http://i50.tinypic.com/ossar7.jpg
Printable View
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னதாக ஒரு நிகழ்ச்சி (கட்டுரை 1983ஆம் ஆண்டு எழுதப்பட்டது).
எம்.ஜி.ஆர் கதையில் வரும் சிறப்புக் காட்சி.
பன்னீர் செல்வம் என்னும் பெயர் படைத்தவர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெஞ்சைப் பறிகொடுத்தவர். பெருந்தலைவர் படம் மட்டும் வீட்டில் காட்சி தரும். தீவிர கட்சிப் பற்றும் மிகுதி. இதன் மூலம் நடிகர் திலகத்திடம் மதிப்பு அதிகம். சிவாஜி ரசிகரும் கூட.
பன்னீர் செல்வம் தாய் சாட்சியாக இன்றைக்கும் சொல்லும் பச்சை உண்மைதான் இந்தக் காட்சி.
பன்னீர் செல்வம் ஒரு எலக்ட்ரீசியன். படப்பிடிப்பு நிலையத்தில் மின்சார பகுதியில் அவருக்கு வேலை.
அருணாசலம் ஸ்டூடியோ. ஆனந்தஜோதியில் ஒரு காட்சி. மேடை மீது தமிழ்த்தாயின் சிலை. தாயின் சிலைக்கு முன்பாகச் சிறுவர் கூட்டம். வளரும் தலைமுறை சூழ்ந்து நின்கின்றனர்.
படப்பிடிப்புக்கு எல்லாம் தயார்.
கதாநாயகன் எம்.ஜி.ஆர் தமிழ்த்தாயின் சிலையின் அருகே கம்பீரமாக நிற்கின்றார். குரலெடுத்துப் பாடுகிறார். ஒரு தாய் மக்கள் நாமென்போம்.
முன்னும் பின்னுமாக நகர்ந்து படம்பிடக்க உதவும் டிராலியில் காமிரா இருக்கிறது,.
எம்.ஜி.ஆர் முகத்திற்கு அருகில் காமிரா போகவேண்டும். டிராலியைத் தள்ள எலக்ட்ரீசியன்கள் தயார்.
ஒளிப்பதிவாளர் விஜயனும், படித்தின் இயக்குநர் சாமியும் ரெடி என்று சொல்கிறார்கள்.
எல்லா விளக்குகளும் ஒரே சமயத்தில் ஒளி வெள்ளத்தைப் பாய்ச்சின.
ஒருதாய் மக்கள் நாமென்போம் பாடல் ஒலிக்கிறது.
அப்போது
அய்யோ அம்மா என்ற அலறல்
டிராலியை பிடித்துக் கொண்டிருந்த சிவாஜி ரசிகர் பன்னீர் செல்வம் அலறிச் சாய்கிறார்.
மின்சாரத் தாக்குதலில் பேச்சு மூச்சற்று கிடக்கிறார், பன்னீர் செல்வம்.
காமிராவை அப்படியே விட்டு விட்டு ஒளிப்பதிவாளர் விஜயன் கீழே உருண்டு விழுகிறார். சூழ்ந்து நின்ற உதவி காமிரா மேன்கள், படத்தயாரிப்பாளர் பி.எஸ். வீரப்பா , நடன ஆசிரியர் எவருக்கும் எதும் தோன்றவில்லை. திக்பிரமை பிடித்து நிற்கின்றனர். மின்சாரத் தாக்குதலால், கீழே கிடக்கும் பன்னீர் செல்வத்தை யாரும் தொடவில்லை. தொட்டுத் தூக்கினால் அவர்களையும் மின்சாரம் தாக்கிடுமே
அதிர்ச்சி எல்லோருக்கும் செயல்பட முடியாத பெரிய அதிர்ச்சி. செயலற்று நின்றனர்.
எல்லோருமா அப்படி . அதுதான் இல்லை. கதாநாயகன் எம்.ஜி.ஆர் மேடையில் இருந்து மின்னல் வேகத்தில் பாய்கிறார்.
