TODAY 11.00 PM WATCH SUN TV
http://i1300.photobucket.com/albums/...ps92f570c0.jpg[/URL]
http://i1300.photobucket.com/albums/...ps52d523e1.jpg[/URL]
Printable View
TODAY 11.00 PM WATCH SUN TV
http://i1300.photobucket.com/albums/...ps92f570c0.jpg[/URL]
http://i1300.photobucket.com/albums/...ps52d523e1.jpg[/URL]
TODAY 3.00 PM WATCH POLIMER TV
http://i1300.photobucket.com/albums/...ps6ac21e6c.jpg[/URL]
http://i1300.photobucket.com/albums/...pse2095aa2.jpg[/URL]
TODAY 11.00 AM WATCH SUNLIFE TV
http://i1300.photobucket.com/albums/...ps1c5d3e7a.jpg[/URL]
http://i1300.photobucket.com/albums/...psadbf6faa.jpg[/URL]
கோவை - சண்முகா அரங்கில் நடை பெறும் மக்கள் திலகத்தின் ''புதுமைபித்தன் '' படத்தின் போஸ்டர்ஸ் அரங்கினில் எடுக்கப்பட நிழற் படங்கள் -பதிவிட்ட இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன்
அவர்களுக்கு நன்றி .
R.S.Munirathinam Founder-Chairman of R.M.K Engineering College
http://i59.tinypic.com/28lsv3o.jpg
http://i57.tinypic.com/25a84mh.jpg
மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடய தானை தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .
''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .
அண்ணாவை நினைவு கூர்ந்த பாடல் வரிகள் .
அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்- இதய வீணை
அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம் - மீனவ நண்பன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன் ..................நவரத்தினம்
இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார் ----பல்லாண்டு வாழ்க
அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள் - இதயக்கனி
என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது- நினைத்தை முடிப்பவன் .
அண்ணா அன்று சொன்னார்என்றும் அதுதான் சத்தியம்- உரிமைக்குரல்
நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்
பொது நலத்தில் தானே நாள் முழுக்க கண்ணை இருந்தார்
ஏற்றுக் கொண்ட பதவிகெல்லாம் பெருமையைத்தந்தார்
தன் இனிய குடும்பம் ஒன்றுக்குத்தான் வறுமையை தந்தார் - நேற்று இன்று நாளை
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா- எங்கள் தங்கம்
சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்- கண்ணன் என் காதலன்
இன்னும் வரும் .....
காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதி- ஹாட்ரிக் வெற்றி கண்ட அதிமுக
1977- 1980-1984
தமிழக சட்டசபை தேர்தலில் காஞ்சிபுரம் சட்ட மன்ற தொகுதியை புரட்சித்தலைவரின் அதிமுக
வேட்பாளர்கள் மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றார்கள் .
திரைப்பாடல்களிலும் எம்.ஜி.ஆர். தோன்றும் காட்சிகளிலும் அண்ணா பற்றிய குறிப்புகள் இருக்கும், அண்ணாவின் படமும் அவருக்கு அருகில் நேரடியாகத் தெரியும். "மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்...' என்று திரையில் அவர் பாடினால், கொட்டகை அதிரும்; அந்த வரி அண்ணா, திமுக ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது என்று கழகத்தினர் ஆரவாரம் செய்வார்கள்.
1962 மக்கள் சபைக்கான பொதுத்தேர்தலில் அண்ணா திருச்சி பெரம்பலூர் தொகுதியில் கழகத்தின் வேட்பாளராக என்னை அறிவித்துவிட்டார். தேர்தலில் - அதுவும் நாடாளுமன்றத்துக்கு - போட்டியிட வேண்டிய அளவுக்கு நான் தயாராக இல்லை. அந்தத் தொகுதியில் எனக்கு அதற்கு முன் எத்தகைய தொடர்பும் பழக்கமும் கிடையாது.
