Saradha Mdm
Thanks for the listing but my comment was about NT's acting prowess in SM . Nothing extrordinary . The movie glitters due to other factors . This is my point. Tks.
Printable View
Saradha Mdm
Thanks for the listing but my comment was about NT's acting prowess in SM . Nothing extrordinary . The movie glitters due to other factors . This is my point. Tks.
Dictionary of Nadigar Thilagam's acting from critics:
" nothing extraordinary" - if the story needs subdued subtle performance which NT provides.
"over-o-over acting" - if the story needs dramatisation and extra efforts for the portrayal of characters in true colours which NT provides.
I think a separate dictionary of acting of Nadigar Thilagam be prepared so that the critics may use of it at their wish and will and to their satisfaction.
Raghavendran
நன்றி ராகவேந்தர் அண்ணா, முரளியண்ணா மற்றும் பம்மலார்....
Sorry Irene-ji........Quote:
Originally Posted by Irene Hastings
இப்போதும் கூட தங்களின் கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த படத்துக்கு, அந்த திரைக்கதையமைப்புக்கு என்ன அதிகப்படியான நடிப்பைத் தர முடியுமோ அதைக் குறைவில்லாமல் தந்திருந்தார்.
1) ஜூரிச் விமான நிலையத்தில், காஞ்சனாதான் இளவரசி என்று தெரிந்துகொள்ளும்போது காட்டும் அதிர்ச்சி.
2) விமான விபத்தில் தப்பிப்பிழைத்து, தன் வீட்டுக்குக்கூட நேராகப்போகாமல் நண்பனைச்சந்திக்கும்போது அடையும் ஆனந்தத்தின் உணர்ச்சி வெளிப்பாடு. (இப்படம் முத்துராமனின் கிரீடத்தில் ஒரு வைரம்).
3) செத்துப்போய்விட்டதாக நினைத்து மகனுக்கு பூஜை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென தாய் தந்தை முன் தோன்றி, அவர்களை அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தும் தருணம். அந்த இடத்தில் நடிகர்திலகம் நடிக்கிறார் என்று யாராவது சொல்ல முடியுமா?. நிஜமாகவே உயிர் தப்பிவந்த ஒருவரைப்போல எத்தனை உணர்வுகள் கலந்த வெளிப்பாடு. அதற்கு முற்றிலும் ஈடு கொடுத்து சாந்தகுமாரி, மற்றும் ரங்காராவிடம் இருந்து வெளிப்படும் அபார நடிப்புத்திறன்.
4) போராட்டத்தில் பலியான நண்பனையும், அந்த அதிர்ச்சியில் இறந்த அவன் தாயையும் மயானத்தில் எரித்து விட்டு, ரத்தக்கறையுடன் ஆக்ரோஷமாக தன் மாளிகையில் நுழைந்து, தன் தாயுடனும் அந்நேரம் அங்கு வரும் சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியான தந்தையுடனும் பேசும்போது காட்டும் ஆக்ரோஷம், இறுதியில் அடிக்கும் அந்த அட்டகாசமான சல்யூட் (இந்தக்காட்சிக்கு பெரிய பெருமை.... மக்கள்திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள்கூட பலமாகக் கைதட்டிவிட்டு சொன்ன வார்த்தை 'இதுக்கெல்லாம் கணேசன்தான்யா'). வீராவேசத்திடன் செல்லும் மகனைப்பார்த்து, புன்னகைத்துக்கொண்டே ரங்காராவ் சொல்லும் பதில் "உன் மகன் முட்டாள் இல்லை, புத்திசாலி".
5) எலிகாப்டரை சுட்டு வீழ்த்திவிட்டு, அந்த மலையுச்சியில் நின்று நண்பர்களுக்கு எழுச்சிமிக்க 'அன்று சிந்திய ரத்தம்' பேருரை ஆற்றும்போது, முகத்தில் தோன்றும் ரௌத்ரம். (இதெல்லாம் வேறு யாராவது செய்யமுடியும் என்று நினைக்கிறீர்களா?).
6) தான் வீட்டுக்கு வந்திருப்பது திவான் நம்பியாருக்குத் தெரிந்துபோய், தன்னைக்கைது செய்யும் இக்கட்டான நிலையில் தந்தையைத் தள்ள, கணவரின் பெருமைகாக்க தன் தாயைக்கொண்டே தன்னைக்கைது செய்ய வைக்கும்போது காட்டும் கண்டிப்பு கலந்த பெருமிதம்.
7) ரயிலுக்கு குண்டுவைக்கும் முயற்சியை தன் மனைவியே செயலிக்கச்செய்துவிட்டாள் என்று தெரியும்போது முகத்தில் எழும் ஆதங்கம், அதை தன் சக புரட்சிக்காரர்களுக்குச் சொல்லும்போது முகத்தில் தோன்றும் ஏமாற்றம் கலந்த இயலாமை. (சில வினாடிகளுக்குள் எத்தனை உணர்ச்சிகள்தான் அந்த முகத்தில் தோன்றி மறையும்..!!!!). (இதுபோக நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட, நாட்டிய மேடை ஒத்திகையின்போது காட்டும் யதார்த்தம்).
