-
வணக்கங்கள்...! சினிமா, திரைப்படம், ஊடகம், மகிழ்ச்சி, சந்தோஷம் இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம். கலைத்துறை யானை சினிமாவில் பெரிய பெரிய சாதனையாளர் ஒருவர் எப்படி எல்லாம் வெற்றிய கொடுத்தாங்க, மக்களோட மக்களாக கலந்துக்கிட்டாங்க, மக்களை மகிழ்விக்க மக்களோட வாழ்ந்தாக அப்படிங்கிறது பல நிகழ்வுகளில் பல வடிவத்தில் வாழ்ந்த ஒருவர்தான். வாத்தியார், மக்கள் திலகம், புரட்சித் தலைவர், பொன்மனச்செம்மல் போன்ற பல பெயர்களை பெற்ற ஒருவர் யார் யாரென்றால் நெருப்பை அள்ளி தெளித்தாலும்...!! மங்காத தங்கம் எங்கள் தங்கம் புரட்சித் தலைவர் ஒருவரே... !!!
அப்போதும் சரி...!
இப்போதும் சரி...!
இனி எப்போதும் சரி...!
மங்காத தங்கம் எங்கள் தங்கம்..... ...... Thanks...
-
தமிழகத்தின் முதல்வராக நான்குமுறை பதவி வகித்த ஜெயலலிதா ஜெயராம் எனப்படும் செல்வி ஜெ. ஜெயலலிதா, தனக்கு முந்தைய நான்கு முதலமைச்சர்களைப் போலவே அரசியலுக்கு வருவதற்கு முன்பாக சினிமாத் துறையில் இருந்தவர்.
தமிழ், கன்னடம், தெலுங்கு என 1961 முதல் 1980வரை 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, அவருடைய அரசியல் குருவும், அ.தி.மு.கவின் நிறுவனருமான எம்.ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். இந்த நெருக்கமே அவரை இயல்பாக அ.தி.மு.கவுக்கு அழைத்து வந்தது.
எம்ஜிஆருடன் ஜெயலலிதா
அ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆரால் 1982ல் கட்சியில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஜெயலலிதா, அடுத்த ஆண்டிலேயே கட்சியின் கொள்கை பரப்புச் செயலராக்கப்பட்டார்.
1984ல் உடல்நலம் குன்றுவதற்கு முன்பாக, ஜெயலலிதாவை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர். கட்சியின் மூத்த தலைவர்கள் பலருக்கே இது ஆச்சரியத்தைக் கொடுத்தது.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது
1984ல் எம்.ஜி.ஆர். மருத்துவமனையில் இருந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர், ஜெயலலிதாவின் பிரசாரத்தை ஏற்கவில்லை. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு எம்.ஜி.ஆர். சென்னை திரும்பியபோது, விமான நிலையத்தில் அவரைச் சந்திக்கவும் ஜெயலலிதாவுக்கு அனுமதியளிக்கப்படவில்லை.
பிளவுபட்டது அஇஅதிமுக
எம்.ஜி.ஆருடன் பிரசார வாகனத்தில்
ஆனால், சிறிது காலத்திலேயே முதலமைச்சருடனான கருத்து வேறுபாடுகளை தீர்த்துக்கொண்டார் ஜெயலலிதா. அதற்குப் பிறகு அவரை அ.தி.மு.கவிலிருந்து நீக்குவதற்கு நடந்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. அதற்குப் பிறகு ராயபுரத்தில் நடந்த மிகப் பெரிய பொதுக் கூட்டத்தில் பேசச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
முதலமைச்சரிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இந்தச் சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
ஜெயலலிதாவின் ஆங்கிலப் புலமையை கவனத்தில் கொண்டு, அவரை 1984-ஆம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக நியமித்தார் எம்.ஜி.ஆர்.
1987 டிசம்பரில் எம்.ஜி.ஆர். மரணமடைந்ததும் ஜெயலலிதா தலைமையிலும் மறைந்த எம்.ஜி.ஆரின் மனைவியான வி.என். ஜானகியின் தலைமையிலுமாக அ.இ.அ.தி.மு.க. இரண்டாகப் பிளவுபட்டது. ...1989 ம் ஆண்டு இரு அணிகளும் ஒன்று சேர்ந்து சரித்திரம் படைக்க தொடங்கியது... Thanks...
