ji!
vaanga. good morning. illae good nightaa?:)
Printable View
ji!
vaanga. good morning. illae good nightaa?:)
ஜி
நான் சந்தனமிட்டு பாட்டை சொல்லல. வழக்கமான அதிரடிகளை சொன்னேன். என்னாஜி! என்னப் பத்தி இவ்வளவுதானா.............?:) :) :) :)
சி.க
எல்லா பதிவுகளையும் படித்து போடுவது பற்றி வாசு ஜி சொன்னது 100 % உண்மை..
மறந்து போன சில பாடல்கள்
எங்கிட்ட மோதாதே படத்தில் இந்த பாடலின் டியூன் எனக்கு மிகவும் ப்டிக்கும். மலையாள பாடல் தமிழானது
https://www.youtube.com/watch?v=HxzX8FTjO8k
அதே போல் வாலி ஐயாவின் வரிகளில் ஆஷா போன்ஸ்லே பாலுவின் குரலில் அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்...
ஆஷா வாயில் தமிழ் ........
https://www.youtube.com/watch?v=mFzjW9fImGM
மனோ மின்மினி பாடிய அருமையான பாட்ல
நல்ல தலைவனும் தலைவியும்
https://www.youtube.com/watch?v=8Rek-V-No94
ஏதோ ஒரு நதியில் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
அதே படத்தில் இந்த பாடலும் நல்ல சூழ்நிலை பாடல்
https://www.youtube.com/watch?v=TIRKXDNC10s
நிலாப் பாடல் 74: வெள்ளி நிலா முற்றத்திலே...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இதுவும் காதல் பாடாத வித்தியாசப் பாடல். மக்கள் திலகத்தின் குழந்தைகளுக்கான அறிவுரையுடன் கூடிய வாழும் முறை கூறும் மற்றொரு பாடல். என்ன பாடல் சற்றே சோகமாக ஆரம்பிக்கிறது. குழந்தை தாயைப் பிரிந்து தகப்பனிடம் வளர்கிறது. தன் மகனின் வளர்ப்பில் அக்கறை கொண்ட தந்தை தாயின் பிரிவால் மகன் கவலையுறாமல் தேற்றிப் பாடும் பாடலாக வருகிறது. சற்று நேரம்தான் இந்த சோகம். குழந்தை வளர வளர உற்சாகம் பாடலிலும் காட்சியிலும் தெறிக்கிறது. இசைத்திலகம் கே. வி. மகாதேவன் இசையமைக்க, பாடகர் திலகம் பாட, ஆஹா, ஆஹா அவ்ளோ அழகு. தகப்பனும், மகனும் ஒரே மாதிரியான உடை அணிந்து, அதுவும் அந்தக் குழந்தை கால்களை விரித்து நின்று, கைகளையும் மேலே தூக்கி விரித்து மக்கள் திலகம் போலவே பொறுமையாக ஆடுவது கொள்ளை அழகு. அதற்கேற்ப பாடல் வரிகளும் 'நான்கு பேர்கள் போற்றவும் ..' என்று சுயமரியாதைப் பற்றி நல்ல விளக்கமும் வரும்.
சரி. பாடல் வரிகளை பார்க்கலாமா இப்போது. கவியரசரின் பாடல் வரிகள் இங்கே:
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
வேலெடுக்கும் மரபிலே வீரம் செறிந்த மண்ணிலே
பால் குடிக்க வந்தவனே நடையை காட்டு
வரும் பகைவர்களை வென்று விடும் படையை காட்டு
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முக்கனியின் சார் எடுத்து
முத்தமிழின் தேன் எடுத்து
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
முப்பாலிலே கலந்து எப்போதும் சுவைத்திருப்பாய்
வெள்ளி நிலா முற்றத்திலே
விளக்கெரிய விளக்கெரிய
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
நான்கு பேர்கள் போற்றவும்
நாடு உன்னை வாழ்த்தவும்
மானத்தோடு வாழ்வது தான் சுயமரியாதை
நல்ல மனமுடையோர் காண்பதுதான் தனி மரியாதை
வெள்ளி நிலா முற்றத்திலே விளக்கெரிய விளக்கெரிய
உள்ளமெனும் தாமரையில்
உனை எடுத்து கொண்டுவந்தேன் கொண்டுவந்தேன் ஹோய் ..
