http://i65.tinypic.com/2u59fyd.jpg
Printable View
#சரணாலயம்
My last year fb memory
சினிமா பிரபலம் என்பது வேறு. அரசியலில் வெற்றி பெறுவது என்பது வேறு. எல்லா நடிகர்களும் #எம்ஜிஆர் ஆகிவிட முடியாது.
சினிமா என்பது பிரபலத்திற்கும் விளம்பரத்திற்கும் பயன்படுமே தவிர அதை வைத்து எல்லாரும் #ஆட்சியைப் #பிடித்துவிடமுடியாது.
நான்கு படங்களில் கதாநாயகனாக நடித்து அவை நூறு நாட்கள் ஓடிவிட்டால் எல்லா நடிகர்களும் முதலமைச்சர் கனவில் மிதக்கத் தொடங்கி விடுகிறார்கள். அந்தக் கனவு #மாயக்கனவு என்பதை நடந்துமுடிந்த பல சட்டமன்ற தேர்தல்கள் பல நடிகர்களுக்கு உணர்த்திவிட்டது.
மேலும் இப்போது, தெருவுக்கு ஒரு தலைவர்...எந்தத்தகுதியுமில்லாமல்... அதற்கு... கூலிக்கு மாறடிக்கும் அடிப்பொடிகள் கூட்டம்...என்பதை காணும் போது "தலை இருப்பவரெல்லாம் தலைவரல்ல" என்ற அடிமைப்பெண் திரைப்பட வசனம் தான் நினைவுக்கு வருகிறது...
வானத்தில் ஒரு நிலவுதான் இருக்கமுடியும். இன்னொரு நிலவு இருக்காது. அதுபோல் வாத்தியார் ஒருவர்தான் இருக்க முடியும். இன்னொரு வாத்தியார் இருக்க முடியாது.
சாதாரண நாடக நடிகராக எம்.ஜி.ஆர் இருந்தபோது பத்து ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் #தர்மத்திற்கு இரண்டு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவார்...
சினிமாவில் துணை நடிகராக நடித்தபோது நூறு ரூபாய் சம்பளம் கிடைத்தால் அதில் பத்து ரூபாய் தர்மத்திற்கு ஒதுக்கிவிடுவார்...
'மந்திரி குமாரி' படத்தில் கதாநாயகனாக நடித்தபோது அவருக்கு மாதச் சம்பளம் ஆயிரம் ரூபாய். அந்த ஆயிரம் ரூபாயில் தர்மத்திற்காக நூறு ரூபாய் ஒதுக்கி வைத்து விடுவார்...
மக்கள்திலகத்தின் படங்களுக்குப் பாடல் எழுதும்போது கவிஞர்களிடம், "நீங்களும் பிறருக்கு உதவுகின்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்" என்று அறிவுறுத்திக்கொண்டிருப்பார்.
அவரை நாடி யாரேனும் ஒருவர் உதவி கேட்டுச் சென்றால், "இப்படி ஒருவர் வந்திருக்கிறார் என்ற செய்தி அவர் காதுக்குப் போய்விட்டால் போதும் வந்தவர் வெறுங்கையோடு திரும்பமாட்டார்..."
அந்த வகையில் அனைவரிடத்திலும் அன்பு பாராட்டுவதில் #அன்னையாகவும், அவர்களை மேலேற்றி வைக்கும் #திண்ணையாகவும்
பலன் தரக்கூடிய #தென்னையாகவும் திகழ்ந்தவர் #பொன்மனச்செம்மல். சுருக்கமாகச் சொன்னால்
#மனிதப்பறவைகளின் #சரணாலயம் அவர்.
இதயதெய்வத்தை நம்பியவர்கள் எவரும் கெட்டதும் இல்லை. அவர் வழியில் உண்மையாகச் செல்பவர்கள் தோல்வியைத் தொட்டதும் இல்லை!........ Thanks Friends....
கலைவாணா் என்.எஸ் கிருஷ்ணனின் மூத்த மகள் திருமணத்திற்காக இரவு பன்னிரெண்டு மணிக்கு பூட்டிய நல்லி குப்பு சாமியின் ஜவுளிக்கடையை மீண்டும் திறக்கச்செய்து, உறவுக்காரா்களுக்கு பட்டுப்புடவை எடுத்துக்கொடுத்தவா் எம்.ஜி.ஆா்.......... Thanks wa.....
மிக... மிக... விரைவில்...====================
பெங்களூரில்...,
மக்கள் ஆதரவுப் பெற்ற
" அமுதசுரபி டாக்டர் எம்ஜிஆர் உதவும் அறக்கட்டளை " யின் ஏற்பாட்டில் ,
சரித்திரத் தலைவர்...
காவிய நாயகர்...
இறைவன் எம்ஜிஆர் அவர்களின் பக்தர்கள் நாம் சங்கமிக்கும் விழா, திருவிழா, மாபெரும் மனித தெய்வம் எம்ஜிஆர் அவர்களின். "புகழ் காக்கும் புனித விழா" நடைபெற இருக்கிறது.
விழாவில் ....,
உலகப்புகழ் பெற்ற மலேசியா மேகநாதன் (பொன்மனச்செம்மல் கலைக்குழு -- மலேசியா) & சிங்கப்பூர் இசை கலைஞர்கள் பாடி நம்மை பிரம்மிக்க வைக்கும்,1958...1968...1978ம் ஆண்டுகால நம் திரை அரசர் , கலையுலக பிரம்மா எம்ஜிஆர் அவர்களின் திரை இசை பாடல்களை கேட்டு ரசிக்க இன்று முதலே நாட்களை எண்ணுங்கள்.
விழா நாளில் இன்னும் பல ஆச்சரிய தகவல்கள் உண்டு. அறிய தயாராகுங்கள்...!
விழாவின் சிறப்பம்சம் ************************
நம் தெய்வம் எம்ஜிஆரின் ரத்தத்தின் ரத்தங்களே...
விளம்பரம் தேடாத வியப்புக்குறிய பக்தர்களே....
சாகும்வரை எம்ஜிஆர் புகழ்பாட துடிப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் என்னைப்போன்ற எம்ஜிஆர் வெறியர்கள்... "நீங்கள் தான் சிறப்பு விருந்தினர்கள்"
(அரசியல் சார்பற்ற விழா) மேலும் தகவல் அறிய தொடர்பு கொள்ளுங்கள்.....
எம்ஜிஆரின் நிழல்
கானா க. பழனி 9900902321
எம்ஜிஆர் பித்தன்
அ. அ. கலீல்பாட்சா
9443019160
எம்ஜிஆர் பக்தன்
சம்பங்கி GSR
9731185524
எம்ஜிஆர் தொண்டன்
ராஜசேகர் K
9880825975
.... Courtesy: wa....
*எம்.ஜி.ஆாின் இறுதி நிகழ்ச்சி*
1987 டிசம்பா் 22ஆம் தேதி தமிழக முதல்வா் என்ற முறையில் எம்ஜிஆா் கலந்து கொண்ட இருதி நிகழ்ச்சி சென்னை மீனம் பாக்கத்திற்கும் கிண்டிக்கும் நடுவில் கத்திப்பார சந்திப்பில் நிறுவப்பட்ட பண்டித நேருஜியின் சிலையே திறந்து வைத்த நிகழ்ச்சி .இந்த நிகழ்ச்சியில் அப்போதைய பிரதமா் ராஜீவ் காந்தியும் கலந்து கொண்டாா். இதுதான் எம் ஜி ஆாின் கடைசி நிகழ்ச்சியாகும்.