ஸாரி.... 'சிவந்த மண்' படத்தைப்பற்றியும் அதில் நடிகர்திலகத்தின் நடிப்பைப்பற்றியும் எழுதத்துவங்கிவிட்டால் நிறுத்தாமல் எழுதிக்கொண்டே இருப்பேன். அந்த அளவுக்கு காட்சியமைப்புக்களில் மட்டுமல்ல, நவரசமும் கலந்த நடிப்புப் புதையலிலும் அபாரமான படம்.
சாரதா மேடம்
உங்களின் குறிப்பிட்ட காட்சிகள் அப்படி ஒன்றும் வியத்தகு வண்ணம் அவர் செய்யவில்லை. என்னுடைய நடிகர் திலகம் வேறு !
உதாரணத்திற்கு முதல் மரியாதை. :notworthy:
முற்றிலும் உண்மை. திரு. Irene Hastings அவர்களது புதிய பதிவு உங்களது கருத்தை உறுதி செய்கிறது.Quote:
Originally Posted by RAGHAVENDRA
அதாவது வெறுமனே வருவது, உட்காருவது, நிற்பது, போவது.... மொத்தத்தில் மேற்கொண்டு எதுவும் செய்யாமல் இருப்பது. (Is it Extraordinary...?. அறுபதுகளிலும் எழுபதுகளிலும் இதைப்பண்ணியிருந்தாரானால் பத்தோடு பதினொன்றாக ஆகியிருப்பார்)Quote:
Originally Posted by Irene Hastings
உங்கள் டேஸ்ட் உங்களுக்கு. அதைக்குற்றம் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை....
எல்லோருக்கும் ஒரே மாதிரி டேஸ்ட் அமைந்துவிட்டால் நாடு முழுக்க ஒன்று 'ஆரியபவன்'களாகவோ அல்லது 'முனியாண்டி விலாஸ்'களாகவோ தான் இருக்கும்.
தனிப்பட்ட முறையில் என்னைப்பொறுத்தவரை முதல் மரியாதை, தேவர்மகன், படிக்காதவன், படையப்பா போன்ற்வற்றை நடிகர்திலகத்தின் வெற்றிப்படங்களில் சேர்ப்பதில்லை. ஏனென்றால் அவை அவருடைய படங்கள் அல்ல. வேறு யாரோ எடுத்த/நடித்த படங்களில் அவ'ரும்' இருந்தார். அவ்வளவே. முதல் மரியாதையையும் இதில் சேர்த்திருப்பது பலருக்கு புருவத்தை உயர வைக்கலாம். ஸாரி, என்னைப்பொறுத்தவரை அது பாரதிராஜா படம். அதில் இவர் வந்து போனார்.
சாரதா மேடம்
எனக்கு பிடித்த ஒரு பாத்திரம் எங்க ஊரு ராஜா வில் வரும் ஜமீந்தார் வேடம் ! அதுவும் வயதான பின்பு அவர் காட்டும் நடிப்பு !
படம் முழுவதும் அவர் ஆக்ரமிப்பார் ( இரட்டை வேடமாக இருந்தாலும் )
படம் பார்த்த பின் நமக்கு நடிகர் திலகம் தான் மனதில் ஓடும்
அப்படி ஒரு தாக்கம் சிவந்தமண் ணில் எனக்கு ஏற்படவில்லை.
மன்னிக்கவும்.
Irene...ji,Quote:
Originally Posted by Irene Hastings
இந்த வார்த்தை தேவையில்லை...
'முதல் மரியாதை' எனக்குப்பிடிக்கவில்லை என்பதற்காக உங்களிடம் மன்னிப்பா கேட்டேன்?. இல்லையே. அதுபோல 'சிவந்தமண்'ணில் அவர் நடிப்பு உங்களுக்கு பிடித்தேயாக வேண்டும் என்று யாரும் கட்டாயப்படுத்த முடியாது.
'முதல் மரியாதை' படத்தை முதலில் பார்த்தபோது அவ்வளவு நிறைவைத்தரவில்லை என்ற அளவில் மட்டும்தான் இருந்தது. ஆனால், தனது ஏழு வயதில் நடிக்க ஆரம்பித்து, நவரச நடிப்பால் உலகப்புகழ் அடைந்துவிட்ட ஒரு கலைஞனுக்கு, 1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே அந்தப்படம் எனக்கு சுத்தமாக பிடிக்காமல் போய்விட்டது. இதற்காக என் ரசனையை யாரும் குறை சொன்னாலும் அதுபற்றிக் கவலையில்லை
மேடம்,Quote:
1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே
இதை நான் கேள்விபடவில்லை. எனக்கு முதல்மரியாதை ஏன் பிடித்ததென்றால் அவரால் வசனம் பேசாமலும் தன் திறமையை காண்பிப்பார் என்று நிரூபித்ததற்கு !
