Yesterday evening show shanthi theatre was almost Full except lower class.
from begining to end RASIGARGAL ALLPARAI was trendrous with general public's overwhelming response. hope pasamalar 2 will create a flutter like karnan.
Printable View
பாசமலர் அலப்பரைகளுக்கு ஒரு வாரம் விட்டு 1972 தொடரலாம் என்று பார்த்தால், அவ்வளவு பதிவுகள் இல்லையே? வாசுவும் ,முரளியும் சுறுசுறுப்பு காட்டினால் நலம்.
மதுரை அலங்கார் திரையரங்கம் பாசமலர் வெளியீட்டிற்காக அலங்கரிக்கப்பட்ட நிலையில்
http://i1234.photobucket.com/albums/...psb40344ac.jpg
67வது சுதந்திர தினம் - நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் மதுரை மாவட்டம் வையூர் கிராம ஊராட்சிப் பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கப்ப்ட்டது.:
http://i1234.photobucket.com/albums/...ps4906dc84.jpg
http://i1234.photobucket.com/albums/...psb0e0f144.jpg
http://i1234.photobucket.com/albums/...ps847b66da.jpg
http://i1234.photobucket.com/albums/...ps2f71351b.jpg
indru tholaikaatchiyil paasamalar !!! sivaji samooga nala peravai, perumai padum badi iyangi varugiradhu. :bow:
பாசமலர் மறு வெளியீட்டில் மெய்மறந்து மகிழும் அனைத்து தலைவர் பக்தர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
இன்றைய தலைமுறையினர், ஒரு திரைப்படம் 100/150/175 நாட்கள் ஓடி சாதனை படைக்கும் நிகழ்வுகளை, அறியார்.
(இப்போதான் 25 நாட்களே ஒரு சாதனை ஆகிவிட்டதே!)
எனவே அவர்கள் உணரும்படி,பாசமலர் 150 நாட்கள் ஓடி நாம் விழா எடுக்க வேண்டும் என்பது என் அவா.
அந்த 150 நாட்கள் கொண்டாட்டமே அலாதி..மற்றற்ற மகிழ்வும் ஆனந்தமும் தரும்.
இறைவன் அருளட்டும்.
கார்த்திக் சாரின் வேண்டுகோளுக்கிணங்க அவரின் எதிர்பார்ப்பான தர்மம் எங்கே எழுதி விட்டு, வசந்த மாளிகை என்ற காவியத்திற்கு கவிதையில் விமரிசித்து ,வாசு மற்றும் என்னுடைய அபிமான ஞான ஒளி,ராஜாவுடன் முடிக்க போகிறேன்.
டியர் கோபால் சார்
தங்களுடைய பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்.
விரைவில் வெளியாக உள்ள தங்க சுரங்கம் திரைப்படத்தின் விளம்பரம் .. இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து
http://www.dinathanthiepaper.in/1882...4339-MDS-M.jpg
விரைவில் வெளியாக உள்ள நான் வாழ வைப்பேன் திரைப்படத்தின் விளம்பரம்... இன்றைய தினத்தந்தி நாளிதழிலிருந்து...
http://www.dinathanthiepaper.in/1882...4340-MDS-M.jpg
வசந்த மாளிகை-1972
எனது அபிமான சிவாஜி-வாணிஸ்ரீ ,ஆனந்த்-லதாவாக வாழ்ந்து ,இணைந்து உலக அபிமானம் பெற்ற காவியத்தின் கவிதையை கவிதையாகவே வடிப்பேன்.மதுவின் விளைவுகளுக்கு மதுவே மருந்தாவது போல, இந்த காவிய கவிதை நம் மனதில் தைத்த மன்மத அம்புகளின் விளைவுகளுக்கு மருந்தாக ,சந்தனம் போல் கவிதை பூசி ,என் இதய கடவுளை பூசிக்க போகிறேன்.
