http://i66.tinypic.com/2v1m0b4.jpg
Printable View
கடந்த வியாழனன்று (25/10/18) பெங்களூரு மாநகரை சார்ந்த திரு.பழனி ,தனது
மனைவியின் நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராமாவரம், மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். தோட்டத்தில் அமைந்துள்ள வாய் பேசாத மற்றும் காது கேளாதோர் பள்ளியில் உள்ள மாணவ மாணவியர் சுமார் 300 பேர்களுக்கும் , ஆசிரியர்கள் சுமார்
20 பேர்களுக்கும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தார் .
சிறப்பு விருந்தினர்களாக திரு.சைதை துரைசாமி,(முன்னாள் சென்னை மேயர் ), நடிகை லதா, திருமதி ஜெயந்தி கண்ணப்பன், (ஏ.எல்.எஸ். ப்ரொடக் ஷன்ஸ் )
திரு.சாய் நாகராஜன் (உ.சு.வாலிபன் டிஜிட்டல் விநியோகஸ்தர் )திரு.பி.எஸ். ராஜு,
உரிமைக்குரல் ஆசிரியர் )மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம்,
ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அமைப்புகளை சார்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
முன்னதாக திரு.சைதை துரைசாமி புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தார் . பின்னர் புரட்சி தலைவரின் உன்னத சத்துணவு திட்டத்தின் பெருமைகளை பேசி, மாணவ மாணவியருக்கு அன்னதானம் செய்வதை தொடங்கி வைத்தார் .பின்பு நடிகை லதா பேசும்போது, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். வாழும் வரலாறாக திகழ்ந்தவர். அவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாத
அளவிற்கு புகழின் உச்சியில் இருந்து கொண்டு மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றார் . அனைவரையும் வரவேற்று திருமதி லதா ராஜேந்திரன் ,பள்ளி நிறுவனர் பேசினார் . சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடைகளும், மாலைகளும் அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது .
நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் நண்பர்களின் பார்வைக்கு .