடர்ன் தியேட்ர் அதிபர் சுந்தரம் அவர்கள் எம் ஜி அர் நடிக்கவேண்டிய மிகுதிக்காட்சிகளை வேறு நடிகரை வைத்து டுப் போட்டு படப்பிடிப்பை முடித்துக்கொண்டார். அதன் பின்னர் மாடர்ன் தியேட்டர்ஸ நிறுவனம் எம் ஜி அரை திரும்பியும் பார்க்கவில்லை ஆனால் இது விடயத்தில் சீடர்களின் பரப்புரை பாருங்கள் எம் ஜீ அர் சிறிய பட நிறுவனங்கள் வளரவேண்டும் என்பதனால் அவர்களுக்கு உதவும்முகமாக சிறிய பட நிறவனங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களது படங்களிலேயே அதிக கவனம் செலுத்தி நடித்துக்கொடுத்தார்.பெரிய நிறவனங்களான மாடர்ன் தியேட்டர் எ வி எம் போன்ற பெரிய நிறவனங்களில் ஒரு படம் நடித்துக்கொடுத்ததுடன் நிறுத்திக்கொண்டார்.இது வாத்திசிடர்களின் அலங்காரப் பொய்கள்.அலிபாபாவுடன் மாடர்ன் தியேட்டர்ஸ் ஏம் ஜி ஆரை திரும்பிப்பார்க்கவில்லை. எ வீ எம்முடன் நடந்தவிடயம் எ வி எம் நிறவுனம் சிவாஜி கணேசனை வைத்த அன்பே வா திரைப்படத்தை தயாரிப்பதற்காக திட்டமிட்டிருந்தார்கள் ஏதோ ஒரு வகையில் பெற்றால்தான் பிள்ளையா கை மாறியதபோல் அன்பே வா படத்தையம் தன் பக்கம் இழுத்தக்கொண்டார் பத்திரமாத்துத்தங்கம்
கதையில் சிறு மாற்றம் காட்சிமாற்றங்களுடன் அன்பே வா எம் ஜி ஆர் நடிப்பில் தயாரானது, !966 பொங்கலுக்கு வெளியிட எ வி எம் நிறவுனம் திர்மானித்து தயார்படத்தலை செய்தவேளை எம் ஜி ஆரின் கால்சிட் தாமதமாவதனால் படதயாரிப்பாளர் எம் ஜி அருடன் பேசிய பொழுது எம் ஜி ஆர் ஒத்துழைப்பைகொடுத்து படத்தை முடீத்துக் கொடுத்தார் மேலதிக பணப்பேரம்பேசலுடன் அவர்களும் பேசியபடியே மேலதிகமாக 25000.00 துர்க்கிக்கொடுத்தார்கள்.இங்கே கவனிக்கப்படவேண்டிய முக்கிய விடயம் எம் ஜி ஆருக்கு பணத்தின்மிது உள்ள அதீீத காதலை.
படமும் தயாரிப்பாளர்கள் திட்டமிட்டபடி 1966 ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்பட்டு வெற்றிபெற்றது. படம் சென்னையில் மட்டும் ஒரு தியேட்டரில் 20வது வாரம் ஒடீக்கொண்டிருந்தபொழுது கலக்சன் குறைவால் 20வது கடைசிவாரமாக்கப்பட்டு படத்தை எடுப்பதாக விளம்பரம் வந்ததும் வெள்ளிவிழா கனவில் மிதந்த வாத்தியாருக்கும் வாத்தியார் ரசிகர்களுக்கும் பேரிடி.