🙏🏼🙏🏼🙏🏼😭....... Thanks fb....
சரோஜாதேவி ஜெயலலிதா வுக்கு பிறகு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுடன் அதிகப் படங்களில் 13 ஜோடியாக நடித்தவர் நடிகை லதா அவர்கள்.1972 அண்ணா திமுக தொடக்க காலத்தில் நாட்டிய நாடகம் நடத்தி 35 லட்சம் வசூல் செய்து கட்சிக்கு கொடுத்தார். இன்றும் புரட்சித்தலைவர் ஆரம்பித்த கட்சி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். யாரும் எம்ஜிஆர் ஆக முடியாது என்று அடித்து சொல்கிறார்.அவருடைய நல்ல மனம் நன்றி உணர்ச்சி பல்லாண்டு வாழ்க ! எம்ஜிஆர் லதா ஜோடி படங்களில் எனக்கு பிடித்த படங்கள் உரிமைக்குரல் நாளை நமதே..... Courtesy: wa.....
#மக்கள்_திலகம் தன்னுடய தலைவர் #பேரறிஞர் #அண்ணா-வை போற்றியது போல் வேறு எவரும் போற்றியதில்லை. இதோ இந்த பட்டியலை பாருங்களேன்...
01. தன் தலைவர் ஊரின் பெயருடன் ''காஞ்சித்தலைவன் '' என்ற படத்தில் நடித்தார் .
02. ''நம் நாடு '' படத்தில் அண்ணாவை பெருமை படுத்தும் வகையில் அவர் பெயரில் இருந்த '' துரை '' என்ற பெயரின் கதா பத்திரத்தில் நடித்தார் .
03. 'அண்ணாவின் பேர் சொல்லும் காஞ்சியைப்போல்' இதய வீணை
04. 'அண்ணனின் பாதையில் வெற்றியே காணாலாம்' மீனவ நண்பன்
05. 'உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்' நவரத்தினம்
06. 'இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்' பல்லாண்டு வாழ்க
07. 'அண்ணா சொன்னவழி கண்டு நன்மை தேடுங்கள்' இதயக்கனி
09. 'என்அண்ணாவை ஒருநாளும் என் உள்ளம் மறவாது' நினைத்தை முடிப்பவன் .
10. 'அண்ணா அன்று சொன்னார் என்றும் அதுதான் சத்தியம்' உரிமைக்குரல்
11. 'நாட்டிற்காக உழைப்பதர்க்கே அண்ணா பிறந்தார்' நேற்று இன்று நாளை
12 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா' எங்கள் தங்கம்
13. 'சரித்திரம் புகழ்ந்திடும் அறிஞரின் வழி நடப்பான்' கண்ணன் என் காதலன்
14. 'மேடையில் முழங்கு அறிஞர் அண்ணா போல்' பெற்றால்தான் பிள்ளையா
15. 'நான் செல்லுகின்ற பாதை பேரறிஞர் காட்டும் பாதை' புதிய பூமி
16. 'தம்பி! நான் பிறந்தேன் காஞ்சியிலே நேற்று' நேற்று இன்று நாளை
17. 'சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா சரித்திர புகழுடன் விளங்குகிறார்' எங்கள் தங்கம்
18. '....கேளம்மா கேளு நான் காஞ்சிபுரத்து ஆளு..' எங்கள் தங்கம்
பொன்மனச்செம்மல்புகழ்வளர்க ♥சுதர்சன்♥...... Thanks wa Friends.......
திராவிட தலைவர்களில் நாங்கள் வணங்கும் தலைவர்கள் மூவர் மட்டுமே. அதில்அசல் தங்கமாக இருந்த எங்கள் தங்கத்தை( MGR) கொடை என்னும் வழியை காட்டிய கலைவாணர் அவர்களும்.அரசியல் கண்ணியத்தை காட்டிய அறிஞர் அண்ணா அவர்களும் தான்.அந்த பேரறிங்கர் அண்ணா அவர்களின் 50 வது நினைவு நாளில் இருகரம் கூப்பி கலைவேந்தன் எம்ஜிஆர் பக்தர்கள் அறக்கட்டளை சார்பாக வணங்குகிறோம்.......... Thanks Friends............
இன்று 3-2-2019 பேரறிஞர் அண்ணா 50 ம் ஆண்டு நினைவு நாள் !
எதையும் தாங்கும் இதயம். கடமை கண்ணியம் கட்டுப்பாடு. மாற்றான் தோட்டத்திற்கும் மனம் இருக்கும். எங்கிருந்தாலும் வாழ்க !
தம்பி , எம்.ஜி.இராமசந்திரன் அவர்கள் நாம் யாரும் அழைத்து நமது கழகத்தில் வந்து சேர்ந்தவர் அல்ல. அவர் மக்களின் அன்பைப் பெறுவதற்கு என்ன வழி என்று பல நாள் சிந்தித்து, மக்களுக்குப் பாடுபடும் கட்சி எது என்று ஆராய்ந்து கடைசி யில் நமது கழகத்தில் வந்து சேர்ந்தார். "
= அறிஞர் அண்ணா..... நன்றி...
: பேரறிஞர் அண்ணாவின் உவமைத்திறன் ::
1964ம் ஆண்டு பேரறிஞர் அண்ணா சட்ட எரிப்பு போராட்டத்தில் சிறைத் தண்டனை பெற்று சென்னை சிறையில் இருந்தார். அப்போது, நம் மக்கள் திலகம் அவர்கள் சட்ட மேலவை உறுப்பினர் (M.L.C.) பதவியை துறந்தார்.
இது குறித்து பேரறிஞர் அண்ணா அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
" பட்டுப் புடவை" யின் வெளிப்புறத்திலே போடப்படும் சரிகையைனால் பட்டுப் புடவையின் மதிப்பு உயர்கிறதே, அதைப்போல் அவர் மதிப்பானவர். அவரால் கட்சிக்கு மதிப்பு உருவாகும் நிலையோடு வைத்துக்கொள்ள வேண்டும் என்று தனக்கே உரிய பாணியில், கூறினார். Thanks...