ஒரு இமயத்துடன் இணைவதில் பெருமைபடுகிறோம் என்று தான் படத்தின் ஆரம்பத்தில் வரும் :D
முதல் மரியாதை பொறுத்த வரையில் யானை பசிக்கு சோள பொறி தான்
Quote:
1986-ல் ஒரு இயக்குனர் யதார்த்த நடிப்பைச்சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்ததாக மற்றவர்கள் சொல்லிச் சொல்லியே
Bharathiraja and teaching "yadaartha" nadippu? :roll:
Bharathiraja nadipu solli kuduthu nadikkaravanga will be like Pudhumai peN Revathy. nalla nadigar/nadigaigaLaiyE caricatural nadippAga mAtrubavar Bharatiraja. idhula ivar Sivajikku nadippu solli koduthArAmAmA? nallA irukku koothu.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 93
கே: எது ஓவர் ஆக்டிங்? (மதுரை முருகேசன், திருச்சி)
ப: அந்தக் கவிஞரின் வீட்டுக்கு ஊரிலிருந்து சில உறவினர்கள் வந்திருந்தனர். கவிஞரின் இல்லத்தரசி அவர்களை 'வாங்க' என்று அழைத்தாராம். அவர்களோ 'வரவேற்பு சரியில்லை' என்று புகார் செய்தார்களாம். 'வாங்க! வாங்க! வாங்க!' எனத் தங்களைக் கூப்பிடவில்லையே என்பது அவர்களுடைய ஆதங்கம். பின்னர் கவிஞர் அவர்களை சமாதானப்படுத்தினாராம். இதை ஒரு மேடையில் தெரிவித்த அந்தக் கவிஞர்,"சிவாஜியின் நடிப்பை மிகை என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் அவர் நமது மக்களைப் பற்றி நன்றாக எடை போட்டு வைத்திருந்ததனால் தான் சற்று அதிகப்படியாகவே கொடுத்தார். அது மூன்று முறை, "வாங்க! வாங்க! வாங்க!'ன்னு சொல்வது மாதிரி தான். இங்கே அது தேவைப்படுகிறதே!" என்று சொல்லி, பார்வையாளர்களின் ஏகோபித்த கரகோஷத்தைப் பெற்றார். இதில் உங்கள் கேள்விக்கான பதில் அடங்கியுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள கவிஞர், வராக நதிக்கரையோரம் வளர்ந்த கறுப்பு வைரம்.
(ஆதாரம் : சினிமா எக்ஸ்பிரஸ், 16-31 ஜனவரி 2006)
அன்புடன்,
பம்மலார்.
நமது ரசிகர்களுக்கு, தயவு செய்து வாதப் பிரதிவாதங்கள் வேண்டாமே! அதுவும் திரியின் ஆறாம் பாகம் நிறைவுற்று ஏழாம் பாகம் ஆரம்பிக்கும் நேரத்தில்.
சாரதா,
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு மூன்று காட்சிகள் - ஒன்று முத்துராமனின் மறைவிற்கு பின் வீட்டிற்கு வந்து பேசும் காட்சி. அந்த காட்சியின் இறுதியில் எனக்கும் அந்த உணர்வுகள் இருக்கின்றன என்று சொல்லும் தந்தையிடம் வலது குதிங்காலை சற்றே உயர்த்தி நெஞ்சு விரித்து வலது கையை ஒரு நாட்டிய முத்திரை போல் இயக்கி "உணர்ச்சிகள் வார்த்தைகளில் அல்ல செயல்களில், செயல்களில் இருக்க வேண்டும் அப்பா" என்று உணர்வுபூர்வமாய் பேசும் நடிகர் திலகம்!
போஃனை எடுக்கும் சாந்தகுமாரியிடம் நம்பியார் "மிஸஸ் சந்திரசேகர், புரட்சிக்காரன் பாரத் உங்கள் வீட்டிற்கு வந்திருப்பதாக தகவல் வந்திருக்கிறது" [ஸ்ரீதரின் இயல்பான வசனங்கள்] என்று சொல்ல தந்தை தாய் மகன் மூவரின் முகத்திலே ஓடும் அந்த உணர்ச்சிப் போராட்டம்!
காஞ்சனாதான் ரயிலுக்கு வெடிகுண்டு வைத்ததை செயலிழுக்க செய்தவர் என்று தெரிந்ததும், கூட வந்தது யார் என்று எவ்வளவோ கேட்டும் அவர் பதில் சொல்லாமல் இருக்க அவரை அடித்து விட்டு கல்லில் உட்கார்ந்திருக்க, தவழ்ந்து தவழ்ந்து அவர் அருகில் வரும் காஞ்சனா, கூட வந்தது அவரது தாய் என்ற உண்மையை சொல்ல, சுற்றி நிற்கும் நண்பர்களிடம் வார்த்தை வராமல் "வசந்தி கூட வந்தது என் தாயாம்" என்று உணர்ச்சி பெருக்கில் தடுமாறுவாரே! ஆஹா!
நம்மை உசுப்பி விடுவது போல் ராகேஷ் வேறு "அரேபிய பாரத்" அவதார் போட்டிருக்கிறார். சிவந்த மண் சாந்தியில் வெளியிட்டே தீர வேண்டும்! நாம் பார்த்தே ஆக வேண்டும்!
அன்புடன்
சுவாமி,
கோபால் கோலோச்சிக் கொண்டிருக்கும் நேரத்தில் பாரத் உள்ளே நுழைந்து பெயர் தட்டிக் கொண்டு போவதற்கு sorry.