மறுகணம் பன்னீர் செல்வத்தை தமது கரங்களில் அள்ளி எடுத்துக் கொண்டு வெளியே பாய்ந்தோடுகிறார்,
பேச்சு மூச்சற்று கிடந்த பன்னீர் செல்வத்தை கீழே படுக்க வைக்கிறார். கை கால்களை நீவி விடுகிறார். இங்கிதமாக பிடித்து விடுகிறார். உதவியாளரை நொடியில் சோடாவை எடுத்து வரச் செய்து மகத்தில் கொட்டுகிறார். தனக்காக வீட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழச்சாறை கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டுகிறார்.
பரிவான உபசரணை. பழச்சாறு வேறு உள்ளே சென்றது . பன்னீர் செல்வத்தின் உடலில் பாய்ந்த மின்சார அதிர்ச்சி எங்கோ பறந்தோடிவிட்டது.
கண்விழித்தார் பன்னீர் செல்வம். சட்டென எம்.ஜி.ஆரை அடையாளம் கண்டு கொண்டார். அன்பிற்கு அடிமையாகிறார்.
எம்.ஜி.ஆர் - நல்ல மனிதர் அவர்.
எம்.ஜி.ஆரைப் பற்றிய இதயக்கணிப்பு மேலோங்கியது.
இதே ஆனந்த ஜோதி படத்தில் மற்றொரு பாடல். கடவுள் இருக்கின்றார். அது உன் கண்ணுக்குத் தெரிகின்றதா?
ஆம். கடவுள் பன்னீர் செல்வத்தின் கண்ணுக்குத் தெரிந்தார். எம்.ஜி.ஆர் உருவில்.
தானும் மின்சார அதிர்ச்சியில் பாதிக்கப்படுவோம் என்பதை சிறிதும் நினைக்காமல் பன்னீர் செல்வத்தைப் பாய்தோடிக் காத்த எம்.ஜி.ஆர் மேலும் சில செய்தார்.
16-10-1983 ராணி வாரஇதழில் மு.நமச்சிவாயம் அவர்கள் எழுதிய எம்.ஜி.ஆர் கதை கட்டுரையிலிருந்து
FROM NET
http://i46.tinypic.com/2d7wy81.jpg
Makkal thilagam mgr in thaayin madiyil 48th anniversary on 15-12-2012.
Released in 5 theatres at chennai .
Dummy horse song - rajaththi kaththirundhaa ....... Super hit song .
Dinamalar - rajini speech - comment portion
திரு ரஜினி அவர்கள் தனது பிறந்தநாள் விழாவில் சிகரெட் -மது இரண்டின் பாதிப்பு பற்றி விரிவாக கூறி தனது ரசிகர்களுக்கு சிகரெட் -மது இரண்டையும் அடியோடு விட்டு விடும் படி வேண்டுகிறார் .
மக்கள் திலகம் அவர்கள் தனது திரை படத்தில் ஆரம்பம் முதல் நல்ல பழக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வசனங்கள் - பாடல்கள் மூலம் பல்லாயிரம் மக்களின் தீய பழக்கங்களை மாற்றிட உதவினார் .
எனவேதான் மக்கள் திலகம் மறைந்து 25 ஆண்டுகள் ஆனாலும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இன்றும் அவரை தெய்வமாக பூஜித்து வருகிறார்கள் .
உண்மையிலே மக்கள் திலகம் அவர்கள் ஒரு சமுதாய சிற்பி .
செல்வநாயகம் -மதுரை
Dinamalar - comment portion - ccg.kumar.