-
ஷாலின் மசரியா லாரன்ஸ் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் புரட்சி தலைவர் பற்றி ஒவ்வொரு நடைஉடை பாவனை மற்றும் அவர் வெற்றிக்கான காரணம் இளமையாய் இருந்தால்தான் இனிமையாக இருக்க முடியும் பாடல் வரிகளையும் இசையையும் மக்களுக்கு எளிதாக போய் சேரவேண்டும் என்று கவனம் செலுத்துவார் பணம் வாங்கினோம் ஒவர் நடிப்பு நடித்தோம் என்று இல்லாமல் எதார்தத்தைமக்களிடம் கொண்டு சேர்த்த இதய தெய்வம் புரட்சி தலைவர் எம்ஜிஆர்.... Thanks...
-
தேக்கு மரம் உடலை தந்தது
சின்ன யானை நடையை தந்தது
பூக்கள் எல்லாம் சிரிப்பை தந்தது
பொன் அல்லவா நிறத்தை தந்தது
சூரியன் அல்லவா தேஜஸ் தந்தது
கருணை அல்லவா மனதை தந்தது
இறைவன் அல்லவா உன்னை தநதது எங்களுக்கு இறைவனாக
வாழ்க எம்ஜிஆர் புகழ் ... Thanks...
-
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து
எம்.ஜி.ஆர். எனும் மூன்றெழுத்து…
தமிழ் என்பது மூன்றெழுத்து.. சினிமா என்பது மூன்றெழுத்து.. அந்த தமிழ் சினிமா உலகில் தனக்கென தனி இடம் பிடித்த மூன்றெழுத்து..எம்.ஜி.ஆர். என்னும் சிகரம். அந்தச் சிகரத்திற்கு அறிமுகம் தேவையில்லை.
இளம் சூரியன் உந்தன் வடிவானதோ..
செவ்வானமே உந்தன் நிறமானதோ ..
பொன் மாளிகை உந்தன் மனமானதோ ..
என்ற பாடலுக்கேற்ப மாளிகை போன்ற மனதை உடையவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். என்ற பெருமழை தந்த ஈரத்தால் இன்னும் வாடாமல் தழைத்தோங்கும் பயிர்கள் (உயிர்கள்) ஏராளம்.
அவர் பிறந்தது இலங்கையாக இருந்தாலும் .. தஞ்சம் புகுந்தது தமிழ்நாட்டில். அதனால்தானோ என்னவோ “வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தின் பண்பு – அவரைத் தேடி வந்தவரை எல்லாம் வாழவைத்துக் கொண்டிருந்தார்.
நடிகரில் மனிதர்: மனிதர்கள் நடிகராக வருவது இயல்பு. ஆனால், “நடிகருள் மனிதராக மக்கள் திலகம் வாழ்ந்தவர்”. இன்னும் சொல்லப் போனால் மனிதருள் கடவுளாகவே பலருக்குத் தென்பட்டவர்.
அவரது தோற்றம் போலவே எண்ணமும் அழகு..அதனால்தான் புகழின் உச்சத்தையே அவர் அடைந்தார். திரை உலகில் அவர் தான் ஏந்தி வரும் ஒவ்வொரு வேடத்தையும் அதற்கான முயற்சிகளையும் தானே மேற்பார்வை காட்டினார்; உதாரணம் – அவர் எங்க வீட்டு பிள்ளையில் பாடி நடித்ததை பார்த்து மக்கள் அவரை தங்கள் வீட்டுப் பிள்ளையாகவே பார்த்தனர். எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அமைப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டினார். ஏன்? தன்னை ஒரு பயில்வானாக காட்டிக்கொள்ளவா? இல்லை. ஸ்டன்ட் நடிகரின் பிழைப்பிற்காகவே தனது எல்லா படங்களிலும் சண்டைக் காட்சி வைத்த ஒரே நடிகர் நம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். மனிதாபிமானத்தின் காவலராக இறுதி வரை இருந்தார்.
திரையில் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற பாடல்களில் கருத்தாழம் நிறைந்தது. ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை மக்களுக்கு பாடல் மூலம் பறை சாற்றிக் கொண்டிருந்தார். அது 2 வயது குழந்தை முதல் 100 வயது வரையிலான வயோதிகர் வரை சென்று சேர்ந்தது.
விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும்..
தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும்..
என்ற வரிகளுக்கேற்ப தமிழினத்திற்காக பாடுபட்ட ‘மன்னாதி மன்னன்’ .. அவர்.