மதனுடன் ரதி இணையின் இன்பம் இத்தரணி க்கல்லவோ
அதனுடன் விடுக்க பட்ட விரக பாணங்கள் வீசிய காதற்புயல்
ஆனந்தன் தன் கண்ணான லதாவை காணு முன்பு கிண்ணத்தை ஏந்திய எண்ணங்களில்
ஞானந்தனை முறித்து மது மாது ஆனந்தங்களில் தன்னை தொலைத்தவன்
கெட்டு போனவனே அன்றி கெட்டவனுமல்ல கெடுத்தவனுமல்ல
விட்டு விட்ட மனசாட்சியை தேடியலையும் தூய துணையரியா வீட்டு அனாதை
தொட்டு பார்த்து தூசு தட்டி கலைமகள் கைபொருளை சீராட்ட வந்தாள் ஒரு வாணி
விட்டு பட்ட வீட்டு சொந்தங்களோ தங்களுக்குள் விலங்கிட சுயநல சூழல் வளர்க்க
குடிலில் இணைந்தாலே குதூகல இணைப்பு மாளிகையில் வசந்தமாக தரும் மயக்கமென்ன
முடிவில் வசந்த மாளிகையில் யாருக்காக என உலகே உணர்ந்து ஊருக்கும் உணர்த்தியது
தாயிருந்தும் செவிலி மடியில் உறங்கிய சேய் இரவல் தாயை கௌரவ கொலை கொள்ளும்
பேயிடமிருந்து ஞாயமற்ற காயங்களில் மனதை தொலைக்க சுயம் தொலைத்தவன்
வசந்த மாளிகை வடித்து தன்னை மீட்டியவளால் தான் தன்னை மீட்ட அதிசயம்
கசந்த மாளிகையானதோ காயம் தரும் இங்கிதமற்ற ஒரே கேள்வியால்
மருந்தானவளே காயம் தருகிறாள் தன் சுயம் காக்க மீட்ட வீணையின் தந்தியருக்கிறாள்
அருமையான ஆத்மாவை மீட்க ஆட்கொண்ட தேவதையின் சிரத்தில் செய்த சத்தியம்
மருத்துவரோ மதுவை மருந்தாக்க நாடிய மாதுவுக்கு நாடேன் மதுவை என்ற
இருமனம் கேட்கும் வாலிப சேயை நாடாதே என சொந்தமின்றி சொல்லி விட
திருமணம் முடிக்க செல்லும் திருமகளை தீர வாழ்த்தி நஞ்சுதனை
விரும்பி நாடி ஓலமிடும் ஊமை காதலனின் உரத்த ஓசையின் உளமறிந்து
அரும்பி அருகிய ஆசை அரும்பை ஆயுளுக்கும் சுவைக்க வரும் சுகத்துடன் சுபமுடிவு.
(தொடரும்)
பாசமலர் சென்னைத் திரையரங்குகளில் காட்சி நேரங்கள்
சாந்தி 12.00 noon, 3.00 pm, 6.45 pm, 10.15 pm
ஸ்டூடியோ 5 - சத்யம் வளாகம் 12.20 pm
ஐநாக்ஸ் - சிட்டி சென்டர் வளாகம்
6.36 pm
பி.வி.ஆர - ஸ்கை வாக் வளாகம்் 10.15 am, 3.15 pm
Fame National 3.45 pm
பாசமலர்
நேற்று மத்யம் ஆபீஸ் முடிந்த உடன் 12 மணி காட்சிக்கு என் நண்பர்கள் படை சூழ பரூக் பீல்ட்ஸ் ல் படம் பார்க்க sendrom . கர்ணன் அளவுக்கு ஹவுஸ் புல் இல்லை இருந்தாலும் நல்ல கூட்டம்.
