-
நினைப்போம்.மகிழ்வோம்-16
"ராஜபார்ட் ரங்கதுரை."
அன்புத் தங்கையை சிதையேற்றி அனுப்பி விட்டு
அழுதபடி வருபவரின் முன்,
அவளை மணந்து கொண்டவன்
எதிர்ப்பட..
அத்தனை நாள் தங்கையை
அவன் கொடுமை செய்த
கோபமும், வருத்தமும் ஒன்று
சேர..
அவனைப் பார்த்து "நீயெல்லாம்
ஒரு மனுஷன்" என்று சொல்ல...
மறுத்து ஏதோ சமாதானம்
சொல்ல வரும் தங்கை கணவனின் பேச்சை இடைமறித்து விரக்தியில்
சொல்வாரே..!?
"சீ.. போடா!"
அது!
-
நினைப்போம்.மகிழ்வோம்-17
"வாணி ராணி".
வாழ்வோடு ஒரு பிடிப்பில்லாத அனாதை இளைஞனாய்.. மிதமிஞ்சிக் குடித்து விட்டு
வாணிஸ்ரீயிடம் புலம்பும்
கட்டம்.
அப்போது, அவர் மிகக் கிண்டலாய்ச் சொல்லும்...
"எல்லோரும் இந்நாட்டு
மன்னர்ர்ர்ர்ர்ர்ர்ர்...ர்".
-
நினைப்போம்.மகிழ்வோம்-18
"சந்திப்பு".
சர்வதேச குற்றவாளியென்று
தன்னைத் தவறாக நினைத்துக்
கொண்டு வாங்கு,வாங்கென்று வாங்கும் மகனின் வார்த்தைகள் பொறுக்காமல்
வாய் விட்டு அழத் துவங்க..
அந்நேரம் பார்த்து வேலைக்காரன் வந்து விட..
சமாளிக்கும் பொருட்டு,
அழுகையை அப்படியே
சிரிப்பாக மாற்றி..
வேலைக்காரன் நகர்ந்ததும்,
மீண்டும் சிரிப்பை அழுகையாய்
மாற்றித் தொடருவாரே...
அது!
-
நினைப்போம்.மகிழ்வோம்-19
"நிறைகுடம்".
தவிர்க்கவியலாத சூழலில்
பார்வையற்ற மனைவிக்கு
கண் சிகிச்சை செய்ய மறுத்து
விடுகிறார் நடிகர் திலகம்.
அவரைச் சந்தேகிக்கும்
மாமனார் மேஜர், தனது சொத்துக்கு ஆசைப்பட்டுத்
தனது மகளை மணந்து
கொண்டிருக்கலாம்..
அவருக்கு வேறொரு பெண்ணுடன்
தொடர்பிலிருக்கலாம்..
என்றெல்லாம் கண்டபடி பேசி
விட ..
பின்னணி இசையெல்லாம்
நின்று விட்ட பேரமைதியில்..
வேறுபுறமாய் திரும்பி நிற்பவர்,
கோபம் கொப்பளிக்க..திரும்பி மேஜரைப் பார்ப்பாரே...
அந்தப் பார்வை.
-
நினைப்போம்.மகிழ்வோம்-20
"நவராத்திரி".
படத்தின் முடிவுக் காட்சி.
நடிகர் திலகம் ஏற்று நடித்த
ஒன்பது பாத்திரங்களில், எட்டு
பாத்திரங்கள் ஒரே இடத்தில்
இருப்பதாய்க் காட்டும் காட்சி.
அதில், மிகக் கம்பீரமாக
அமர்ந்திருக்கும் அந்த உயர் போலீஸ் அதிகாரியைப்
பார்த்து, அந்த தெருக்கூத்துக்
கலைஞர், பயமும்,மரியாதையுமாய் ஓரிரு முறைகள் வணக்கம் சொல்வது.
-
நினைப்போம்.மகிழ்வோம்-21
"பலே பாண்டியா".
நடிகவேள்,தன் வீட்டிற்குள்
நடிகர் திலகத்தை அழைத்துச்
செல்லும்போது, அவர் வீட்டுக்
குட்டிக் கதவொன்று முதுகுப்
பக்கமாய் மோத..
அவர், அப்பாவித்தனமாய்
நடிகவேளிடம் கேட்கும்
"என்னா சார்.. ஒங்க வீட்டுக்
கதவு,கோழை மாதிரி பின்னாலே தாக்குது..!?
-
[QUOTE=vasudevan31355;1263034]ஆண்டவரின் அரிய நிழற்படம்
இதுவரை இணையத்தில் வராத தலைவரின் நிழற்படம்.
வாசு சார்
இதுவரை பார்த்திராதது.
மிகவும் அருமை.
-
வாசு சார்
பாராட்ட வார்த்தைகளே வரவில்லை.
தாயும் மகனும் தரணியையே நம் நெஞ்சுக்குள் அடக்கி விட்டார்கள்.
தங்களுக்கு மிக்க நன்றி.
-
-