அவரது பாடல்களைக் கேட்டாலே புத்துணர்வு பிறக்கும். அது காதல் பாடல்களாக இருந்தாலும் சரி.. நல் அறிவுரை கூறும் பாடல்களாக இருந்தாலும் சரி.. எதிர்மறை எண்ணங்களே இல்லாது பார்த்துக் கொண்டிருந்தார். பாடல்கள் மட்டுமல்லாமல் அவருடைய படத்தின் பெயரும் எதிர்மறை எண்ணத்தைத் தவிர்த்து .. உதாரணம் – தாய் சொல்லை தட்டாதே.. மன்னாதி மன்னன், நல்லவன் வாழ்வான், தர்மம் தலைகாக்கும், காவல்காரன், ஒளி விளக்கு, இன்னும் பல..
இந்தப் பெயர்களால் ஒரு விதமான நம்பிக்கை மனதில் தோன்றுகிறதல்லவா.. தானும் உயர்ந்து தன்னை சார்ந்தவரையும் உயர்த்துபவன் தான் தலைவன். அந்த வகையில் எம்.ஜி.ஆர். ஒரு உண்மையான தலைவன்.
எதோ நடித்தோம், பணம் சம்பாதித்தோம், மறைந்தோம் என வாழும் நடிகர்களுக்கு மத்தியில் அவரின் சிந்தனையே சொல்லானது.. சொல்லே செயலானது.. அந்த செயலும் புனிதமானது. அந்த வகையில் அவர் புத்தனாகவும் யேசுவாகவும் கண்ணில் தென்பட்டார்.
அவர் பற்றி எழுதும் இந்தக் கட்டுரையில் எனக்கு தெரிந்த இருவரின் அனுபவங்களை இங்கே குறிப்பிடுகிறேன்.
1. பட்டப்படிப்பு வரை படித்த இளைஞன் ஒருவர் – அரசாங்க உத்தியோகத்திற்கு முயற்சி செய்த காலத்தில், பல முறை தேர்வு எழுதியும் பலனில்லை. தேர்ச்சி பெறவில்லை. குடும்ப சூழலின் காரணமாக வேலைக்காக மிகவும் பாடுபட்ட காலமது. மனம் வெறுத்து இதுதான் கடைசிமுறை என நினைந்து தேர்வு எழுத சென்றார். அதில் ” உனக்குப் பிடித்த தலைவர் பற்றி” ஒரு கட்டுரை வரையும்படி கேள்வி இருந்தது. அவர் உடனே.. எம்.ஜி.ஆர். எனும் தலைவர் என்னும் தலைப்பில் எழுதினார். தன் மனதில் ஆழப் பதிந்திருந்த .. எண்ணி நெகிழ்ந்திருந்த விஷயங்களை எழுதினார். அந்த முறை தேர்ச்சி பெற்றார். அவரைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர்.தான் தன்னை இன்னும் வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்.
2. ஒரு முதியவர் .. ஒரு நாள் .. எம்.ஜி.ஆர் அவர்களிடம் வந்து உன்னை நம்பி என் பையனை படிக்க வைத்தேன். நீதான் வாழ வழி காட்ட வேண்டும் என்றார். உடனே எம்.ஜி.ஆர். முதலில் நீங்கள் சாப்பிடுங்கள்.. பின்னர் பேசுவோம் என்றார். அனால் முதியவர் விடவில்லை. தன் குறையை அழுது புலம்பிக் கொண்டிருந்தார். எம்.ஜி.ஆர். நீங்கள் சாப்பிடுங்கள்.. உங்கள் மகன் அடுத்த மாதம் அரசாங்க சம்பளம் உங்களுக்கு கொண்டு வருவான் என்றார். அதுபோலவே, அடுத்த மாதம் அந்தப் பெரியவர் தன் மகனின் சம்பளக் கவரோடு முதல்வரை (மக்கள் திலகத்தை) காண வந்தார்.
எந்த முதல்வரையாவது இப்படி எளிதில் எளிய மக்கள் காண முடியுமா? ஆனால் மக்கள் திலகம் அவர்களை காண முடிந்தது. கர்ணன் மறுபிறப்பு எடுத்து இவராக இம் மண்ணில் தோன்றினாரோ என்று தோன்றுகிறது.
