Originally Posted by pammalar
நூற்றுக்கு நூறு உண்மை. இந்த மேதாவிகள் (கடிவாளம் கட்டிய குதிரைகள்) இயற்கை நடிப்பை ரசிக்கும் அதிமேதாவிகளாயிற்றே! நடிப்பு என்றாலே செயற்கை தான் என்பதையும் அறியாத அதிஅதிமேதாவிகள் இவர்கள்!
இந்த மேதாவிக் குதிரைகள், முதல் மரியாதை, படிக்காதவன், தேவர் மகன், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன், பாசமலர், பராசக்தி, திருவிளையாடல், தில்லானா மோகனாம்பாள் போன்ற ஒரு குறிப்பிட்ட 10 படங்களைப் பற்றி மட்டுமே பேசுவர். பற்பல படங்கள் / எண்ணிலடங்கா படங்கள் தெரியவே தெரியாது. பாவம், அப்பேர்ப்பட்ட கடிவாளம்!
வருத்தத்துடன்,
பம்மலார்.