http://i60.tinypic.com/et5j15.jpg
Printable View
https://scontent.fmaa1-2.fna.fbcdn.n...36921952_o.jpg
அனிமல்சுக்கும் அன்பைக் கற்றத் தந்த அதிசிய கலைஞர் சிவாஜி.
EXCELLENT VIDEO COMPILATION BY SUNDERRAJAN SIR !!!! VERY VERY APT VIDEO !!!!!
ONE VISUAL CAN SAY MESSAGE CLEARLY THAN ONE LAKH WORDS...!
https://www.youtube.com/watch?v=iK1KM1d1Kxg
THANKYOU SO MUCH
http://i58.tinypic.com/o73vko.jpg
நண்பர்களே,
நடிகர் திலகம் என்றுமே தோற்றதில்லை அவருடைய கொள்கைகளில், அரசியலிலும் கூட அவருடைய நிலைப்பாட்டைத் தான் நிராகரித்தனரே தவிர, மக்கள் அவரைத் தோற்கடிக்கவில்லை. அவர் தனக்காக என்றுமே மக்களிடம் எதுவுமே கேட்டதில்லை. அவர் கேட்டதும் மற்றவர்களுக்காகத் தான். அவர் கொடுத்ததும் மற்றவர்களுக்காகத் தான்.
தர்மம், நியாயம், நீதி, இவையெல்லாம் என்றுமே அவர் பக்கம் தான் நிற்கின்றன. கர்ணன் திரைப்படத்தில் அவர் மேல் இட்ட அம்புகளெல்லாம் மலர்ச்சரங்களாக விழுவது போல அவருக்கு எதிரான அஸ்திரங்கள் அனைத்துமே அவருக்கு வெற்றி மாலைகளாகத் தான் விழும்.
என் இனிய சிவாஜி ரசிக நண்பர்களை மீண்டும் நான் கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து உணர்ச்சிகளுக்கு அடிமையாகாதீர்கள். நிதானம் காக்க வேண்டிய நேரமிது. சிவாஜி ரசிகர்கள் எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள் என்ப்தைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு ஆதாயமடைய மேற்கொள்ளக் கூடிய முயற்சிகளுக்கு இடம் தரவேண்டாம்.
இந்தக் கட்சி அந்தக் கட்சி என்று நாம் எந்தப் பக்கமும் போக வேண்டாம். எல்லோருக்கும் உழைத்தாகி விட்டது. நம் தலைவனுக்காக மட்டும் உழைப்போம். நம்மை வைத்து மற்றவர்கள் அரசியல் ஆதாயம் தேட நாம் இட தர வேண்டாம்.
நமக்கென்று ஒரு பாதை, நமக்கென்று ஒரு பயணம், நிச்சயம் நம் தலைவர் காட்டுவார். அது வரை காத்திருப்போம்.
வெற்றி நமதே.
நிழற்படத்திற்கு நன்றி திரு முத்தையன் அம்மு.
முத்தையன் அம்மு
தங்களுடைய விளையாட்டுப் பிள்ளை திரைப்பட நிழற்படங்கள் ஒவ்வொன்றுமே கண்களையும் உள்ளத்தையும் கொள்ளை கொள்ளுகின்றன. எம்.ஜி.ஆர். ரசிகராக இருந்தாலும் நடிகர் திலகத்தின் ஆளுமை தங்களுக்குள் ஆழமாக இருப்பதால் தான் தங்களால் இவ்வளவு ரசனை மிக்க நிழற்படங்களைத் தரமுடிகிறது.
விளையாட்டுப்பிள்ளை ஒவ்வொரு ஃப்ரேமிலும் நடிகர் திலகத்தின் ராஜ்ஜியம் கொடிகட்டிப் பறக்கும். வசனங்கள் இன்றைய காலகட்டத்தில் மிகவும் பொருத்தமாக இருக்கும். அவருடைய வீரத்தை எடுத்துச் சொல்லும் உன்னதத் திரைக்காவியம். காளை மாட்டை அடக்கும் காட்சிகளில் தவிர்க்கவே இயலாத ஓரிரு ஃப்ரேம்களைத் தவிர அனைத்திலுமே டூப் இல்லாமல் அவரே நடித்திருப்பார். வீர தீர காட்சிகளிலும் அவர் என்றுமே சோடை போனதில்லை என்பதற்கு மற்றுமோர் எடுத்துக்காட்டு விளையாட்டுப் பிள்ளை திரைப்படம்.
தங்களுக்கு என் உளமார்ந்த நன்றி.
TODAY's STATUS @ SATHYAM 6 DEGREES - STATUS @ 9-15 am
http://i501.photobucket.com/albums/e...psxrupgqnx.jpg
TODAY's STATUS @ SATHYAM 6 DEGREES - STATUS @ 9-40 am
http://i501.photobucket.com/albums/e...psksovhlfm.jpg
அன்புச் சகோதரர்
திரு.கா.சுந்தரராஜன் அவர்களின், நம் www.sivajiganesan.in இணையதளத்தில்,
"திரிசூலம்"
திரைக்காவியம் வென்று
குவித்த வசூல் விபரங்களைப்
படித்தேன்.நன்றிகள் அவருக்கு.
எழுபதுகளின் இறுதியில், என்
அரைக்கால் சட்டை பருவத்தில்,
சிவகங்கை ஸ்ரீராம்
திரையரங்கில் "திரிசூலம்"
பார்த்த நினைவுகள்
அலைமோதுகின்றன.
ஊர் மொத்தத்தையும்
திரையரங்க வாசலிலேயே
பார்த்து விடலாம்.
சிவகங்கையில் மாதக் கணக்கில் ஓடிய ஒரே படம்
திரிசூலமாகத்தான் இருக்கும்
என்று நினைக்கிறேன்.
திருவிழா தினத்தன்று
கோயிலுக்குள் போய் சாமி
கும்பிட முடியாமல் போகிற
மாதிரி.. திரையரங்கின் உள்ளே போக முடியாமல்,வாசல் சுவரொட்டியை மட்டும் பார்த்து
வந்த தினங்கள் பத்துக்கு மேல்
இருக்கும்.
அதிசயமான அதிசயமாய் ஒரு
நாள் டிக்கெட் கிடைத்து உள்ளே
போன போது,உலகை வென்று
விட்ட சந்தோஷம்.பெருமை.