இன்று பலர் அவரைப்போலவே நடித்து, ஆடிப்பாடிப் பிழைக்கிறார்கள். ஒரு சிலருக்கு அவருடைய வேடம் ஒத்துப்போகுமாயின், அதைக் காணும் பொது மக்களும், தாய் மார்களும், “வாங்கையா வாத்தியாரைய்யா’ என பெருமை கொள்வது அவரின் மீது உள்ள பற்றும் ஈடுபாடும் தான் காரணம். அவரை ஓர் அவதார புருஷனாகவே எண்ணியிருக்கிறார்கள்.
தமிழ் நாட்டையும் தாண்டி மேல் நாடுகளில் அவரைப் பற்றித் தெரியும். இது ஒரு நடிகனாக இருந்ததால் மட்டுமலா.. அவர் செய்த ஒவ்வொரு நல்ல செயலும் அங்கும் எதிரொலித்தது. நடிப்பதைத் தொழிலாகவும், கொடுப்பதைக் கொள்கையாகவும் கொண்டவர் எம்.ஜி.ஆர். எல்லோருக்கும் எலும்பிலும் தசையிலும் உடல் இருக்கும். ஆனால். இவருக்கோ தங்கத்தால் வார்த்த உடம்பு….அதனால்தான் எமனையும் ஒரு முறை வென்றார்.
புரட்சித் தலைவர் பள்ளியில் படிக்காவிட்டாலும் பல்கலைக் கழகமாக தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால்தான் அவர் தியாகரஜ சட்டக் கல்லூரியில் சேர்மேனாக அமர முடிந்தது.
மனிதன் உயிர் வாழத் தேவையானது உணவு. மனிதனாக வாழ வைப்பது கல்வி. இந்த இரண்டையும் தான் பிறருக்காக அள்ளி வழங்கிய வள்ளல். அவரது சத்துணவு திட்டம், அவர் காலத்தில் திறக்கப்பட்ட அரசு பள்ளிகளும் சாட்சி.
முடியாது.. இல்லை.. என்ற இரண்டு வார்த்தைகளையும் தமிழில் உள்ள அனாவசிய வார்த்தைகள் என அப்புறப்படுத்தியவர் பொன் மனச் செம்மல்.
எம்.ஜி.ஆர்.
அரிதாரம் இட்டு அடையாளமாகி ..
அகம் நுழைந்து ஜகம் ஆண்டவன்..
மக்கள் மனதில் குடியிருந்த கோவில்
என்றென்றும் ஊருக்கு உழைப்பவன்
அள்ளிக் கொடுப்பதில் அவர் மன்னாதி மன்னன்
மொத்தத்தில் என்றென்றும் அவர் எங்க வீட்டுப் பிள்ளை..
காலத்தை வென்றவர் அவர்..
காவியமானவர் அவர்..
— புவனா, மும்பை..... Thanks...
-
-
மக்கள் திலகம் MGR , சரோஜாதேவி , பாரதி மற்றும் பலர் நடித்த " நாடோடி" 14 / 04 / 1966வெளிவந்தது.
1966 ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத் திரைப்படத்தை , பத்மினி பிக்சர்ஸ் சார்பாக பி.ஆர்.பந்துலு அவர்களே தயாரிப்பும் கூட , இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக எம்ஜிஆர் அவர்கள் , சாதி கொடுமைகளை சாடி கண் பார்வையற்றவராக சிறப்புடன் நடித்த இப்படத்தின் நீளம் 4698 மீட்டர் ஆகும். மக்கள் திலகம் அவர்கள் 1966 ம் ஆண்டு மொத்தம் 9 படங்கள் நடித்தார்.
நாடோடி திரைப்படம்
சென்னையில்... பிளாசா , பிராட்வே , உமா திரையரங்குகளில் 57 நாட்கள் ஓடியது.
*
NADODI (transl.Vagabond : Tamil pronunciation : (na:do:di) is a 1966 Indian Tamil - Language film produced and directed by B.R. Panthulu.
The film Stars M.G.Ramachandran and B.Sarojadevi in the Lead roles.