ரஜினி எடுத்த முடிவு நல்ல முடிவு. எம்.ஜி.ஆர் அரசியலில் வெற்றி பெற காரணம் அவர் பாபுலர் நடிகர் மட்டுமில்லை, நல்ல திறமைசாலி. அதானால் தான் அவரால் மிக ஏழ்மையில் இருந்து வந்தாலும் சினிமாவில் சாதிக்க முடிந்தது. எம்.ஜி.ஆர் மீது ஒரு சில குறைகள் இருந்தாலும், அவர் மனித நேயத்துடன் செய்த உதவிகள் ஏராளம். சினிமாவில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையில் ஒரு ஹீரோவாக நடந்து காட்டியவர். குடிப்பழக்கம் இல்லை. உடலை மிக கட்டுக்கோப்புடன் வைத்திருந்த ஒருவர். பேச்சில் நாகரீகம் உண்டு. எதிரிகளை கூட மன்னிக்கும் சுபாவம் உள்ளவர். அந்த காலத்தில் படங்களில் புது புது ஐடியாக்களை புகுத்தி தொழில் முறையில் வெற்றிகரமாக இருந்த ஒருவர். பாடலுக்கு டி.எம்.எஸ், கவிதைக்கு வாலி, கண்ண தாசன் என்று திறமை சாலிகளை பிடித்து போட்டவர். ஆட்சியிலும் நல்ல நிர்வாக திறமை உள்ள பண்ருட்டி, நெடுஞ்செழியன்,பொன்னையன் என்ற திறமையான அமைச்சர்களை போட்டு நல்ல ஆட்சி கொடுத்தவர். எம்.ஜி.ஆர் தொடர்ச்சியாக மூன்று முறை வெற்றி பெற்ற ஒருவர். ரஜினிக்கோ, விஜய் காந்துக்கோ, வரவிருக்கும் விஜயக்கோ அந்த திறமைகள் இல்லை. எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம். இனி நமக்கு தேவை நல்ல திறமையான நிர்வாகிதான் முதல்வராக வேண்டும். ஒரு மோடி போல், ஒரு நிதிஷ் குமார் போல்... ரஜினி ஒரு நடிகர் என்பதுடன் விட்டு விடுவோம். விஜய் காந்த், ரஜினி, விஜய் போன்றவர்கள் எம்.ஜி.ஆர் போல ஆக நினைப்பது புலியை பார்த்து பூனை சூடு போட்ட கொண்ட மாதிரி தான் ஆகும்.
உலக மொழிகளில் பல்வேறு நாடுகளில் பல்வேறு மொழிகளில் பல படங்கள் வெளிவந்துள்ளன .அந்தந்த மொழிகளில் பல திறமையான நடிகர்கள் அற்புதமாக நடித்து அந்த மொழிக்கு சிறப்பு சேர்த்துள்ளனர் .
என்னுடைய பார்வையில் நான் பார்த்துள்ள பல மொழி படங்களில் என்னை கவர்ந்த முதல் நடிகர் மக்கள் திலகம் .
http://i47.tinypic.com/9amhyr.png
மக்கள் திலகத்தின் நடிப்பில் நான் கண்ட சிறப்புக்கள் .
இயல்பான ,இயற்கையான நடிப்பு .
பாத்திரத்தின் தன்மை அறிந்து உணர்ச்சிகளை வெளி படுத்தும் ஆற்றல் .
வீரம் - காதல் -சோகம் -சிரித்த முகத்துடன் எதிரிகளிடம் மோதுவது .
ராஜ உடையில் அசல் மன்னனை போல் தோற்றமளிக்கும் உருவம் .
படத்துக்கு படம் புகுத்தும் புதுமை காட்சிகள் .
சமூகத்திற்கு தேவையான தத்துவங்கள் - பாடல்கள் வழங்கிய விதம் .
தீய பழக்கங்கள் எதனையும் தனது படத்தில் இடம் பெறாமல் பார்த்து கொண்டது .
