-
கார்த்திக் சார்
என்ன சார் நீங்க போய் பயமா இருக்குன்னு சொல்லலாமா
எவ்வளுவு பெரிய சீனியர்
100 பெர்சென்ட் நீங்கள் சொல்வது சரி
அவசரமாய் எழுதும் போது இது போன்ற தவறுகள் நிகழ்ந்து விடுகின்றன
சில சமயம் நெட் connection கட் ஆகி விடுமோ என்று பயந்து அவசரத்தில் அள்ளி தெளித்து விடுகிறேன்
சில சமயம் பாடல் வரிகளையும் அவசரத்தில் தவறாக எழுதி விடுகிறேன் நினைவில் இருப்பதை வைத்து
நிச்சயமாக உங்கள் அறிவுரை கவனத்தில் கொள்கிறேன்
நிற்க
உங்கள் பூக்காரி மிகவும் இண்டரெஸ்டிங்
அதிலும் எனக்கு மிகவும் பிடித்த காதலின் பொன் வீதியில் (இதை ரொம்ப நாளைக்கு காதலின் பொன் கீதங்கள் என்றே நான் பாடுவேன்)
1972 சூப்பர் ஹிட்
உங்களை மாதிரி/முரளி சார் மாதிரி/வாசு சார் மாதிரி/கோபால் சார் மாதிரி என்னாலே கோர்வையாக எழுத முடியவில்லை என்று எனக்கு ஒரு வருத்தம் மனதளவில் உண்டு .தயவு செய்து இதை தாழ்வு மனப்பான்மை என்று எடுத்து கொண்டு விடாதீர்கள்
-
கார்த்தி சார்
இந்த முத்து நடிச்ச "எல்லாம் அவளே" என்று படம் 1977 என்று நினவு
ஜெயச்சந்திரன் பாடிய ஒரு பாடல் "எல்லாம் அவளே என் தைவமும் அவளே "
பாலா வித் வாணி combination
"அழைத்தல் வராவிடில் துடிப்பேன் வளைக்கரம் பிடிபேன்
அணைத்தால் தராததை தருவேன் இது முதல் நாள் "
சிலோன் ரேடியோ ஹிட்
விச்சு கலந்து கட்டி தூள் கிளப்பி இருப்பார்
ஒ விடுங்கள் வளைக்கரம் வலிக்கும்
வாணி வாய்ஸ் ஸ்வீட்ஆக இருக்கும்
-
ஜெயச்சந்திரன் பாடிய பாடலின் முதல் வரி
"நான் வரைந்த ஓவியமே நல்ல தமிழ் காவியமே" என்று வரும்
-
சார் அப்புறம் இந்த மொட்டை early மியூசிக் இல்
மாரியம்மன் திருவிழா என்று படம் 1978
சிவகுமார் சுஜாதா என்று நினவு
ஒரு tms பாடல் ஒன்று மிக நல்ல tune ஆக இருக்கும்
"சிரித்தாள் சிரித்தேன் அவள் ஒரு ராஜகுமாரி
ஒரு பதுமையை போலே " என்று வரும்
சிலோன் ரேடியோ உபயம்
-
கார்த்திக் சார்!
'பூக்காரி' நினைவுகள் ஜோர்.
எனக்கு 'முத்துப்பல் சிரிப்பென்னவோ' தான் ரொம்பப் பிடிக்கும். (மஞ்சுளா வேற)
-
தங்க குடத்துக்கு பொட்டுமிட்டேன்
தாமரைப் பூவிற்கு மையும் இட்டேன்.
விழி மொட்டுக்களில் ஏனிந்த முத்துக்களோ
அன்னத்தின் பிள்ளை நீயடி கண்ணே
அதே 'மாரியம்மன் திருவிழா' வில் சுசீலாவின் தாலாட்டுப் பாடல்.
-
கிருஷ்ணா சார்
'எல்லாம் அவளே' படத்தில் ரொம்ப அரிய எஸ்.பி.பி மற்றும் ஜானகி இணைந்து பாடிய என்னை வெகுவாகக் கவர்ந்த பாடல்.
http://www.inbaminge.com/t/e/Ellam%20Avale/folder.jpg
நல்ல வாழ்வு வந்தது
செல்வம் வாரித் தந்தது
வண்ணக்கிளி எந்தன் எண்ணப்படி நம்மை வாழச் சொன்னது
ரொம்ப வித்தியாசமான பாடல்.
பள்ளி நாடகத்தின் தொடக்கமே
பருவம் எழுதும் விளக்கமே
என்னிடத்தில் உள்ள வண்ணம் யாவுமே
உந்தன் கைகளில் அடக்கமே
கன்னித் தாமரையும் மலர்ந்தது
கதிரோன் வரவும் கலந்தது
மந்திரமோ என்ன மாயமோ
மன்னன் கைபடக் கனிந்தது.
என்ன ஒரு பாட்டு! இன்று முழுக்க கேட்டாலும் எனக்கு சலிக்காது. குரலை விட்டுவிட்டு பாடகர் திலகமும், ஜானகியும் பின் மீண்டும் எடுப்பது ரொம்ப டாப்.
நல்ல வாழ்வு வந்தது என்று ஆரம்பத்தில் டி.எம்.எஸ். எடுக்கும் போது மெல்லிசை மன்னரின் குரலோ என்று சந்தேகம் எனக்கு வந்து விட்டது.
-
கிருஷ்ணா ஜி,
யாரை நீங்கள் "மொட்டை" என்கிறீர்கள்?
நிற்க.
காதல் விளையாட - கண்மணி ராஜா - பாடலில், அன்றைக்கு பாலுவின் குரலில் இளமை இருந்தது சரி. ஆனால், அன்று சீனியர் பாடகியாக இருந்த சுசீலாவின் குரல் மற்றும் இளையவர் பாலுவுக்கு சமமாக ஈடு கொடுத்த விதம்! பாடல் முடியும் போது - எண்ணங்களின் அன்பு நடனம் அங்கங்கள் மீது - என்னும் போது, லட்சுமியின் உடல் மொழிக்காக சுசீலா பாடினாரா, இல்லை சுசீலா பாடுவதற்கேற்ப லட்சுமி நடித்தாரா என்று கண்டு பிடிக்க முடியாது.
இதில் வரும், ஓடம் கடலோடும் பாடலிலும் லட்சுமியின் ஆளுமை இருக்கும் அதற்கேற்ப சுசீலாவும் சமாளிப்பார் கூடப் பாடுபவர் இளையவராயிருந்தாலும்.
இந்தத் திரி ரொம்பவே ரசிக்கும்படி உள்ளது. இளைப்பாரலுக்கு - வேலையின் இடையே மிகவும் உதவியாக இருக்கிறது.
எல்லோருக்கும் என் வந்தனம்!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி
-
-
வாசு சார்,
வான ரதம் படப் பாடல் மற்றும் அக்பர் படப் பாடல்கள். அற்புதம்!
எனக்கும், முரளி மற்றும் கோபால் மற்றும் உங்கள் எல்லோருடைய ரசிப்புத்தன்மையும் பெரிய அளவில் ஒத்துப் போகின்றன - இசையையும் சேர்த்தே!
அன்புடன்,
இரா. பார்த்தசாரதி