சரியாக 12 மணிக்கு விளக்கு அணைக்கப்பட்டு 12.10 க்கு படம் துவங்கியது . சென்சர் certificate காட்ட பட்ட உடன் ஒரே ஆரவாரம் . திரையில் சிவாஜி சார் பெயர் வந்த உடன் கேட்கவே வேண்டாம் . என்னமோ புது படம் போலே ஒரே சந்தோசம் தான் . இதன்னைக்கும் அந்த ஹால் ல் நாங்க 10 பிரிஎண்ட்ஸ் மட்டும் தான் யூத் பாகி எல்லாம் middle age people .
பாக்டரி காட்சிகளை மிகவும் ரசிடார்கள் மக்கள் . ஜெமினி சார் அறிமுகம் ஆகும் காட்சிக்கும் நல்ல ரேச்போன்சே . சிவாஜி பணக்காரன் ஆகும் transformation காட்சியில் தான் தியேட்டர் ல் அலப்பறை தங்க முடியவில்லை
தொடர்ந்து அவருக்கும் ஜெமினி க்கும் நாக்கும் வாக்குவாதம் , நம்மவர் ஆங்கிலத்தில் உரையாடும் காட்சியும் நல்ல recieve செய்ய பட்டது .
இப்படி நன்றாக சென்று கொண்டு இருந்த பொது சிவாஜி சார் தன சொத்தை தன் தங்கைக்கு கொடுக்கும் பொது சிறிய சலசலப்பு கேட்டது , திரும்பி பார்த்தல் எனக்கு பின்னாடி இருந்த தாய்குலங்கள் சபித்து கொண்டு இருப்பதாய் கேட்க முடிந்தது .
கடைசி காட்சியில் மயான அமைதியும் , மெல்லிய கண்ணீர் உடன் விடை பெற்றோம்
பாசமலர் பிரிண்ட் , ஒலி அற்புதம் .
இடைவேளை யில் நாங்கள் நண்பர்கள் வந்த மக்கள் விடம் பேச்சு கொடுத்தோம் . அதில் தாங்கள் எந்த சிவாஜி சார் படத்தை காண விரும்புகிறார்கள் என்பதை கேட்டோம்
டாப் 10 (தியேட்டர் ல் )
அவர்களின் விருப்ப பட்டியல்
வரிசை படி
தில்லான மோகனம்பாள், சிவந்த மண் , APN படங்கள் ( திருமால் பெருமை யை தவிர )
ராஜா ராஜா சோழன் (பலாப் என்று எல்லோராலும் சொல்ல பட்ட படம் ) புதிய பறவை
தெய்வ மகன் , வீரபாண்டிய கட்டபொம்மன் ,ராஜா , நவராத்திரி , உத்தமபுத்திரன் , திரிசூலம்
இதே போலே என் நண்பர்கள் நேற்று மாலை காட்சியில் வேறு ஒரு அரங்கில் சென்று கேட்டு உள்ளார்கள் , கிட்ட தட்ட இதே போன்ற பதில்கள் தான்
எங்களுக்கு ஆச்சர்யம் என்ன என்றால் முக்க வாசி நபர்களுக்கு மிக பிரம்மாண்டம் படங்கள் பிடிப்பது
சிவாஜி சார் படங்களை வைத்து இருப்போர்கள் இந்த படங்களை மூன்று மாதங்கள் க்கு ஒரு முறை வெளி இடலாமே
அதே போலே multiplex மற்றும் A /c தியேட்டர் யில் சிவாஜி சார் படங்களை பார்க்க மக்கள் அதரவு தெருவிக்கிரர்கள்
கோவை யில்
பாசமலர் கல்கி கொண்டு இருக்கும் அரங்குகள்
பரூக் பீல்ட்ஸ் :12 டெய்லி
சாரதா : 4 காட்சிகள்
கனகதாரா: மாலை 6 மணி காட்சி
அர்ச்சனா : தினசரி 2 காட்சிகள்
டியர் கோபால் சார்
மாளிகை மன்னன் மயக்கும் கண்ணன் - சுய
மானமே பெரிதென்று காதலை விடுத்த
நாயகியின் நெஞ்சிலும் மீதம்
இருக்கும் காதலை
வெளிக் கொண்டு வந்து
கரம் பிடித்த நாயகன்
இருவரின் காதலை
இனிமையாக சொன்ன
காவியத் திரைப்படம்
கோபாலின் கவிதையில்
கோபுரம் போல் உயர்ந்ததே..