PlumQuote:
Originally Posted by Plum
We all know about BR's humility. No one has the capability to teach acting to Sivaji. Only thing is, others can make use of Sivaji's unbelievable talent. Kamal as foremost admirer of Sivaji, might have studied Sivaji's abilities and power more than anyone else. IMO Kamal has made the best use of Sivaji so far, even though it lasted for only for half of the movie. Sivaji's screen presence in Devar Magan lasted for may be half hour most, even then it was one of the most powerful performances I have seen on the screen. What would have happened if that kind of acting lasted for the whole movie. No one brings all kind of emotions so effortlessly other than Sivaji. He is indeed Saraswathiyin Selvan.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 94
கே: முக்தாவின் அடுத்த படத்தில் சிவாஜி நடிப்பதால் "நிறைகுடம்" வெற்றிப்படம் ஆகி விடுமா? (எஸ்.எஸ்.மணி, திருவனந்தபுரம்)
ப: "நிறைகுடம்" சம்பந்தப்பட்டவரை வசூலில் தயாரிப்பாளருக்கு வெற்றிப்படம் தான். ஒருவர் நடித்து வெற்றி பெற்றால் தான் அடுத்த படத்திலும் அவர் உண்டு என்பது என் வாதம் அல்லவே.
(ஆதாரம் : பேசும் படம், மே 1970)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 95
கே: நடிப்பில் சிவாஜியை மிஞ்சுவோர் வேறு யாரும் இல்லை என்பதில் யாருக்குப் பெருமை? (கெ.ரப்பதுல்லா, சென்னை - 3)
ப: இந்தியனுக்கு - குறிப்பாகத் தமிழனுக்கு!
(ஆதாரம் : பேசும் படம், டிசம்பர் 1970)
அன்புடன்,
பம்மலார்.
கேள்வி பிறந்தது! நல்ல பதில் கிடைத்தது! - 96
கே: சிவாஜி, 'ரசிகர்கள் மாநாடு' நடத்தப் போவது குறித்து? (லட்சுமி செங்குட்டுவன், வேலூர்)
ப: தமிழக இந்திரா காங்கிரஸ் கட்சியிலும் விறுவிறுப்பும், எழுச்சியும் ஏற்படக்கூடும் என்பதற்கு ஒரு சான்று. சிவாஜி போன்ற செல்வாக்குப் பெற்றவர்களைத் தலைவராக்கினால்தான் இ.காங்கிரஸ் மேலிடம் மட்டுமல்ல, கீழிடமும் மரியாதையைப் பெறக்கூடும்.
(ஆதாரம் : இதயம் பேசுகிறது, 26.2.1984)
அன்புடன்,
பம்மலார்.
:lol: Apt comparison of Barathiraja's actors would be Sudhagar, Raja, esetra, esetra.Quote:
Originally Posted by Plum
I think during the first day on the set, NT actually asked BR how he wanted him to act. BR was shocked, and said there is no need for that, and just told him the scenes. I don't see any difference in NT's approach in performance in this film or in Pattikada Pattanama or in Makkalai Petra Magarasi. I said approach, but NT made the differences through his performance. To say NT didn't do much here, but took extra effort there is nonsense. He was the same powerhouse from day one he stepped in front of the camera, right to the last time we saw him on big screen. Yaar yaar ettana voltage eduttangganu athu vera vishayam.
grouch, the point I made was that if an actor let himself/herself be guided by Bharathiraja, even a good actress like Revathy will descend into pudhumai peN level performances. Forget gone cases like Sudhakar, Raja. nalla nadigargaLE BR solli kuduthA romba pongiduvAnga!
okay, okay, got it thanks. :)
அன்பான ரசிகர்களுக்கு,
பாரதிராஜா பற்றி நான் துவக்கிய வாதத்துக்கு நானே முற்றுப்புள்ளி வைக்கிறேன். விவாதம் வேறு திசைக்குப் போகும் முன் இதோடு விட்டுவிடுங்கள் ப்ளீஸ்.
டியர் பம்மலார்,
உங்கள் 'கேள்வி பிறந்தது, நல்ல பதில் கிடைத்தது' பகுதியில் கேள்விகள் கேட்டிருக்கும் அன்பர்களின் பெயரகளைப்பார்க்கும்போது, பழைய நினைவுகள் எல்லாம் அலமோதுகின்றன. இணையதளங்கள் இல்லாத அன்றைய காலகட்டங்களில், வாரப்பத்திரிகைகளே கதி என்றிருந்த நாட்களில்.... 'வேலூர் லட்சுமி செங்குட்டுவன், பூதப்பாண்டி ராமலிங்கம், திருவனந்தபுரம் எஸ்.எஸ்.மணி' ஆகியோரின் கேள்விகள் இடம்பெறாத பத்திரிகைகளே இல்லையெனலாம். அதிலும் அண்ணன் எஸ்.எஸ்.மணி அவர்கள் மக்கள் திலகம் திரு எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர். அவர் நடிகர்திலகத்தைப்ப்ற்றி கேட்கும் கேள்விகளில் ஒரு மறைமுகமான கிண்டல், குசும்பு, நாசூக்கான நையாண்டிகள் இருக்கும். ஆனால் நல்ல மனிதர். அதுபோல பூதப்பாண்டி திரு ராமலிங்கம், பின்னாளில் ஒரு பத்திரிகையாளராக ஆனார். திரை நட்சத்திரங்களை சந்திக்கும் வாய்ப்புக்காகவே பத்திரிகைத்துறையில் நுழைந்ததாக ஒருமுறை சொல்லியிருந்தார். வேலூர் லட்சுமி செங்குட்டுவனின் பெயரை அடிக்கடி குமுதம் வார இதழ்களில் பார்த்திருக்கிறேன்.