தாய் பாசத்தை பெருமைபடுத்திய பல படங்கள் .
http://i50.tinypic.com/2ivi5hl.jpg
ராஜகுமாரி - சர்வதிகாரி - மந்திரிகுமாரி - மருதநாட்டு இளவரசி -
குலேபகாவலி -அலிபாபாவும் 40 திருடர்களும் - மதுரைவீரன் -
புதுமைபித்தன் - மகாதேவி - சக்கரவர்த்தி திருமகள் - நாடோடி மன்னன் - மன்னாதி மன்னன் -அரசிளங்குமரி -ராஜாதேசிங்கு -காஞ்சித்தலைவன் - அரசகட்டளை - மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - போன்ற ராஜா காலத்து படங்களில் அவர் ஏற்ற கதா பாத்திரங்கள் நிஜ மன்னர்களை போல் ஜொலித்து காட்டினார் .
http://i45.tinypic.com/smvhfk.jpg
சேர -சோழ -பாண்டிய மன்னர்களாகவும் - காஞ்சி பல்லவ மண்ணாகவும் நடித்து
இன்றும் நம் நெஞ்சில் நிலைத்து நிற்கிறார் நம் மக்கள் திலகம் .
கால் போக்கில் மாறி வரும் கலை உலகில் மக்கள் திலகமும் தனது நிலையினை மாற்றி ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக பல சமூக படங்களில் அபாரமாக நடித்து கோடிக்கணக்கான் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார் என்பது உலகமறிந்த வரலாற்று உண்மை .
தன்னாலும் சிறப்பாக நடித்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து காட்டி படங்கள் .
மலைக்கள்ளன் - தாய்க்கு பின் தாரம் - திருடாதே - நல்லவன் வாழ்வான் - சபாஷ் மாப்பிளே - தாய் சொல்லை தட்டாதே - தாயை காத்த தனயன் - குடும்ப தலைவன் - பணத்தோட்டம் - பெரிய இடத்து பெண்- ஆனந்த ஜோதி - வேட்டைக்காரன் -பணக்கார குடும்பம் - தெய்வத்தாய் - படகோட்டி - எங்க வீட்டுபிள்ளை - ஆயிரத்தில் ஒருவன் - அன்பே வா - பெற்றால்தான் பிள்ளையா -
காவல்காரன் - குடியிருந்த கோயில் -ஒளிவிளக்கு - அடிமை பெண்- நம்நாடு - மாட்டுகார வேலன்- ரிக்ஷாக்காரன் - நீரும் நெருப்பும் - நான் ஏன் பிறந்தேன் - இதய வீணை - உலகம் சுற்றும் வாலிபன் - உரிமைக்குரல் - நினைத்ததை முடிப்பவன் - இதயக்கனி - பல்லாண்டு வாழ்க - மீனவநண்பன் போன்ற படங்கள் .
இனிமையான பாடல்கள் - மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும் தத்துவ பாடல்கள் .புதுமையான சண்டை காட்சிகள் - தனது வாழ்வில் நடந்த துப்பாக்கி தாக்குதல் மூலம் குரல் வளம் பாதிக்க பட்டாலும் அந்த குறை தெரியாமல் ,ரசிகர்கள் ஏற்று கொண்ட விதம் , 50 வயதுக்கு மேல் எந்த ஒரு உலக நடிகருக்கும் கிடைக்காத இளமை குன்றாத பொலிவான முகம் - சுறுசுறுப்பான சண்டை காட்சிகள் என்று நடித்து இன்றும் உலகளவில் பேசப்படும் முதல் நடிகர் எங்கள் மக்கள் திலகம் .
http://i46.tinypic.com/y1oy9.jpg
அவரது சாதனை பட்டியல் தொடரும் .
esvee
FROM NET-
தங்கநகை போல் பழைய படங்களையும் பாலீஷ் செய்து மறுவெளியீடு செய்வது தற்போதைய பேஷன். Mughal-e-Azam வண்ணத்தில் வெளிவந்த போது அந்தப்படத்தின் ரசிகர்கள் அகமகிழந்து போனார்கள். அதே போல் எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன், அடிமைப் பெண் என்று ஆரம்பித்து சமீபத்திய 'உலகம் சுற்றும் வாலிபன்' வரையான மறுவெளியீடுகளும் வணிக ரீதியான வெற்றியைப் பெறுவதை கவனிக்கும் போது நாம் இன்னும் பழமையைப் போற்றுவதில் உள்ள குணம் தெளிவாகிறது.