ஆயினும் தேர்தல் துவக்கத்துக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, எம்ஜிஆரைச் சந்தித்தபொழுது. அவர் மிக உற்சாகத்துடன் என்னிடம் பேசினார். "உங்கள் தொகுதியில் உள்ள ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் ஒவ்வொரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். இரண்டு நாள்களில் நான் அங்கு வந்து விடுகிறேன். அப்பொழுது கூட்டங்களை மண்டபங்களில் வைத்து ஒவ்வொருவருக்கும் ரூ. 5 என்று கட்டணம் போட்டு கழகத்துக்கான நிதிகளைச் சேர்ப்போம்' என்றார்.
அந்த வகையில் அவர் வந்ததும் ஒவ்வொரு சட்டசபைத் தொகுதியிலும் ரூ.1,000 அல்லது 1,200 கிடைத்தது. அந்தக் காலத்தில் அது பெரிய தொகை. கிடைத்த பணத்தை அந்தந்த தொகுதி சட்டசபை வேட்பாளரிடம் தந்துவிட்டேன். எம்ஜிஆர் வந்ததால் நல்ல பிரசாரமும் பண உதவியும் கிட்டின. மக்களிடமும் கழகச் செயலாளர்களிடமும் பெருத்த வரவேற்பையும் உற்சாகத்தையும் உண்டாக்கின.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு கழகத்திலிருந்து எனக்குத் தரப்பட்ட பணம் ரூ.2,500 தான். அது ஒரு வாடகைக் காரை நாளொன்றுக்கு ரூ. 30-க்கு அமர்த்தவும் அதற்கான பெட்ரோல் செலவுக்கும் பயன்பட்டது. மற்ற வகைகளில் கூட்டங்கள் போடுவதையும் சைக்கிள் ஊர்வலம் வைப்பதையும் கழகத்தினரே செய்தனர். காங்கிரஸ் சார்பில், அங்கு இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பழனியாண்டி மீண்டும் போட்டியிட்டார், அதற்கு உட்பட்ட ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள்தாம் 1957 தேர்தலில் வெற்றி பெற்றிருந்தார்கள். இவை போதாதென்று டால்மியா சிமென்ட் தொழிற்சாலை முதலாளியின் பணமும் செல்வாக்கும் காங்கிரஸýக்குப் பெரும் உதவியாக இருந்தன.
முதலில் எம்ஜிஆர் ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் செய்த பிரசாரமும் பிறகு அண்ணாவின் பிரசாரமும் தொகுதியில் வேகமாகப் பரவின. கழகத் தோழர்களும், பொதுமக்களும், படித்த இளைஞர்களும் மிகவும் உறுதியுடனும் உற்சாகத்துடனும் தொகுதியில் எங்கும் தேர்தல் பணிகளைச் செம்மைப்படச் செய்தார்கள்.
1962 தேர்தல் முடிவுகள் எல்லோருக்கும் தெரிந்ததே. நான் பெரும்பாலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்த ஐந்து சட்டசபைத் தொகுதிகளிலும் கழக வேட்பாளர்கள் வெற்றி அடைந்தனர்.
courtesy- era.chezhiyan
எம்ஜிஆர்... ஒரு நிகரில்லா மனிதர் !
'உன்னை நம்பி எம்புள்ளைய படிக்க வச்சேன்... நீ வேலை தருவியா மாட்டியா?' - ஏதோ ஒரு குக்கிராமத்திலிருந்து கோபத்துடன் ராமாவரம் தோட்டத்துக்கு வந்து, எந்தக் கட்டுக்காவலுமில்லாமல் வீட்டுக்குள் நுழைந்து எம்ஜிஆரிடம் நேருக்கு நேர் சண்டை பிடிக்கிறார் ஒரு தந்தை. அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட எம்ஜிஆர், 'போங்க... முதல்ல சாப்பிட்டுவிட்டு வாங்க... பேசலாம்' என்கிறார். ஆனால் அந்த தந்தை கோபம் தணியாமல், 'இல்ல, நீ எனக்கு பதில் சொல்லு. எம்புள்ளைக்கு வேலை தருவியா மாட்டியா?'
'போய் சாப்பிட்டுவிட்டு வாங்க. அடுத்த மாசம் உங்க கையில அரசாங்க சம்பளம் இருக்கும்' என மீண்டும் அதே மாறாத புன்னகையுடன் தலைவர் சொல்ல, அதன் பிறகு சமாதானமாகி சாப்பிட்டுவிட்டு வருகிறார் அந்த பெரியவர்.