இத்தனை கேள்வி பதில்களையும் சேகரித்து வைத்திருக்கும் உங்களைப்பார்க்க மிகவும் மலைப்பாக இருக்கிறது. உங்களை இன்னொரு கல்கி, இன்னொரு சாண்டில்யன் என்று சொன்னதுபோல இப்போது இன்னொரு 'பிலிம்நியூஸ் ஆனந்தன்' என்றும் சொல்லலாம்.
டியர் முரளி,
சிவந்தமண் காட்சிகள் பற்றி இன்னும் நாம் நிறைய பேச வேண்டியிருக்கிறது.
Since new thread starting, oru poll podalama? With the revisit on Sivantha Man, why not have a list of NT's action films? I for one, would love to vote for and discuss Tanggachuranggam (NT: Nan James Bond-am :lol2: )
Dear Friends & Fans of NT,
Gud morning to everybody. Im Shivram now based on Pune though born and brought up in chennai. Im 40 years old and an HARDCORE NADIGAR THILAGAM FAN from my childhood days. My first meeting with NT on screen was when my parents took me to Bharata Vilas in Tanjore when I was around 4 or 5years old. From that day onwards i became an avid fan of NT and the devotion had grown thousandfolds till now.
My first darshan of NT was during a shooting in Mylapore post office for the movie "Anandha Kaneeer" where he took a long walk from the post offfice tll its entrance for a shot. There was no dialogue and only the walk was hot by Director K. Vijayan. Myself and a group of friends cut the class at school and watched the shooting ( I studied in Santhome High School). I carried a photo of NT and got it autographed by him at the shooting spot. I still treasure that photograph having it framed. Noticing our school uniform, NT asked us if we had come with permission of school or otherwise. We said that we cut the class and came to see him.
He smiled and asked to us leave the place immediately and go back to school and avoid this practise in future. He stressed that studies should be the only priority for students and everything comes next.
We were overjoyed that day and felt on top of the world having seen & spoken to NT and also got his autograph ( That we were suspended for a day from school for cutting class is a different matter).
Times rolled by and then i used to frequent his party office (TMM)in South usman road just to have his darshan.
I am an avid reader of this forum and a fan of writings of Mr.Pammalar, Mr.Ragavendran, Mr.Murali Srinivas and Sharada madam.
I am happy and proud that we all breathe and live by NT's acting and this forum is a platform for all NT Bhaktargal to share thier views and experiences of our Acting GOD.
Hope I have not bored you all too much. Hence forth I shall take active participation in this forum.
regards
Shivram
சகோதரி சாரதா அவர்களின் கருத்துக்கள் முற்றிலும் சரியானவை. நாம் சிவந்த மண் திரைப்படத்தைப் பற்றி இன்னும் விரிவாக அலச வேண்டும்.
தாங்கள் சொன்னது போல் மேலும் பல சிவாஜி ரசிகர்கள் பத்திரிகைகளிலும் வானொலியிலும் இடம் பெறுவர். திருவல்லிக்கேணி சிவாஜி பாஸ்கர் 60களின் பிற்பகுதி மற்றும் 70களின் முற்பகுதியில் மிகவும் பிரபலமான ரசிகராவார். மற்றும் திருவல்லிக்கேணி சிவாஜி ராஜசேகரும் பின்னர் எழுதுவார். மற்றும் இளம் பிறை பாரூக் உள்ளிட்ட பலர் எழுதியுள்ளனர். சில சமயங்களில் அடியேனுக்கும் அந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. குறிப்பாக 1971ல் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப் பட்டபோது வானொலியில் இரவு 10.00 மணிக்கு விரும்பிக் கேட்டவை நிகழ்ச்சியில் நானும் என்னைப் போன்ற மற்ற ரசிகர்களும் கேட்டிருந்ததாக அறிவித்து சுமதி என் சுந்தரியில் இடம் பெற்ற கல்யாண சந்தையிலே பாடலை ஒலிபரப்பினார்கள். அவை யாவையும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன.
அண்மையில் ஒரு பழைய நண்பரைச் சந்தித்தேன். அவர் பாரகன் திரையரங்கில் புதிய பறவை வெளியீடு அன்றே அப்படத்தைப் பார்த்த்வர். கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளை இணைய தளங்களில் பார்த்து என்னிடம் தன் மகிச்சியைப் பகிர்ந்து கொண்டார். முன்னமே தெரிந்திருந்தால் தானும் அன்று கலந்து கொண்டிருக்கக் கூடும் என்று கூறினார். இனிமேல் முடிந்த வரை வந்த வாய்ப்பை விடப் போவதில்லை என்றார்.
இது போல் பல சிவாஜி ரசிகர்கள் தம்முடைய வயது, உடல் நிலை அனைத்தையும் கடந்து நடிகர் திலகத்தின் பால் இன்றும் பாசத்துடன் உள்ளனர்.
