திரையில் எம்ஜிஆர் கொள்கைகளை பாராட்டிய பாட்டாளி மக்கள் கட்சி
தமிழகத்தில் மதுவினால் ஏற்படும் தீமைகளை கருத்தில் கொண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கடந்த 14-8-2015 அன்று தமிழ் சினிமாவில் மதுவின் தாக்கம் என்பதான தலைப்பில் கலந்துரையாடல் ஒன்று நடந்தது இதில் கலந்து கொண்ட பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்குரைஞர் பிரிவு பாலு அவர்கள் தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் அவர்கள் குடிக்காமல் புகை பிடிக்காமல் நடித்தார் அவரது படங்கள் வெற்றிபெறவில்லையா? என உண்மை செய்தியை வலியுறுத்தி பேசினார் இதற்கு பதிலளித்த திரைப்பட தயாரிப்பாளர் கேஆர் எம்ஜிஆர் குடிக்காமல் நடித்தார் உண்மைதான் என்றாலும் குடிப்பவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்றார் குறுக்கிட்ட தொகுப்பாளர் ஹரி எம்ஜிஆர் திரையில் குடிக்காமல் மட்டும் நடிக்கவில்லை குடியின் தீமைகளை வெளிக்கொணர்ந்தும் நடித்துள்ளார் என்றார் உண்மைதான் ஒளிவிளக்கு என்ற திரைபடத்தில் தைரியமாகச் சொல்லி மனிதன் தானா என தொடங்கும் ஒற்றை பாடலில் குடியின் தீமைகளை மிக நேர்த்தியாக வெளிகாட்டி நடித்திருப்பார் இது குறித்து தொகுப்பாளர் நடிகர் மயில்சாமியிடம் கேட்டபோது தான் பிரான்ஸ், மலேசியா,சிங்கப்பூர்,போன்ற நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் அங்கு பத்து சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள் குடிப்பதாகவும் தமிழகத்தில் அறுபது சதவீதம் எம்ஜிஆர் ரசிகர்கள் குடிப்பதாகவும் கூறினார் தொடர்ந்த தொகுப்பாளர் ஹரி நீங்கள் கூறுவதுபோல் ஒருவேளை எம்ஜிஆர் திரையில் குடிப்பது போல் நடித்திருந்தால் இந்த அறுபது சதவிகிதம் நூறு சதவிகிதமாக அல்லவா சென்றிருக்கும் என்றார் நடிகர் மயில்சாமியின் இந்த கருத்து எம்ஜிஆர் எனும் உன்னத கலைஞர் எந்த நோக்கத்திற்காக எந்த இலட்சியத்திற்காக திரைப்படத்தை சமூக மேம்பாட்டிற்காக பயன்படுத்தினாரோ அந்த உயரிய புனித எண்ணத்தை கொச்சை படுத்துவதாகவே உள்ளது. நாம் முன்பே கூறியுள்ளவாறு திரை துறையில் நடிகர்கள் ஒரு தொழிலாக மட்டுமே அத் துறையை கையாண்ட சமயத்தில் எம்ஜிஆர் மட்டுமே அத் துறையின் வீரியத்தை பலத்தை உண்மை நிலையை குறிப்பாக மக்கள் அந்த துறையின் கொண்ட காதலை ஆர்வத்தை நன்கு உணர்ந்து திரைபடத்தை சமூக மேம்பாட்டிற்கு பயன்படுத்தி வெற்றிகண்டார் திரையில் தான் செய்த அத்தனை நற் செயல்களையும் தனது நிஜவாழ்வில் மேற்கொண்ட உத்தம கலைஞர் இந்தியாவில் எம்ஜிஆரை தவிர வேறு எவரும் இருக்க முடியாது சமூக மேம்பாட்டில் தனது ஆத்மார்த்தமான மக்கள்நல பணிகளை மேற்கொள்ளாது திரைப்படத்தில் மாத்திரம் எம்ஜிஆர் அவ்வாறு நடித்திருந்தால் அவருக்கு இத்தனை பெரிய செல்வாக்கு சேர்ந்திருக்காது என்பதை நடிகர் மயில்சாமியும் தயாரிப்பாளர் கே ஆரும் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் திரைப்பட நடிகர்களை மக்கள் தங்களின் அவதார புருஷர்களாகவே நம்பி திரையில் நடிகர்கள் செய்யும் செயல்களை தாங்களும் தங்கள் நிஜ வாழ்வில் மேற்கொள்ளக் கூடும் என்பதை தனது கவனத்தில் கொண்டவர் எம்ஜிஆர்.