-------------
உணர்ச்சிப் பிழம்பாய் ஒரு
வேடம். உள்ளத் தூய்மை
கொண்ட இளைஞனாய் ஒரு
வேடம். ஒரு துளி வஞ்சமும்
இதயத்திலில்லாத, குறும்பே
உருவான மற்றொரு இளைஞன் வேடம்.
முத்து,முத்தாய் மூன்று
வேடங்கள் நடிகர் திலகத்திற்கு.
உணர்வுப்பூர்வமான நடிப்பை
விரும்புகிறவர்கள், துடிப்பு மிக்க நகைச்சுவை இழையோடும் நடிப்பை விரும்புகிறவர்கள்..
இப்படி எல்லாத் தரப்பு
ரசிகர்களையும் முழுமையாகத்
திருப்தி செய்த படம் திரிசூலம்.
முப்பத்தைந்து ஆண்டுகளாகி
விட்டன. இந்தப் படம் தந்த
நிறைவை வேறொரு படம்
தந்ததில்லை.தந்திருப்பின்,அதுவும் நடிகர் திலகத்தின் படமாகவே இருக்கும்.
-----------
மனசாட்சி உறுத்த,ஆள் வைத்து
தன்னை அடிக்கச் செய்து
தண்டனை கொடுத்துக்
கொள்ளும் போது,தமக்கை மகள் பார்த்து விட தண்டனைக்கு காரணம் கூறும்
பண்பான நடிப்பு..
கன்னா பின்னா வேஷமிட்டு,தந்தைக்குப் பயம் காட்டும் சாமர்த்தியமான நடிப்பு..
கணவனைப் பிரிந்தழும் தன்
தாயிடம் கோபமாகப் பேசி,பின்
சமாதானம் பேசும் சத்தியமான
நடிப்பு..
இளம்பெண்ணிடம் வம்பு
செய்யும் இங்கிதமமற்றவர்களைத்
துவம்சம் செய்யும் வேகமான
நடிப்பு..
ஆண்களை விரும்பாத
பெண்ணை தன் வலைக்குள்
வீழ்த்துகிற குருமூர்த்தியாய்
அட்டகாச நடிப்பு..
ஆண்டாண்டு காலமாய்
பிரிந்திருந்த அன்பு மனைவியுடன் தொலைபேசி
வழி உரையாடி நடிக்கும்
தூய நடிப்பு..
கெட்டவர் கூட்டத்தில் மீண்டும்
சிக்கி அவதியுறும் போது
வெளிப்படுத்தும் விரக்தி
நடிப்பு..
அண்ணனும்,தம்பியும்
சந்திக்கும் போது நெகிழ்த்தும்
பாந்தமான நடிப்பு..
விரையும் வாகனத்தில்,
பெற்றோரைக் காக்கத்
துடிக்கும் இதயங்களுடன் இருவரும் பாடி நடிக்கும் இலட்சிய நடிப்பு..
இதையெல்லாம் காட்டி
நிரூபிக்க வேண்டியதில்லை..
மனைவி பரிசளித்த ஓவியத்தில் அழகாகச் சிரிக்கும்
குழந்தையைப் போலவே..
அச்சு அசலாய் அப்படியே
"ஆ..ஆ"என்று சிரித்துக்
காட்டுகிற ஒரே ஒரு காட்சி
போதும்..
எங்கள் நடிகர் திலகம் இதயங்களை ஜெயிக்கப் பிறந்தவர் என்பதை
நிரூபிக்க.
------------
உயிருள்ள மனித இதயங்களை
ஜெயிக்க வல்ல
நடிகர் திலகத்தின் படங்கள்,
மனிதன் கண்டுபிடித்த பணத்தை
வசூலித்து ஜெயிப்பதில்
வியப்பென்ன
இருக்கிறது?
TODAY's ADVERTISEMENT in DINATHANTHI - 6th SEPTEMBER
http://i501.photobucket.com/albums/e...pswqkgxm4g.jpg
சற்று முன் கிடைத்த தகவல்
வீரபாண்டிய கட்டபொம்மன் இன்று சத்யம் வளாகம் 6 degrees அரங்கில் காலை காட்சி 10 மணி : அரங்கு நிறைவு கண்டது !!!
6 DEGREES அரங்கில் மொத்தம் 164 இருக்கைகள் உள்ளன !
rks
ராகவேந்தர் சார்
நீங்கள் கூறியுள்ளது ஒரு பக்கம் முற்றிலும் சரி என்றாலும்.....மனது கேட்கவில்லை சார்...! இப்படி ஒரு அயோக்யத்தனம் திருட்டுத்தனம் காலம் காலமாக செய்கின்றனர் மனசாட்சி இல்லாமல் !
எல்லாம் திராவிட கட்சிகளின் அரசியல்வாதிகளின் கேவலமான, கேடுகெட்ட, நேர்மையற்ற, குள்ளநரி புத்தி !
Rks
Dear R.K.S.
உங்களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும் நான் பணிவாக சொல்ல விரும்புவது, இதுதான்.
ஒவ்வொரு விஷயத்திற்கும் அணுகுமுறை என்பது மாறுபடும். உணர்ச்சி வசப்படுதல் மனித இயல்பு, அதற்கு நானும் விதிவிலக்கல்ல. ஆனால் அதையும் சில சமயங்களில் நாம் கட்டுப்படுத்தியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். நாம் தற்போது அந்த மாதிரி ஒரு சூழலில் தான் இருக்கிறோம். என்னைப் பொறுத்த வரையில் பெருந்தலைவர் கூட இரண்டாம் பட்சம் தான். நடிகர் திலகத்தை மட்டுமே தலைவனாக ஏற்றுக்கொண்டவன். இது இன்று நேற்றல்ல, கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் நிலைப்பாடு. எப்பேர்ப்பட்ட சூழலிலும் அவரை விட்டு விலகியவன் இல்லை. அவர் செய்யது தவறோ சரியோ என்று நான் ஆராய்ந்ததில்லை. என்னைப் பொறுத்த மட்டில் அவர் செய்வது சொல்வது மட்டுமே வேதவாக்கு. எனக்கு எந்த அரசியல் சாயமும் கிடையாது, நடிகர் திலகத்தின் தொண்டன் என்பதைத் தவிர.
அதுவும் அவருடன் மிகவும் நெருக்கமாகப் பழகியது, அவரே என்னைப் பெயர் சொல்லி அழைத்து ஆலோசித்ததெல்லாம் நான் இன்னும் பல நூறு பிறவிகள் எடுத்தாலும் கிடைக்க முடியாத பாக்கியம். அவர் எந்த அளவிற்கு குடும்பத்தை நேசித்தார் என்பதெல்லாம் நேரிலேயே பார்த்தவன், அவர் சொல்லக் கேட்டவன்.