உடனே, அவரிடம் விவரங்களை வாங்கிக் கொண்ட எம்ஜிஆர், கையில் ஐந்நூறு ரூபாய் கொடுத்து, பத்திரமாக அவரை பஸ் ஏற்றி அனுப்புமாறு உதவியாளருக்கு கட்டளை இடுகிறார். அன்று அவர் தமிழகத்தின் முதல்வர்... அதுவும் இரண்டாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார்!
அடுத்த மாதம் மீண்டும் அதே தந்தை ராமாவரம் தோட்டத்துக்கு வந்தார். இந்த முறை அவர் கையில் மாலை, தேங்காய், பழங்கள்... கூடவே அரசாங்க சம்பள கவர். புன்னகையுடன் அவரை வரவேற்ற எம்ஜிஆர், இப்போதும் அவரை சாப்பிட வைக்கிறார். தாம் கொண்டு வந்ததை எம்ஜிஆர் என்ற கடவுளின் முன் வைத்து கும்பிட்டுவிட்டுப் போகிறார் அந்த தந்தை.
அந்தக் குடும்பம் முதல் முதலாகப் பெற்ற அரசு சம்பளம் அது. இன்றும் அந்தப் பெரியவர் இருக்கிறார். அவர் மனசுக்குள், அந்த குடும்பத்துக்குள், அவர்கள் பூஜையறையில் அதே ஈரத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எம்ஜிஆர். இப்படி நிறைய தந்தைகள், குடும்பங்கள் தமிழ்நாட்டில் உள்ளன!
இன்றைக்கு ஒரு மாநில முதல்வரை யாராவது இப்படிச் சந்தித்துவிட முடியுமா... உரிமையாக சண்டை போட்டு தனக்கு வேண்டியதைப் பெற முடியுமா... அல்லது இதையெல்லாம் அனுமதிக்கும் பெரிய மனசுதான் யாருக்காவது வருமா?
மனிதருள் புனிதர் என்ற பெயர் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ.... சமகால சரித்திர நாயகரான புரட்சித் தலைவர், பொன் மனச் செம்மல், மக்கள் திலகம் எம்ஜிஆருக்கு மிகப் பொருந்தும்... அவர் கருணைப் பார்வையில் நல்ல கல்வியும் வளமான வாழ்க்கையும் பெற்றவர்கள் எண்ணிக்கை கொஞ்சமல்ல.
ஒரு மனிதன் கடவுளை வேண்டுவது பெரும்பாலும் இந்த இரண்டிற்காகவும்தான். அந்த வகையில் வாழ்ந்தபோதே பலருக்கும் கடவுளாகத் திகழ்ந்தவர் பொன்மனச் செம்மல். தமிழை வைத்து பிழைப்பு நடத்தியவர்கள் மத்தியில் தமிழனுக்கு தனி நாடு அமையவே பாடுபட்ட புரட்சியாளர் இந்த பெருமகன்!
அவரைப் பற்றி ஏதாவது சொல்லத் தொடங்கினால்... அல்லது எழுத ஆரம்பித்தால் கண்களை நீர் மறைக்கிறது. இந்த வாழ்நாளில் இன்னொரு முறை இப்படியொரு மனிதரின் அருள் பார்வை கிடைக்குமா? மக்களை மட்டுமே நினைத்த ஒரு தலைவர் கிடைப்பாரா என்ற ஏக்கத்தின் விளைவு அது!
'என் மனதை நானறிவேன்.. என் உறவை நான் மறவேன்... எதுவான போதிலும் ஆகட்டுமே' என நெஞ்சில் உரமும் நேர்மைத் துணிவும் கொண்டு தமிழருக்காக பாடுபட்ட தலைவர் அவர்.
பெருந்தலைவர் காமராஜருக்குப் பின் கல்வியின் அருமையை உணர்ந்த ஒரே தலைவர் எம்ஜிஆர்தான். இன்றைய முதல்வர்கள் தனியார் கல்வி கொள்ளையர்களை மட்டுமே ஊக்கப்படுத்துகிறார்கள். ஆனால் எம்ஜிஆர் காலத்தில் மட்டும் திறக்கப்பட்ட அரசுப் பள்ளிகள் 47000!