இன்றைக்கு Brand image பற்றி பேசுபவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆரிடம் பாடம் கற்க வேண்டும். அந்தளவிற்கு ஆரம்பம் முதலே மிகக் கவனமாக தனது பொது ஆளுமையை வளர்த்துக் கொண்டவர். நடிகர் எம்.ஜி.ஆரை விட அரசியல்வாதி எம்.ஜி.ஆரே எனக்கு பிடித்தமானவர். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்போதும் முக்கியத்துவம் தரும் அவருடைய போக்கு விதிவிலக்கான ஒன்று.
சினிமாவில் கூட அவரது கவனம் அடித்தட்டு மக்களிடம் சென்று சேரவேண்டும் என்பதாகவே இருக்கும். எம்.ஜி.ஆரின் திரைப்படப் பாடலொன்றிற்கு இசையமைத்த எம்.எஸ்.விஸ்வநாதன், அதற்கு ஒப்புதல் வாங்க வேண்டி எம்.ஜி.ஆருக்கு ஒலிப்பதிவுக் கூடத்தில் போட்டுக் காட்டினாராம். (திரைப்பட உருவாக்கத்தில் இயக்குநர்களை மீறி கதாநாயகர்களின் தலையீட்டை ஆரம்பித்து வைத்தது எம்.ஜி.ஆராக இருக்கலாம்). உயர்ந்த தொழில்நுட்பங்களுடன் காரணமாக எல்லா இசைக்கருவிகளின் ஒலியும் மிகத்துல்லியமாக கேட்பதற்கு பிரம்மாண்டமாய் இருந்ததாம். ஆனால் இதை ஏற்க மறுத்த எம்.ஜி.ஆர், "இந்தப்பாடல் ஒரு சாதாரண ரேடியோவில் ஒலித்தால் எப்படியிருக்குமோ, அப்படியாக அமைத்து காட்டுங்கள். அப்போதும் நன்றாக இருந்தால்தான் இதை ஏற்பேன்" என்றிருக்கிறார்.
வடசென்னையில் உள்ள நடராஜ் தியேட்டரை கடக்கும் சந்தர்ப்பம் நேரும் போதெல்லாம் அப்போது வெளியிடப்பட்டிருக்கும் எம்.ஜி.ஆரின் பழைய படங்களுக்குக்கூட நட்சத்திர அட்டைகளும், காகித மாலைகளும் அணிவிக்கப்பட்டிருப்பதை ஆச்சரியத்துடன் கவனித்திருக்கிறேன். எம்.ஜி.ஆரின் கடைசிப்படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வெளிவந்தது 1978-ல் என்று நினைக்கிறேன். ஒருவர் நடிப்பதை நிறுத்தி 30 ஆண்டுகள் கழித்தும் கூட அவரது ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படுகிறார் என்பது வியப்புக்குரியது. பின்னர் அவர் அரசியலில் ஈடுபட்டு முதல்வரானது கூட இதற்கொரு துணைக்காரணமாக இருக்கலாம். 'எம்.ஜி.ஆர் இறந்து போய் பல வருடங்களாகிறது' என்று சொன்னதை நம்ப மறுத்து அவ்வாறு சொன்னவரை அடிக்கப்போன ஒரு குக்கிராமத்து மூதாட்டியைப் பற்றி எதிலோ படித்த நினைவு. இது பத்திரிகைகள் கட்டிவிட்ட கதையாக இருக்கலாம் என்றாலும் யோசித்துப் பார்க்கும் போது அது உண்மையாகக் கூட இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது.