திரையில் தானும் குடிப்பதாகவோ அல்லது புகைப்பதாகவோ நடித்தால் தனது ரசிகர்களும் அந்த தவறுதலான செயல்களை மேற்கொண்டுவிடக் கூடும் என அவர் அச்சப்பட்டதால் அவர் குடிப்பதாகவோ புகைப்பதாகவோ நடிக்கவில்லை. குறிப்பாக நல்ல விஷயங்களை விட கெட்டவிஷயங்கள் மக்களின் மனதில் எளிதில் பதிந்து விடும் என்ற உளவியலை நன்றாக உணர்ந்தவர் எம்ஜிஆர் என்பதையும் மயில்சாமி கவனத்தில் கொள்ளவேண்டும் அப்படி தனது திரையுலக வாழ்விற்கும் அரசியல் பொது வாழ்விற்கும் இடைவெளியில்லாது இறுதிவரை தன்னுடைய வாழ்க்கை உன்னதமாக அமைத்துக் கொண்டவர் எம்ஜிஆர். அதனால் தான் மக்கள் அவரை ஏற்றுக் கொண்டு முதல்வர் இருக்கையில் இறுதிவரை அமர்த்தி தொடர் வெற்றிகளை கொடுத்தனர் அன்று முதல் தொடங்கி இன்று வரை மற்ற நடிகர்கள் முதல்வராக வருவதற்கு ஆசைபட்டும் மக்கள் அவர்களை ஏற்றுக் கொள்ளாது நிராகரித்தனர் என்றால் அவர்களது திரையுலக வாழ்விலும் தொடர்ந்து நிஜ வாழ்விலும் உண்மை தன்மை இல்லாததேயாகும் பெரும்பாலான எம்ஜிஆர் ரசிகர்கள் திரையில் அவர் செய்துள்ள நல்லபல செயல்களை தங்கள் கவனத்தில் கொண்டு தங்களை மேம்படுத்தியுள்ளனர் என்பதே நிஜம்.ஒருவேளை குடிப்பவர் ஒருவர் எம்ஜிஆர் ரசிகராக இருப்பாரேயானால் அவரிடம் நீ ஒரு எம்ஜிஆர் ரசிகராக இருந்துகொண்டு குடிக்கிறாயே வெட்கமாக இல்லையா?என்று கேட்டால் அவர் கூனி குறுகி வெட்கி தலைகுனிவார் என்பதே நிஜம்.திரையில் புகை,குடி ,போன்ற தீய பழக்கங்களை எம்ஜிஆர் ஏற்றுக் கொண்டு நடிக்காததால் புகைத்து வரும் ஒருவர் எம்ஜிஆர் போஸ்டர்களை பார்த்த மாத்திரத்தில் தங்களையும் மறந்து புகையை மறைத்த சம்பவங்கள் எல்லாம் தமிழகத்தில் நடந்தேறியுள்ளது எதிர்கால சமுகம் பாழ் பட்டுபோய் விடக்கூடாது என்பதை அன்றே கவனத்தில் கொண்டு தீர்க்கதரிசனமாக எம்ஜிஆர் திரையில் நடந்துகொண்ட விதத்தை பாராட்டவில்லைஎன்றாலும் குறைந்தபட்சம் கொச்சை படுத்தாமல் இருக்கலாம் அல்லவா? இந்த விவாதத்தில் கலந்து கொண்ட நடிகர் மயில்சாமியும் தயாரிப்பாளர் கோதண்டராமனும் திரையில் இன்று குடி,மற்றும் புகைக்கும் விதத்தை எவ்வாறெல்லாம் காண்பித்து சமுகத்தை சீரழித்து வருகிறார்கள் என்பதை நன்கு அறிந்தும் மனசாட்சியை கழற்றி வைத்துவிட்டு திரைத்துறைக்கு ஆதரவாக பேசுவது இந்த சமுகத்திற்கு செய்யும் சீர்கேடு என்பதை நன்கு உணர்ந்து கொள்ளவேண்டும்
திரையில் சமுக மற்றும் மக்கள்நலன் சார்ந்த எம்ஜிஆரின் கொள்கையை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்று பேசியது மிகவும் பாராட்டத் தக்கது.எனவே இனியாவது திரைத் துறையினர் தங்களது மூத்த கலைஞர் எம்ஜிஆர் பலம் பொருந்திய அத் துறையை எவ்வாறு புகை,குடி இல்லாதவாறு நடித்து தன்னால் ஆன பங்களிப்பை இந்த சமூகத்திற்கு எப்படி நல்கினாரோ அதே போன்று மற்ற கலைஞர்களையும் அவ்வாறு நடிப்பதற்கு உக்குவித்து தங்களுக்கும் இந்த சமுகத்தின் மீது உள்ள அக்கறையை தெளிவு படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும் என்பதே நமது தாழ்மையான கருத்து
http://i62.tinypic.com/sw4f15.jpg
அன்பன் --கேபிஆர்.கோவிந்தராஜ்
www.mgrandkpr.blogspot.com