புதிய அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்கள், தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகம், பெண்களுக்கு தனி பல்கலைக்கழகம் என அவர் செய்த கல்விப் புரட்சிக்கு நிகரில்லை.
எம்ஜிஆர் என்றவுடன், தமிழகத்தில் உள்ள படித்தவர், பாமரர், விமர்சகர், பத்திரிகையாளர் என அத்தனை பேருமே ஏதோ ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை- நினைவைப் பகிர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.
எம்ஜிஆர் எனும் பெருமழை தந்த ஈரம் இன்னும் கூட வற்றாமல் இருப்பதற்கு சான்று அது!
எம்ஜிஆர் என்ற அரசியல்வாதியை விமர்சித்தவர்கள் கூட, எம்ஜிஆர் என்ற ஈகைப் பெருந்தகையாளரை மனமார வாழ்த்திக் கொண்டேதான் இருக்கிறார்கள். இன்று அவரை விமர்சிக்கும் துணிச்சல் எந்த அரசியல்வாதிக்கும் கிடையாது. காரணம், மக்கள் தங்கள் மனங்களில் அவருக்குக் கொடுத்திருக்கும் சிம்மாசனம் அத்தகையது!
வாழ்ந்த போதும், வாழ்ந்து மறைந்து பின்னும் வாழ்வு தரும் வள்ளல் என்றால், அவர் எம்ஜிஆர் மட்டுமே. வள்ளல்களுக்கு வயதில்லை... என்றுமே வாழ்பவர்கள் அவர்கள்!
Courtesy : Facebook
எங்களது வங்கி அலுவலக சங்க மாநாடு விஷயமாக கோவைக்கு சனியன்று
21/02/2015 சென்றிருந்தேன். 22/02/2015 அன்று மாநாடு பற்றிய கூட்டம் முடிந்ததும்
கோவை நண்பர் வி.கே.எம். அவர்களை தொடர்பு கொண்டபோது, கோவை -சண்முகாவில் புரட்சி நடிகர். எம்.ஜி.ஆர். அவர்களின் " புதுமைப் பித்தன் " தகவல் அறிந்து காண சென்றேன்.
ஞாயிறு முதல் (22/02/2015) தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது. நான் மாலை
காட்சிக்கு சென்றேன். நண்பர் திரு. வி.கே. எம். அவர்கள் மற்ற பக்தர்களுடன்
சேர்ந்து அன்புடன் வரவேற்றார். கூட்டம் பரவாயில்லை.
என்னிடம் இருந்த செல் காமிராவில் எடுத்த புகைப்படங்கள் நமது நண்பர்களின்
பார்வைக்கு.
http://i58.tinypic.com/2yuzngz.jpg
ஆர். லோகநாதன்.
வங்கி சங்க மாநாட்டில் , சேலம் பிரதான கிளையில் பணிபுரியும் திரு. ராஜா
நந்தம் என்கிற தோழர் வந்திருந்தார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் புரட்சி தலைவர்
எம்.ஜி.ஆர். போல வேடமிட்டு ரசிகர்களை மகிழ்விப்பதாக தன் அனுபவங்களை
பகிர்ந்து கொண்டார். விரைவில் சென்னையில் வந்து சந்திப்பதாகவும், மற்ற புரட்சி
தலைவர் எம்.ஜி.ஆர். பக்தர்களையும் சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
http://i59.tinypic.com/207qhiw.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தோற்றத்தில் திரு. ராஜா நந்தம், சேலம்.
http://i62.tinypic.com/2arajk.jpg
congratulations loganathan sir for completing 6000 posts in our god thread
புதுச்சேரி நியூடோனில் ஞாயிறு முதல் (22.02.2015) தினசரி 4 காட்சிகளாக மக்கள் தலைவன் தோன்றும் குடும்பத்தலைவன் திரைக்காவியம் வெற்றிநடை போடுகிறது. கட்டான கட்டழகு கண்ணனின் வண்ண சுவரொட்டிகள் தொடரும்...