வாலி பல வரிகள் எழுதியும் திருப்தி கொள்ளாத மக்கள் திலகம் கடைசி முயற்சியாக எம் எஸ் வி கண்ணதாசனிடம் சென்று இந்த காட்சிக்கு பாடல் எழுதி தாருங்கள் ஆனால் வாலியின் பெயர் தான் திரையில் வரும் என்றார்
கவிஞரும் சரி என்று ஒப்புக்கொண்டார் எம் எஸ் வி அவர்கள் இவ்வாறு கூறியதற்கு காரணம் மக்கள் திலகமும் கவிஞரும் இரு துருவங்களாக இருந்ததுதான் காரணம்
எம் எஸ் வி யும் கவிஞர் எழுதிய பாடலை வாலி எழுதியதாக கூறி எம் ஜி ஆரிடம் காண்பித்தார் அதைபடித்த மக்கள் திலகம் இது கவிஞரின்
வரிகள் போல் உள்ளனவே என்றார்
எம் எஸ் வி அசந்து போனார் உடன மக்கள் திலகம் சரி பரவாயில்லை இதில் வள்ளலார் வரவேண்டும் என்றார் எம் எஸ் வி அவர்கள் காதல் பாடலில் வள்ளலார் எப்படி வரமுடியும் என்று கேட்க
அதெல்லாம் கவிஞர் பார்த்து கொள்வார் என்றார்
கவிஞர் ' தீபம் எரிகின்றது ஜோதி தெரிகின்றது ' என்று எழுதி கொடுத்தார்
மக்கள் திலகத்திடம் காட்டிய எம் எஸ் வி யிடம் பார்த்திரா இது தான் கவிஞர் அருட் பெரும் ஜோதி என்று வள்ளலாருக்கு வேறொரு பேரும் உண்டு என்றும் மக்கள் திலகம் விளக்கினார் !
மக்கள் திலகத்தின் ஈடுபாடு எம் எஸ் வி யின் பொறுமை
கண்ணதாசனின் கவித்துவம் அது பொற்காலம்
படம் : உரிமைக் குரல்
பாடல் : விழியே கதை எழுது
ஹயாத் !.... Thanks wa.....
அழகான வள்ளலே ராமச்சந்திரனே
உனக்கோர் வணக்கம்👁
*******************
எதிரிக்கு எதிரி நண்பனுக்கு நண்பன்
சித்தாந்தம் கொண்ட சீரிய நாயகனே
உயர்ந்தோரை மதித்த
உத்தமபுத்திரன் நீயானாய்
உன்னை
நம்பாமல் கெட்டவர் உண்டு
நம்பிக் கெட்டவர்கள் அவணியில் இல்லை
அசுர ஜாதகத்தை அழகாய்க் கொண்டவனே
விழுவதுபோல் விழுவாய் மற்றவர் முன்பு
நீண்டகால வீழ்ச்சியை சந்திக்காதவன் ஆயிற்றே
ராமனை உன்வடிவில் பார்த்தேன் நான்
சந்திரனையும் அழகால் தோற்கடித்தவன் நீயன்றோ
ஜானகி தெய்வத்தைத் துணையாய்ப் பெற்றவன்
மதுரைவீரனையோ மன்னாதிமன்னனையோ ராஜாதேசிங்கையோ
நாடோடி மன்னனையோ
கண்டதில்லை
என் வாழ்நாளில்
என்றும்
அத்தனைப்
பேரையும் கலந்த கலவையன்றோ
உலகத்தை காப்பது தெய்வம் அன்றோ
அதையும் உன்னில் கண்டது உண்மையன்றோ
பாமரனையும் ரத்தத்தின் ரத்தமாக்கியன் நீமட்டும்தானே
திரைப்படத்திலும் தந்தாய் தரமான சிந்தனைகளை
அநாகரீக வார்த்தைகளை அடியோடு வெறுத்தவன்
நீவெறும் நடிகன் மட்டும் அல்ல
சமுதாய மாற்றங்களை அழகாக பரிணமித்தவன்
சமுதாயத்தின் அத்தனை விடயத்தையும் அலசியவன்
அத்தனையும் சீர்செய்ய ஆவலாய் உழைத்தவன்
எத்தனை எத்தனை திட்டங்கள் நீதந்தாய்
மதிய உணவெனும் ஒரு திட்டம் போதுமே
இன்றளவும் உன்னை துதிக்குதே
இவ்வுலகம்
அன்னையாய் தந்தையாய் அனைவர்க்கும் ஆனாய்
மக்களை வெளியில் சுமந்து கருப்பையானவன்
உன் புகழ்பாடிட எனக்கு ஒருஜென்மம்
ஒரு யுகம் போதாது கருணை
வள்ளலே
எல்லோர்க்கும் எல்லாம் தந்திட நினைத்தாய்
அனைவர்க்கும் அனைத்தும் அளவில்லாமல் தந்தவன்
ஏழைக்கு இறைவனாய் அனைவர்க்கும் பங்காளனாய்
திகழ்ந்த செம்மலே தமிழகத்தின் தலைமகனே
இடையேழு கடையேழு வள்ளல்கள் வரிசையில்
வந்துதித்த வள்ளலும் நீ ஆனாய்
நன்றி மறவா தமிழன் நாடறியும்
வானமும் வையமும் சந்திரனும் சூரியனும்
உள்ளவரை உன் புகழ் மங்காது மாதவனே
சிரம் தாழ்த்தி கரம் கூப்பி
வணங்குகிறேன் வள்ளளே உன்னாசீர்வாதம் வேண்டியே.
ராமச்சந்திரனாக அன்னை ஜானகியோடு
இணைந்து
என்றும் உன்புகழ் பாடிடவே வரம்தாயெனக்கு........... Thanks wa......
"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி.... Thanks fb., Friends...
ஆட்சியில் விலை வாசி கட்டுக்குள் இருந்தது. ஏழைகள் நிம்மதியாக வாழ முடிந்தது. மக்கள் நலன் ஒன்றையே
குறிக்கோளாக கொண்டு, அண்டை மாநிலங்களுடனும், மத்திய அரசுடனும் நல்லுறவு கண்டு, தமிழகம் மேம்பட நலத் திட்டங்கள்
பல தீட்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றார். எதிர் கட்சிகளை எதிரி கட்சிகளாக எண்ணாமல் சுமுகமான சூழ் நிலைகளை
சட்ட மன்றத்தில் ஏற்படுத்தினார்.
விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்தது மட்டுமல்லமால், அவர்கள் படும் அவல நிலையினை உணர்ந்து அந்த அவலங்களை
போக்கி, இந்திய நாட்டிற்கே எடுத்துக்காட்டான முதல்வராக, அற்புதமான தலைவராக திகழ்ந்தார். சத்துணவு திட்டத்தை கொண்டு
வந்து ஐக்கிய நாட்டு சபையில் விவாதிக்கும் அளவுக்கு சாதனை படைத்திட்டார்.
தமிழக சட்ட மன்ற வரலாற்றில் தொடர்ச்சியாக தனது இறுதிக் காலம் வரை, தோல்வியே கண்டிராத, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
தனிப் பெரும் முதல்வராக, நிஜமாகவே நிரந்தர முதல்வராக, உலா வந்தார்.
மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் துயர் போக்கிட்ட தூய தலைவராக திகழ்ந்தார்.
நாட்டின் மிக உயர்ந்த விருதான "பாரத ரத்னா" பெற்ற முதல்வர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஒரு மாநில முதல்வராக அவர் இருந்தாலும் தேசிய தலைவராக கருதப் பட்டார். எனவேதான் அவரது மறைவிற்கு, பாரத திரு நாடு அனுதாபம் தெரிவித்து "தேசிய விடுமுறை" அறிவித்தது. இது எவருக்குமே கிடைத்திடாத பெருமை என்றே
கூறலாம்.
இப்படி, அந்த மனிதப் புனிதரின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம். தமிழக சட்ட மன்ற வரலாற்றில் எம்.ஜி. ஆர். என்ற
மாமனிதர் ஆற்றிய பணிகளை எவரும் மறக்க மாட்டார்கள்....... Thanks fb shares...