வெள்ளி நிலா முற்றத்திலே
காணொளிக் காட்சி இங்கே:
https://www.youtube.com/watch?v=sKqF5MzQPFY
உடையைப் பார்த்தாலே தெரிகிறதே.
ஹாய்குட்மார்னிங்க் ஆல்..
வாசுராஜேஷ்...தாங்க்ஸ் :)
ஹை.. நிலா வந்துடுச்சே வாங்க கல் நாயக் :) நிலா வந்ததால தென்றலை வரவழைச்சுடலாமா..
எண்ணங் குளிர எழில்நிலா நேர்வரவும்
தென்றல் சிரித்தது தேன்..
https://youtu.be/AWFXTVzx0vE
தென்றல் நீ தென்றல் நீ தேதி சொன்னமங்கை நீ
திங்கள் நீ திங்கள் நீ பொங்கி வந்த கங்கை நீ
படம் தந்து விட்டேன் என்னை.. விக்ரம்+ரோகிணி+இளமை..
வாசு சார் , கல்நாயக் அவர்கள் நிலாவை ஆரம்பிக்கும் வரை கதிரின் வெப்பத்தை தந்துகொண்டே இருக்கலாம் என்று நினைத்தேன் - இன்றே அருமையான நிலா பதிவுகளை அவர் போட ஆரம்பித்துவிட்டார் - தென்றலின் பின்னணியில் - இந்த என் கொள்கை இனி செல்லாது - நீங்கள் பாலாவின் பதிவுகள் போடும் வரை சற்றே தொடரலாம் என்று நினைக்கிறேன் . நீங்களும் இன்றே ஆரம்பித்து விட்டால் கதிரவனுடன் நானும் அம்பேல் !! :)
ஹை.. இங்க என்ன ஆச்சு.. இந்த காட் இருக்காரே சமயத்துல கொஞ்சம் ஸன் க்ளாஸஸ் போட்டுக்குவார் போல..
அழகான பொண்ணு தான் ஆனா அதற்கேற்ற கண் இல்லையே..இருந்தாலென்ன வந்துட்டானே ஒருத்தன்.. ஒவ்வொரு சொல்லுக்கும் ஒரு எதிர்வினை இருப்பது போல, இன்பம் என்றால் துன்பம், காதல் என்றால் சோகம், இரவு என்றால் பகல்,..ம்ம் அவளுக்குத் துன்பம் தரும் இருட்டினில் வழிசொல்ல இவன் என்ன செய்யப் போகிறான்..?
மென் தென்றல் மங்கையிவள் மேனியினை மெல்ல
..மேவித்தான் புன்சிரித்துத் தழுவதையா மெல்ல
தென்னைமரக் கீற்றுகளும் தலைகுனிந்து நங்கை
..சிலிர்ப்பதையும் பார்த்துமனம் மகிழுதையா அங்கே
விண்ணினிலே நினைப்பிருந்தும் கன்னியவள் கண்கள்
…விந்தையென பூமியிலே காண்பதுவும் இருளே
கண்ணனெனக் காளையிவன் வண்ணங்களைச் சொல்லிக்
..கவிதைவழி பாடுகின்றான் காட்டுகின்றான் காட்சி..
**
தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல
திங்கள் வந்து காயும் போது என்ன எண்ணமோ நினைப்புல
வந்து வந்து போகுதம்மா எண்ணமெல்லாம் வண்ணமம்மா
வண்ணங்க்ளுக்கேற்றபடி எண்ணமெல்லாம் மாறுமம்மா..
எவரும் சொல்லாமலே பூக்களெல்லாம் வாசம் வீசுது
உறவும் இல்லாமலே இரு மனம் ஏதோ பேசுது
// நாசர்+ கன்னுக்குட்டிப் பல் ரேவதி..அவதாரம்..இளையராஜா ஜானகி..//
https://youtu.be/K8qs_TpAWpc