http://s28.postimg.org/fbl51gl3h/IMG_2725.jpg
Printable View
http://s27.postimg.org/myfa3l8wz/IMG_2765.jpg
Courtesy- facebook
காலத்தை வென்றவர்
டிசம்பர் 24 -- மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களின் 29 ம் நினைவு நாள் ..
தமிழக அரசியலில் இன்னும் எம் ஜி ஆர் --
ஒரு புதிர்
ஒரு ஆச்சர்யம்
ஒரு phenomenon
எப்படி இவ்வளவு வருடங்கள் கடந்தாலும் அவர் புகழ் குறையாமல் இருக்கிறது ?
அவர் மறைந்த பின்னர் பிறந்து எழுத்தாளர் ஆனவர்கள் கூட அவர் பற்றி புத்தகங்கள் எழுதுகிறார்கள் ..
இன்னும் அவர் படங்கள் திரை அரங்குகளிலும் , தொலைக்காட்சியிலும் சக்கை போடு போடுகின்றன
எம் ஜி ஆர் ஆதரவு வாக்குகளுக்கு எல்லா கட்சிகளும் போட்டி போடுகின்றன
அவர் காலத்தில் அவரை எதிர்த்த கட்சிகளும் இன்று அவர் புகழை சொல்லும் நிலை.. இத்தனைக்கும் அவர் இனி வந்து யாருக்கும் பதவி தரப்போவதில்லை.
திராவிடர் கழகமே அவர் மனித நேயத்தை பாராட்டி சமீபத்தில் விழா எடுத்து விட்டதே ?
அரசியல், திரை உலகில் இருந்தவர்கள் வேறு யாருக்கும் இப்படி ஒரு செல்வாக்கு ஏன் கிடைக்கவில்லை ?
காரணம் எதுவாக இருக்கும் ??
முள்ளும் மலரும் போன்ற திரை காவியங்களை படைத்தவர் இயக்குனர் திரு. மகேந்திரன் அவர்கள் . 1958 ல் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் அவர் மாணவர். கல்லூரி விழாவுக்கு அன்றைய நடிகர் எம்.ஜி ஆர் சிறப்பு விருந்தினர். அவரை வைத்து கொண்டே மகேந்திரன் எம் ஜி ஆர் படங்களை பிரித்து மேய்ந்து விட்டாராம்.
ஆனால் எம் ஜி ஆர் அதற்காக கோபப்படவில்லை. சென்னை சென்றதும் தனது கைப்பட அவரை பாராட்டி திரை உலகில் உங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.. சென்னை வந்தால் என்னை வந்து சந்தியுங்கள் என்று ஒரு கடிதம் மகேந்திரனுக்கு அனுப்பினார் எம் ஜி ஆர்.!!
பிறகு மகேந்திரன் சென்னை சென்றபோது எம் ஜி ஆர் அவர் அலுவலக மாடியிலேயே மகேந்திரனை தங்க வைத்து பொன்னியின் செல்வன் நாவலுக்கு திரைக்கதை வசனம் எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.
எம் ஜி ஆரை பார்க்க பல திரை உலக பிரபலங்கள் வர அவர்களிடம் மகேந்திரன் அறிமுகம் ஆனார்... அவர் திறமை பலருக்கு தெரிய வந்தது...
எம் ஜி ஆரோ பல அரசியல் வேலைகளில் பிசி.
பல ஊர்களுக்கு சென்றதால் மகேந்திரனை மறந்தே போனார்.
ஒரு நாள் --
மகேந்திரனை பார்த்ததும்தான் அவருக்கு நினைவு வந்தது.
கதை வசனம் எழுதியவரை மகேந்திரன் அவரிடம் கொடுக்க --
எம் ஜி ஆர் அவரிடம் " நீங்க வேளா வேளைக்கு சாப்பிடுறீங்களா ? ஊருக்கு பணம் அனுப்புறீங்களா ?" என்றெல்லாம் கேட்டிருக்கிறார். தனது உதவியாளர்கள் மூலம் மகேந்திரனுக்கு உதவி கிடைத்திருக்கும் என்று எம் ஜி ஆர் நினைத்து அவரை மறந்தே விட்டிருக்கிறார்.
மகேந்திரன் மூன்று வேளையும் முழுமையாக சாப்பிட முடியாத தன் நிலையை வேறு வழியின்றி தயங்கி தயங்கி சொல்லி விட்டார்..
அவ்வளவுதான் !!!
எம் ஜி ஆர் அப்படியே கண் கலங்கி தன் தலையில் படார் படாரென்று அடித்து கொண்டு " நான் பாவி , நான் பாவி உங்களை பட்டினி போட்டு மறந்தே போனேனே " என்று கலங்கி போனாராம் .
பிறகு மகேந்திரனுக்கு அவர் தேவைக்கும் அதிகமாக பண உதவி செய்து விட்டு அவர் தேவைகளை கவனிக்கவும் உத்தரவு போட்டதும்தான் எம் ஜி ஆருக்கு நிம்மதி வந்தது .
துரதிர்ஷ்டவசமாக பொன்னியின் செல்வன் படமாக்கும் திட்டம் எம் ஜி ஆரின் கனவு திட்டமாகவே போனது...
ஆனால் மகேந்திரன் பிறகு சிறந்த கதாசிரியராகவும் , இயக்குனராகவும் திரை உலகில் உயர்ந்தார். எல்லாம் எம் ஜி ஆர் அருகில் இருந்ததால் கிடைத்த அறிமுகத்தால் ஏற்பட்டது.