நன்றி மறந்தவர்கள் ... இன்று ..
ஒளிவிளக்கான ---திருவிளக்கே .........
உங்கள் பாடலே அவர்களுக்கு .........
கண்ணை நம்பாதே
உன்னை ஏமாற்றும் உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம்
உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு
உள்ளம் தெளிவாகும் அடையாளம் காட்டும்
பொய்யே சொல்லாதது
பொய்மை எப்போதும் ஓங்குவதும் இல்லை
உண்மை எப்போதும்தூங்குவதும் இல்லை (கண்ணை)
பொன் பொருளை கண்டவுடன் வந்த வழி மறந்து விட்டு
கண் மூடி போகிறவர் போகட்டுமே
என் மனதை நான் அறிவேன்
என் உறவை நான் மறவேன்
எது ஆன போதிலும் ஆகட்டுமே
நன்றி மறவாத நல்ல மனம் போதும்
என்றும் அதுவே என் மூலதனம் ஆகும் (கண்ணை)... Thanks wa.,
திராவிட இயக்கம் கண்ட பேரறிஞர் பெருந்தகை, அறிஞர் அண்ணா அவர்கள் நினைவு நாள் இன்று.
ஒரு மிகப்பெரிய இயக்கத்தின் தலை வராக இருந்த பேரறிஞர் அண்ணா அவர்கள், கட்சியில் தனக்கு கீழே இருந்த மற்ற முன்னணி தலைவர்கள் மீது காழ்ப்புணர்ச்சி கொள்ளாமல், தன் மீது மிகுந்த தன்னம்பிக்கை கொண்டு வாழ்ந்தவர். தன்னுடைய இரண்டாண்டு கால ஆட்சி நடந்த சமயம், தன் மீது எந்த வித குற்றச்சாட்டும் சொல்லமுடியாத அளவுக்கு, தூய்மையான ஆட்சியை கொடுத்த உத்தமத்தலைவர்.
புரட்சித்தலைவர், தன்னுடைய படப்பாடல் மூலம் தென்னாட்டு காந்தி என்று பாடி பெருமை செய்யப்பட்ட, பேரறிஞர் அண்ணா அவர்களை வணங்கிக்கொள்வோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை..... Thanks Mr.Bhaskaran...
#அண்ணனுக்கு செலவு செய்த தம்பி# ---- பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு செலவு செய்தது அரசு பணமா? என சட்டசபையில் திருமதி அனந்த நாயகி கேட்க அண்ணா அவர்கள் நாளை பதில் கிடைக்கும் என்றார். மறுநாள் அண்ணா , அனந்த நாயகிக்கு நன்றி கூறினார். பின்பு..... என் மருத்துவ செலவுகளுக்கு நம் கழக உறுப்பினர் திரு. எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சுமார் ரூபாய் ஒரு லட்சத்து 25000 கொடுத்தார் என்று பெருமிதத்துடன் சொன்னார்... Thanks wa.,
மதுரை மாநகர் விரைவில் வருவதாக ஒட்டப்பட்டுள்ள ஓல்டுஇஸ்கோல்டு காவியம் ஆயிரம்தலைவாங்கிய அபூர்வசிந்தாமணி என்ற படத்தின் விளம்பரத்தில் மக்கள்திலகம் எம் ஜி.ஆர் அவர்களின் துணைவியார் திருமதி ஜானகிஅம்மையார் நடித்துள்ளார் என்று விளம்பரம் செய்திருக்கிறார்கள் அப்புறமென்ன பார்திடவேண்டியது தான் குறிப்பு . கோவை ராயல் திரையரங்கில் சில வருடங்களுக்கு முன்பு வெளிவந்து நல்ல வரவேற்புடன் பத்துநாளைக்குமேல் ஓடியது நன்றி மதுரை.எஸ் குமார்.... Thanks wa...
வேறு யாருக்கும், எவருக்கும் தராத பெருமையை இயற்கை மக்கள் திலகம் அவர்களுக்கு வழங்கியிருக்கிறது அதற்கு நாம் நன்றி தெரிவித்து கொள்கிறோம்... எப்படி... தாய், தந்தை, குரு, தெய்வம்..... என வரிசைப்படி ஆன்றோர்கள் சான்றோர்கள் வகுத்து உலககளாவிய சமுதாய பொது மக்களுக்கு தந்திருக்கிறார்கள்... அதில் மூன்றவதாக குரு... வாத்தியார் எனும் அதி உன்னத பெருமையினை நம் மக்கள் திலகத்துக்கு அல்லவா மக்கள் கூறுகின்றனர்... இதைவிட வேறொரு விருது தேவையா?! என்ன...👍 👌
ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை.நான் என்ற எண்ணம் கொண்ட மனிதன் வாழ்ந்ததில்லை.நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் MGR அவர்கள் நம்மை விட்டு என்றும் எப்போதும் பிரிந்து செல்லவில்லை.அவருடைய உடல் தான் இந்த உலகத்தை விட்டு பிரிந்து சென்றது.அவருடைய உயிர் ஆன்மா அனைத்தும் என்றும் எப்போதும் பல்லாண்டு காலமாக நமக்கு அனைவருக்கும் துணையாக இருந்து நம்மை வழி நடத்தி கொண்டு இருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மையும் கூட.இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.மூன்று எழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சு இருக்கும்.உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்.அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும். இது தான் எங்களுடைய தமிழக முதலமைச்சர் புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்கள்.எங்களுடைய புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களை போல மீண்டும் யாரும் இந்த உலகத்தில் பிறக்கவும் இல்லை.பிறக்க போவதுமில்லை.நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப்பட மாட்டார்.உயிர் உள்ளவரை ஒரு துன்பம் இல்லை.அவர் கண்ணீர் கடலிலே விழ மாட்டார்.நம்முடைய புரட்சி தலைவர் MGR அவர்கள் நம்முடைய தமிழக முதலமைச்சராக இருந்து ஆணையிட்டு அவை எல்லாம் நம்முடைய தமிழ்நாட்டில் நடந்து நம்முடைய தமிழக மக்கள் குறிப்பாக ஏழைகள் எல்லோரும் நம்முடைய தமிழக புரட்சி தலைவர் மக்கள் திலகம் பொன்மன செம்மல் MGR அவர்களின் பொற்கால ஆட்சி காலத்தில் மிகவும் சிறப்பாக வாழ்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.பிள்ளை கூட்டங்களை பார்க்கையிலே பிஞ்சு மொழிகளை கேட்கையிலே நல்லவர் எல்லாம் நலம் பெறுவார் என்ற நம்பிக்கை பிறக்கிறது.இவர் வர வேண்டும் புகழ் பெற வேண்டும் என்று ஆசை துடிக்கிறது.என்று ஆசை துடிக்கிறது.எந்த நாடு என்ற கேள்வி இல்லை.என்ன ஜாதி என்ற பேதமில்லை.மனிதர்கள் அன்பின் வழி தேடி இங்கு இயற்கையை வணங்குகிறார்.மலை உயர்ந்தது போல் மனம் உயர்ந்ததென்று இவர் வாழ்வில் விளக்குகிறார்.மலையை விட உயர்ந்த மனிதனாக நம்முடைய மக்கள் திலகம் புரட்சி தலைவர் பொன்மன செம்மல் MGR அவர்கள் நம்முடைய அனைவரின் மனதிற்குள் என்றும் எப்போதும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்...... Thanks Friends....