ராகுல்
பாச மலர் திரையரங்க அனுபவம் தங்களுக்கு புதிய தகவல்களைச் சொல்லியிருக்கிறது என்பதைத் தங்கள் பதிவிலிருந்து அறிய முடிகிறது. இனி வரும் காலங்களில் வெளியாக உள்ள படங்கள் மேலும் மேலும் புதியதாய் மலரும்.
அபூர்வ நிழற்படங்கள்.
சென்னை சாந்தி திரையரங்கில் நடிகர் திலகத்தின் 200 வது திரைக்காவியமான திரிசூலம் வெளியான போது வைக்கப் பட்டிருந்த கட்அவுட் மற்றும் பேனர்களைப் பார்க்கும் ஆவல் பலருக்கும் குறிப்பாக புதிய தலைமுறையினருக்கு இருக்கும். எமனுக்கு எமன் திரைப்படம் அந்த ஆவலைத் தீர்க்கிறது. அப்படத்திலிருந்து சென்னை சாந்தி திரையரங்கில் திரிசூலம் வெளியாகி ஓடிக்கொண்டிருந்த போது எடுக்கப் பட்ட காட்சிகளின் நிழற்படங்கள் படத்திலிருந்து.
முகப்பில் இருந்த நீரூற்றினையும் அதிலிருந்து ஊற்று மேல் நோக்கிப் பாய்வதையும் காண்க
http://i1146.photobucket.com/albums/...ps418f3f24.jpg
பேனர்கள்
http://i1146.photobucket.com/albums/...ps0bd94795.jpg
http://i1146.photobucket.com/albums/...ps2af2140e.jpg
http://i1146.photobucket.com/albums/...psd50a7210.jpg
பிரம்மாண்டமான கட்அவுட்டையும் அதற்கு மாலை அணிவித்திருப்பதையும் காண்க
http://i1146.photobucket.com/albums/...ps61de1780.jpg
அன்புள்ள சந்திரசேகர் சார்,
சுதந்திர தினத்தன்று நடிகர்திலகம் சமூக நலப்பேரவை சார்பில் பள்ளிக்குழந்தைகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கிய நிகழ்ச்சி சிறப்பாக நடந்தமைக்குப் பாராட்டுக்கள்.
நடிகர்திலகம் பெயரால் சமுதாய நற்பணிகள் ஆற்றிவரும் பேரவைக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்.
(திருவாரூர் - காரைக்குடி அகலரயில்பாதை கோரி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் நீங்களும் கலந்துகொண்டீர்களா?. திருத்துறைப்பூண்டியில் நடந்த போராட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோவில் தங்களைப்போல ஒருவரைப் பார்த்தேன்)...
உன் உரைநடையில் உறைந்த நாங்கள் உயிர்த்து எழும் முன்னரே
கவிநடையை தொடங்கி களிப்புற செய்கின்றாய்.
நடிப்பின் கோ, பால் யாம் கொண்ட பக்தியை,
நண்பன் கோபால், நீ நனி செய்கிறாய்.
காதலுக்கு அடையாளம் வட இந்தியாவிற்கு தாஜ்.
தென் இந்தியாவிற்கோ அது வசந்த மாளிகை.
தலைவரை தரிசிக்க நான்,அன்னை இல்லம் போனதில்லை.
ஆனால் மய்யத்தில் அவரை மனம் நிறைய தரிசிக்கிறேன்.
அவரின் பாசமலர்கள்..நம் நண்பர்கள்.
அவரின் வசந்த மாளிகை..நம் மய்யம்
இந்த மய்யம் எனக்களித்த பரிசுகள் ஏராளம்.
