Originally Posted by Roshan
பிரபு,
தேவர் மகனில் பெரிய தேவர் பற்றிய உங்கள் ஆய்வு கட்டுரையை இப்போதுதான் படித்து முடித்தேன். உங்கள் கட்டுரை முழுவதையும் மொத்தமாக படித்ததற்கு பிறகுதான் அதைப்பற்றிய ஏனைய நண்பர்களின் கருத்துக்களையும் அலசல்களையும் படித்தேன். ஒவ்வொரு அங்கத்தையும் படிக்கும்போது அதைப்பற்றி என்னவெல்லாம் கூற வேண்டுமென்று நினைத்தேனோ, அவையெல்லாவற்றையும் - ஏன் அதற்கும் மேலாக இங்கே பலர் கூறக்கண்டேன் (இப்படிச் சொல்லி தப்பிக்க முயல்கிறேன் என்று மட்டும் நினைக்காதீர்கள் :) ).
இருப்பினும் என்னுடைய அபிப்ராயத்தை ஒரு சில வரிகளிலாவது கூறியே ஆக வேண்டுமென்று இங்கு வந்திருக்கிறேன். உங்கள் ஆக்கத்தை படித்து இன்புற்றதற்கு நன்றிக்கடனாக...
நடிகர் திலகம் "பெரிய தேவர்” பாத்திரத்தில் ஒரு பாடம் நடத்தி காடினார் என்றால், நீங்கள் அந்த கதாபாத்திரத்தை வெவ்வேறு கோணங்களில் அலசி இங்கு இன்னுமொரு பாடத்தை நடத்தி காட்டிவிட்டீர்கள். ஒவ்வொரு காட்சியையும் நீங்கள் விவரிக்கும்போது, அந்த காட்சியை உடனே பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டுமென்று சிலருக்கு தோன்றியிருக்கலாம். ஆனால் என்னை பொறுத்தவரை உங்கள் வர்ணனை ஒவ்வொரு காட்சியையும் அப்படியே என் மனக்கண் முன்னால் கொண்டுவந்து நிறுத்தியது. இதில் நிங்கள் நேரடியாக வர்ணிக்காத, ஆனால் வர்ணித்த காட்சிகளுடன் தொடர்புடைய காட்சிகளும் அடக்கம். மொத்ததில தேவர் மகனின் முதல் பாதியை புதிய கோணங்களுடன் முழுமையாக கண்டு ரசித்த திருப்தி.
என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் :) :D