சிவந்த மண் வெளியான அன்றைக்கு சென்னை குளோப் திரையரங்கில், அந்தப் படத்தின் பெயரில் ரசிகர் மன்றம் துவங்கிய சைதை ராம்தாஸ் மற்றும் அவர்களின் மன்ற உறுப்பினர்கள் நடிகர் திலகத்தின் அழகிய சிறு படம் ஒன்றையும் சாக்லேட் ஒன்றையும் அனைவருக்கும் வழங்கினர். குளோப் திரையரங்கே கோலாகலமாக இருந்தது. 22 வாரங்கள் நன்றாக மக்கள் வரவேற்போடு வெற்றி நடை போட்ட படம் மேலும் மூன்று வாரங்கள் தொடர்ந்திருந்தால் வெள்ளி விழா கண்டிருக்கும்.
இப்படி பல நினைவுகள் அவ்வப்போது நிழலாடிக் கொண்டுள்ளன.
அன்புடன்
ராகவேந்திரன்
டியர் சிவராம்,
முதற்கண் தங்களுக்கு நமது அனாத்து நண்பர்கள் சார்பிலும் அன்பான வரவேற்பை தெரிவித்துக் கொள்கிறேன்.
தங்களுடைய முதற் பதிவே நடிகர் திலகத்தின் ரசிகர்களுடனான அறிமுகமாக பதிந்துள்ளது மிக்க மகிழ்ச்சி யளிக்கிறது. சிவாஜி ரசிகர் சிவராம் என்று சொல்லும் போதே தமிழின் பெருமை வியக்க வைக்கிறது. அதுவும் தாங்கள் தமிழக முன்னேற்ற முன்னணி அலுவலக்திற்கு வந்துள்ளதை நினைவு கூறும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எந்த அளவிற்கு தங்களுக்குள் நடிகர் திலகம் இடம் பெற்றுள்ளார் என்பதை அறிய முடிகிறது. எனக்கு முந்தைய தலைமுறையினர் அந்தக் காலத்தில் என் தலைமுறையைப் பார்த்து வியந்து பாராட்டுவர், நான் சொல்வது 60களின் மைய கால கட்டத்தில். அதே உணர்வை நான் இப்போது பெறுகிறேன். தங்களைப் போன்ற புதிய தலைமுறை, சொல்லப் போனால் தங்களுக்கும் அடுத்த தலைமுறையினர் இதே ஹப்பில் நடிகர் திலகத்தின் பால் தங்கள் அன்பை வெளிப்படுத்தி தாங்கள் எவ்வாறு சிவாஜி ரசிகர்களானோம் என்பதை எழுதியுள்ளனர், அப்படி புதிய தலைமுறைகளை ஈர்க்கும் வல்லமை நடிகர் திலகத்திற்கு உண்டு.
அது மட்டுமல்ல பலபுதிய பரிணாமங்களில் நடிகர் திலகத்தின் நடிப்புப் புலமை அலசப் படுவதும் இங்கே சிறப்பாகும். இந்த சமயத்தில் இந்த ஹப்பிற்கும் நமது நன்றிகள் உரித்தாகட்டும்.
தங்களுடைய பதிவுகளைப் படிக்க ஆவலுடன் காத்திருக்கிறோம். தங்களுடைய அனுபவங்கள், படங்களைப் பற்றிய கருத்துக்கள், பலவற்றையும் நம் அனைவருடனும் பகிரந்து கொள்ளுங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
Welcome, Shivram. That's a nice anecdote. I was touched by NT's concern about children and education. I am three years younger than you and am a latecomer when it comes to NTism (only in 90s I really started appreciating him), looking forward to more anecdotes and posts from you. :D
இன்றைக்கு நடிகர்திலகத்தின் ரசிகர்கள் இருக்கும் உணர்ச்சிமயமான சூழ்நிலையில், சிவந்த மண் திரையங்குகளில் திரையிடப்பட்டால், ரசிகர்களின் அலப்பறையில் மேற்சொன்ன காட்சியில் ஒரு வசனம் கூட கேட்க முடியாது என்பது திண்ணம். (அதற்கென்று தனியாக இன்னொரு நாள் பார்க்க வேண்டியிருக்கும்). அந்த அளவுக்கு இந்தக்காட்சியில் வார்த்தைக்கு வார்த்தை கைதட்டலும் விசிலும் பறக்கும். இக்காட்சிக்குத்தேவையான அவரது பாடி லாங்குவேஜ். குறிப்பாக கீழ்க்கண்ட வசனங்களின்போது....Quote:
Originally Posted by Murali Srinivas
"....... அதற்கு உங்கள் ஆட்சி கொடுத்த பரிசு உயிர்ப்பலி, ரத்தம்" இந்த இடத்தில் அவரது கையசைவு.
"......... திவானைக் கைது செய்து மக்கள் முன் நிறுத்த வேண்டும். அல்லது அந்தப்பதவியையும் அதற்கான உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு" (இந்த இடத்தில் அவர் கையசைவு) "திவானுக்கு எதிராக புரட்சிக்குரல் எழுப்ப வேண்டும்".
"பாராட்டு... வெறும் வார்த்தையில் இருந்தால் போதாது. செயலிலே காட்ட வேண்டும்" (நீங்கள் சொன்ன அந்த நாட்டிய முத்திரை).