அவற்றில் தலையானது,வெளிநாட்டிலிருந்தே கிடைத்தது.
ஆம்! வியட்நாமிலிருந்து,நீ அளித்த,
முதற்கடவுளை மூன்றாம் கோணத்தில் காண்பித்த உன் கட்டுரைகள்.
நாயகனின் நான்காம் கோணத்தை காண்பிக்கும் உன் கவி நடை
தொடர்ந்து எழுது நண்பா,மகாகவி காளிதாசை
தொழுது எழுது நண்பா.!
அன்புள்ள ராகவேந்தர் சார்,
சாந்தியில் திரிசூலம் வெற்றிநடை போட்டபோது நடந்த 'எமனுக்கு எமன்' ஷூட்டிங்க் ஸ்டில்கள் மிக அருமை மட்டுமல்ல, அந்த இனிய காலங்களை கண்முன் கொண்டுவருகின்றன.
நண்பகலில் ஷுட்டிங் நடந்துள்ளது எங்களுக்குத் தெரியாது. வழக்கம்போல மாலைநேரம் சாந்திக்கு சென்றபோது, பகலில் அங்கு ஷூட்டிங் நடந்த விவரத்தை அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். அந்த நீரூற்றைச் சுற்றிஇருந்த சிமெண்ட் திண்ணையில்தான் எப்போதும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். பக்கத்தில் இருந்த 'பால்ஸ் ரெஸ்டாரெண்ட்' போர்டும் அதன் முன்னிருந்த வெற்றிடமும்கூட கவராகியிருக்கிறது.
திரிசூலம் நடிகர்திலகம் கட்-அவுட் அணிந்திருப்பது எங்கள் மன்றம் அணிவித்த மாலைதான். (கட்-அவுட் என்றால் பிளைவுட்டால் அமைக்கப்பட்ட ஒரிஜினல் கட்-அவுட்டே தவிர இப்போதுபோல டிஜிடல் பேனரை இழுத்துக் கட்டிவிட்டு அதை கட்-அவுட் என்று சொல்வது கிடையாது)
என்ன இருந்தாலும் பழைய சாந்தி, பழைய சாந்திதான்...
நடிகர்திலகத்தின் ஆத்மார்த்த ரசிகராக பல சந்தர்ப்பங்களில் தன்னை வெளிக்காட்டி கொண்டிருக்கும் சிவாஜி ராவ் என்கிற ரஜினி காந்த ,திரையுலகத்தில் காலடி எடுத்த வைத்த நாளில் ,அவரை வாழ்த்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
டியர் கோபால் சார்,
வசந்தமாளிகை - மணம் வீசுகிறது.
மற்ற பதிவுகளுக்கு காத்திருக்கிறோம்.
டியர் ராகவேந்திரன் சார்,
எமனுக்கு எமன் ஷூட்டிங் அபூர்வப் படங்கள் அருமை. பதிவிற்கு நன்றி
டியர் ராகுல்ராம்,
தங்களின் பாசமலர் - கோவை திரையரங்க லைவ் ரிப்போர்ட் அருமை.
தாங்கள் குறிப்பிட்டுள்ளபடியே மக்களின் ரசனையில் (நமது ரசிகர்களை தவிர்த்து) நமது நடிகர்திலகத்தின் திரைப்படங்களில் (டிஜிட்டல் மற்றும் அகன்ற திரையில் காண்பது என்றால்) பிரம்மாண்டத்தை விரும்புவதைக் காண முடிகிறது.
உதாரணத்திற்கு, கர்ணனை எடுத்துக்கொண்டால், அதில் இடம்பெற்ற போர்க்களக் காட்சி - மறுவெளியீட்டில் எல்லோராலும் பேசப்பட்டது. கிராபிக்ஸ் தொழில்நுட்பம் இல்லாத அந்தக் காலத்தில் இவ்வளவு பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள் என்று சில இளைஞர்கள் பேசிக்கொண்டதை கேட்டேன்.