http://i58.tinypic.com/2q1syhe.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன் -
அற்புத நாயகன்-மக்கள் திலகம் - தெய்வம் எம்.ஜி.ஆர்.
http://i59.tinypic.com/2wf4or4.jpg
என்னைப் பாட வைத்தவன் ஒருவன் -
என்பாட்டுக்கு அவன்தான் தலைவன்
ஒரு குற்றமில்லாத மனிதன் -
அவன்கோவில் இல்லாத இறைவன்
பாடுவது கவியா இல்லை பாரி வள்ளல் மகனா
சேரனுக்கு உறவாசெந்தமிழர் நிலவா
ஹோய்..ஹோய்.ஹோய்..ஹோய்.
(பாடுவது)
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாலுடன் தேன் கனி சேரவேண்டும்
கலைகளை தெய்வமாய் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும் இம்ம்ம்ம்
பாடுவோர் பாடினால் ஆடத்தோன்றும்
பாட்டில் சுவை இருந்தால் ஆட்டம் தானே வரும்
கேட்கும் இசை இருந்தால் கால்கள் தாளமிடும்
தன்னை மறந்தது பெண்மை
துள்ளி எழுந்தது பதுமை
நூல் அளந்த இடை தான் நெளிய
நூறு கோடி விந்தை புரிய
நூறு கோடி விந்தை புரிய
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பல்லவன் பல்லவி பாடட்டுமே
பார்த்திபன் காதலி ஆடட்டுமே
பாடி களைத்ததும் ஆடி களைத்ததும்
பூ மகள் கண் மலர் மூடட்டுமே
பல்லவன் பல்லவை பாடட்டுமே...
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
ஆடலுடன் பாடலைக் கேட்டு
ரசிப்பதிலே தான் சுகம் சுகம் சுகம்
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
நான் வரும்போது ஆயிரம் ஆடல்
ஆட வந்ததென்ன
நெஞ்சம் ஆசை கொண்டதென்ன?
பாடும்போது நான் தென்றல் காற்று
பருவ மங்கையோ தென்ன(ங்) கீற்று
பாட்டு.. ஒரு பாட்டு..
பாட்டு.. ஒரே ஒரு பாட்டு....
(பாட்டு)
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு -
அதைஎழுதும்போதும் மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு -
பெற்றதந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாதியிலே விழிக்கச் சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
(பாட்டு)
உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு -
நம்இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு
பாட்டுக்குப் பாட்டெடுத்து
நான் பாடுவதைக் கேட்டாயோ
துள்ளி வரும் வெள்ளலையே
நீ போய்த் தூது சொல்ல மாட்டாயோ
உன்னை பார்த்து கொண்டிருந்தால் பாட்டு வரும்
அதை பூங்குயில் கூட்டங்கள் கேட்டு வரும்
அதை கேட்டு கொண்டிருந்தால் ஆட்டம் வரும்
அந்த ஆட்டத்தில் பொன்மயில் கூட்டம் வரும்
பறவை ஒன்று வர்ணங்கள் வேறு
பாட்டு ஒன்று ராகங்கள் வேறு
இரவு ஒன்று பருவங்கள் வேறு
இன்பம் ஒன்று உருவங்கள் வேறு
கடலும் வானும் பிரித்து வைத்தாலும்
காதல் வேகம் காற்றிலும் இல்லை
உடல்கள் இரண்டும் வேறுபட்டாலும்
ஒன்று காதல் அதன் பேர் தெய்வம்
எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்
எந்தப் பாவைக்கும் காவல்கள் வேண்டும்
எந்த ஆசைக்கும் உருவங்கள் வேண்டும்
எந்தப் பார்வைக்கும் பருவங்கள் வேண்டும்
எந்த நேரமும் நீ இங்கு வேண்டும்
அழகே அருகே வருவேனே
வண்ணம் பாடுதே புது வண்ணம் பாடுதே
வான் எங்கும் நீல ஒடை தன்னில்
நீந்தும் வெண்ணிலா வண்ணம் பாடுதே வண்ணம் பாடுதே
எண்ணம் போல வாழ்வே
எண்ணம் போல வாழ்வே
நேரும் என்றே சொல்லுதே
கண்ணும் கண்ணும் கூடும்
காதல் கீதம் பாடும்
நம்மைக் காணவே நாணம் கொள்ளுதே
நம்மைக் காணவே நாணம் கொள்ளுதே
நாங்க புதுசா ...
