Originally Posted by
g94127302
திரியின் அனைத்து நண்பர்களுக்கும் வந்தனம் & ஒரு வேண்டுகோளும் கூட : பல சுறாவளி புயல்களை தாண்டி , பல சொல்ல முடியாத இன்னல்களையும் தாண்டி , இந்த திரி இன்று முடிவடையும் தருவாயில் உள்ளது - கூடியவிரைவில் புதிய பாகத்தில் சந்திக்க இருக்கிறோம் - சிலரை இழந்தோம் , சிலரை புதியதாக பெற்றோம் - சிலரை மீண்டும் பெற்றோம் - ஆனால் மனதளவில் NT யை பிடிக்காதவர்களே இந்த உலகில் இருக்க முடியாது - இந்த திரிக்கு வராவிட்டாலும் அவர்கள் மனது ரங்கனை போல ஒரு ஈகோ இல்லாத ஒன்று - NT யின் என்றுமே விசுவாசிகள் - அவர்களும் வரவேண்டும் என்று முயற்சி எடுத்துகொள்வோம் - அதே சமயத்தில் இங்கு பதிவுகள் போடுபவர்களையும் தங்க வைத்து கொள்ள எல்லா முயற்ச்சிகளையும் எடுத்து கொள்வோம் -நம்மிடம் இருக்கும் சில குணங்களையும் , கொள்கைகளையும் சற்றே Introspect செய்து கொண்டால் , நமது அடுத்த திரி இன்னும் பிரகாசமாக எரியும் என்பதில் கடுகளவிலும் சந்தேகம் இல்லை - மாற்றிக்கொள்ள வேண்டிய கொள்கைகள் :
1. There is a saying - while counting the trees , don't forget to see the wood ----
நாம் செய்யும் மிக பெரிய தவறு இது - contents நன்றாக இல்லையா , அவை மற்றவர்களுக்கு புண்படும் படியாக உள்ளதா - தவறுகளை இந்த திரியில் சுட்டி காட்டலாம் - அதை விடுத்து -- "ர" போட்டு இருக்க கூடாது , "ற " தான் போட்டிருக்க வேண்டும் என்று சிறுபிள்ளை தனமாக , ஒரு தமிழ் ஆசிரியர் போல இங்கு பாடம் எடுத்து கொண்டிருந்தால் , பதிவுகள் போடும் சிலரும் ஓடி போய் விடுவார்கள் - இங்கு தமிழ் literature பண்ணி பட்டம் பெற வரவில்லை - ஒரு ஆத்ம திருப்தி - நம் தலைவனின் புகழ் பாட இந்த திரி ஒரு பாலமாக இருப்பதில் ஒரு பெரிய மகிழ்ச்சி - அவ்வளவே - இந்த சின்ன எழுத்து பிழைகளை அந்த சம்பந்தப்பட்ட நபருக்கு PM அனுப்புங்கள் - அவர் முன்னேற்றத்தில் உங்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருக்குமானால் - அதை விடுத்து பொது திரியில் எழுத்து பிழைகளை எடுத்து சொல்லி அவரை discourage பண்ணாதிர்கள் - அவரின் வேகம் குறைய நீங்கள் தான் காரணமாக இருப்பீர்கள்!!!