"ஒரு தேச விரோதிக்கு உங்கள் சட்டம் பாதுகாப்பு தருகிறதென்றால், அந்தச்சட்டத்தை உடைத்தெறியவும் தயங்க மாட்டோம்" (இந்த இடத்தில் கையை உயர்த்தி இரண்டு சொடக்குப்போடுவார்)
"இல்லையம்மா... நான் இந்த சமஸ்தானத்தின் தலைமை போலீஸ் அதிகாரியிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்" (இந்தக் கட்டத்தில் அவர் கண்களில் தெரியும் தீர்க்கம்)
இறுதியாக தியேட்டரையே அதிர வைக்கும் அந்த சல்யூட்.
----------------------
'பாரத்'துக்கும் வசந்தி (என்கிற சித்திரலேகா) வுக்கும். எதிர்பாராவண்னம் திருமணம் நடந்துவிடும் அந்தச்சூழல் மிகவும் சுவையானது. ராணுவத்தின் துரத்தலுக்குத் தப்பி, ஒரு திருமண வீட்டில் தஞ்சம் புக, தேசப்பற்று மிக்க அம்மக்களால் நடிகர்திலகமும் காஞ்சனாவுமே திருமண தம்பதிகளாய் மாற்றப்பட,
மந்திரம் தெரியாமல் தடுமாறும் ஐயர் நாகேஷ்,
கண்ணடித்தவாறே டிரம்ப்பட் வாசிக்கும் (இயக்குனர்) விஜயன்,
ஸ்டைலாக தலையாட்டிக்கொண்டே பேண்ட் டிரம் வாசிக்கும் மாலி,
என அந்த சூழலே களை கட்டுகிறது.
('ஜெனரல் பிரதாப்' ஆக வருபவர், எம்.எஸ்.வி.யின் உதவியாளர் ஹென்றி டேனியலா...?)
இன்றைக்கு ஐந்து இயக்குனர்களை ஒரு படத்தில் நடிக்க வைத்திருப்பதாக பெருமைப்படும் முன், அன்றைக்கே மூன்று இயக்குனர்களை (ஜாவர் சீதாராமன், விஜயன், தாதாமிராஸி) தனது சிவந்த மண்ணில் நடிக்க வைத்த பெருமை ஸ்ரீதருக்கே. (இயக்குனர்கள் எல்லாம் படங்களில் தலைகாட்டாத காலம் அது).
வாருங்கள் சிவராம்....
உங்களைப்போன்ற நடிகர்திலகத்தின் அதி தீவிர ரசிகர்களின் வருகையால் இத்திரி பெருமை அடைகிறது. உங்களது முதற்பதிவே முத்தான, சத்தான பதிவாக அமைந்து களையூட்டியுள்ளது. நடிகர்திலகத்தின் நேரடி தரிசனம், அவரிடம் கையெழுத்துப்ப்பெற்றது, அப்போதே உங்கள் தலையெழுத்து நன்றாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் அட்வைஸ் பண்ணியது என எல்லாமே அற்புதம்.
உங்களிடம் நிறையப் புதையல்கள் இருப்பது தெரிகிறது. தொடர்ந்து பங்கு பெறுங்கள். உங்கள் திரையரங்க அனுபவங்களை அள்ளித்தெளியுங்கள். அனுபவிக்கக் காத்திருக்கிறோம்.
ஏழாம் பகுதி துவங்க இருக்கும் இவ்வேளையில் 'நடிகர்திலக ஜோதி'யில் கலந்துகொள்ள வந்திருக்கும் உங்கள் வரவு களையூட்டுகிறது.
வருக... வரைக.... வாழ்க... வளர்க...
வருக திரு.சிவராம் அவர்களே! த.மு.மு அலுவலகத்திற்கு அடிக்கடி வருகை புரிந்திருப்பதால் அங்கு In-charge ஆக இருந்த என்னை சந்தித்திருக்க வாய்ப்புண்டு. ஆனாலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு த்ங்களைபோன்ற ரசிக நண்பர்களை சந்திக்க வைத்த இந்தத் திரிக்கும், முன்னெடுத்துச் செல்லும் நண்பர்களுக்கும் எனது நன்றி.
Touching 100th page in Part-6 - என்னுடைய Active Participation இல்லை என்றாலும் நான் தொடர்ந்து இத்திரியை வாசிப்பவன் என்ற முறையில் பங்கேற்றுக்கொண்டிருக்கும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Dear Mr.Ragavendran/Saradha madam/Groucho
Many thanks for your welcome note. I would like to start with 2 songs of NT' 175th film "Avanthan Manithan". Wow, what a style and mannerism by NT in this movie!!!. Particularly the Singapore scenes......., I think Singapore had made itself proud by allowing NT to walk on its soil ( particularly the walk with a boquet in hand in the beginning of the song Oonjalukku Poochooti, will put even the dignitaries to shame). before that a 10 minute scene, where NT will chase Manjula in singapore with only the BGM is a class apart. Kudos to Mellisai Ma mannar for the BGM piece. No Music Director (past or present) can ever think of matching this BGM piece for a foreign location.
Just close your eyes and hear the BGM and you will feel like being in S'pore. Coming to the Song "Engiruntho oru kural vanthathu' NT just bowls us over with his small smiles, looks and mannerism. A typical rich business man with graceness written all over!! When VJ starts the song with a humming, the camera moves with NT's close up from right to left and NT with a curious look and short smile moves his eyes from right to left trying to find out where the humming comes from. God... what an expression and acting......