தங்களது படங்கள் நாட்கணக்கிற்கு ஒட்டினால்தான் சாதனை என்ற நிலமையிலுள்ளவர்ளுக்கு எப்படியாவது அன்பே வா படத்தை வெள்ளிவிழாவரை ஓட்டவேண்டுமென முடிவெடுத்து எ வி எம் நிறுவனத்தை நாடியபொழுது அவர்கள் தற்போதைய கலைக்சன் போதுமானதாக இல்லை என கூறி கை விரித்துவிட்டார்கள் . இது வாத்திக்கு பெருத்த அவமானமாகிவிட்டது.அதன்பின் வாத்தியார் அந்தப்பக்கம் ஏறேடுத்தம் பார்க்கவில்லை அவர்களும் இவரை கண்டுகொள்ளவில்லை .மான அவமானத்தை மறைப்பதற்கு சிடர்கள் விட்ட அலங்காரப்பொய்தான் இதற்கும் சிறிய திரைப்பட நிறுவனங்கள் முன்னேற உதவுவதற்காக பெரிய பட நிறுவனங்களை தவிர்த்தார் வாத்தியார் என்ற மக்களை கவரும் அழகிய பொய்.
ஆனால் தேவர் பிலிம்ஸ் ,சரவணா பிலிம்ஸ், சத்தியா முவிஸ் , பத்மினி பிக்சர்ஸ் போன்ற பெரிய நிறவுனங்களின் பேனர்களில் தொடர்ந்துநடித்திருப்பார் யாரும் கண்டுகொள்ளக்கூடாது,
வாத்தியார் ரசிகர்களின் அலங்காரப் பொய்கள் தொடரும்.....
-
10-05-2020
ஞாயிற்றுக்கிழமை
இன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளி பரப்பாகும் நடிகர் திலகத்தின் திரைக்காவியங்கள்,
ரத்தத் திலகம் - காலை 9:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
தாய்க்கு ஒரு தாலாட்டு - பிற்பகல் 1:30 க்கு ராஜ் டிஜிட்டல் ப்ளஸ் சேனலில்,
நான் பெற்ற செல்வம் - பிற்பகல் 2 மணிக்கு முரசு தொலைக்காட்சியில்,
அன்பே ஆருயிரே - பிற்பகல் 3:30 க்கு கேப்டன் டிவியில்,
வானி ராணி - இரவு 10:30 க்கு ராஜ் தொலைக்காட்சியில்,
-
நடிகர்திலகத்தின் காவியங்கள் இன்று மாலை 6 மணிக்கு மெகா24சேனலில் வாழ்க்கையும் ...7 மணிக்கு முரசுவில் என் மகனும் இதே படம் இரவு 10.30க்கு ராஜ் டிவியுலும் ஒளிபரப்பாகிறது...ராஜ் டிவியில் வரும் வாரம் பகல் 1.30க்கு சிங்கத்தமிழன் வாரம் ...திங்கள்----ராஜ ராஜ சோழன்...செவ்வாய்----எங்க மாமா...புதன்-----சாதனை...வியாழன்----என்னைப் போல் ஒருவன்...வெள்ளி----
-
-
நடிகர் திலகத்தின் 38 வது திரைக்காவியம் புதையல் வெளியான நாள் 10-05-1957
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...80&oe=5EDE872F
-
-
-
-
காந்தி பொட்டலில் 9.5.20 திரு ஜெயக்குமார். ( தென் சென்னை மாவட்ட சிவாஜி சமூக நல பேரவை) திரு நாராயணன் .( மதுரை மாவட்ட சிவாஜி சமூக நல பேரவை .) இவர்கள் பங்களிப்பில் .. கல்வி புரவலர் தேனூர் சாமிக்காளை அவர்கள் எளிய மக்களுக்கு அரிசி (25 நபர்களுக்கு) வழங்கப்பட்டது. நிகழ்வில் சிவாஜிசெல்வம். போஸ்டர் புயல் பச்சைமணி. ராஜூ. ஜவஹர்லால். தங்கவேல். வியட்நாம் பாண்டி. குப்புசாமி. ராஜன். ஸ்ரீதர். கண்ணன். சிவாஜிஏக்நாத் .வண்டியூர் சிவகுமார். என்றும் சிவாஜியின் புகழ் காப்போம்.
ஒழியட்டும் கொரோன வைரஸ் ஒளிரட்டும் மக்கள் நல.ம்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ed&oe=5EDB554Dhttps://scontent.fyto1-2.fna.fbcdn.n...e9&oe=5EDDDD8F
-