அதனையொத்த பிரம்மாண்டம் என்றால், வீரபாண்டிய கட்டபொம்மனை சொல்லலாம்.
Thundering response to Pasamalar at Shanthi on yesteday evening show.
It clearly shows that NT always rocks at BO.
Mr Raghavendra Sir,
Thanks for the wonderful photos taken at shanthi and also for the
YY stills.
Nadigar Thilagam's films in TV Channels this week
J MOVIES THANGAIKKAGA 21.08.2013 1 PM
MEGA TV SATHIYA SUNDARAM 21.08.2013 12 NOON
MURASU TV CHINNA MARUMAGAL 21.08.2013 7.30 PM
JAYA TV ENGA OOR RAJA 21.08.2013 8 PM
J MOVIES ANNAN ORU KOIL 22.08.2013 1 PM
MEGA TV RATHA THILAKAM 22.08.2013 12 NOON
ZEE TAMIZ MARUMAGAL 22.08.2013 2.30 PM
JAYA TV THENUM PALUM 23.08.2013 10 AM
MEGA 24 AMBIKAPATHY 23.08.2013 11 AM
POLIMER TV KANDHAN KARUNAI 23.08.2013 2 PM
VASANTH TV THUNAI 23.08.2013 2 PM
MEGA TV THIYAGAM 24.08.2013 12 NOON
RAJ DIGITAL PLUS RAJA RANI 24.08.2013 4 PM
MEGA 24 DEEPAM 24.08.2013 6.30 PM
RAJ TV KRISHNAN VANTHAN 24.08.2013 6.30 PM
MURASU TV VEERAPANDIYAN 24.08.2013 7.30 PM
RAJ DIGITAL PLUS THIRISULAM 25.08.2013 3 PM
MURASU TV ANBALIPPU 25.08.2013 7.30 PM
MEGA 24 MARUTHA NATTU VEERAN 26.08.2013 11 AM
Watched "Sabaash Meena" on Murasu TV on 17/08/2013.
NT's comic character and his acting skills have been discussed umpteen times.
I wish to share with you one scene where NT effortlessly displayed his acting skill and homework.
This scene is with Kuladeivam Rajagopal. In the previous scene KR would offer a "Thundu cigarette" to NT and NT would smoke with lot of hesitation and frustration, being born with silver spoon.
In the subsequent scene, where the duo would set out for their "business" [KR would break the glass and NT would follow him as repairer], NT would smoke a cigarette.
His facial expressions while smoking that cigarette, probably a cheaper brand, are delightful and highly realistic.
Only a born actor, who lives his role and portrays his character with dedication and homework, or in short ONLY NT CAN DO THAT AND NO ONE ELSE.
I was stunned to watch this small piece which lasts for a couple of seconds in the scene and this made me to log into this thread, despite my vow not to enter again, just to share with you all my experience.
Good bye
Regards
சிவாஜி படங்களுக்கு திடீர் மவுசு
நடிகர் திலகம் சிவாஜி நடித்த கர்ணன் படத்தை தூசி தட்டி எடுத்து டிஜிட்டல் படுத்தி, சினிமாஸ்கோப் ஆக்கி வெளியிட்டார்கள். படம் 100 நாட்கள் ஓடி சினிமா உலகத்தையே ஆச்சர்யப்பட வைத்தது. அதன்பிறகு திருவிளையாடல் படத்தை அதேபோன்று வெளியிட்டார்கள். அதில் பல தொழில்நுட்ப கோளாறுகள் இருந்ததால் பெரிய அளவில் பேசப்படவில்லை. அதன்பிறகு வெளியிடப்பட்ட வசந்தமாளிகை படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்போது பாசமலர் படத்தை நவீனமுறையில் மறுஉருவாக்கம் செய்து சினிமாஸ்கோப்பாக்கி வெளியிட்டிருக்கிறார் சிவாஜி மன்றத் தலைவர் பூமிநாதன். தமிழ்நாட்டில் சுமார் 50 தியேட்டர்களில் இரண்டாவது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சிவாஜி படங்களுக்கு திடீர் மவுசு ஏற்பட்டிருக்கிறது.
