http://i1065.photobucket.com/albums/...ps8znesvdg.jpg
Printable View
தர்மம் எங்கே படத்தின் தொடர்ச்சி...
http://i57.tinypic.com/2qkus77.jpg http://i59.tinypic.com/2jfzihe.jpg
நினைத்தால் போதும் பாடுவேன்.
மெல்லிசை மன்னரின் சாதனை துளிகளில் முக்கியமானது நெஞ்சிருக்கும் வரை.இறுதி காட்சிக்கு முன்போ அல்லது இறுதி காட்சியிலேயோ பாடல் வைக்கும் தைரியம் ஸ்ரீதருக்குத்தான் உண்டு.அதுவும் சற்று சறுக்கினாலும் ,நகைப்புள்ளாக்கி விடும்.காதலிக்க நேரமில்லை நெஞ்சத்தை அள்ளி போல லகுவான படமல்ல. intense emotion with compelling climax scene .முதல் மேதைமை ஹம்சாநந்தி ராகத் தேர்ந்தெடுப்பு.டெம்போ கூட்ட கூடியது.அடுத்தது arrangement of multi -layered archestration with sharp transition counter -points .
அடுத்தது எனக்கு பிடித்த கீதாஞ்சலி. அருமையான நாட்டிய கவர்ச்சி பாவை.இந்த பாடலில் அவர் கொடுத்திருக்கும் fast movements ,துப்பாக்கியை மனதில் கொடுத்து விடும்.அவர் தன் Grace சற்று துறந்து பாடலின் டெம்போ வுடன் இணைவார்.(choreographer யார்?)சிவாஜி ஓடி வருவதில் ,இசையின் வேகத்திற்கேற்ப கட் பண்ணி ஸ்ரீதர் கொஞ்சம் fast motion கொடுத்திருக்கலாமோ என்று தோன்றும்.(அந்த கோப உக்கிரம் அந்த ஓட்டத்தில் register ஆகவில்லை ,விஸ்வநாதனின் இசை உக்கிரத்திற்கு தக்க).கண்ணதாசனை கேட்க வேண்டுமா?
பாலின் நிறம் போல உருவான பெண்மை
பனியில் விளையாடும் கனிவான மென்மை
எங்கும் பறந்தோடும் இளம் தென்றல் அல்ல
ஏக்கம் வரும் போது எல்லோர்க்கும் சொல்ல
இறுதியாக பாடகி.ஜானகியை விட்டு வேறு பாடகியை இந்த பாடலுக்கு நினைத்தே பார்க்க முடியாது.(இத்தனைக்கும் கிளாஸ் என்று பார்த்தால் சுசிலாவின் கண்ணன் வரும் தான்)இந்த situation க்கு ஏற்ற பரபரப்பு ,ஆரம்பமே உச்சம் தொடும்,பாவமுள்ள ஜீவனுள்ள பாடும் முறை.
எனக்கு இன்றும் கூச்செறிய செய்யும் பாடல்.ஸ்ரீதர் மட்டும் இன்னும் கொஞ்சம் திரைகதையை செதுக்கி இருந்தால் ,மெல்லிசை மன்னர் பட்ட பாட்டிற்கு நெஞ்சிருக்கும் வரை எங்கோ சென்றிருக்க
வேண்டிய படம். என்னவோ ...ஏதோ....ஒரு பீம்சிங்,பந்துலு,நாகராஜன் சிவாஜியுடன் கூட்டணி கண்டது போல ஸ்ரீதர்,பாலசந்தரால் காண முடியாதது அவர்களுக்கும் நமக்கும் துரதிர்ஷ்டமே.
https://www.youtube.com/watch?v=a7vKsW8W69U