This movie is very close to my heart because after seeing this movie in my school days, i dreamt of working abroad, and by God's and NT's grace, I landed up in a Job at Singapore itself and was working there for 5 years (till 2008).
I am proud and thank god that I was born in NT 's era where i was able to see and enjoy such movies and acting.
Thanks
Shivram
Dear Mr.Chandrasekar
Thanks for your message. Yes, i remember you. I also have book written by you which has a collection of writings of personalities from different walks of life. If im not mistaken, there was also an office boy named Panguraj in that office... right?
My best wishes are always with you and for carrying out several good deeds thro NT samooga nala peravai.
Regards
Shivram
முரளி சார், சாரதா மேடம்...
காட்சிகளை நுணுக்கமாக விவரிப்பது மட்டும் இல்லாமல் வசனத்தைக் கூட எழுத்து பிசகாமல் எப்படி உங்களால் சொல்ல முடிகிறது என்ற வியப்பு எனக்குப் பல நாட்களாக இருக்கிறது. Just amazing... (படத்தின் DVDஐ ஓட விட்டு வசனத்தை எழுதுவதாக என்னை நானே தேற்றிக் கொள்கிறேன் :) :) ).
உங்களைப் போலவே தான் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவரும். சிவாஜி படங்களில் எந்த படத்திலிருந்தும் ஒரு துண்டு வசனத்தை சொன்னால் நொடிகளில் படத்தின் பெயரைச் சொல்லிவிடுவார்.
அவரிடம் வசனத்தை சொல்லி சோதிப்பது என்னுடைய வழக்கம். பல முறை அவரை சோதித்தும், ஒவ்வொரு முறையும் அவர் படத்தின் பெயரை- அவ்வளவாக ஓடாத, சாதரணப் படங்களின் பெயரைக் கூட - சரியாகச் சொன்னதால் வெறுத்துப் போன நான், MGR பட வசனம் எல்லாம் சொல்லி (சிவாஜி பட வசனம் தான் என்று சொல்லி) அவரை ஓரிரு நாட்கள் குழம்பி அலைய விட்டதும் உண்டு. ( நம்ம படத்தில இப்படி ஒரு டயலாக்கா??...! ).
இந்த திரியை பார்க்கும் வாய்ப்பில்லாத - இணைய தள பரிச்சயம் இல்லாத - அவருக்கு உங்கள் பதிவுகளை தெரிவித்தால் மிகவும் மகிழ்வார்.
Mahesh, andha vasanatha ellAm vechu konjam engaLayum test paNNungaLen!
Inge: http://forumhub.mayyam.com/hub/viewt...532&start=1365
Plum sir.. unable to get the link given from my PC .. some issue it seems. Posting few dialogues here.. You may transfer.Quote:
Originally Posted by Plum
1. "இப்பதான் கொழுப்பு கொஞ்..சம் இறங்கி இருக்கு"
2. " அந்த வாசனையத்தான் நான் நல்லா மோப்பம் பிடிப்பேனே"
3. " தூங்குறவன எழுப்பினா முழிக்காம என்ன பண்ணுவான்?"
Mahesh, Thank You.
I posted it there
Click here and see if this works
All 3 are same film or different?
(2) is padikkAdha mEdhai?
Yes Mr.Shivram you are right. Kindly send me a mail through my mail id. I will send you in details of Sivaji Samooganala Peravai & activities of that.
Thanks
Yes. The link works now. Tnx.Quote:
Originally Posted by Plum
All the 3 movies are different.
Padikkatha mEdhai is a wrong answer.
சென்னை தண்டையார்பேட்டையிலுள்ள பாரத் திரையரங்கில் நாளை 6.8.2010 வெள்ளி முதல் "புதிய பறவை" திரையிடப்படுகிறது.
திரைப்பட வரலாற்றில், பாரத் திரையரங்கிற்கு, வேறு எந்த திரையரங்கத்திற்கும் இல்லாத ஒரு மாபெரும் சிறப்பு உண்டு. நடிகர் திலகத்தின் முதல் திரைப்படமான "பராசக்தி" யும் முதல் வெளியீட்டில் (25.10.1952) 'பாரத்'தில் தான் வெளியானது. நடிகர் திலகத்தின் 288வது இறுதித் திரைப்படமான "பூப்பறிக்க வருகிறோம்" திரைப்படமும் முதல் வெளியீட்டில் (17.9.1999) 'பாரத்'தில் தான் வெளியானது. கலைப்பெருஞ்ஜோதியின் ஆதியையும், அந்தத்தையும் வெளியிட்ட 'பாரத்' அரங்கிற்கு இதைவிட வேறென்ன பெருமை வேண்டும்!
குறிப்பு:
"பராசக்தி" முதல் வெளியீட்டில், சென்னை (பாரகன், அசோக்) மற்றும் தென்னகமெங்கும் 17.10.1952 தீபாவளித் திருநாளன்று வெளியானது. சென்னை 'பாரத்'தில் மட்டும் 8 நாட்கள் கழித்து 25.10.1952 அன்று வெளியானது.
அன்புடன்,
பம்மலார்.
My heartiest & sincere thanks to everyone for completing 6th and entrying 7th.
Let all of us as usual spread NT's name & fame throughout.