சிவாஜி படங்களின் உரிமம் வைத்திருப்பவர்கள். அதை டிஜிட்டல்மயமாக்கி வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். மறுஉருவாக்கத்திற்கும் 50 பிரிண்டுகள் போட ஆகும் செலவும், விளம்பரச் செலவையும் சேர்தால் படம் 5 நாள் ஓடினால் அதனை எடுத்து விடலாம் என்ற கணக்கு பரவலாகி இருக்கிறது. இன்றைய இளம் தலைமுறையினர் தொலைக்காட்சியின் சிறிய திரைகளில் பார்த்து வியந்த படங்களை பெரிய திரையில் காணும் ஆர்வத்துடன் இருப்பதும் இதற்கு ஒரு காரணம். அதனால் சிவாஜி படங்களை தேடிப்பிடித்து வெளியிட பலர் மும்முரமாக கிளம்பி இருக்கிறார்கள்.
நான் வாழ வைப்பேன், தங்கச்சுரங்கம் படங்கள் அடுத்து ரீலிசாக இருக்கிறது. தெய்வமகன், திரிசூலம், ஆகியவையும் புதிதாக வெளிவர இருக்கிறது. சிவாஜி நடித்த அத்தனை வெற்றிப் படங்களையும் நான் மீண்டும் புதுப்பித்து வெளியிடத் தயாராக இருக்கிறேன். ஆனால் அதன் ரைட்ஸ் பல பேரிடம் பிரிந்து கிடக்கிறது. அதனால் அதை ஒருங்கிணைத்து செயல்படுவது கடினமாக இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்து நல்ல படங்களை மீண்டும் கொண்டு வருவேன். இது லாப நோக்கத்திற்காக செய்யப்படவில்லை. மகத்தான கலைஞன் சிவாஜிக்கு என்னால் முடிந்த காணிக்கை இது என்கிறார் அகில இந்திய சிவாஜி மன்றத் தலைவர் பூமிநாதன்.
இன்று ரக்ஷா பந்தன் தினம். சகோதர சகோதரி பாசத்துக்கு என்றே கொண்டாடப் படும் தினம். இந்த நாளில் இதனை அடிப்படையாக வைத்து எடுக்கப் பட்டு இன்றளவும் உதாரணமாய் விளங்கும் பாச மலர் திரைப்படம் தமிழகமெங்கும் திரையிடப் பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வருவது மிகப் பொருத்தமாகும்.
இதனையொட்டி
http://youtu.be/KuncTmUfh2k
கோபால்,
1972 -ல் வெளியான படங்களைப் பற்றி எழுதப் போகிறேன் என்று நீங்கள் சொன்னதும் நான் அதை வேறு விதமாக எதிர்பார்த்தேன்.ஆனால் கவிதை நடையில் எதிர்பார்க்கவில்லை. ஒரு வேலை வசந்த மாளிகைக்காக special treatment- ஆ? தொடருங்கள், நடுவில் வந்து சேர்ந்துக் கொள்கிறேன்.
அன்புடன்
Dhanusu,
It was a pleasant surprise to see you back in action here. Loved the way you had expressed the nuances of that cigar smoking scene in Sabash Meena. We definitely need more such insights into the character studies of the roles played by NT. Bit saddened and surprised by your remark at the end and I for one would like to ask you to eschew such thoughts from your mind and participate in the thread.I am sure many would join me in seconding this.
Hope to see you in action
Regards
நீண்ட இடைவெளிக்கு பிறகு திரி நண்பர்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு... !
முதலில் நீதி திரைபடத்திற்கு தாங்கள் அனைவரும் அளித்த வரவேற்ப்பு அருமை. மிகவும் நன்றி..!