இதயக்கனி மக்கள் திலகம் அபிமானிகள் தொடர்ந்து நல்ல ஆவணங்கள், பதிவுகள் ஐடா பாசத்துடன் வேண்டுகோள் வைக்கும் சகோதரன்...
திண்டுக்கல் மாநகரில் மக்கள் திலகம் 102ம் ஆண்டு பிறந்தநாள் விழா வைபவங்கள் சிறப்பு, கருத்துகள், உரையாடல்கள் மற்ற அம்சங்கள் எல்லாம் சென்று பங்கெடுத்த நம் தோழர்கள் பகிரவும்.........
புரட்சித்தலைவரின் மனிதநேயம்:
1977 இல் எம்.ஜி.ஆர் தேர்தலில் நின்று வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவி ஏற்றிருந்த சமயம். எம்.ஜி.ஆருக்கு எல்லா மட்டங்களிலும் ரசிகர்கள் உண்டு. எம்.ஜி.ஆரின் உயர்மட்ட விசிறிகளில் குறிப்பிடத்தக்கவர் கர்நாடக மாநிலத்தில் அப்போது முதலமைச்சராக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குண்டுராவ்.
பெங்களூரில் உள்ள தன் வீட்டுக்கு வரவேண்டும் என்று குண்டுராவ் எப்போதும் அழைத்துக்கொண்டே இருப்பார். குண்டுராவின் பிறந்த நாளன்று, பெங்களூருக்கு நேரில் சென்று, அவரை வாழ்த்தவேண்டும் என்று முடிவு செய்தார் எம்.ஜி.ஆர்.
பிற்பகலில் tmx 4777 என்ற எண்ணுள்ள பச்சை அம்பாசிடர் காரில் கிளம்பினார் எம்.ஜி.ஆர். அவருடன், அவரது மனைவி ஜானகி அம்மா, ஜானகி அம்மாவின் சகோதரர் நாராயணனின் மகள் லதா இருவரும் வந்தனர். மற்றொரு வேனில் நாங்கள் அவர் வண்டியை பின்தொடர்ந்தோம்.
பெங்களூரை அடைந்ததும் எம்.ஜி.ஆரும், அவரது குடும்பத்தினரும் அங்கு 'வெஸ்ட் எண்ட்' என்கிற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கினர். நாங்கள் அதற்க்கு அருகே வேறொரு ஹோட்டலில் தங்கினோம்.
மறுநாள் காலை ஒன்பது மணிக்கு கர்நாடக முதல்வர் குண்டுராவ் வீட்டுக்கு சென்றோம். பெரிய பார்சல் ஒன்றை அவருக்கு பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரின் உதவியாளர் ஐ.ஏ.எஸ் அதிகாரி பரமசிவம், செக்யுரிட்டி ஆபிசர் கண்ணுசாமி உடன் இருந்தனர். பால் பாயாசத்தோடு எங்கள் அனைவருக்கும் நன்றாக சைவ சாப்பாடு அளிக்கப்பட்டது. சாஷ்டாங்கமாக எம்.ஜி.ஆரின் காலில் விழுந்து நமஸ்கரித்தார் குண்டு ராவ். அவரை மனதார வாழ்த்தினார் எம்.ஜி.ஆர்.
பத்து மணிக்கு மேல் அங்கிருந்து கிளம்பினோம். அப்போது எம்.ஜி.ஆர் தான் வரும் அம்பாசிடர் காரில் என்னை வரச் சொன்னார். 11 மணிக்கு மேல் ஓசூர் வரும்போது நல்ல வெயில். காரில் பயணம் செய்யும்போது எம்.கே.தியாகராஜ பாகவதர் படிய பாடல்களை எப்போதும் ரசித்துக் கேட்பார் எம்.ஜி.ஆர்.
ஓசூர் தாண்டியிருப்போம். இடது பக்கம் நெடுஞ்சாலை ஓரத்தில் வயதான கிழவி மற்றும் பத்து வயது சிறுமி இருவரும் தலையில் பெரிய புல்கட்டை சுமந்தவாறே காலில் செருப்பு இல்லாமல் வெயிலில் தவித்துக் கொண்டிருந்தனர். கொஞ்ச நேரம் நடந்து, பிறகு வெயிலுக்காக ஓரமாக நின்று மீண்டும் நடை.
'ராமசாமி, காரை நிப்பாட்டு...' என்று டிரைவர் ராமசாமியிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். 'ராமு, போய் அவங்களை விசாரித்துவிட்டு வா...' என்றார் என்னிடம். ராமகிருஷ்ணன் என்ற என் பெயரை பல நேரத்தில் 'ராமு' என்று சுருக்கியே அவர் கூப்பிடுவார்.
'கால் சுடுதய்யா நிற்கிறோம்...' என்றார் அந்தக் கிழவி. 'தூரத்திலிருந்து புல்லை அறுத்து, கட்டி சுமந்து சென்று விற்றால் தலைச்சுமைக்கு பன்னிரெண்டு அணா கிடைக்கும்...' என்றார். எம்.ஜி.ஆரிடம் சொன்னேன்.
தன் மனைவி ஜானகி அம்மா, லதா இருவரிடம் அவர்கள் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றச் சொன்னார். காரில் பயணம் செய்யும்போது எப்போதும் ஒரு கருப்பு பேட்டியில் பணம் வைத்திருப்பார். அதிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து, 'அவர்களிடம் கொடு...' என்றார்.
இரு ஜோடி செருப்புகளையும் எடுத்துக் கொண்டுபோய் அவர்களிடம் கொடுத்து, எம்.ஜி.ஆர் கொடுக்கச் சொன்னார் என்று ஆயிரம் ரூபாயையும் கொடுத்தேன். அப்படியே நெகிழ்ந்து போயினர். எதிர்பாராமல் பணம் கிடைத்ததில் அவர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. நன்றிகூட சொல்லாமல் அப்படியே நின்றனர்.
காரின் கண்ணாடியை இறக்கி வணக்கம் தெரிவித்தார் எம்.ஜி.ஆர். அங்கிருந்து நாங்கள் புறப்பட்டோம்.
தன்னிடம் உதவி கேட்டவருக்கு மட்டும் என்று இல்லாமல், உதவி கேட்காதவர்களுக்கும் குறிப்பறிந்து உதவி செய்வதுதான் எம்.ஜி.ஆரின் குணம். இந்த மனிதநேயம் தான் அவரை உயரத்தில் வைத்தது. தனக்கு உதவியவர் தமிழக முதல்வர் என்று அந்த கிழவிக்குத் தெரியுமா, தெரியாதா? எனக்குத் தெரியவில்லை. எந்தப் பிரதிபலனும் பாராமல் செய்யப்பட்ட மனிதநேய செயல் அது.
தகவல்களுக்கு நன்றி: 'எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம்', விகடன் பிரசுரம்....... Thanks wa...