எனவே அந்த ஒரு அனுபவத்தின் அடிப்ப்டையிலும் அவருடைய மனநிலையை அறிந்தவன் என்கின்ற முறையிலும் எந்த விஷயத்தை எப்படி அணுகவேண்டும் என்ப்தை ஓரளவிற்கு அனுபவ பூர்வமாக அறிந்தவன் என்கின்ற முறையிலும் தான் என் வேண்டுகோளை வைக்கிறேன்.
நடிகர் திலகத்தின் சிலை அகற்றப்படுவதை எவருமே விரும்பமாட்டார்கள். இது விவாதத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட விஷயம். இதில் அரசியல் சாயம் பூசத்தேவையில்லை. ஆனாலும் என் மேல் ஒரு சில நண்பர்கள் தேவையில்லாமல் விமர்சித்தார்கள்.
நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு விஷயத்தை ஓரளவிற்கு மேல் நாம் விமர்சிக்க முடியாது. அச்சு ஊடகம் என்பது வேறு, மின்னணு ஊடகம் என்பது வேறு. மின்னணு ஊடகத்தில் எழுதப்படும் எந்த விஷயமும் மிக வேகமாகப் பரவும் என்பதால் அதற்கென தனி சட்டப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு சைபர் கிரைம் என்பது இன்று உலகளவில் வரையறுக்கப்பட்டு உடனடியாக வழக்குத்தொடுக்கப்ப்ட்டு தண்டனைக்குள்ளாகும் வலுவைப் பெற்றுள்ளன.
நம் இந்திய நாட்டில் இது மிகவும் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் நாம் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் எழுதிவிட்டோமானால் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும். வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்கு அந்தக்கவலையில்லை. அவர்கள் எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால் நம் நாட்டில் அப்படி எழுத முடியாது. அப்படிப்பட்ட வழக்குகளில் இருந்து நாம் எளிதில் விடுபட முடியுமா, ஒரு வேளை குற்றமென்று நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனை என்ன போன்ற பல விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்.
உண்மையான யதார்த்த நிலை என்ன வென்று பார்த்தோமானால் அப்படிப்பட்ட சூழலில் நம்மைக் காத்துக்கொள்வது மிகவும் கடினம். அப்போது மற்றவரை நொந்து எந்தப் பயனுமில்லை.
இது தான் இன்று உண்மை நிலை.
நம்முடைய கருத்தை மிகவும் நாகரீகமாகவும் நயமாகவும் தான் சொல்ல வேண்டும்.
இதைத்தான் நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
Chapter – 2
FREEDOM OF SPEECH AND EXPRESSION UNDER INDIAN CONSTITUTION WITH SPECIAL REFERENCE TO
ELECTRONIC MEDIA
FREEDOM OF SPEECH AND EXPRESSION
Expression is a matter of liberty and right. The liberty of thought and right to know are the sources of expression. Free Speech is live wire of the democracy. Freedom of expression is integral to the expansion and fulfillment of individual personality. Freedom of expression is more essential in a democratic setup of State where people are the Sovereign rulers. Iver Jennings said, „Without freedom of speech, the appeal to reason which is the basis of democracy cannot be made‟.
1 Milton in his Aeropagitica says that without this freedom there can be no health in the moral and intellectual life of
either the individual or the nation.
2 As defined by Laski „Democracy is a Government by discussion‟ could be successful only when there is effective participation of the people in the Government. For this the people need be educated.
In the words of Krishna Iyer J. „This freedom is essential because the censorial power lies in the people over and against the Government and not in the Government over and against the people‟.
The freedom of speech and expression is required to fulfill the following objectives :
1) To discover truth :
2) Non self-fulfillment :
3) Democratic value :
4) To ensure pluralism :
LAW OF EXPRESSION UNDER INDIAN CONSTITUTION
The people of India gave to themselves, the Constitution of India, with a view of make it Sovereign, Democratic, Socialistic, Secular and Republic. In our democratic society, pride to place has been provided to freedom of speech and expression, which is the mother of all liberties. One of the main objectives of the Indian Constitution as envisages in the Preamble, is to secure LIBERTY OF THOUGHT AND EXPRESSION to all the citizens. Freedom of Expression
is among the foremost of human rights. It is the communication and practical application of individual freedom of thought. Irrespective of the system of administration, various constitutions make a mention of the freedom of expression. While freedom of thought is a personal freedom; freedom of expression is a collective freedom, whose character becomes more and more pronounced as the technical methods of their diffusion multiply and improve.
MEDIA AS AN INSTRUMENT OF EXPRESSION
Exercise of freedom of expression is essential to communicate the thoughts, views, ideas, philosophy and activities. The
communication keeps society together and cohabitate. For a healthy growth of civilized world, the free flow of information and ideas is essential. Every individual is a medium of expression.
An individual interacts through the media to reach other individuals and institutions. The right to freedom of speech though belongs to every individual, institution and organisation it becomes imperatively necessary in the media world. Media world serves as the best communicator of information and the best instrument of expression.
Exercise of right of freedom of expression is the professional duty and character work of media, whether it is print or electronic media. The media gets as a mass communicator. It has to enjoy this freedom for promoting public good and for informing the people in general as to the state of affairs in every sphere of life and activity
.11 Dr. Madhabhusi Sridhar, The Law of Expression, An Analytical Commentary on Law for Media 22 (Asia Law House, Hyderabad, 2007).
48 Every democratic set up in the present day social texture should have been implicated with a special inseparable part i.e. which now expanded to include electronic media also.
SUPREME COURT HAS GIVEN THE SAME VERDICT TOO THAT LAW OR LEGAL CANNOT JUST LIKE THAT GO AND CATCH HOLD OF ANY INDIVIDUAL AS PER THEIR WHIMS & FANCY THEREBY MISUSING THE POWER TO SUPPRESS THE LIBERTY OF A CITIZEN AS INDIA IS A DEMOCRATIC COUNTRY !!!!
SUPREME COURT VERDICTS
Section 66A upset the balance between right to free speech and the reasonable restrictions that may be imposed on this right.
“The petitioners are right in saying that Section 66A, in creating an offence against persons who use the Internet and annoy or cause inconvenience to others, very clearly affects the freedom of speech and expression of the citizenry of India at large in that such speech or expression is directly curbed by the creation of the offence contained in this section,” it said.