Direct and produced by :
B.R. panthulu
Written by :
R.K.Shanmugam
Story by :
G.Balasubramaniam
Starring :
M.G.Ramachandiran
B. Sarojadevi
Bharathi
Music by :
M.S.Vishvanathan
Cinematography
V.Ramamoorthy
Edited by :
R.Devarajan
Production company :
Padmini pictures release
Date : 14 April 1966
Running time 155 minutes
Country : India
Language : Tamil
Budget : 7 Lakhs
Box office : 17 Lakhs
Ulagamengum ore mozhi
T.M.Soundararajan / P.Suseela 3 : 24
Liric : Kannadasan
Kadavul seida paavam
T.M.Soundararajan 4 : 43
Liric : Kannadasan
Androru naal
T.M.Soundararajan / P.Suseela
Liric : Kannadasan
Naadu adhai Naadu
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali
Paadum Kural
P.Suseela
Liric : Kannadasan
Rasikka Thaane indha
P.Suseela
Liric : Kannadasan
Thirumbhi Vaa Oliye
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali
Kadavul Thandha Paadam
T.M.Soundararajan
Liric : Kannadasan
Kanghalil
T.M.Soundararajan / P.Suseela
Liric : Vaali
Four productions of padmini pictures , with M.G.R , Nadodi was the only film in block and white .
B.R.Panthulu has an uncredited role in the film as a poet.
One theme of the film deals with caste system.
K.R.Ramasamy plays the doctor Nagendran while N.M.Nambiyar plays jambu. Bharathi in her debut plays Meena.
P.S.Venkatachalam after this film plays. Thyagu's father Arumugam Mudhaliar.... Thanks...
-
பாடலாசிரியர் வாலி எழுதிய பாடல்கள் டெலிவிஷன் களிலும் குக்கிராமங்களிலும் வீடுகளிலும் வியாபார ஸ்தலங்களிலும் தலைவர் காகவே எழுதிய பல பாடல்கள் சாகாவரம் பெற்று ஒலித்துக்கொண்டு இருப்பதை நாம் காணலாம். கழக கூட்டங்களிலும் இவர் பாடல்கள் முதன்மை பெற்று திகழ்கின்றன வாலி எழுதிய கீழ்காணும் பாடல்கள் மக்கள் திலகத்தின் கீர்த்தியை என்றும் புகழ்ந்து கொண்டே இருக்கின்றது எனலாம். தெய்வத்தாய்1964 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் படகோட்டி 1964 கொடுத்ததெல்லாம் கொடுத்தான் ஆசை முகம்1965 எத்தனை பெரிய மனிதனுக்கு ஆயிரத்தில் ஒருவன்1965 எங்க வீட்டுப் பிள்ளை1965 பணம் படைத்தவன் கண் போன போக்கிலே கலங்கரை விளக்கம்1965 காற்று வாங்கப் போனேன் அன்பே வா1966 புதிய வானம் புதிய பூமி சந்திரோதயம்1966 புத்தன் இயேசு காந்தி பிறந்தது பெற்றால் தான் பிள்ளையா1966 நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி காவல்காரன்1967 நினைத்தேன் வந்தாய் நூறு வயது ஒளிவிளக்கு1968 இறைவா உன் மாளிகையில் அடிமைப்பெண்1969 உன்னைப் பார்த்து இந்த உலகம் நம் நாடு1969 நல்ல பேரை வாங்க வேண்டும் நாளை நமதே1975 நாளை நமதே முதலிய பாடல்கள் குறிப்பிடத்தக்கவை நன்றி நெல்லை எஸ் எஸ் மணி அவர்கள்.... Thanks...
-
MGR Filmography Film 49 (1961) Poster
"சபாஷ் மாப்பிள்ளே"
வித்தியாசமான எம்ஜியார் படங்கள் என்று, ஒரு மிகச் சிறு பட்டியலிட்டால், அதில் அடங்கக் கூடிய ஒரு படமாக இந்தப் படமும் அடங்கும் என்பதே இதன் சிறப்பு. எம்ஜியார் நடித்த முழு நீள காமெடி படம் இது ஒன்றே.
எஸ் ராகவனின் தயாரிப்பு இயக்கத்தில் கேவி மஹாதேவனின் இசையுடன் வெளியாகி பாடல்கள் பிரபலமாயின. ஆக்ஷன் ஹீரோவான எம்ஜியாரை ஃபுல் டைம் காமெடி ரோலில் ரசிகர்கள் அதிகமாக விரும்பவில்லை; காமெடி + ஆக்ஷன் என்று உருவாக்கிய ஃபார்முலா எம்ஜியார் காலத்தில் ரசிக்கப்படவில்லை. வீராதிவீரனாக மக்கள் மனதில் நிலைபெற்று விட்டவரை ஒரு சாதாரண ஜேப்படித் திருடனிடம் பணத்தைப் பறிகொடுத்து வேலை இழந்து போலிசுக்குப் பயந்து பம்பாய்க்கு திருட்டு ரயிலேறும் ரோலில் எப்படி ஏற்றுக் கொள்வதாம்! ஒருவேளை இது மாபெறும் வெற்றி பெற்றிருந்தால் , எம்ஜியார் தன் இமேஜிலிருந்து வெளிவந்திருக்கலாம்; வாய்ப்பில்லாமல் போனது.