இன்று (4.2.1985)நம் தலைவர் பொன்மனச்செம்மல் பூரண உடல் நலம் பெற்று அமெரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு உதித்த நாள். இதயதெய்வம் பாரிவள்ளல் பரங்கிமலையில் பாதம் பதித்தநாள்🙏🙏🙏
புரட்சித்தலைவர் அமெரிக்காவிலிருந்து பூரண உடல் நலம் பெற்று தமிழகம் திரும்பிய நாளன்று, அவரை பார்த்து மகிழ, எங்களது கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் குழுவைச் சார்ந்த சுமார் 30 சகோதரர்களுடன், சென்னை பாரகன் தியேட்டர் அருகிலிருந்து முதல் நாள் இரவு சுமார் 10 மணிக்கு நடைபயணமாகவே புறப்பட்டு, கிண்டி மைதானத்திற்கு, அதிகாலை சுமார் 2 மணிக்கு வந்து சேர்ந்தோம். காலை தலைவரை பார்த்த சந்தோஷத்தில், மீண்டும் மவுண்ட் ரோடு தேவி தியேட்டர் வளாகத்திற்கு வந்து நண்பர்களுடன் சேர்ந்து சந்தோஷத்தில் உரையாடி விட்டு, மதியத்திற்கு மேல்தான், வீடுகள் திரும்பினோம்.
மறக்க முடியாத நாள். இந்த நாளில் தலைவரை நினைவு கொள்வோம்.
பாஸ்கரன்,
கலைவேந்தன் எம். ஜி. ஆர். பக்தர்கள் அறக்கட்டளை... Thanks wa.,
திண்டுக்கல் மாவட்டத்தில் நமது எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் சார்பாகவும் அனைத்து மாவட்ட பக்தர்கள் குழுவின் சார்பாகவும் நமது நண்பர் மலரவன் அவர்களும் அவரது நண்பர் சென்றாய பெருமாள் அவர்களும் மிக சிறப்பாக இந்த எம்ஜிஆர் 102 ஆவது பிறந்தநாளை மிக விமர்சியாக சிறப்பாக கொண்டாடினார்கள் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி புரட்சித்தலைவரின் அருள் என்றென்றும் கிடைக்க வேண்டும் என்று எனது இதயதெய்வம் புரட்சித்தலைவரை வேண்டுகிறேன் திண்டுக்கல் பரமசிவம்.... Thanks wa
சேலம் மாநகரில் எழுச்சிமிகு விழா கண்ட பொன்மனச்செம்மலின் 102 வது மனிதநேய திருவிழா (03.02.2019.) . காலை 9.00மணி முதல் இரவு 10.00 மணி வரை பல்வேறு நிகழ்ச்சியுடன் இடைவிடாது நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்த உயர்திரு சென்னை மாநகர முன்னாள்மேயர் , அண்ணன் சைதை துரைசாமி அவர்கள் தலைவரின் தனி உதவியாளர். உடையலங்கார நிபுனர் அண்ணன் திரு. முத்து அவர்கள் மூத்த பத்திரிக்கையாளர் அண்ணன் திரு. துரைகருணா அவர்கள் மற்றும் சென்னை மதுரை திண்டுக்கல் நெல்லை கோவை திருச்சி துறையூர் திருவண்ணாமலை ஆரணி வேலூர் கள்ளக்குறிச்சி ஆத்தூர். சின்னசேலம் திருப்பூர் அரக்கோணம் ஈரோடு திருவள்ளுர் பெங்களுர் புதுச்சேரி தர்மபுரி கிருஷ்ணகிரி தூத்துக்குடி விருதுநகர் மற்றும் சென்னையிலிருந்து பொன்மனச்செம்மல் ஸ்ரீ எம்.ஜு.ஆர். நற்பணி சங்கத்தினர் மக்கள்திலகம் எம். ஜி. ஆர் மன்றத்தினர் ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜீ.ஆர் பக்தர்கள் என தலைவரின் அபிமானிகள் பலர் வருகை தந்து விழாவை சிறப்பித்தற்கும் விழாவை சிறப்புடன் ஏற்பாடு செய்த கொடைவள்ளல் பாரத ரத்னா எம். ஜி.ஆர் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் அண்ணன் திரு. குமார் அவர்கள் அண்ணன் திரு மாணிக்கம் அவர்கள் மற்றும் அவர்களுடன் ஒத்துழைத்த நிர்வாகிகள் விழாவிற்கு வருகை தந்த சேலம் மாநகர் தலைவர் பக்தர்கள் தாய்குல பெண்கள் பொதுமக்கள் யாவருக்கும் அன்பு கலந்த நன்றியை விழாகுழு சார்பாகவும் நமது தலைவரின் ஒப்பற்ற புகழை புத்தகம் மூலம் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் ஒரே உண்மையான மாதஇதழாம் ஒலிக்கிறது உரிமைக்குரல் சார்பாகவும் அன்புடன் .......
தெரிவித்துக் கொள்கிறோம். என்றும் வள்ளல் புகழ்பாடும் உரிமைக்குரல் ராஜு...... Thanks fb
When shooting in public places, people would often approach Vidyasagar looking for blessings, taken in by his impersonation of MGR.
Photograph/Cop Shiva
Cop Shiva examines the polarity between fantasy and reality, and the roles people play publicly and privately, as Vidyasagar masquerades as Tamilian actor MGR.
My Assignment
Description: I am fascinated with the idea of masquerade and the roles people play in public and private. This led me to document Vidyasagar’s life.
Duration: Six years
Notes: The drama would unfold before my eyes. I had to be sharp enough to capture the moment.
Tamil film icon and politician M G Ramachandran’s (MGR) presence is felt in Karnataka in many ways. His movies are played and replayed by the local television station continuously. His face is on display in the numerous banners that appear in any city of South India, where he is revered.
You could see it even more in Bengaluru resident, Vidyasagar, who woke up every morning, transformed himself into MGR and carried on with his daily routine.
My first reaction on meeting him was curiosity. The juxtaposition of Vidysagar, a very peculiar character himself, and MGR, who had an overpowering influence on the politics and cinema of Southern India, was very difficult to overlook........... Thanks wa.,
The Process
Before I actually began photographing Vidyasagar, I built a strong relationship with him. I met him and his family several times without my camera. I spent time with them, cared for them and eventually my presence became familiar for them, and that is when I could start documenting his routine and his transformations.
I documented Vidyasagar’s life for more than six years until his untimely demise a few months ago. He was extremely passionate about MGR and I believe that not only the actor’s charisma but also Vidysagar’s shines through the photographs. At the end of the day, Vidyasagar teaches us to stick to our beliefs no matter what.......... Thanks wa Friends...
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த சமயம். பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் விழா. முதல்வர் என்ற முறையில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக, சென்னை மாம்பலத்தில், இப்போது நினைவு இல்லமாக உள்ள தனது அலுவலகத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அண்ணா மேம்பாலம் அருகே கார் சென்று கொண்டிருந்தபோது, திடீரென டிரைவர் கதிரேசனை காரை நிறுத்தும்படி எம்.ஜி.ஆர். பதற்றத்துடன் கூறினார். அவரும் உடனடியாக காரை நிறுத்தி விட்டார். முதல்வருடன் வந்த வாகனங்களும் நின்றுவிட்டன.