The court said Section 66A was unconstitutionally vague since neither a prospective offender nor the authorities who are to enforce this law had any “manageable standard” to book a person and the terms like “offensive” or “menacing” used in this section were nowhere defined in the Act.
It maintained that Section 66A made no distinction between a mere discussion or advocacy of a particular point of view which may be annoying or inconvenient or grossly offensive to some, and incitement by which such words lead to an imminent causal connection with public disorder, security of state etc.
“What may cause annoyance or inconvenience to one may not cause annoyance or inconvenience to another. When it comes to democracy, liberty of thought and expression is a cardinal value that is of paramount significance under our constitutional scheme,” it said.
According to the bench, Section 66A did not not concern itself with injury to reputation or with incitement to commit an offence or with decency or morality since an offensive post did not require to be affecting any of these grounds mentioned under Article 19 (2).
It also dismissed the government’s plea to read it down and to add certain clauses to Section 66A by interpretation in order to save its constitutionality, saying what they wanted a substitution of the entire provision.
‘Liberty of thought and expression a cardinal value’
* Section 66A quashed in entirety for being unconstitutional, void and vague
* Invades right to free speech arbitrarily, excessively and disproportionately
* Liberty of thought and expression a cardinal value of paramount significance
* Govt cannot curb right to free speech even to promote general public interest
* Section 66A cannot be said to be “reasonable restriction” on right to speech
* Govt assurance on administering the law well cannot protect Section 66A -
The Supreme Court has scrapped a contentious law that was seen as a major infringement of the freedom of speech online because it allowed the arrest of a person for posting offensive content.
Section 66A of the Information Technology Act, has been declared unconstitutional. Describing the law as "vague in its entirety," the judges said, it encroaches upon "the public's right to know."
See more at: http://indianexpress.com/article/ind....rU01U0qZ.dpuf
நாம் பல இணையதளங்களில் சில தகவல்களை பார்திரிக்கிறோம். அவை ஒவ்வொன்றும் தமிழ் திரையுலகில் என்னமோ நடிகர் திலகம் ஒன்றுமே சாதிகாததுபோலவும் ஏனைய நடிகர்கள் என்னமோ நடிகர் திலகத்தை விட அதி பயங்கரமாக சாதித்ததுபோல தமது இஷ்டத்திற்கு கதை அளந்து விட்டுகொண்டிருப்பது நமது கண்களுக்கு அன்றாடம் படுகிறது....
அது எவ்வளவு பெரிய புளுகல்....நடிகர் திலகம் அவர்களை நம்பி நம் திரை உலகம் எந்தளவு இருந்துள்ளது , மேலும் நடிகர் திலகம் மட்டுமே தமிழ் திரை உலகில் எல்லா விதத்திலும் நம்பகத்தன்மை வாய்ந்தவராக இருந்திருக்கிறார் என்பதனை விளக்கும் ஆதாரமான உண்மை செய்திகள்...விரைவில் இங்கு பதிவிடபடவுள்ளது...!
இது பொதுமக்கள் பலரும் படித்து உண்மை அறிந்துகொள்ள உதவும் வகையில் இருக்கும் ஆதாரமாகும்.....1965 இல் வெளிநாட்டினர் இந்திய வந்து பிறகு தமிழகம் வந்து இந்திய திரைபடம் பற்றி எழுதி பதிவிட்டுள்ள ஓர் உண்மை ஆவணம்....உண்மை புத்தகம்..!
இதே புத்தகம் அதன் மறுபதிப்பு 1981 இல் வந்தபோது ....நடிகர் திலகம் அவர்களை பற்றிய தகவலை மிகவும் சுருக்கி...உண்மைகளை எப்படி குழிதோண்டி புதைக்கும் முயற்சி கையாளப்பட்டது என்பதையும் விளக்கும் !
இந்த திரியின் நெறியாளர்களுக்கு,
அரசியல் பற்றி பேசினால் விலக்க நேரிடும் என விடுக்கப்பட்ட எச்சரிக்கையின் அடிப்படையில் என்னை 3 நாள் தடை செய்தீர்கள் ..வரவேற்கிறேன்.
ஆனால் நான் என்ன குற்றச்சாட்டை சொன்னேனோ , அதை நீங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் .
ஒரு பக்க சார்பாக என்னை மட்டும் தடை செய்த நீங்கள் , அதே போன்று தொடர்ந்து அரசியல் பேசிக்கொன்டிருப்பவர்கள் மேல் எந்த தடையும் விதிக்காதது , தொடர்ந்து ஒரு பக்க சார்பான உங்கள் நிலைப்பாட்டை தெளிவு படுத்துகிறது .
இதே திரியில் அரசியல் சார்பாக மட்டுமல்ல , வெளிப்படையாக ஒரு கட்சிக்கு வாக்களிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுத்த உத்தமர்கள் , இப்போது மட்டும் எதார்த்தம் பதார்த்தம் என சந்தர்ப்பவாதம் பேசும் புனிதப்பசுக்கள் தான் உங்களுக்கு தேவை ..உண்மை பேசி விட்டால் தடை ..நல்ல நியாயம். அருமையான நீதி ..வாழ்க .
அன்பு நண்பர் ரவிகிரன் சார்
நடிகர்திலகம் இருந்த காலத்தில் நீங்களும் நானும் அவரது இடது வலது கைகள் போல அவருக்கு மிக நெருக்கமாக இருந்திருந்தால் அவர் எல்லா துறைகளிலும்
உச்சத்தை அடைய தொண்டாற்றி இருப்போம்! உங்கள் கோபம் நியாயமானது! உங்களை போன்ற இளம் வயதினர் அவர் மேல் கொண்டுள்ள உண்மையான
அன்பும், அவருக்கு அநீதி இழைக்கப்படும் போது பொங்கிஎழும் போர்குணமும் போற்றதக்கது! இருப்பினும் ஆவேசத்தை குறைத்து நிதானமாக செயல்படுவதும்
நல்லது தான் என்று ராகவேந்தர் சார் சொல்வதும் ஓரளவுக்கு ஏற்று கொள்ள கூடியதே! திராவிடகட்சிகள் காமராஜருக்கு சிவாஜி பெரும் பலமாக இருக்கிறாரே
என்ற எரிச்சலில் 1975 வரை அவரின் பெரிய வெற்றிபடங்களை கூட தோல்விப்படம் என்று தொடர்ந்து பொய்பிரச்சாரம் செய்து மக்களை நம்பவும் வெய்தார்கள்! இன்றும் அதை நம்பும் மக்கள் நிறைய இருக்கிறார்கள்! உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்! 1969 தீபாவளி சமயத்தில் சிவந்தமண் வந்தது!