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம் பாடிதானுங்க
பாடினாள் ஒரு பாட்டு
பால் நிலாவினில் நேற்று
ஓடினேன் அதை கேட்டு
தேடினேன் வலை போட்டு
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
பூங்குயில் அவள் யாரோ
பொன் மயில் அவள் பேரோ
அவன் தோட்டத்தில் எத்தனை மான்களோ
தோள்களில் எத்தனை கிளிகளோ
அவன் பாட்டுக்கு எத்தனை ராகமோ
பார்வையில் எத்தனை பாவமோ
உலகம் சுற்றும் வாலிபனோடொரு
பயணம் வந்தவள் நான்..
உறவுப் பாடலைப் பாடவும் ஆடவும்
உரிமை கொண்டவள் நான்
உலகம் சுற்றும் வாலிபனோடொரு
பயணம் வந்தவளே..
உறவுப் பாடலைப் பாடவும்
ஆடவும்உரிமை தந்தவளே
ஆறாயிரம் பதிவுகள் கண்ட
ஆருயிர் நண்பர் லோகநாதன்
நூறாயிரம் பதிவுகள் தந்து
பாரார் வியந்திட வாழ்த்துகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i57.tinypic.com/jjpohz.png
6,௦௦௦ பதிவுகள் கண்ட சகோதரர் திரு. லோகநாதன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
Congrats Mr.Loganathan sir for completing 6000 postings
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூல் வெளியீட்டு விழா - தொடர்ச்சி.....
------------------------------------------------------------------------------------------------------------
திரு. மு. ராசாராம் (இ .ஆ .ப ), செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை
------------------------------------------------------------------------------------------------------------------------------------------
செய்தித் துறை என்பது பூட்டு சாவி இல்லாத துறை போன்றது .
நூற்றாண்டு விழா , என்ற வரலாறு படைக்க உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
வாழ்ந்த காலத்தில், நாம் வாழ்வது நமக்கெல்லாம் பெருமை.
புதினம் போல், நாவல் போல், இந்த நூலை, ஆசிரியர் திரு. மணிவண்ணன்
அற்புதமாக எழுதியுள்ளார்.
புரட்சி தலைவரின் தமிழ் பணி பற்றி சொல்லிக்கொண்டே இருக்கலாம்.
சென்னையில் 2 வது உலகத் தமிழ் மாநாட்டை பேரறிஞர் அண்ணா நடத்திக் காட்டினார். புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். , மதுரையில், 5 வது உலகத் தமிழ்
மாநாட்டை, பிரதமர் இந்திரா காந்தி தலைமையில் வழி நடத்தினார்.
தஞ்சையில் தமிழ் பல்கலை கழகம் உருவாக்கியவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
இதற்கு எவ்வளவு ஏக்கர் நிலம் வேண்டும் என்று அதிகாரிகளை கேட்டார் .
சரியான பதில் கிடைக்காததால், தானே முன்வந்து 1000 ஏக்கர் நிலம் அரசு
சார்பில் அளிப்பதாக உத்தரவிட்டார். தமிழ்நாட்டில், உலகத் தமிழ் சங்கம்
உருவாக்கியதும் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். தான். ஆனால் அவருக்குப்பின்
வந்த ஆட்சியாளர்களின் செயல்பாடுகள் சாதகமாக இல்லை.
பின்னர் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் ரூ.300 கோடி
ஒதுக்கப்பட்டு, தமிழன்னை சிலை உருவாக ஏற்பாடு நடக்கின்றது.
1965ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, மத்திய அரசு, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பத்மஸ்ரீ பட்டம் அளிக்க முன்வந்தது .அது இந்தியில்தான் உள்ளது எனக்கூறி புரட்சி தலைவர் ஏற்க மறுத்தார்.