கோவை - திருப்பூர் - கோபி - பொள்ளாச்சியை தொடர்ந்து தாராபுரத்தில் (dharapuram vasantham theatre) ரகசிய போலீஸ் 115 - (11.12.2012) செவ்வாய் முதல்.
PURATCHI THALAIVARIN FIRST CABINET IN 1977
http://i45.tinypic.com/14kjx3t.jpg
மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகள் .
தென்னிந்திய திரைப்படங்களில் 1936-1953 வரை பல படங்கள் வெளியாகி 100 நாட்கள் , வெள்ளிவிழா மற்றும் ஹரிதாஸ் போன்ற படங்கள் வெற்றிகரமாக ஓடினாலும் முதன் முறையாக பாக்ஸ் ஆபீஸ் ஹிட் என்ற பெருமையை பெற்ற முதல் தென்னிந்திய திரை படம் மக்கள் திலகம் நடித்த மலைக்கள்ளன் .
பின்னர் தொடர்ந்து 1954-1977 ஆண்டுகள் வரை அவரது படங்கள் சாதனை புரிந்துள்ளது .
1954 ஆண்டு வெளியான மலைக்கள்ளன் ஆறு மொழிகளில் தயாரிக்க பட்டு தமிழ் மொழியில் மட்டும் பிரமாண்டமான வெற்றி படைத்தது .
http://i1273.photobucket.com/albums/...ps8582aeb4.jpg
1954- மலைக்கள்ளன் முதல் தொடர்ந்து மக்கள் திலகம் MATINEE IDOL - EVERGREEN HERO - BOX OFFICE HIT HERO MGR என்றே அழைக்க பட்டார் .
1955 -குலேபகாவலி . 1956. மதுரை வீரன் . 1957- சக்கரவர்த்தி திருமகள் . 1958 - நாடோடி மன்னன் .
1961- தாய் சொல்லை தட்டாதே - 1962- தாயை காத்த தனயன் . 1963- பெரிய இடத்து பெண் . 1964- பணக்கார குடும்பம்
1965- எங்க வீட்டுபிள்ளை . 1966- அன்பே வா . 1967 . காவல்காரன் . 1968 - குடியிருந்த கோயில் . 1969- அடிமைப்பெண் . 1970 - மாட்டுக்கார வேலன் .
1971- ரிக்ஷாக்காரன் , 1972- நல்லநேரம் . 1973- உலகம் சுற்றும் வாலிபன் . 1974- உரிமைக்குரல் . 1975- இதயக்கனி . 1976-நீதிக்குதலை வணங்கு .
1977. மீனவ நண்பன் .
1959- 1960 இந்த ஆண்டுகளில் வெளியான அவரது படங்கள் சுமாரான வெற்றி பெற்றது .
esvee
மலைக்கள்ளன் 1954 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.எஸ். எம். ஸ்ரீராமுலு நாயுடு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர்,பானுமதி ராமகிருஷ்ணா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
http://i45.tinypic.com/so96xd.png
M.g. ராமச்சந்திரன் நடிப்பில் ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் இது. குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வினோத் சார் தயவு செய்து தன்னாலும் என்ற வார்த்தையை நீக்கி விடுங்கள். மக்கள் திலகம் அவர்கள் எல்லா படங்களிலும் மிகச் சிறப்பாக நடித்துள்ளார் என்பதை விட அந்தப் பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்பதே உண்மை. மிக இயல்பாக நாடகத்தன்மையற்றதாக அவரது நடிப்பு அமைந்துள்ளது. தன்னாலும் என்ற வார்த்தை சற்று நெருடலாக உள்ளது. தாங்கள் குறிப்பிட்டுள்ள படங்களைத் தவிர மற்ற படங்களில் அவர் நடிக்கவில்லை என்பதாகப் பொருள்படுகிறது. பிளீஸ்.
இனிய நண்பர் திரு ஜெய்
நான் குறிப்பிட்டது மக்கள் திலகம் அவர்கள் 1936-1946 வரை அந்த காலத்திற்கு ஏற்றவாறு தனது நடிப்பினை சிறு வேடங்களில் நடித்துள்ளார் .