அதே சமயம் மற்றவரின் ஒரு பெரிய படமும் வந்தது! உண்மையிலே இரண்டு படங்களும் பெரிய வெற்றிதான்! ஆனால் தமிழ்நாட்டில் ஒன்பது திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய சிவந்தமண் தோல்விபடம் என்றும் ஆறு திரைஅரங்குகளில் 100 நாட்கள் ஓடிய அவர்கள் படம் தான் வெற்றியென்றும்
பொய் பிரச்சாரம் செய்தார்கள்! ரவிகிரண் சார் இப்போதும் கூட 55 வயதுக்கு மேற்பட்ட நம் ரசிகர்அல்லாதவரிடம் கேட்டு பாருங்கள்! சிவந்தமண் தோல்விப்படம் என்றுதான் கூறுவார்கள்! கேட்டுவிட்டு திரியில் பதிவிடுங்கள்! இதையெல்லாம் அன்று செய்தது திமுகவினர்! தங்கள் கட்சி சார்ந்தவரை
உயர்த்த சிவாஜியை தாழ்த்தி பேசினார்கள்! இதில் மற்றவருக்கு நிச்சயம் பங்கு இருக்காது என்றபோதிலும் திமுகவினர் இப்படி செய்வதில் கெட்டிக்காரர்கள்!
அது மட்டுமா ? சிவாஜியை கஞ்சன் என்று பொய் பிரச்சாரம் தொடர்ந்து செய்து இன்றும் அதை உண்மையென்று நம்பும்படி செய்தார்கள்! வள்ளலை வள்ளல் என்று உயர்த்தி பேசட்டும்! தப்பில்லை! ஆனால் சிவாஜியை திட்டமிட்டு தாழ்த்தினார்கள்! 1960 களில் சிவாஜி நேருவிடம் ஒரு லட்சம் நன்கொடை
அளித்து அதை ஆனந்தவிகடன் பத்திரிக்கை தலையங்கம் எழுதி வாழ்த்தியது! 1960 களில் ஒரு லட்சம் என்பது இன்றைய மதிப்பில் குறைந்தது 20 கோடியாவது இருக்கும்! அவர் அளித்த ஒரு நன்கொடையின் இன்றைய மதிப்பே 20 கோடிஎன்றால் மற்றவற்றின் மதிப்பு இன்றைக்கு எவ்வளவு இருக்கும்!
சிவாஜி கஞ்சனாம்! நல்லவர்களுக்கு மட்டும் காலமில்லை இன்றைய தமிழ்நாட்டில் என்று கட்டபொம்மனில் சிவாஜி வசனம் 1959 இல் பேசினார்!
56 வருடங்களுக்கு பிறகும் இன்னும் தமிழ்நாடு மாறவில்லை! என் மனதுக்கு தோன்றியதை வழக்கம் போல் சொல்லிவிட்டேன்!
நன்றி !
1963 இல் பதிவுசெய்யப்பட்டு வெளியிடப்பட்ட புத்தகம் இந்திய திரை உலகம் - (INDIAN FILM )
இதன் ஆசிரியர் அமெரிக்க நாட்டை சேர்ந்த ERIC BARNOU என்பவராகும் . இவர் உலகறிந்த வரலாற்று விற்பன்னரும் கூட !
இவரின் படைப்புக்கள் மிகவும் பிரபலமானவையாக உலகளவில் இன்றும் கருதப்பட்டு வருகிறது.
இவருடைய செய்தி பிரிவு திரைப்படம் நாகசாகி ஹிரோஷிமா உலக பிரசித்தம்...
இவர் இந்தியா சினிமா பற்றிய தன்னுடைய கண்ணோட்டத்தை தாம் இந்திய வந்து, மும்பை, கல்கத்த, டெல்லி சென்னை மற்றும் இதர ஊர்களில் திரைப்படங்கள் நடக்கும் இடம் சென்று, அங்கு பல விற்பன்னர்களுடன் உரையாடி, தாம் கண்ட திரைத்துறை உண்மைகளை புத்தகமாக 1963 இல் வெளியிட்டார்.
அந்த முதல் பதிப்பில், நமது நடிகர் திலகம் பற்றி மட்டும், மூன்று பத்திகளை இவர் எழுதியுள்ளார்.
நடிகர் திலகத்தின் வளர்ச்சி,
திரை உலகில் நடிகர் திலகத்தின் முக்கியத்துவம்,
திரை உலகில் நடிகர் திலகத்தின் ஆளுமை,
திரை அரங்கு உரிமையாளர்கள் முதல் அனைவரும் எந்தளவிற்கு நடிகர் திலகத்தை முக்கியமாக கருதலானார்கள்
மற்றும் பல தகவல் இந்த புத்தகத்தில் நடிகர் திலகம் பற்றி மட்டும் ஆச்சர்யத்துடன் மூன்று பத்திகளை குறிப்பிட்டுள்ளார்.
நமக்கு தான் தெரியுமே...நடிகர் திலகத்தை பற்றி நல்லது வந்தால் எங்கிருந்தாலும் அதற்க்கு தடை வணக்கம் சொல்லாமல் வரும் என்று..!
அதே போல, இதன் இரெண்டாம் பதிப்பில், நடிகர் திலகம் அவர்கள் பெருமையை மூன்று பத்திகளை சுறுக்கி ஒரே ஒரு பத்தியாக வெளியுட்டார்கள், கோழை குணம் கொண்டவர்கள், நடிகர் திலகம் மேல் காழ்புணர்ச்சி கொண்டவர்கள் . இரெண்டாம் பதிப்பு வெளிவந்த ஆண்டு 1981.
இப்போது, INDIAN FILM என்ற 1963 இல் வெளிவந்த அமெரிக்க வரலாற்று விற்பன்னர் திரு ERIC BARNOU அவர்கள், அனுபவபூர்வமாக உணர்ந்த தமிழ் திரை உலக நிலைமையை இங்கு பதிவிடுகிறேன்.
INDIAN FILM 1963 - FIRST EDITION published by COLUMBIA UNIVERSITY PRESS
http://i501.photobucket.com/albums/e...psxywjvloe.jpg
இதன் மூலம் தமிழ் திரை உலகில் யார் முன்னணியில் எப்போதும் இருந்திருக்கிறார் என்ற உண்மை அனைவருக்கும் விளங்கும் !
