AS PER UNMAI TAMIZHAN SEEMAN STATEMENT WE SAVE OUR SYMBOL OF TAMIL GREAT NADIGAR THILAGAM SIVAJI STATUE AT CHENNAI
C.Ramachandran
Printable View
Dear Ragavendran Sir
Great Salute for your 5000 Valuable Posting on this Thread.
You are Great Gift for All Sivaji Fans and we wish to see you 5 Crores Posing on this Thread.
Best wishes from
C.Ramachandran
Size=3]வணக்கம் ராகவேந்திரன் சார்
முதல்கண் 5000 பதிவை எட்டும் தங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
5000 வது பதிவை சுப்பரான பதிவாக இடுவதற்கு முயற்ச்சி செய்யுங்கள்
இங்கே பலர் அண்ணனின் பழைய சாதனைகளை பிரசுரிப்பதை
பெரிதாக கருதுவதாக தெரியவில்லை
தங்களிடம் அண்ணனின் பழைய சாதனை பொக்கிசங்கள்
இருக்கலாம் அவற்றை பதிவிட்டு அதுபற்றி அறியாத
புதியவர்கள் அறிந்து கொள்ள உதவும்படி கேட்டுக்கொள்கின்றேன்[/size]
5000 வது பதிவை இட போகும் ராகவேந்திரா சார் உங்களுக்கு வாழ்த்துக்கள். தலைவரின் ஆசிர்வாதம் என்றும் உமக்கு உண்டு.
நன்றி நெய்வேலி வாசுதேவன் சார் உங்கள் உதவிக்கு நன்றி, என் மனைவிக்கு சிவாஜி ரசிகர்களை பற்றி பெருமையாக சொல்லி கொண்டு இருக்கிறேன்.
5000 வது பதிவை காணும் மதிப்பிர்குரிய சிவாஜி தோட்ட்த்து பாரிஜாத மலர் ராகவேன்திரன் சார் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்
ச.ராமச்சன்திரன்
ராகவேந்திரன் சாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Vasu,
Your Serial of Sivajis' costumes is jewel to this thread. most imaginative and your hardwork is amazing. Your description and correlating with contemporary trend adds special flavour Kudos.
Today Thina thanthi
சிவாஜி கணேசன் சிலையை அகற்றக்கூடாது
சீமான் வலியுறுத்தல்
சென்னை, நவ.5-
சிவாஜி சிலையை அகற்றக்கூடாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
இடையூறு என்பது அர்த்தமற்றது
உலகத் தமிழர்களின் உள்ளங்களில் யதார்த்த இலக்கணமாக இன்றைக்கும் வாழ்ந்து வருபவர் சிவாஜி கணேசன். வீரமிகு கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் எனத்தேச விடுதலைக்கு வித்திட்ட பெருமகன்களை கண்முன்னே நிறுத்திய மாபெரும் கலைஞன் சிவாஜி.
வாழும் காலத்திலும் யாருக்கும் இடையூறாக இல்லாத அந்தக் கலைஞன் சிலையாக இருக்கும்போது இடையூறாக இருக்கிறார் என்பது எந்த விதத்திலும் அர்த்தமற்றது. இதுவரை இல்லாத இடையூறு இப்போது மட்டும் எப்படி வருகிறது. நடிப்பாலும் உரையாடல் உச்சரிப்பாலும் தமிழ் நெஞ்சங்களில் நீக்கமற நிறைந்திருக்கும் அந்த மாபெரும் கலைஞனின் சிலையால் எத்தகைய இடையூறு வந்தாலும், அதனை ஏற்கிற நிலையில்தான் ஒவ்வொரு தமிழர்களும் இருக்கிறார்கள்.
தமிழக அரசு நடவடிக்கை
சிவாஜி கணேசன் வாழ்ந்த காலத்தில் உரிய விருதுகளை கொடுத்து கவுரவிக்க தவறிவிட்டது இந்திய அரசு. செவாலியே விருது வென்று உலகமே திரும்பி பார்க்கும் கலைஞனாக பெருமை பெற்றபோதும், தாய் நாட்டு கலைஞனாக சிவாஜியை கவுரவிக்க தவறிவிட்ட நாம், இப்போதும் அவருடைய சிலைக்கு சிக்கலை உண்டாக்குவது நம்முடைய அடையாளத்தை நாமே சிதைப்பதற்கு சமமான கொடுமையாகும்.
தமிழ் கலாசாரத்தின் கம்பீர அடையாளமாக விளங்கும் சிவாஜி கணேசனின் சிலைக்கு எவ்வித சிக்கலும் ஏற்படாதபடி காக்க வேண்டியது தமிழக அரசின் கடமையாகும். சிவாஜியின் சிலையை அகற்றாமல் காப்பாற்றவும், அவருக்கான மணி மண்டபத்தை விரைவில் உருவாக்கவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிலைக்கு பங்கம் ஏற்படாத வகையில்
சிவாஜி சிலையால் போக்குவரத்துக்கோ, மக்களுக்கோ எவ்வித இடையூறும் இல்லை என்பதை தமிழக அரசின் சட்ட நிபுணர்களும், காவல்துறை அதிகாரிகளும் நீதிமன்றத்தில் தெளிவுபட எடுத்துச்சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சிவாஜி சிலைக்கு எவ்வித பங்கமும் ஏற்படாத வகையில் அரசின் நடவடிக்கை அமையும் என் நாம் தமிழர் கட்சி உறுதியாக நம்புகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.