காரை விட்டு இறங்கிய எம்.ஜி.ஆர். ஓட்டமும் நடையுமாக சென்றார். என்னவென்று புரியாமல் அதிகாரிகளும் உதவியாளர்களும் அவரை வேகமாகப் பின்தொடர்ந்தனர். சாலையில் காரை நிறுத்தி எம்.ஜி.ஆர். இறங்கிச் செல்வதைப் பார்த்ததும் ஆங்காங்கே வாகனங்களில் சென்றவர்களும் வாகனத்தை நிறுத்திவிட்டனர். பொதுமக்களும் கூடியதால் அந்த இடமே பரபரப்பானது. அடுத்த சில விநாடிகளில் எம்.ஜி.ஆர். எதற்காக அப்படி வேகமாக சென்றார் என்பது எல்லோருக்கும் தெரிந்துவிட்டது.
சாலையோரத்துக்கு எம்.ஜி.ஆர். வேகமாக சென்றார். அங்கு காக்காய் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கை,கால்களை உதறியபடி வாயில் நுரைதள்ள ஒருவர் போராடிக் கொண் டிருந்தார். அந்த நபரை மடியில் கிடத்திக் கொண்ட எம்.ஜி.ஆர்., அவரது கையை நீவிவிட்டு ஆசுவாசப்படுத்தினார். சற்று துடிப்பு அடங்கிய நிலையில், தனது உதவியாளர்களை அழைத்தார். அந்த நபரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு கூறிவிட்டு பின்னர், காரில் ஏறி புறப்பட்டார். சென்னை அண்ணா சாலையில் பரபரப்பு மிகுந்த காலை நேரத்தில் ஏராளமானோர் செல்கின்றனர். அவர்கள் யாருமே வலிப்பு நோயால் துடிக்கும் நபரை கண்டு கொள்ளவில்லை. ஆனால், ஒரு மனிதன் துடிப்பதை பொறுக்காமல் முதல்வரே காரில் இருந்து இறங்கி வந்து அவரை ஆசுவாசப்படுத்தியதுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்த ...மனிதநேயத்தை நேரில் பார்த்த ஆயிரக் கணக்கானோர் வியந்தனர்...... Thanks wa..
வானத்தை போல பரந்துவிரிந்தது எது? கடலைப்போல ஆழமானது எது? எம்.ஜி.ஆர். மீது மக்களுக்கு இருக்கும் அன்பு என்பதுதான் சரியான பதிலாக இருக்கும். ஆமாம் காலங்கள் கடந்தாலும் இன்று கூட கடவுளாக மதிக்க படுபவர் ஆவார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். நடிகராக நடைபோட தொடங்கிய அவரது பயணம், நல்ல சிந்தனைகளாலும், நல்ல செயல்களாலும், அவரை நாடாளும் தலைவர் நிலைக்கு கொண்டு சென்றது. இது அந்த கருணை உள்ளத்திற்கு காலம் இட்ட கட்டளை. சினிமாவில் சேர்ந்து புகழ் ஏணியில் ஏறி தங்கள் வசதிகளை சேர்த்து/பெருக்கி கொண்டோர் பலர். ஆனால் எம்.ஜி.ஆர். புகழ் ஏணியில் ஏறவில்லை, மக்களால் புகழ் ஏணியின் உச்சத்திற்கு ஏற்ற பட்டார். மக்கள் ஆதரவு அவருக்கு மமதையை தந்ததில்லை. மாறாக அவருக்கு மக்கள் மீது மாறாத பற்றை வளர்த்தது. திரையிலே பார்த்து ரசித்து விட்டு, திரை அரங்கை விட்டு வெளியே வந்தபிறகு மறந்துவிட அவர் வெறும் நடிகர் அல்ல. நாடு போற்றும் நல்லவர். கடைசங்கம் கண்ட ஏழு வள்ளல்களோடு, கருணை உள்ளம் கொண்ட எட்டாவது வள்ளல் எம்.ஜி.ஆர். இந்த வள்ளலின் வாழ்க்கை அவர் நடித்த திரை படங்களோடு பின்னிபிணைந்து இருந்தது. ஆகவேதான் மக்கள் அவரை எங்க வீட்டு பிள்ளை, ஏழைகளின் காவலன், அவர்களுக்கு கலங்கரை விளக்கமாக இருந்தார். திரை உலகின் முடிசூடா மன்னனாக, தனிபிறவியாக விளங்கினார் நம் மக்கள் திலகம் வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்
கடமை இருந்தால் வீரன் ஆகலாம்
பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்
மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்
இந்த பாடலுக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார் இந்த ஏழைபங்காளன். தான் கடந்து வந்த பாதையை மறந்து விடாமல், தான் நடந்து வந்த பாதையில் மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்ற நினைவோடு மனம் தளராமல் நடைபோட்டார் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். தான் உயிராய் மதித்த நடிப்பு தொழிலை விட்டு விட்டாலும், தனக்கு நல்வாழ்வு தந்த சமுதாயத்துக்கு சேவை செய்ய அரசியலை பற்றுகோடாக கொண்டு, அந்த புரட்சிநடிகரின் பாதை மக்களின் நலனுக்காகவே பயன் பட்டது.
எடுத்து கெடுக்கும் கரங்களின் மத்தியிலே, கொடுத்து சிவந்த கரங்களுக்கு சொந்தகாரர் மக்கள் திலகம் -வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். என்ற மகத்தான மனிதருக்கு சமுக அக்கறை இருந்தது. மற்றவர்க்கு உதவும் குணம், கொடைத்தன்மை இருந்தது. ஆகவேதான் சமுதாய நலனை பாடல்கள் வாயிலாகவும், நல்ல எண்ணங்களை வசனங்கள் மூலமாகவும், தன் படங்களில் காட்சிகள் மூலமாகவும், விளக்கி வந்தார். அந்த வாரிதந்த பாரிவள்ளலை, மக்கள் இன்னமும் தங்களின் எங்க வீட்டு பிள்ளை என்று கொண்டாடி வருவது இயற்கையே.
மரணத்தையே மண்டியிட செய்த மாமனிதர். எமனின் பாச கையிற்றைகூட மக்களின் பாசத்தால் அறுத்தெறிந்த மனிதபுனிதர். இந்த இதய வேந்தனை, ஏற்றமிகு புனிதரை மக்கள் இன்னமும் தங்கள் மனங்களிலே கோட்டைகட்டி குடி வைத்திருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவரின் புகழுக்கு எதை ஒப்பிடுவது - இமயமலையா? அண்டமா? அகிலமா? ஆதவனா? அல்லாவின் கருணையா? கிறிஸ்துவின் கிருபையா? கிருஷ்ணனின் கீதையா?
காலத்தை வென்ற காவிய நாயகன்.
வங்ககடலோரம் தங்கமகன் உறங்குகிறார். அவர் படைத்தது சாதனையா? சரித்திரமா? இல்லை இல்லை என்றும் வாழும் சகாப்தம்..... Thanks wa.,
1980ல் நடந்த பாராளுமன்றத்தேர்தலில் எம்.ஜி.ஆர் இரண்டே தொகுதிகளை மட்டும் கைப்பற்றும்படியாகிவிட்டது. வெற்றியை மட்டுமே அதுவரை பார்த்து வந்த எம்.ஜி.ஆருக்கு தமிழகத்தில் சிவகாசி,கோபிசெட்டிப்பாளையம் ஆகிய இரண்டே தொகுதிகளே கிடைத்தது.பெரும் சரிவு!
