http://i67.tinypic.com/x379e9.jpg
Printable View
அத்திப்பூ -மே 2019
http://i67.tinypic.com/2rejtd3.jpg
முல்லைச்சரம் -மே 2019
http://i64.tinypic.com/x5uwdx.jpg
http://i67.tinypic.com/2n6anq1.jpg
பசுமை இந்தியா -மே 2019
http://i67.tinypic.com/28gwhe8.jpg
http://i64.tinypic.com/12529a9.jpg
மாலை மலர் -22/05/2019
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் பழம்பெரும் நடிகை அஞ்சலிதேவி "சக்கரவர்த்தி திருமகள் " திரைப்படத்தில் நடித்தபோது , அவரை தென்னிந்திய நடிகர் சங்க தலைவியாக ஆக்க , எல்லா நடிகர் நடிகைகளும் சேர்ந்து முடிவெடுத்து உள்ளார்கள் என்கிற செய்தியை மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடிகை அஞ்சலிதேவியிடம் தெரிவித்தார் . முதலில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொள்ள அஞ்சலிதேவி பெரிதும் தயங்கினார் . எனக்கு தமிழ் சரியாக படிக்க தெரியாது . அதுமட்டுமின்றி இதுபோன்ற பொறுப்புகளில் இருந்து பணியாற்றிய அனுபவமும் எனக்கு இல்லை , அதனால் என்னை விட்டுவிட்டு வேறு யாரையாவது தேர்ந்தெடுங்கள் என்று சொன்னபோது மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். காதில் வாங்கி கொள்ளவில்லை .,
நடிகர் சங்க தலைவியாக பொறுப்பேற்றுக் கொண்ட அஞ்சலிதேவி , ஒரு வருடம் அந்த பதவியில் மிக சிறப்பாக பணியாற்றினார் .
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கு அடையாளமாக ,நான்கு குழந்தைகளை நடிகர் சங்கம் என்னும் தாய்
அரவணைத்தபடி உள்ள தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கான சின்னம் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். முன்னிலையில், நடிகை அஞ்சலிதேவியின் பதவிக்காலத்தில்தான் உருவாக்கப்பட்டது .
http://i63.tinypic.com/2003clu.jpg
http://i68.tinypic.com/11soyme.jpg
http://i68.tinypic.com/2d6kygy.jpg
பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான "ரிக்ஷாக்காரன் " வெளியான நாள் 29/05/1971. வெளியாகி 48 ஆண்டுகள் நிறைவு.
சத்யா மூவிஸ் தயாரித்த முதல் வண்ணப்படம் .ரிக்ஷாக்காரனாக புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். மிக சிறப்பாகவும் , இயல்பாகவும், நடித்ததற்காக மத்திய அரசின் " பாரத் " விருது கிடைத்த படம் . நடிகை மஞ்சுளா கதாநாயகியாக நடித்த முதல் படம் .
1971ம் ஆண்டில் ஈடு இணையற்ற வசூலில் முதலிடம் பெற்ற காவியம்
சென்னை அண்ணாநகரில் , ரவுண்டானா அருகில் 1971ல் சைக்கிள் ரிக்ஷா ஓட்டப்பந்தயத்தில் ஏழை பங்காளன் எம்.ஜி.ஆர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மத்தியில் , பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு நடுவில் கலந்து கொண்டு , பொதுமக்களின் ஏகோபித்த ,பலத்த ஆரவாரத்திற்கு இடையில் வண்டி ஒட்டி முதல் பரிசு பெற்றது படத்தின் சிறப்பு அம்சம் .சண்டை காட்சிகள் அபாரம்.சண்டை பயிற்சியாளர் ஷியாம்சுந்தர் பாராட்டத் தக்கவர் , மஞ்சுளாவை ரிக்ஷாவில் அமர்த்திக்கொண்டு வில்லன் நடிகர் ராமதாஸ் குழுவோடு சண்டையிடும் காட்சியில் அரங்கமே அதிரும் .இதேபோல ஹிந்தியில் ரிக்ஷாவாலாவில் நடித்த ரன்திர்கபூர் இந்தக்காட்சியில் நடிக்க மறுத்தார் . மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். போல சண்டையிடுவது கடினம் என்று கூறினார் .கிளைமாக்ஸ் காட்சியில் சுருள்பட்டா வீசும் காட்சியிலும் கலைச்சுடர் எம்.ஜி.ஆர். தனது திறமையை காட்டி அபாரமாக நடித்து அரங்கத்தையே அதிரவைத்தார் . தமிழ் திரைப்படங்களில் எந்த நடிகரும் இனிமேல் இதுபோன்று நடிக்க முடியாத வகையில் ரிஸ்க் எடுத்து சண்டைக்காட்சிகளில் நடித்து ரசிகர்களிடம் கைதட்டல்கள் வாங்கினார்.கொள்கை வேந்தன் எம்.ஜி.ஆர். அந்த காலத்தில் இதை பாராட்டாத பத்திரிகைகளே இல்லை .