ஆரம்ப கட்டத்தில், அனைவரும் சந்தேகப் பார்வையோடு, எதிர்த்த , குழந்தைகள்
சத்துணவு திட்டத்தை , உலகமே வியக்கும் அளவில் ,சரித்திரத்தில் இடம்பெறும்
வகையில் அமுலுக்கு கொண்டுவந்து சாதனை புரிந்தார். புரட்சி தலைவர்.
அவரால் இன்று சுமார் 2 லட்சம் பெண்கள் சத்துணவு கூடத்தில் வேலை பெற்று
வாழ்கின்றனர்.
10 ஆண்டுகளுக்கு மேல், பொற்கால ஆட்சி நடத்தி, ஏழை எளியோருக்காக, பல
நல்ல நல திட்டங்களை செயல்படுத்தியவர் .
அவரது நூற்றாண்டு காலத்தில், இந்த புத்தகம் வெளியாவது பெருமைக்குரிய
விஷயம் . இன்றைய சந்ததியைச் சார்ந்த மாணவ, மாணவியர் பாடப் புத்தகத்தில் அவரது வாழ்க்கை வரலாறு இடம் பெற வேண்டும் என்பது எனது அவா .
திரு. பாலு மணிவண்ணன் (ஆசிரியர் ): நடிப்பிலும், அரசியலிலும், போற்றத்தக்க,
மனிதநேயமிக்க மாமனிதர் எம்.ஜி.ஆர். அவர்கள் என தனது ஏற்புரையில்
குறிப்பிட்டார்.
மேலும், இந்த நூலை எழுதிய தனக்கு அளிக்கப்பட்ட பணமுடிப்பை, ,எட்டாவது
வள்ளல் எம்.ஜி.ஆர். போல , சும்மாடு பதிப்பகம் நிறுவனத்தாருக்கு பரிசளித்து
பாராட்டுக்கள் பெற்றார்.
இறுதியில் திரு. துரைராசு அவர்கள், இந்த நூலை வெளியிட்ட ஆசிரியர்,
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பெருமைகள் சேரும் வகையில் பேசிய முக்கிய விருந்தினர்கள், விழாவில் பங்குபெற்று சிறப்பு சேர்த்த பார்வையாளர்கள் , நிகழ்ச்சியை நடத்த உதவிய
மாநகராட்சி நிர்வாகம் ஆகியோருக்கு நன்றி செலுத்தி விடை பெற்றார்.
முற்றும் .....!!!!
நண்பர் திரு. சி. எஸ்.குமார். :தங்களின் பேரறிஞர் அண்ணாவின் இருப்பிடம், வாழ்க்கை குறிப்பு , அண்ணாவின் நினைவலைகள், பேரறிஞர் அண்ணா தலைப்பில் வெளியான பாடல் தொகுப்பு, காஞ்சியில் சட்ட மன்ற தேர்தலில் தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க. சாதனை, காஞ்சியில் மக்கள் திலகத்தின் படங்களுக்கு மக்கள் அளித்த வரவேற்பு, புள்ளி விவரங்கள் பற்றிய பதிவுகள் நன்று.
நண்பர் திரு. வினோத் : மக்கள் திலகத்தின் படங்களை , நாள் தவறாமல் , வெளியான தேதி அன்று புகைப்படங்களுடன் பதிவிட்டு நினைவுபடுத்துவதற்கு நன்றி.
நண்பர் திரு. தெனாலி ராஜன் : புரட்சி தலைவரின் வெற்றி, உழைப்பு, பாடல் ஆகிய
தலைப்புகளில் கவிநயத்தோடு பாடல்கள் தேர்ந்தெடுத்து பதிவிட்ட தங்களின்
உழைப்பு பாராட்டத்தக்கது.