1947-1952 - மக்கள் திலகம் அவர்கள் தனது தனி முத்திரையை பதிவு செய்துள்ளார் .
சமூக படங்கள் - ராஜா ராணி படங்கள் , தெய்வீக புராண படங்கள் என்று திரை உலகம் பயணிக்கும் வேலையில் மக்கள் திலகம் மட்டும் தான் சார்ந்துள்ள இயக்கத்தின்
கொள்கைகளுக்காக லட்சிய பிடிப்புடன் தனக்கென்று தனி பாணியினை உருவாக்கி புரட்சி நடிகராக மாறினார் .
சில பத்திரிகை விமர்சகர்கள் மக்கள் திலகம் சமூக படங்களில் நடிக்க முடியாதவர் என்று கூற்றினை உடைத்தெறிந்து தன்னாலும் சமூக படங்களில் நடித்து வெற்றி பெற முடியும் என்று நிரூபித்து காட்டியவர் என்ற அர்த்தத்தில் நான் குறிப்பிட்டேன் .
அவர் நடித்த 134 படங்களும் என்றும் ரசிகர்களுக்கு ஒரு காவியங்கள் என்பதில் மாற்று கருத்தே கிடையாது .
malaikallan -1954
http://i45.tinypic.com/23t44mt.png
http://i50.tinypic.com/b3myir.png
1954_ம் ஆண்டு ஜுலை 22_ந்தேதி வெளிவந்த படம் "மலைக்கள்ளன்", எம்.ஜி.ஆரை "சூப்பர் ஸ்டார்" அந்தஸ்துக்கு உயர்த்தியது. இந்தப்படம், கோவை பட்சிராஜா ஸ்டூடியோ தயாரிப்பு. பட்சி ராஜா அதிபர் எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு டைரக்டர் செய்தார். பொதுவாக பட்சிராஜா ஸ்டூடியோ அதிகப் படங்களைத் தயாரிப்பதில்லை. ஆனால் தயாரிக்கும் படங்கள் `சூப்பர் ஹிட்' படங்களாக அமைவது வழக்கம். பாகவதர் நடித்த "சிவகவி", பி.யு.சின்னப்பா நடித்த "ஆர்யமாலா", "ஜகதலபிர தாபன்" ஆகியவை பட்சிராஜா தயாரிப்புதான்.
அதேபோல, "மலைக்கள்ள"னும், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இந்தப்படம் தயாரானதில் ஒரு சுவையான பின்னணி உண்டு.
"மலைக்கள்ளன்", நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம் பிள்ளை எழுதிய நாவலாகும். அதை படமாக்க ஸ்ரீராமுலு நாயுடு முடிவு செய்ததும், அதற்கு வசனம் எழுத கருணாநிதியை அழைத்தார். "பராசக்தி" வெளிவந்து, கருணாநிதி புகழேணியின் உச்சியில் இருந்த நேரம் அது. "மனோகரா" படத்துக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார்.
"நாமக்கல் கவிஞர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், அவர் காங்கிரஸ்காரர். அவர் கதைக்கு நான் வசனம் எழுதினால், இரு தரப்பு ரசிகர்களும் ஏற்றுக்கொள்வார்களா என்று அஞ்சுகிறேன்" என்று கூறி, வசனம் எழுத மறுத்து விட்டார்.
இந்த சமயத்தில், ஸ்ரீராமுலு நாயுடுவை எம்.ஜி.ஆர். சந்தித்தார். "மலைக்கள்ளன் படத்திற்கு கலைஞர் வசனம் எழுத வேண்டும், நீங்கள் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். ஆனால் அவர் வசனம் எழுத மறுத்துவிட்டார். நீங்கள் அவரை சம்மதிக்க வைத்தால், நான் மலைக்கள்ளனை தயாரிக்கிறேன். நீங்கள்தான் கதாநாயகன்" என்றார், ஸ்ரீராமுலு நாயுடு. அப்போது, நடிகர் டி.பாலசுப்பிரமணியமும் (வேலைக்காரியில் நடித்தவர்) உடன் இருந்தார்.