உடனே தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சி கலைக்கப்பட்டு விட்டது. அந்த நேரத்தில் ஒரு முக்கியத்திருமணம் நடந்தது. அந்தத்திருமணத்திற்கு எம்.ஜி.ஆர் வருகிறார்.மெல்லிசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கச்சேரியைப்பார்க்க உட்கார்கிறார்.மேடையில் ரமணி பாடகர்.
எம்.ஜி.ஆர் பாணியில் ஆக்சனுடன் பாடியிருக்கிறார்.
’என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே! இருட்டினில் நீதி மறையட்டுமே!தன்னாலே வெளிவரும் தயங்காதே! ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே!’
ரமணி கைகளை ஆட்டி பாடியதைப்பார்த்து எம்.ஜி.ஆர் புன்சிரிப்போடு ரசித்திருக்கிறார்.
‘அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவ சிரிப்பு
இங்கே நீ சிரிக்கும் புன்சிரிப்போ ஆனந்த சிரிப்பு
நல்ல தீர்ப்பை உலகம் சொல்லும் நாள் வரும்போது
அங்கே சிரிப்பது யார் அழுவது யார் தெரியும் அப்போது!
நான் ஒரு கை பார்க்கிறேன். நேரம் வரும் கேட்கிறேன்.
பூனையல்ல புலி தான் என போகப்போக காட்டுகிறேன்
போகப்போக காட்டுகிறேன்!’
சரம் சரமாக எம்.ஜி.ஆர் பாடல்களை அவர் முன்னேயே ரமணி பாடியிருக்கிறார்.
எம்.ஜி,ஆர் மேடையேறி
‘’ என்னுடைய ஆட்சி கலைக்கப்பட்ட நிலையில் நான்
மன அமைதியை இழந்திருந்தேன். இன்று ரமணி என் படப்பாடல்களைப் பாடி என்னை ச்ந்தோசப்படுத்தி விட்டார்! எனக்கு ரொம்ப ஆறுதலாயிருந்தது.அவருக்கு என் வாட்சை அன்பளிப்பாக தருகிறேன்.” என்று கையில் கட்டியிருந்த ரோலக்ஸ் வாட்சை க் கழட்டி விஜய் ரமணிக்கு கொடுத்து விட்டார்!
இப்படி எம்.ஜி.ஆர் எத்தனையோ பேருக்கு வாட்சைக்கழட்டிக்கொடுத்திருக்கிறார்..... Thanks wa., Groups...
1967 ம் ஆண்டு பெற்றதால் பிள்ளையா படத்தின் வெற்றி விழா சென்னையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது. படத்தில் நடித்த அனைத்து நடிகர் நடிகைகள் கலந்துக்கொண்டனர்.மக்கள் கூட்டம் அலைமோதியது மேடையில் பேசிய. அனைவரும் படத்தின் பாடல்கள் .கதை. நடிப்பு . காட்சி .போன்றவற்றை குறித்து பேசினர் புரட்சித்தலைவரின் நடிப்பும் பாரட்டி பேசினர் பேரறிஞர் அண்ணா அவர்களும் தனது உரையில் புரட்த்தலைவரைப் புகழ்ந்து பேசினார் கடைசியாக நமது தெய்வம் பேச வேண்டியது மேடையில் வந்து நின்றதும் கைத்தட்டல் அடங்க சில நிமிடங்கள் ஆனது புரட்சித்தலைவர் பேசினார். இங்கு அனைவரும் படத்தின் பெருமையைப் பற்றி பேசினார்கள் ஆனால் யாரும் படத்தின் தலைப்புக்கு சரியான உதாரணம் கூறவில்லை.
பெற்றால்தான் பிள்ளையா என்றால் மனிதர்கள் மட்டும் அல்ல அனைத்து உயிரினம் நமது பிள்ளைகள்தான் உதாரணம் வேப்பம்பிள்ளை. கருவேப்பிள்ளை தென்னம்பிள்ளை வாழைப்பிள்ளை கிளிப்பிள்ளை கீரிப்பிள்ளை அணீப்பிள்ளை இவையெல்லாம் கூட. நமது பிள்ளைகள்தான்
உங்கள் வீட்டில் ஆண்பிள்ளை பெண்பிள்ளை இல்லையென்று யாரும் வருத்தப்பட.வேண்டாம் ஒவ்வொரும் அவரவர் வீட்டிலே தென்னப்பிள்ளை வாழைப்பிள்ளை வளர்த்தாலே போதும் அவைகள்தான் உங்கள் பிள்ளைகள் ஆகும
தென்னப்பிள்ளை ஆண்பிள்ளை போன்றது அது தானாக வளர்ந்து விடும் அதுப்போல் ஆண்மகன் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் பண்பைக் வளர்த்துக்கொள்ளனும் தென்னப்பிள்ளை எப்படி தன்னையே பிறர்க்காக அர்ப்பணிக்கிறது அதுப்போல் ஒவ்வொரு ஆண்மகனும் நாட்டுக்காகவும் குடும்பத்துக்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும்
வாழைப்பிள்ளை பெண் பிள்ளைப்போன்றது வாழைமரம் எப்படி முறையாக. மண்வளம் கொண்டு வேலி அமைத்து அளவான தண்ணீர் ஊற்றி கவனமாக பராமரித்து வளர்க்கிறோம் அதுப்போல் பெண்பிள்ளைகள் பெண்தெய்வம் போன்றது தெய்வத்துக்கு தரவேண்டிய அனைத்து மதிப்பும் மரியாதையும் பக்தியும் பெண்பிள்ளைகளுக்கு தரவேண்டும்.
வாழையடி வாழையாக வரும் தலைமுறையே வாழைப்பிள்ளை என்கிறோம்
அதுப்போல் பெண்பிள்ளைகள் நமது தலைமுறை காக்க வந்த வாழையடி வாழையாக வருகிறவர்கள்.
அதனால் ஒவ்வொரும் அவரவர் வீட்டீலே வாழைமரம் தென்னைமரம் வைத்து அவைகளையும் தன்பிள்ளைப்போல் வளர்க்கவேண்டும்
அது நமக்கும் நல்லது நமது தலைமுறைக்கும் நன்மை தரும் என்றார் புரட்சித்தலைவரின் பேச்சின் கருத்தைக்கேட்டதும் அண்ணா முதல் நடிகர் நடிகைகள் மக்கள் அனைவரும் வியர்ந்துபோய் கைத்தட்டல் அடங்க. வெகுநேரம் ஆனது............ Thanks fb., Groups..........
கடந்த சனியன்று (2/2/19) சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடைபெற்ற
இன்னிசை நிகழ்ச்சி பற்றிய புகைப்படங்கள் தொகுப்பு .
http://i65.tinypic.com/2133f4n.jpg
தமிழக அரசியல் வார இதழ் -6/2/19
http://i68.tinypic.com/28ktrbk.jpg
http://i63.tinypic.com/x5droj.jpg