https://fbcdn-sphotos-b-a.akamaihd.n...78d81be7fac639
Printable View
(80களின் துவக்கத்திலிருந்தே சிவாஜியின் திரையுலக செல்வாக்கும் மங்கத் தொடங்கியது. புதிய வகையான படங்கள் 70களின் இறுதியிலிருந்து வரத்தொடங்கிவிட்டன. மக்களின் ரசனை மாறத் தொடங்கியது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெற்றிப் படங்களைத் தந்தபோதும் அவரது பெரும்பாலான படங்கள் தோல்வி தழுவின. அவரது நடிப்புப் பாணியும் மிகவும் பழையதாகி விட்டிருந்தது.)
1980களில் நடிகர் திலகத்தின் புகழ் மங்கத் தொடங்கியது என்பதை ஒரு காலும் ஒப்புக்கொள்ள முடியாது. காரணம் 1979ல் அவருடைய திரிசூலம் திரைப்படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்து வசூல் சாதனைகள் செய்த்து. அப்போதே அவர் 50 வயதை தாண்டியிருந்தார். திரிசூலம் படம் அவருடைய 200வது படம். 1979 முதல் 1988 வரை 75 படங்களில் நடித்திருந்தார். அதாவது கவரிமான் முதல் புதியவானம் வரை. இவற்றில் கிட்டத்தட்ட 33 படங்களுக்கு மேல் வெள்ளிவிழாவையும், 100 நட்களையும் கடந்து ஒடியிருக்கிறது. உலகின் எந்த நடிகனாவது தன்னுடைய 50 வயதிலிருந்து 60 வயது வரை இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியிருந்தால் சொல்லுங்கள் நான் தங்களுடை கருத்தை ஒப்புக்கொள்கிறேன்.
நினைப்போம்.மகிழ்வோம்-13
"திருமால் பெருமை".
உலகாளும் பெருமானையே
தான் மணந்து கொண்டதாக
கனவு கண்டதைச் சொல்லும்
வளர்ப்பு மகள் கோதையை,
அவளது நலனில் அக்கறை
கொண்ட பொறுப்பு மிகுந்த தந்தை விஷ்ணுஜித்தராய்..
வேதனையில் முகஞ்சுளித்து
அவளது தலையிலிருந்து
பாதம் வரையும் பார்க்கிற
வருத்தப் பார்வை.
நினைப்போம்.மகிழ்வோம்-14
"சிவந்த மண்"-
'ஒரு ராஜா ராணியிடம்' பாடலினூடே "ஆசையுள்ள
தேவி இனம், ஒரு பக்கம்
அச்சமுள்ள மானினமோ?"
எனப் பாடுகையில்.. முகம்
தாழ்த்தி, காஞ்சனாவைப்
பார்த்தபடி ஒயிலாகக் கை
தட்டுவாரே..அது!