முரளி சார், கோபால் சார், ராகவேந்திரன் சார், கார்த்திக் மற்றும் இதர நண்பர்களின் நினைவலைகளுக்கு மிகுந்த நன்றி...
ராகவேந்திரன் சாரின் www.nadigarthilagam.com மூலம் நீதி திரைப்படத்தின் விளம்பரம் பதிவிட்டமைக்கு நன்றி.
ரிலீஸ் தினத்தன்று மூன்றாம் ஆடி வெள்ளி, அடுத்தநாள் ஆடி பெருக்கு, அதற்க்கு அடுத்தநாள் ஆடி திருவிழா மற்றும் ரம்ஜான் மத்தியில் நீதி வந்தாலும், நடிகர் திலகத்தின் திரைபடங்களுக்கென்று தனி மவுசு உள்ளது யாராலும் மறுக்க மறைக்க முடியாத ஒன்று.
ரசிகர்களின் அலப்பரைகள் பிரமாதம் ! மிகுந்த நன்றி..! மற்றும் பொதுமக்களும் கணிசமான அளவில் நீதியை கண்டுகளித்துளார்கள்.
மொத்தத்தில், அனைவரின் அன்பிற்கும் ஆதரவிற்கும் மற்றும் நம்முடைய அருமை நண்பர் & "Gentleman of Thread" திரு வினோத் அவர்கள் மற்றும் திரு.பெங்களூர் குமார் அவர்களுக்கும் திரையிட்ட நாள் முதல் நீதியின் விசேஷங்களை நல்ல முறையில் விசாரித்து வாழ்த்து கூறியதற்கு மிகவும் நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.
திரைஅரங்கு வாடகை மற்றும் விளம்பர செலவுகள் ( POSTER & ADVERTISEMENT ) அந்த ஒரு திரை அரங்கை (Mahalaxmi) பொறுத்த வரை கணக்கில் எடுத்துகொண்டால் நீதி திரையிட்டதன் மூலம் அவைகளை கழித்தது போக ரூபாய் 17,000 பங்கு வந்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கிறேன். !
வெகு விரைவில் நான் வாழவைப்பேன் திரைப்படம் வெளிவர இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க ஆசைபடுகிறேன்.
நடிகர் திலகத்தின் ஆன்மாவின் வாழ்த்தும் திரி நண்பர்கள் அனைவரின் வாழ்த்தும் அன்பும் ஆதரவும் நிச்சயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
இதன்மூலம் சென்னை நகர் மற்றும் NSC யில் நம் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் மீண்டும் வரிசையாக திரையிடமுடியுமானால் நம் சந்தோஷத்திற்கு அளவே இல்லை என்று நம்பிகையுடன் கூறுகிறேன். !
உங்கள் அனைவரின் ஆசிகள் மற்றும் ஆதரவு என்றும் குறைவில்லாமல் வழங்க வேண்டுகோள் கோரும் ...
உங்கள் நண்பன் !
வாழ்த்துக்கள் சுப்பு. நடிகர்திலகம் வாழ்ந்த காலத்திலேயே எல்லோரையும் வாழ வைத்தே மகிழ்ந்த உத்தம புத்திரன். மறைந்து தெய்வமான பிறகு கை விடுவாரா என்ன? சந்திர முகி முதல் கர்ணன் வரை அந்த தெய்வம் வாரித்தானே கொடுத்தது?
ஆனால் அந்த நடிப்பு செல்வத்தை வாரி வழங்கியதே என் போன்ற கோடானு கோடி பக்தர்களுக்கு போதுமானது.
ராபர்ட் கால்ட்வின் அனிமேஷன் என்ற நிறுவனம் நம் நடிகர் திலகத்தை பற்றிய அனிமேஷன் செய்துகொண்டு இருக்கிறது.
பாடலுக்கு பிறகு அவர்கள் செய்யதுவங்கியுள்ள அனிமேஷன்...
https://www.youtube.com/watch?v=PCfQvrmu_Jw