யாருடைய ஆளுமை தமிழ் திரை உலகை பொறுத்தவரையில் நிறைந்து இருந்துள்ளது என்பது தெள்ளம்தெளிவாக தெளிந்த நீரோடை போல விளங்கும் !
இதற்க்கு மேல் ஒரு ஆதாரமும் தேவையில்லை என்று நினைக்கிறன்..!
In the first edition (1963) of their landmark book, Indian Film, Eric Barnouw and his protégé S.Krishnaswamy, allocated three paragraphs to Sivaji’s role and relevance to Tamil movies. (Krishnaswamy was the son of K. Subramanyam, one of the pioneers in Tamil films.)
However, in the second edition (1980) of the same book, the three paragraphs had been condensed into a single paragraph.
For record, I provide the first, adulatory paragraph that appeared in the first edition below, to reflect the importance of Sivaji the actor in the then Madras in late 1950s and early 1960s, when his influence was at its peak......"
இதன் தமிழாக்கத்தை திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் அல்லது திரு ஜோ அவர்கள் இங்கு பதிவு செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது எண்ணம்..! திரு கோபால் சார் அவர்கள் திரியில் வந்தால் அவர்களிடம் நான் நிச்சயம் கேட்டிருப்பேன்...ஒருவேளை இதனை அவர் பார்த்தால் பார்க்க நேரிட்டால் இதன் தமிழாக்கம் அவர் செய்தால் நன்றாக இருக்கும் ! திரு கலைவேந்தன் அவர்கள் இதனை தமிழாக்கம் செய்ய முன்வருவாரா என்று தெரியவில்லை. அவர் செய்தாலும் நன்றாக இருக்கும்...!
யார் செய்வார்கள் இதன் தமிழாக்கம் என்று கூறினால் எனக்கு பதிவு செய்ய வசதியாக இருக்கும்...!
http://i501.photobucket.com/albums/e...psxywjvloe.jpg
In the first edition (1963) of their landmark book, Indian Film, Eric Barnouw and his protégé S.Krishnaswamy, allocated three paragraphs to Sivaji’s role and relevance to Tamil movies.
the first, adulatory paragraph that appeared in the first edition below, to reflect the importance of Sivaji the actor in the then Madras in late 1950s and early 1960s, when his influence was at its peak.
சிவந்த மண் வெளியாகி கிட்டத்தட்ட முப்பது முப்பத்தைந்து நாட்கள் வரை தோல்விப்படம் என்றே பிரச்சாரம் செய்தனர். ஐம்பதாவது நாள் விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களுடன் வந்ததும் வாய்கள் மூடிக்கொண்டன.
சிவந்த மண் தனது போட்டிப்படத்தை விட அதிக இடங்களில் நூறு நாட்கள் ஓடியதால், போட்டிப்படத்தின் நூறாவது நாள் விளம்பரத்தில் எந்த ஊர், எந்த தியேட்டர் என்ற விபரமில்லாமல் வெளிவந்தது. நடிகர் நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பெயரெல்லாம் இடம்பெற்ற அந்த விளம்பரத்தில் ஊர்பெயர் / தியேட்டர்பெயர் கிடையாது.
இனிய நண்பர் அதிராம் சார்
இனிய நண்பர் திருச்சி பாஸ்கர் சார்
இரு திலகங்களும் திரை உலகின் இரு கண்கள்.
இருவரின் போட்டியும் ஆரோக்யமான போட்டியே...
இடையில் உள்ள கட்சிகளும் அதன் ஆதரவாளர்களும்தான் இருவருக்கும் இடையே சிறிது விளயாடிவிட்டனர்...
அப்படி இருந்தும் ஒரு கட்டத்தில் இருவரும் ஒரு கருத்துடையவராக மாரியிருக்கதான் வாய்ப்பு அதிகம்., காரணம் மற்றவர்களை போல அல்லாமல் இருவரும் இருவரின் தாய் மீதும் அதீத அன்பும் பாசமும் பக்தியும் கொண்டிருந்தனர் என்பது உண்மை.
அவரின் படத்தை இவர் படம் முறியடிப்பதும்...இவரின் படத்தை அவர் படம் முறியடிப்பதும்...என்றும் தொடர்ந்த ஒன்று...இன்று வரையில்...நாளையும் நடக்கும்...!
இது இவர்கள் இருவருக்குமே உள்ள ஒரு தனிதன்னமை. வேறு எந்த நடிகருக்கும் இவர்கள் இருவருக்கு அமைந்தது போல ஒரு பக்தர் கூட்டம் அமையாது.
சிவந்த மண் மக்கள் திலகத்தின் அன்று சிந்திய ரத்தம் திரைப்படத்தின் நடிகர் திலக வடிவம். இதுவே இருவருக்கும் உள்ள பொருத்தத்தின் சிறந்த உதாரணம்...!
சிவந்தமண் ஐரோப்பா நாடுகளில் எடுக்கப்பட்ட திராவிட மன்மதன் நடிப்பில் வெளிவந்த ஒரு பிரம்மாண்ட action thriller காவியம் !
.
நம் நாடு நல்ல செட்டுக்கள் அமைத்து நல்ல social theme கொண்ட ஒரு பிரம்மாண்ட நடிகராம் மக்கள் திலகத்தின் சிறந்த திரைபடன்களுள் ஒன்று !
இரண்டு படங்களும் சிறந்த வசூல் பிரளயம் ஏற்படுத்திய படமாக இருக்கவே வாய்ப்பு என்பது தான் எனது எண்ணம் !
Rks
அன்பு நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்..இந்த பதிவுகளில் மற்ற திரிகளில் உள்ள பதிவுகளுக்கு பதில் சொல்வது போல் உள்ளது. இது கேள்வி பதிலுக்கான திரி கிடையாது..அரசியலும் ஆகாது..உங்களுக்கு நடிகர் திலகத்தை பற்றி தெரிந்த விசயங்களை பதிவு செய்யுங்கள்.. திரைப்படங்களை பற்றிய வசூல்..ஓடிய நாட்கள்..தேவையில்லை..மிகவும் சிரமமான சூழ்நிலையில் ,உடல் நிலை சரியில்லாத நிலையிலும் மாற்று திரியின் பக்தனான நான் உங்கள் திரியில் பதிவுகளை மேற்கொண்டுள்ளேன்..கடந்த காலம் நமக்கு தேவையில்லை..இந்த நாட்கள் நமக்கு முக்கியம்..நான் ரெடி..வருங்கால சமுதயாதிரிக்கு பதிவுகள் செய்ய நான் ரெடி..நீங்கள் ரெடியா..எனக்கு உற்சாகத்தை கொடுங்கள் நிச்சயம் என் பதிவுகள் உங்களை மகிழ்விக்கும்.. நன்றி..
http://i58.tinypic.com/2chw60i.jpg
திரு முத்தையன் அவர்களுக்கு
உங்களுடைய பதிவு எனது பதிவினை பார்த்த பிறகா என்பதை இங்கு குறிப்பிடவும்..!