பின்னாளில் மகேந்திரன் துக்ளக் பத்திரிகையில் திரை விமர்சனம் எழுதினர்.
'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தை பீஸ் பீஸாக கிழித்து விட்டார். படத்தின் இயக்குனரிடம் அந்த விமர்சனத்தை கொண்டு கொடுத்து துக்ளக் பத்திரிகையில் அது பற்றிய கருத்தை கேட்டார்கள்.
உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் இயக்குனர் எம் ஜி ஆர் !!!
படித்து பார்த்த எம் ஜி ஆர் ஒன்றும் பேசவில்லை.
"இது மகேந்திரன் எழுதினதுதானே ? இதுதான் என் பதில் " என்று ஒன்றும் சொல்லாமல் அந்த விமர்சனத்தை கொண்டு வந்தவரிடம் திருப்பி கொடுத்து விட்டார்.
மகேந்திரன் மேல் அவருக்கு துளியும் கோபம் வரவில்லை.
மகேந்திரன்தான் பாவம் நம்மை அறிமுகம் செய்தவருக்கு இப்படி செய்திருக்க வேண்டாமோ என்று மனம் நொந்து போனார்.
(எம் ஜி ஆர் மறைந்து பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மகேந்திரன் எழுதிய தனது வாழ்க்கை வரலாற்று நூலில் இவற்றை எல்லாம் எழுதி அந்த நூலை எம் ஜி ஆருக்கு சமர்ப்பணம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.)
இந்த மனதின் ஈரமும்
மனித நேயமும்தான்
எம் ஜி ஆரின் நிலைத்த புகழுக்கு காரணம் என்று தோன்றுகிறது !!!
சத்துணவு திட்டமும் ,ராமாவரம் காது கேளாதோர் பள்ளியும் அதற்கு சான்றாக நிற்கிறது !!!
Courtesy - Facebook
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் கடுமையான உழைப்பாலும் . பலருடைய தியாகங்களாலும், பல் வேறு போராட்டங்களுக்கு மத்தியில் உருவான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 45 வது ஆண்டில் இன்று மிகப்பெரிய சோதனைக்கு உட்பட்டுள்ளது .
மக்கள் திலகம் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா மிகவும் சிறப்பாக நடை பெற வேண்டிய நேரத்தில் கட்சியும் ஆட்சியும் தடம் மாறி உள்ளது . சுயநலம் ஒன்றே எங்கள் குறிக்கோள் என்று 135 சட்ட மன்ற உறுப்பினர்களும் , 50 நாடாளுமன்ற உறுப்பினர்களும் , 60 மாவட்ட செயலாளர்களும் , 2000 பொதுக்குழு உறுப்பினர்களும் தங்கள் மனசாட்சியை அடகு வைத்து எம்ஜிஆருக்கும் ஜெயலலிதாவிற்கும் துரோகம் செய்த இவர்களை மக்கள் மன்றம் விரைவில் நல்ல தீர்ப்பை வழங்குவதை பொறுத்திருந்து பார்ப்போம் .
தேசிய இயக்கத்தில் இருந்த எம்ஜிஆர் திராவிட இயக்கத்தில் இணைந்த பிறகு திரை உலகில் கொடி கட்டி பரந்த தேசிய கட்சி தயாரிப்பாளர்களின் படங்களில் மக்கள் திலகம் சிறந்த கதாநாயகனாக நடித்து வெற்றி கொடி நாட்டினார் .
திராவிட இயக்கத்தில் இருந்து கொண்டே தேசிய விருதுகளை பெற்ற பெருமை எம்ஜிஆர் ஒருவருக்கே என்பது சாதனையின் சிகரம் .
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.
நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.
அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
எம்.ஜி.ஆர்.
அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..
காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..
courtesy - vallamai
பாய்ஸ் கம்பெனி நடிகராய் தொடங்கி, நாடக நடிகராய் மலர்ந்து, திரைப்படக் கதாநாயகனாய் உயர்ந்து, அரசியல் தொண்டராய் மாறி முதலமைச்சராய் முடிசூடி மக்களின் மனங்களில் இன்று வரை அகற்ற முடியாத பிம்பமாய் ஒளிரும் எம் ஜி ஆர் என்ற மாமனிதன் மக்கள் திலகமாய், புரட்சி நடிகராய், புரட்சித் தலைவராய், முதலமைச்சராய் என் மனதிலும் என்றும் நிலைத்திருப்பார்.
courtesy - vallamai
பொருளாதாரமும் எம்.ஜி.ஆரும்:
1977ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தில் மாற்றுக் கட்சித் தலைவர்கள்… “எம்.ஜி.ஆருக்குப் பொருளாதாரம் தெரியுமா?” பொருளாதாரம் தெரியாமல் ஆட்சி நடத்த முடியுமா? என்று கேட்டார்கள். இதற்குப் பதிலளித்த எம்.ஜி.ஆர். “அடுத்த வேலை பசியைப் போக்கத் தெரியும். உழைப்பும் எளிமையும் சேமிப்பும் நேர்மையும் இருந்தால் போதும், யாரும் பிரகாசமான வாழ்வு பெறலாம். இதுதான் எனக்குத் தெரிந்த பொருளாதாரம்” என்று பதிலளித்தார். பசியோடு இருந்தவன் நான். பசியை வென்றேன். திரைத்துறையில் ஈடுபட்டு திருப்தியாக வளர்ந்தேன். அதேபோல் என் ஆட்சியிலும் மக்கள் திருப்தியை அடையச் செய்வேன் என்றார்.
courtesy - vallamai