எம்ஜியாரின் இசைக்குரலாக டிஎம்எஸ் நிலை பெற்றுவிட்டபோதிலும் இந்தப் படத்தின் பாடல்களுக்கு சீர்காழி கோவிந்தராஜனையும் பிபி ஸ்ரீனிவாசனையுமே கேவிஎம் பயன்படுத்தினார் என்பதும் சுவாரசியமான தகவல்.
இதன் நாயகி மாலினியின் பொருளாதார நிலை அறிந்து இலவசமாய் நடித்து கொடுத்தார் என்ற பேச்சும் உண்டு........ Thanks...
-
MGR Filmography Film 48 (1961) Poster
ஏற்கனவே சில சமூகப்படங்களில் நடித்து அவற்றில் ஒன்றிரண்டு .மாபெரும்வெற்றி பெற்றிருந்தாலும் ராஜாராணி கதைகளின்.கதாநாயகனாகவே பெயர் பெற்றிருந்த எம்ஜியாரை சமூக கதைகளின் ட் வெற்றி நாயகனாக நிலைநிறுத்திய படம் என்ற பெயர் பெற்றது ஏஎல்எஸ் தயாரிப்பில் 1961ஆம் ஆண்டு வெளியான திருடாதே திரைப்படம்.
இதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே எம்ஜியாருக்கு இரண்டாம் நாயகியாக நாடோடி மன்னனில் தோன்றியிருந்தாலும், அவரது மோஸ்ட் லவபிள் ஜோடி என்று சரோஜாதேவியை உறுதி செய்ததும் இப்படம்தான். இந்தப் படத்தைத் தொடர்ந்து சுமார் ஆறேழு ஆண்டுகளுக்கு அந்த ஜோடி தொடர்ந்து ஒரு இருபத்தைந்து படங்களில் தோன்றியது; அவற்றில் பெரும்பாலும் வெற்றிப்படங்களும் கூட. எம்ஜியாருக்கு மிகப் பொருத்தமாக அமைந்த ஜோடி என்று மூன்று நடிகைகளைச் சொல்வார்கள்; அதில் முதல் சரோஜாதேவி அமைய இப்படமே முதற்கல் ஆனது.
எதைப் பற்றியும் கவலைப்படாத ஒரு ஜாலியான திருடனாகத் துவங்கும் எம்ஜியார் தனது பிக்பாக்கெட்டால் ஒரு உயிர் பறிபோனதை அறிந்து வருந்தி திருந்துவதாக கண்ணதாசனின் திரைக்கதை வசனம் அமைய எஸ்எம் சுப்பையா நாயுடுவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் பிரபலமாயின. அவற்றில் திருடாதே பாப்பா திருடாதே எனத்துவங்கும் பட்டுக்கோட்டையின் பாடலும், என்னருகே நீயிருந்தால் என்று துவங்கி எம்ஜியாருக்காக பிபிஎஸ் குரல்கொடுத்த பாடலும் எவர்க்ரீன் அந்தஸ்தை அடைந்தன.
இந்தப் படம் பற்றி ஒரு சுவாரசியமான தகவல். பொதுவாக எம்ஜியார் வசனம் பேசும்போது கைகால்களை அதிகம் ஆட்டிப் பேசுகிறார் என்றொரு விமர்சனம் உண்டு; இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் தன் கைகள் இரண்டையும் பாக்கெட்டில் வைத்துக் கொண்டுதான் அவர் நடித்தாராம்!
தெலுங்கில் டப் செய்யப்பட்ட எம்ஜியார் படங்களில் இதுவும் ஒன்று; ஜெபுடொங்கா என்ற பெயரில் வெளியானது.இத்திரைபடத்திற்க்கு சிறந்த தலைப்பு சொல்பவர்க்கு பரிசு அறிவித்து திருடாதேனு தலைப்பு சொன்னவர் பரிசு பெற்றார்.எம்.ஜி.ஆர் அவர்களின் சமூக படங்களின் டிரெண்ட் செட்டர் என கூறலாம்.1961 ல் அதிக வசூல் ஆன திரைப்படம்..... Thanks...