இந்த படத்தில் ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு, அரங்க அமைப்பு, இசை அமைப்பு, கதை வசனம், நகைச்சுவை, பாடல்கள் ,நடிக -நடிகையரின் நடிப்பு, வெளிப்புற படப்பிடிப்பு, சண்டை காட்சிகள் அனைத்தும்
ஒருங்கே அமைந்து ஈடு கொடுத்து படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பெரிதும் துணை புரிந்தன .
டைட்டில் இசை, ஓவியம் மிக பிரமாதம் . மெல்லிசை மன்னருக்கு பாடல்கள் இசையமைப்பு, பின்னணி இசை ஆகியவற்றிற்கு பலத்த சபாஷ் .
தேங்காய் ஸ்ரீநிவாசன், ஐசரி வேலன் நகைச்சுவை படத்திற்கு கூடுதல் பலம்
பத்மினி , அசோகன், மனோகர், மேஜர் சுந்தரராஜன் , பூர்ணம் விஸ்வநாதன், ராமதாஸ் ஜி.சகுந்தலா , குண்டு கல்யாணம், உசிலைமணி அனைவரும் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்து படத்திற்கு சிறப்பு சேர்த்து வெற்றியடைய செய்தனர் .
கவிஞர் வாலியின் பாடல்கள் காலத்தால் அழியாதவை .
1. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் ,
2. பொன்னழகு பெண்மை சிந்தும்
3.கடலோரம் வாங்கிய காற்று
4. அழகிய தமிழ்மகள் இவள் (அந்த காலத்தில் வானொலியில் நேயர் விருப்பத்தில் நூற்றுக்கணக்கான வாசகர் கடிதங்கள் மூலம் தேர்வாகி முதல் பாடலாக ஒலித்து வந்தது )
5.பம்பை உடுக்கை கொட்டி
சென்னை தேவிபாரடைஸில் தொடர்ந்து 163 காட்சிகள் அரங்கு நிறைந்தது
ஸ்ரீகிருஷ்ணாவில் 110 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்தது .
ஸ்ரீகிருஷ்ணாவில் மூன்றாவது நாள் காலை காட்சியில்தான் பார்க்கமுடிந்தது .
ரசிகர்கள் ஆரவாரத்தில்,அலப்பரையில் பல இடங்களில் நகைச்சுவை வசனங்கள், பன்ச் வசனங்கள் புரியவில்லை . தேவிபாரடைஸ், ஸ்ரீகிருஷ்ணாவில் 142 நாட்கள் (21 வாரம் ) ஓடியது சரவணாவில் 105நாட்கள் .
அந்த காலத்தில் வடசென்னை ஏரியாவில் ஸ்ரீகிருஷ்ணா அரங்கில் ரூ.5 லட்சம் வசூலான முதல் படம் .சென்னையில் வெள்ளிவிழா ஓட வேண்டியபடம் .நீரும் நெருப்பும் பட வெளியீடு காரணமாக எடுத்துவிட்டார்கள் . 12 அரங்குகளில் 100நாட்கள் ஓடியது . மதுரை நியூசினிமாவில் 161 நாட்கள் ஓடியது .58 அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடி வசூலை வாரிக்குவித்தது . திருச்சி பேலஸ் 142 , ஈரோடு கிருஷ்ணா -138, சேலம் அலங்கார -118, கோவை ராஜா 126, நெல்லை லட்சுமி 104, தஞ்சை யாகப்பா 105, குடந்தை டைமண்ட் 105, மாயவரம் சுந்தரம் 110
சமீபத்தில் டிஜிட்டல் வடிவில் தயாரித்து வெளியிட்டார்கள். நகைச்சுவை காட்சிகள் பல இடங்களில் வெட்டப்பட்டன .டைட்டில் இசையில் சிறு மாற்றம் .
பின்னணி இசையில் சில தவறுகள் .இருப்பினும் மீண்டும் தேவிபாரடைஸில்
வெளியாகி வெற்றிநடைபோட்டது . ஞாயிறு மாலை காட்சி அரங்கு நிறைந்தது .
பல அரங்குகளில் வெளியாகி வசூலை குவித்தது .