நண்பர் திரு. ரவிச்சந்திரன் : கோவை -சண்முகா வில் புரட்சி நடிகரின்
"புதுமைப் பித்தன் " ஞாயிறு மாலை காட்சி நண்பர் திரு. வி. கே.எம். மற்றும் பக்தர்களுடன் சேர்ந்து கண்டுகளித்தேன். நல்ல சவுண்ட். சென்னையில் இந்த
மாதிரி பிரிண்ட் பார்த்து நெடுநாட்களாகிவிட்டது. இந்த பட சுவரொட்டிகள் பளிச்
என பதிவிட்டதற்கு நன்றி
நண்பர் திரு. செல்வகுமார் : தங்களின் நிகரில்லாத மனிதர் எம்.ஜி.ஆர். என்கிற
செய்திப் பதிவு கண்டு நெகிழ்ந்து போனேன். நன்றி
நண்பர் திரு. கலியபெருமாள்: புதுவையில், மக்கள் திலகத்தின் "குடும்பத்தலைவன் வெளியீடு பற்றிய தகவலுக்கு நன்றி.
நண்பர் திரு. சத்யா : தங்களின் வண்ணப்பதிவுகள் அருமை.
நண்பர் திரு. யுகேஷ் பாபு : புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றி கவிஞர் வைரமுத்து
குறிப்பிட்ட செய்திகள் அபாரம்.
ஆர். லோகநாதன்.
இன்று 67வது பிறந்தநாள் கொண்டாடும் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு நமது திரியின் சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
*நமது தலைவருடன் நடித்த படங்கள் 28
*அதில் கருப்பு வெள்ளை படங்கள் 14
*கலர் படங்கள் 14
*தேவர் பிலிம்ஸ் அதிக படங்களை தயாரித்து உள்ளது 6 படங்கள்
*அதிக படங்களுக்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் 15 படங்கள்
*அதிக படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் வி.ராமமூர்த்தி 12 படங்கள்
*அதிக படங்களை இயக்கியவர் ப.நீலகண்டன் 9 படங்கள்
*அதிக படங்களுக்கு வசனம் எழுதியவர் கே.சொர்ணம் 10 படங்கள்
*ஒரு படத்தை பிரபல இயக்குனர் கிருஷ்ணன் பஞ்சு இயக்கியுள்ளார் படம் எங்கள் தங்கம்
*ஆயிரத்தில் ஒருவன் விஸ்வநாதன் ராமமூர்த்தி சேர்ந்து இசை அமைத்த கடைசி படமாகும்
*கணவன் படத்திற்கு எம்ஜியார் கதை எழுதியுள்ளார்
*முதல் படம் ஆயிரத்தில் ஒருவன் (1965) கடைசி படம் பட்டிக்காட்டு பொன்னையா (1973) 8வருடங்கள் நமது தலைவருடன் சினிமாவில் நடித்துள்ளார்
*1968இல் தலைவருடன் அதிகபட்சமாக 8படங்களிலும், 1973இல் குறைந்தபட்சமாக ஒரு படத்திலும் நடித்துள்ளார்
*இரட்டை வேடங்களில் 2படங்களில் நடித்துள்ளார், அடிமைப்பெண் மற்றும் குமரிகோட்டம்
*அதிக நாள் தயாரிப்பில் இருந்த படம் ஒருதாய் மக்கள். 3வருடங்கள்
http://i1300.photobucket.com/albums/...psa247685a.jpg[/URL]
ஆயிரத்தில் ஒருவன் (09.07.1965)
http://i1300.photobucket.com/albums/...ps7dbba9bb.jpg[/URL]
கன்னித்தாய் 10.09.1965
http://i1300.photobucket.com/albums/...ps003c8570.jpg[/URL]
முகராசி 18.02.1966
http://i1300.photobucket.com/albums/...ps5b73bcb9.jpg[/URL]
சந்திரோதயம் 27.05.1966
http://i1300.photobucket.com/albums/...ps56f269ce.jpg
தனிப்பிறவி 16.09.1966
http://i60.tinypic.com/15qc569.jpg
தாய்க்கு தலைமகன் 18.01.1967
http://i58.tinypic.com/fleelz.jpg
அரசகட்டளை 19.05.1967
http://i60.tinypic.com/xf3vyb.jpg
காவல்காரன் 07.09.1967
http://i62.tinypic.com/noavqa.jpg
ரகசிய போலீஸ் 115 (11.01.1968)
http://i60.tinypic.com/2n0u8lt.jpg
தேர்த்திருவிழா 23.02.1968
http://i60.tinypic.com/2r41w0n.jpg