என்னை பொருத்தவரை நான் சம்பந்தப்பட்டது என்றால் நீங்கள் உரிமையுடன், rks நீங்கள் ஏன் பதில் பதிவு செய்கிறீர்கள் என்று நேரிடையாகவே கேட்கலாம் !
தவறு ஒன்றும் இல்லை...உங்கள் பதிவினை சிறந்த முறையில் ரசிப்பவர்களில் நானும் ஒருவன் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துகொள்கிறேன்.
உடல் நிலை சரியில்லாத நிலையில் தங்கள் பதிவு செய்வது நல்லதல்ல...பூரண ஓய்வுக்கு பிறகு உடம்பு தேறியவுடன் பதிவு செய்யுங்கள் என்பதே எனது கருத்து.
நன்றி !
நான் பொதுவாகத்தான் சொன்னேன் நண்பா..எங்கள் திரியிலும் பாருங்கள்..அவர்களுக்கு எனது வேண்டுகோளை சொல்லியுள்ளேன்..நாம் எல்லோரும் ஒரே ரத்தத்தின் ரத்தம்..நம்மிடம் வேறுபாடு கிடையாது..வாழ்க இரு பெரும் திலகங்கள்..
http://i62.tinypic.com/c5dn4.jpg
Courtesy Sudhangan's Face book
https://fbcdn-sphotos-c-a.akamaihd.n...b0e8911244e3e5
செலுலாய்ட் சோழன் – 88
நான் ஒவர் ஆக்டிங் செய்வதாக சிலர் சொன்னார்கள்.
அதனால் ஒரு படத்தில் குரலை உயர்த்தாமல், அடக்கமாக நடித்துப் பார்த்தேன்.
`என்னப்பா இது சிவாஜி படம் மாதிரியே இல்லை!’ இந்த படத்தில் ஏதோ அவர் இஷ்டமில்லாம நடிச்ச மாதிரி இருந்தது’ என்றார்கள்.
விளைவு படம் படுதோல்வி!
நம்முடைய கற்பனைக்க்கு திறமைக்கு என்ன வருகிறதோ மக்கள் நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதுபோல்தான் நடிக்க வேண்டும்.
அதுதான் எனக்குத் தெரியும்!
அதுதான் எல்லோருக்கும் பிடிக்கும்!.
நான் நடிப்பது 100 வது நாடகமாகயிருந்தாலும் கூட அது கூட என் முதல் நாடகமாக நான் நினைத்துக்கொள்வேன்.
நான் ஏன் நாடகத்தையே சொல்கிறேன் என்றால் நாடகம் தான் கடினம்.
சினிமாவில் பல முறை மறுபடியும் எடுத்துக்கொள்ளலாம்/
நாடகத்தில் அப்படியில்லை!
ஒரு முறை தவறு செய்தால் அதோடு முடிந்தது!
நாடகத்தில் மேடையில் தோன்றி இரண்டு மூன்று காட்சிகளில் வசனத்தைப் பேசி நடித்து, மக்களை என் பக்கம் இழுக்கும்வரையில் வேறு எதைப் பற்றியு என் கவனம் போகாது.
ஒரு நாடகம் என்றால் லைட், ;மைக், சீன் செட் போன்றவைகளைக் கவனிக்க வேண்டும்.
தீடிரென்று ஒரு நடிகன் வரவில்லையென்றால் புது ஆளை போட வேண்டி வரும்.
அந்த நடிகரை தட்டிக் கொடுத்து, அவருக்கு உறுதுணையாக இருந்து அவருக்கு தைரியம் சொல்லி, அவரை நன்றாக நடிக்க வைப்பதும் ஒரு சக நடிகனின் கடமை.
அதே சமயம் இவையெல்லாம் மக்களுக்கு தெரியக் கூடாது!
ஒரு நாடகத்தில் ஒரு நடிகை நம்முடன் கதாநாயகியாக நடிப்பார்
அடுத்த நாடகத்தில் அதே நடிகை ஏதோ ஒரு காரணத்திற்காக வரமுடியாமல் போகும்
இன்னொரு நடிகை வந்து நடிப்பார்!
அப்போது அது புது அனுபவமாகவும், அது புது நாடகமாகவும் எனக்குத் தோன்றும்
அதனால் ஒரே நாடகத்தை பலமுறை நடித்தாலும், ஒரு புது நாடகத்தில் நடித்த மாதிரிதான் நடித்தேன்.
படங்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு படமும் புது அனுபவம்!
புது இயக்குனர்!
புது ஒளிப்பதிவாளர்!
புது சக நடிகர்கள்!
அதனால் என் ஒவ்வொரு படமும் எனக்கு முதல் படம்தானே!
ஒவ்வொரு படமும் புதுப்புது அனுபவம்தானே!
`நமக்கெல்லாம் தெரியும். இதென்ன பிரமாதம்’ என்று நினைத்தால் கிழே விழுந்துவிடுவோம்.
நமக்கு வேண்டுமானால் நடிப்பு என்பது பழகியதாக இருக்கலாம்!
பார்க்க வருகிற ரசிகர்களுக்கும் ஒவ்வொரு படமும் புதுப்படம்தானே!
புதுப்படத்தை பார்க்கத்தானே காசு கொடுத்து திரையரங்குகளுக்கு வருகிறார்கள்!
இப்படித் தன்னைப் பற்றி சிலாகித்து தன் சுயசரிதையில் சொல்லியிருந்தார் சிவாஜி கணேசன்!
அவர் சொன்னது உண்மைதான் என்பதை நீருபிக்க கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ஒரு நாளிதழில் எழுதிய தொடரில் இதை உறுதி செய்திருந்தார்!
கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த படம் `பேசும் தெய்வம்’
அந்தப் படத்தில் சிவாஜிக்கான கடைசி நாள் படப்பிடிப்பு!