உடனே எம்.ஜி.ஆரும், டி.பாலசுப்பிரமணியமும் கருணாநிதியை சந்தித்தனர். "நாமக்கல் கவிஞர் காங்கிரஸ்காரர் என்றாலும், மலைக்கள்ளனில் எவ்வித கட்சிப் பிரசாரமும் இல்லை. நல்ல விறுவிறுப்பான நாவல். நீங்கள் வசனம் எழுதவேண்டும். எனக்கும் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.
(1952 வரை காங்கிரஸ் அனுதாபியாக இருந்த எம்.ஜி.ஆரை, அண்ணாவிடம் நடிகர் டி.வி.நாராயணசாமி அழைத்துச்சென்று, அறிமுகப்படுத்தி வைத்தார். அண்ணாவால் கவரப்பட்ட எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் சேர்ந்தார். மலைக்கள்ளன் காலத்தில் அவர் தி.மு.க.வில் இருந்தார்.)
கருணாநிதி யோசித்தார். மலைக்கள்ளன் கதையை அவர் ஏற்கனவே படித்திருந்தார். நிச்சயம் அது வெற்றிப்படமாக அமையும் என்பது அவருக்குத் தெரிந்தது. எனவே, வசனம் எழுத சம்மதித்தார்.
கட்சிப்பிரசாரம் எதுவும் இன்றி, மலைக்கள்ளனுக்கு கருணாநிதி வசனம் எழுதினார். இந்தப்படத்தில் அவர் வசனத்தில் அனல் பறக்கவில்லை; தென்றல் வீசியது. கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து வசனத்தை எளிய_ இனிய நடையில் எழுதியிருந்தார்.
எம்.ஜி.ஆரும், பானுமதியும் ஜோடியாக நடித்தனர். எம்.ஜி.ஆர். பல மாறுவேடங்களில் வந்து அசத்தினார். அவருடைய முழுத்திறமையும் இந்தப் படத்தில் பிரகாசித்தது.
மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, டி.எஸ்.துரைராஜ், ஈ.ஆர்.சகா தேவன், சந்தியா, சுரபி பால சரஸ்வதி ஆகியோரும் நடித்தனர். டி.எஸ்.துரைராஜ், மாம்பழ நாயுடு என்ற போலீஸ்காரராக வந்து, வயிறு குலுங்க சிரிக்க வைத்தார்.
பாடல்களை நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை, கு.மா.பாலசுப்பிரமணியம், தஞ்சை ராமையாதாஸ், மக்களன்பன் ஆகியோர் எழுதியிருந்தனர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசை அமைத்தார்.
பானுமதியை குதிரையில் அமரச் செய்து எம்.ஜி.ஆர். அழைத்துச் செல்லும் காட்சியில் இடம் பெற்ற "எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே" என்ற பாடலை கணீர் குரலில் டி.எம்.சவுந்தரராஜன் பாட, அது சூப்பர் ஹிட்டாக அமைந்தது. எம்.ஜி.ஆருக்கு டி.எம்.எஸ். குரல் மிகவும் பொருந்தியிருந்ததால், தொடர்ந்து அவர் எம்.ஜி.ஆருக்கு பாடலானார்.
மற்ற எந்தப் படத்துக்கும் கிடைக்காத தனிச்சிறப்பை "மலைக்கள்ளன்" பெற்றது. தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், சிங்களம் ஆகிய மொழிகளிலும் இக்கதை தயாரிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர். நடித்த வேடத்தில் இந்தியில் திலீப்குமார் நடித்தார்.
எல்லா மொழி கதாநாயகர்களும், எம்.ஜி.ஆரைப் பின்பற்றியே நடித்தனர்.