அடுத்த நாள் சிவாஜி வேறு ஒரு படத்திற்கு போகிறார்!
மாலை 4.30 மணிக்கு சிவாஜிக்கு அந்தக் காட்சி பற்றி விளக்கம் தருகிறார் கே.எஸ். கோபாலகிருஷ்ணன்!
சிவாஜி நடித்துக் காட்டுகிறார்!
இயக்குனருக்கு திருப்தியில்லை!
இரண்டும் மூன்று முறை இப்படியே ஆயிற்று!
ஒரு கட்டத்தில் சிவாஜி இயக்குனரிடம், ` நீங்கதான் நடிச்சுக் காட்டுங்களேன்’
இயக்குனர் கே.எஸ். ஜி. நடித்துக் காட்டுகிறார்!
சிவாஜி அதை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறி போய்விட்டார்!
அந்த படம் கே.எஸ். ஜியின் சொந்தப் படம்!
தயாரிப்பாளர்களில் ஒருவர்ல், கே.எஸ்.ஜியின் தம்பி கே.எஸ். சபரிநாதன்!
அவர் அலறியடித்துக்கொண்டு கே.எஸ். ஜியிடம் வந்து,` என்ன, அண்ணே இப்படி பண்ணிட்டீங்க’
நாளைக்கு அவர் வேறு படத்திற்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். இன்னும் இரண்டு மாதத்திற்கு அவரை பிடிக்கவே முடியாது. அவருக்கு போய் நீங்க நடிக்க சொல்லிக் கொடுக்கலாமா? அவர் கோவிச்சுக்கிட்டு போய்ட்டார். இந்த ஒரு காட்சிக்காக படமே நிக்கப்போவுது. இந்தப் படம் இப்போதைக்கு வெளியாகாது’ என்று அலுத்துக்கொண்டு போய்விட்டார்!
கே.எஸ். ஜியும் அன்றைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டு தன் அலுவலகத்திற்குவ் வந்துவிட்டார்!
அவருக்குள் ஒரே குழப்பம்!
அந்தக் காட்சி நன்றாக வரவேண்டுமென்பதற்காகத்தானே நான் நடித்துக் காட்டினேன். என்ற தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தார்!
இந்த சம்பவம் நடந்தபோது மாலை ஐந்து மணி!
சரியாக மாலை 7 மணிக்கு கே.எஸ். ஜி அலுவலகத்திற்கு ஒரு போன்!
அழைப்பு வந்தது சிவாஜி வீட்டிலிருந்து!
`அண்ணன் நாளை காலை 7 மணிக்கு உங்க ஷீட்டிங்கிற்கு வராராம். வேறு படத்துக்கு பத்து மணிக்கு வரேன்னு சொல்லிட்டாரு!
இப்போது கே.எஸ்.ஜிக்கும் அவர் சகோதரருக்கும் ஒரு நிம்மதி பெருமூச்சு!
அடுத்த நாள் காலை படப்பிடிப்பு தளமே பரபரப்பானது!
சரியாக 7 மணிக்கு சிவாஜி மேக்கப், அந்த காட்சித் தேவையான உடைகளோடு தயாராக வந்தார்!
காட்சி மறுபடியும் விளக்கப்பட்டது!
சிவாஜி நடிக்க ஆரம்பித்தார்!
இயக்குனர் மெய்மறந்து நின்றார்!
காட்சி முடிந்ததும் `கட்’ சொல்லக் கூட மறந்து போனார்!
ஒரு வழியாக காட்சி முடிந்தது!
இயக்குனர் கே.எஸ். ஜி அப்படி சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார்!
`இதைத்தானே எதிர்பார்த்தேன்!’ என்றார்
`இயக்குனரே! நான் நேத்து கோவிச்சுக்கிட்டு போயிட்டேன்னு பயந்துட்டீங்களா ? இல்லை நம்மளால இத்தனை படங்களில் நடிச்சும் இந்த இயக்குனர் மாதிரி ஏன் நடிக்க முடியலைன்னு குழம்பிட்டேன். ராத்திரி முழுக்க வீட்டு கண்ணாடி முன்னால நின்று நீங்க நடிச்ச மாதிரி பல வாட்டி நடிச்சுப் பாத்துக்கிட்டிருந்தேன். பெண்டாட்டி கமலா கூட `ஏங்க இது என்ன உங்க முதல் படமா? ஏன் இப்படி அலட்டக்கீறீங்கன்னு கேட்டா’ என்றார்
இயக்குனர் கே.எஸ். ஜியின் கண்களில் நீர்!
இப்படியும் ஒரு நடிகனா?
இந்த படத்தில் நடித்துத்தான் சிவாஜி தன் திறமையை நீருபிக்க வேண்டுமா என்ன ?
சிவாஜி அடுத்த அரைமணி நேரத்தில் தன் வேலையை முடித்துவிட்டு அடுத்த படப்பிடிப்பிற்கு கிளம்பிவிட்டார்!
அங்கிருந்த தொழில்நுட்ப கலைஞர்களே அதிசயித்துப்போனார்கள்!
தன்னை யாரும் நடிப்பில் குறையே சொல்லக் கூடாது? என்கிற பிடிவாதமா?
தொழில் பக்தியா?
அல்லது இயக்குனர் சொல்வதைப் போல் நாம் நடிக்கவேண்டும் என்கிற அடக்கமா?
எல்லோருமே திகைத்துத்தான் போனார்கள்!
அந்தப் படம் சென்னை கெயிட்டி தியேட்டரில் வெளியானது!
இயக்குனர் கே.எஸ்.ஜியும், சிவாஜியும் பட்ட கஷ்டம் வீண் போகவில்லை!
படம் அமோக வெற்றி!
Dear Muthaiyan Ammu sir,
hats off for posting Vilayaatu Pillai caps, these pictures were awesome and narrated the story
Veera pandiya kattabomman movie is now screened in Naas theatre in coimbatore(from friday)
அன்புள்ள முத்தையன் சார்,
தங்கள் உடல்நிலை சரியில்லாத இந்த நேரத்தில், தங்களை வருத்திக்கொண்டு பதிவுகள் இடுவதை சற்று நிறுத்தி, முதலில் தங்கள் உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். அதுவே இப்போது முக்கியம்.
திரிகள் எங்கும் போய்விடாது. எப்போது வேண்டுமானாலும் பதிவுகள் இடலாம். சற்று ஓய்வெடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம்.